Sunday 30 August 2020

குடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு

குடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு-ப.சு.அஜிதா-‘பெண் குழந்தை பிறந்தாலே செலவு' என்று நினைக்கிற சமூகத்தில் பெண்ணுக்குச் சொத்தில் உரிமையை எதிர்பார்ப்பதெல்லாம் பெருங்கனவாக இருந்தது. ஆஸ்தியே இல்லையென்றாலும்கூட, அதை ஆள்வதற்கு ஆண் குழந்தை வேண்டுமென்று எண்ணி அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறவர்களும் நம்மிடையே உண்டு. இப்படியான சங்கடங்களில் இருந்து பெண்களை மீட்டு, குடும்பத்தில் அவர்களுக்கென்று உரிமையை ஏற்படுத்தித்தரும் விதத்தில் சீர்திருத்தப்பட்டதுதான் ‘பெண்ணுக்கான சொத்துரிமைச் சட்டம்'.

திருமணத்தின்போது பெண்களுக்குச் சீர்செய்வ தாலும் நகைகளைப் போடுவ தாலும் பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பங்கு தருவதில்லை. அது பூர்விகச் சொத்தாக இருந்தால், கேட்கவே தேவையில்லை. தாத்தா சொத்து பேரனுக்கு என்று ஒரே வரியில் முடித்துவிட்டுப் பேத்தியைக் கைகழுவிவிடுவார்கள். இந்த நிலையில் பூர்விகச் சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு என்று 2005-ல் சட்டம் வந்தது. அதன் அடிப்படையில், 2020 ஆகஸ்ட் 11 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பெண்களின் சொத்துரிமை குறித்த விவாதங்களில் பெண்களுக்குச் சாதகமாக சில விடைகளை அளித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோரைக் கொண்ட அமர்வு ‘வினிதா சர்மா எதிர் ராகேஷ் சர்மா மற்றும் பலர்' என்ற வழக்கில் இந்துப் பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில தடைகளை நீக்கித் தீர்ப்பளித்திருக்கிறது.

பெண்ணும் குடும்ப உறுப்பினரே

‘பெண்களுக்கான சொத்துரிமை சீர்திருத்தச் சட்டம் 2005'-ன்படி பெண்களும் தங்கள் குடும்பத்தின் ‘பங்காளிகளே’ என்றும் ஒருவேளை தந்தை 9/9/2005-க்கு முன்னரே காலமாகிவிட்டிருந்தாலும் தங்கள் பிறப்பின் காரணமாகவே பெண்கள் குடும்பத்தில் பங்காளிகள் ஆகிறார்கள் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் ‘வாய்மொழிப் பாகப்பிரிவினை' என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவந்த அநீதிக்கும், இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறது. பாகப்பிரிவினை வழக்குகளில் முதல் நிலைத் தீர்ப்பு தரப்பட்டிருந்தாலும் இறுதித் தீர்ப்பில் பெண்களுக்கும் சேர்த்தே பாகப்பிரிவினை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன்படி இன்றுவரை நிலுவையில் இருக்கும் வழக்குகளைக் கையாள்வது குறித்தும் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், வாய்மொழி பாகப் பிரிவினை இந்து கூட்டுக் குடும்பங்களில் சட்டப்படி ஏற்புடையது என்றபோதும், பெண்களுக்குச் சொத்தில் பங்கு தரக் கூடாது என்ற எண்ணத்தில் பல குடும்பங்கள் செயல்படுவதால், அதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு வழியைச் சொல்லியி ருக்கிறது. சிலர் தங்கள் பெண்களிடம் வாய்மொழியாகப் பாகப்பிரிவினை நடந்துவிட்டதாகக் கூறி, மகன்களுக்கு மட்டும் சொத்தைப் பிரித்துக்கொடுத்து விடு வார்கள். தாங்கள் விரும்பும் வகையில் சொத்தைப் பிரித்துக்கொடுப்பது என்பது தந்தையின் சுயசம்பாத்திய சொத்துக்கு மட்டுமே பொருந்தும். பரம்பரைச் சொத்துக்கு இந்த நடைமுறை செல்லாது. திருமணம் ஆன பெண்ணோ ஆகாத பெண்ணோ, பரம்பரைச் சொத்தில் பங்கு என்பது அவர்களின் பிறப்புரிமை எனவும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சொல்கிறது.

பரம்பரைச் சொத்தில் பெண்களுக் கான சொத்துரிமையை மறுப்பதை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் பாகப்பிரிவினை பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் சட்டம் உள்ளது. மேலும், வாய்மொழியாகப் பிரிக்கப்பட்ட பாகங்களின் உடைமையாளர்களின் பெயர்கள் அரசு ஆவணங்களில் மாற்றப்பட்டு உண்மையாகவே பாகப் பிரிவினை நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். இப்படி வாய்மொழிப் பாகப்பிரிவினை நடந்ததாகக் கூறுவதை நீதிமன்றங்கள் பரிசீலித்த பின்னரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் கூறுகிறது.

பழைய நடைமுறை செல்லாது

‘பிரகாஷ் எதிர் புலாவதி' என்கிற வழக்கில் உச்ச நீதிமன்றம் பெண்களுக்கான சொத்துரிமை நடைமுறைக்கு வந்த நாளான 9/9/2005 அன்று தந்தையும் பங்குகோரும் மகளும் உயிருடன் இருந்தால் மட்டுமே பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் பங்கு உண்டு என்கிற உரிமை உறுதிப்படுத்தப்படும் என்று ஏற்கெனவே தீர்ப்பளிக்கப் பட்டிருந்தது. ஒரு பெண் அந்தக் குடும்பத்தில் பிறந்ததால், பிறப்பின் மூலமாகவே சொத்தில் பங்குதாரராக ஆகிறார் என்றும், தந்தை உயிரோடு இருந்தால்தான் பெண்ணின் பங்கு உறுதியாகிறது என்ற கருத்து தவறானது என்றும் உச்ச நீதிமன்றம் தற்போது குறிப்பிட்டிருக்கிறது.

தமிழகம் முன்னோடியே

இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 1989-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பே ஆந்திரம் 1986-ல் இதே போன்ற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. பின்னர் கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 2005-க்கு முன்பே மாநிலத் திருத்தங்கள் அமலுக்கு வந்ததாக அறியப்பட்டது. தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமானது பென்களுக்கு மூதாதை சொத்தில் பங்குண்டு என்றாலும் 26/03/1989-க்கு முன்பு திருமணமான பெண்களுக்கு அது பொருந்தாது எனக் கூறியது.

தமிழகத்தில் இந்தச் சட்டம் 1989-ல் நடைமுறைக்கு வந்ததால் அந்த ஆண்டுக்கு முந்தைய வழக்கு களுக்கு இந்தத் தீர்ப்பு செல்லாது. அதாவது 1989-க்கு முன்னரே பாகம்பிரிக்கப் பட்டுவிட்டால் பெண்ணுக்கு அதில் உரிமை இல்லை. அப்படிப் பிரிக்காத சொத்தில் பங்கு கேட்க மகள் உயிருடன் இல்லை என்கிறபோது அவருடைய வாரிசுதாரரான மகள்/மகள் உள்ளிட்டோருக்குப் பங்கு உண்டு.

நடைமுறையில் திருமணமாகாத பெண் தனது குடும்பச் சொத்தைப் பாகம் பிரித்துத்தர வேண்டும் என்று கோர முடியாது. நம் சமூகத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தல் என்பது சமூக அந்தஸ்து, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய வற்றை உள்ளடக்கியது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, 1989 90-களில் திருமணத்துக்கு முன்னரே மகள்களிடம், ‘விடுதலைப் பத்திரம்’ எழுதி வாங்கும் குடும்பங்கள் பெருகின. மகள்களோடு மகன்களுக்குச் சொத்து பிரிக்கப்படுவது நியாயமானது, சமத்துவமானது என்று கருதிய குடும்பங்கள் மட்டுமே பெண்களுக்கான சுதந்திரம், கல்வி, வேலைசெய்வதற்கான ஒப்புதல் போன்ற பெண்களின் அடிப்படை உரிமைகளையும் உத்தரவாதப் படுத்தின.

ஆனால், பெண்களைத் திருமணம் செய்துகொடுப்பதே பெருஞ்சுமையாக நினைத்து பெரும் விலை கொடுத்து திருமணச் சந்தையில் பெண்களை மணம்முடித்த குடும்பங்கள் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்குச் சொத்துகளைத் தருவதில்லை. அதையும் மீறி வழக்கு களைத் தொடுத்தாலும் சட்டத்தில் உள்ள வாய்ப்புகளைக் கொண்டு பெண்களுக்குச் சொத்து கொடுக்க மறுப்பதும் நடந்துவந்தது. இந்த நிலையை மாற்றியமைக்கும் விதமாகத் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை விஷயத்தில் பெண்களின் நிலை ஓரடி முன்னால் சென்றுள்ளது. அந்த வகையில் பெண்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன் அவர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் தீர்ப்பாகவும் இது இருக்கிறது. எனவே, குடும்பத்தில் சொத்துரிமை மறுக்கப்படும்போது பெண்கள் தங்கள் உரிமையை விட்டுத்தரக் கூடாது. அதற்கேற்ப கல்வி - மற்ற விஷயங்களில் பெண்கள் தங்களை அதிகாரப்படுத்திக்கொள்வதுதான், இந்தச் சொத்துரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வழிவகுக்கும்.

தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com.திருமணம் ஆன பெண்ணோ ஆகாத பெண்ணோ, பரம்பரைச் சொத்தில் பங்கு என்பது அவர்களின் பிறப்புரிமை எனவும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சொல்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday 10 June 2020

தமிழகத்தில் பரவும் ஏ3ஐ கரோனா வைரஸ்: உண்மை என்ன?

கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார்,

மரபணு வரிசை செய்யப்பட்ட இந்திய கரோனா நோயாளிகளில் சுமார் 41.2 சதவீதம் புதிய ஏ3ஐ (A3i)என்ற கிளையினம் என்ற வியப்பான தகவலை, ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் பார் செல்லுலர் - மாலிகுலர் பயாலஜி' மற்றும் டெல்லியில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் பார் ஜீனோமிக்ஸ் அண்ட் இன்டகிரெடிவ் பயா லஜி', ஆகிய நிறுவனங்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளன. ஃபைலோஜெனடிக் எனப்படும் பரிணாம மரபு வரிசை பட ஆய்வு முறையின் வழி இந்த புதிய கிளையினத்தை கண்டுபிடித்துள்ளனர்.

உலகில் பரவலாக இருக்கும் ஏ2ஏ (A2a) என்ற கிளையினம் தான் இந்தியாவிலும் முதலாவது என்றாலும் இந்த புதிய A3i இரண்டாம் இடத்தில் உள்ளது பெரும் வியப்பை அளித்துள்ளது. மேலும் தெலங் கானா, தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா வில் முதலிடம் இந்த A3i புதிய கிளை யினம்தான். இந்த ஆய்வு முடிவுகள் வெளியானதும், போலி செய்திகள் பரவி வெற்று பீதி ஏற்படக் கூடாது என்று இந்த ஆய்வு நிறுவனங்களின் மைய அமைப்பான சிஎஸ்ஐஆர் நிறுவனம் தெளி வான விளக்கம் அளித்தது. ‘‘புதிதாக இனம் காணப்பட்டுள்ள கிளையின வைரஸ் கூடுதலாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றோ அல்லது குறைவாக தாக்கம் செலுத்தும் என்றோ கூற எந்த ஆதாரமும் இல்லை’’ என்று சிஎஸ்ஐஆர் தெளிவுபடுத்தியது.

நமக்கு போதிய தரவுகள் இருந்தால் கொள்ளு கொள்ளு தாத்தா - பாட்டி, கொள் ளுத் தாத்தா - பாட்டி, தாத்தா - பாட்டி, அப்பா - அம்மா, உடன் பிறந்தவர்கள், நாம் என குலவரிசை வம்ச கிளைப்படதை உருவாக்கலாம்.

திடீர் மரபணு மாற்றத்தின் தொடர்ச்சி யாக நாவல் கரோனா வைரஸில் புதிய புதிய வேற்றுருவங்கள் உருவாகும். உலகெங்கும் இதுவரை சுமார் 200 வேற் றுருவ வைரஸ்கள் உருவாகி உள்ளதாக மதிப்பீடு செய்கிறார்கள். இந்த வெவ்வேறு வேற்றுருவ வைரஸ்களை பரிணாம மரபு வரிசைப்படி தொகுக்கலாம்.

நான் -> எனது அம்மா-> எனது பாட்டி என எனது வம்ச வழியை வகுக்கலாம். அதுபோல எனது சித்தியின் மகள் வரிசை செய்யும் போது, சித்தி மகள்-> சித்தி-> எனது பாட்டி என அமையும். அதாவது எனக்கும் எனது சித்தி மகளுக்கும் பொது மூதாதையர் எங்களது தாய் வழிப்பாட்டி. இதுதான் எனக்கும் என் சித்தி மகளுக்கும் உள்ள பரிணாம மரபு வரிசை.

இதேபோலதான் குறிப்பிட்ட ஒரு வேற் றுருவ வைரஸ் வேறு ஒரு வேற்றுருவ வைரஸிடம் இருந்து பரிணமித்து இருக் கும். அந்த வைரஸ் வேறு ஒரு வேற்றுருவ வகையில் இருந்து உருவாகி இருக்கும். இவ்வாறு வெவ்வேறு வேற்றுருவ நாவல் கரோனா வைரஸ்களின் பரிணாம மரபு வரிசையை தொகுத்து பார்ப்பது தான் ஃபைலோஜெனடிக் வரைபடம் எனப்படும் வைரஸ் வம்ச கிளைப்படம்.

எனது தாய் வழி பாட்டிக்கு ஒரு சகோதரன் எனக் கொள்வோம். அந்த சகோதரனுக்கும் குழந்தைகள் இருக்கும். அந்த குழந்தைகள் பெரியவர்களாக மாறி அவர்களுக்கும் எங்களை போல குழந்தைகள் இருக்கும் அல்லவா?

எங்கள் பாட்டியின் தாய் - தந்தை, அதா வது எங்கள் கொள்ளு பாட்டி - தாத்தா விடம் தொடங்கி வம்ச கிளைப்படம் தொகுத்தல் அடி மரம் போல, எங்கள் கொள்ளு பாட்டி - தாத்தாவும் ஒரு கிளை யில் எங்கள் பாட்டியின் சகோதரன், மறு கிளையில் எங்கள் பாட்டி. எங்கள் பாட்டி யின் கிளையில் ஒரு உப கிளையாக என் அம்மா; வேறு ஒரு உப கிளையாக எனது சித்தி. இப்படி அமையும் தானே? அதே போல எங்கள் பாட்டியின் சகோதரன், அவரின் குடும்பம் வேறு ஒரு குடும்ப கிளையாக அமையும் அல்லவா?

வெவ்வேறு வேற்றுருவ நாவல் கரோனா வைரஸ்களின் மூதாதையர் யார் என கண்டுபிடித்து பரிணாம மரபு வரிசையை தொகுத்து பார்த்தல் அதிலும் பல வம்ச கிளைகள் தென்படும்.

இதுவரை உலகெங்கும் 80 நாடுகளை சார்ந்த சக்ஸ் கிருமி தொற்றியவர்களிடம் இருந்து வைரஸ் மாதிரிகளை பெற்று மர பணு வரிசை செய்துவிட்டார்கள். உல கெங்கும் உள்ள வைரஸ் வேற்றுவ வகை களை ஃபைலோஜெனடிக் வரை படம் செய்து பார்த்தபோது A1a, A2, A2a, A3, A6, A7, B, B1, B2 மற்றும் B4 என்கிற பத்து கிளைகளை இனம் காண முடிந்துள்ளது. இந்த ஆய்வு வழி பதினோராவதாக A3i என்ற வகை இந்தியாவில் இனம் காணப்பட்டுள்ளது. டிசம்பரில் சீனாவின் வூஹான் பகுதியில் மனிதரிடம் பரவிய முதல் வைரஸ் வகைதான் அடிமரம். அதன் பின்னர் 2 பெரும் கிளைகள் உருவாகின. இந்த பெரும் கிளைகளை A மற்றும் B பெரும் கிளைகள் என்கின்றனர். A பெரும் கிளை பரிணமித்தது ஐரோப்பா என்பதால் ஐரோப்பிய பெரும் கிளை என வும், B பெரும் கிளை மரபணு மாற்றங்கள் ஏற்பட்டது பெருமளவில் கிழக்கு ஆசிய என்பதால் இதனை கிழக்காசிய பெரும் கிளை என்றும் கூட சுட்டுவார்கள். இந்த இரண்டு பெரும் கிளைகளில் இருந்து உருவான கிளைகளே A1a, A2, A2a, A3, A6, A7, B, B1, B2 மற்றும் B4.

இந்தியாவில் கிருமி தொற்று ஏற்பட் டவர்களிடம் இருந்து சேகரித்த வைரஸ் மாதிரிகளை வைத்து 361 வைரஸ் களின் மரபணு வரிசையை செய்து முடித் தார்கள். மரபணு வரிசைகளை ஒப்பிட்டு பார்த்து எது எந்த கிளையினம் என வகை செய்தார்கள். அவ்வாறு எல்லா வைரஸ் களையும் அதுவரை அறிந்த 10 கிளைக ளாக பகுத்த போது எந்த கிளை இனத் திலும் சேராத வைரஸ் வகையினங்கள் இருந்தன. இவற்றை உற்று நோக்கிய போது இவற்றுள் ஒற்றுமை புலப்பட்டது. இவற்றில் பல இதுவரை இனம் காணப் படாத புது கிளையினம் என்பது வெளிச்சத் துக்கு வந்தது. உலகெங்கும் உள்ள மரபணு செய்யப்பட்ட வைரஸ்களில் சுமார் 3.5% இந்த கிளையை சார்ந்தது. இந்தியா தவிர சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குறிப்பிடும்படியான அளவில் இந்த கிளை வைரஸ் உள்ளது.

ஜனவரி 2-ம் தேதி உலகில் பெருமளவு பரவியுள்ள A2a கிளையினம் தோன்றியது. அதன் பின்னர் A3i என்ற இந்த கிளை யினம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பிறந்தது எனக் கணித்துள்ளார்கள். இதன் பிறப்பிடம் சிங்கப்பூர் அல்லது இந்தோ னேசியாவாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்கிறார்கள். இந்த கிளையினம் உரு வாக்கி இயல்பான திடீர் மரபணு மாற்றத் தின் விளைவாக இதுவரை நான்கு உப கிளைகள் துளிர்த்துள்ளன.

வயதான மரம் என்றால் அதிக கிளை கள், கூடுதல் உப கிளைகள் இருக்கும். இளம் மரத்தில் குறைவான கிளை வளர்ச் சிதான் காணப்படும். அது போல ஃபைலோஜெனடிக் வரை படம் கொண்டு இந்த A3i கிளையினம் எப்படி தமிழ்நாடு, தெலங்கானா என பரவியுள்ளது என அறியலாம். ஒரே ஒரு கிருமி தொற்று உடையவர் மூலமே இந்த கிளையினம் இந்தியாவுக்குள் வந்துள்ளது. அவரிடம் இருந்து பலருக்கும் இந்த கிளையின வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

வேறு வகை கிளையினத்தால் பாதிக் கப்பட்டவர்களோடு இந்த கிளையினத் தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒப் பீடு செய்து பார்த்த போது நோய் தன்மை யில் எந்தவித மாற்றமும் புலப்படவில்லை.மற்ற கிளையினங்களை விட கூடுதல் பரவும் தன்மை உள்ளது என்பதற்கும் சான்றுகள் இல்லை. இந்த கிளையின கிருமி தொற்று உள்ள முதல் நோயாளி ஊரடங்குக்கு முன்பே சிங்கப்பூரில் இருந்து மார்ச் மாதம் 11-ம் தேதியே ஹைதராபாத் வந்துவிட்டார். அவருக்கு முன்பே கூட இந்த கிருமி கொண்டவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்க கூடும். இவர்கள் வழியே ஹைதராபாத் வந்த கிருமி தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ் டிரா போன்ற பகுதிகளில் கூடுதல் அளவில் பரவிவிட்டது. இந்த கிளையினத்துக்கு என்ற எந்தவித தனித்தன்மையும் இது வரை இனம் காணப்படவில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 5 June 2020

பலவீனங்கள் பலமாகட்டும்...! By முனைவர் இரா.கற்பகம்

பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்லா இடங்களையும் சென்றடைந்திருக்கிறது. சென்னை உள்பட நாட்டின் சில இடங்களில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான இடங்களில் நோய்த்தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்த இந்தியர்கள், மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், விவசாயிகள் முதலானோரின் நிலைமை பூதாகரப் பிரச்னையாக உருவெடுத்திருப்பவை.

எந்த வகைப் பேரிடர் நிகழ்ந்தாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவோர் இவர்களே. வேற்று நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் ஏன் நம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றார்கள் என்ற கேள்வியில் அர்த்தமில்லை. அறிவுத் தேடலை ஊக்குவித்து, ஆராய்ச்சிக்கு வாய்ப்பளித்து, திறமைக்கு அங்கீகாரமளிக்கும் வகையில் நம் கல்வி இல்லை. பலருக்குக் கல்வி கற்கவே வாய்ப்பு இல்லை. வசதி படைத்தவர்களுக்கு ஒரு விதமாகவும் வசதி இல்லாதவர்களுக்கு ஒரு விதமாகவும் மிக்க ஏற்றத்தாழ்வுகளுடனும்தான் நம் நாட்டில் கல்வி இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டியது அரசின் கடமை. மாணவர்கள் நம் நாட்டிலேயே படிக்குமாறு அவர்களை ஈர்க்கும் வகையில், நம் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது கரோனா நோய்த்தொற்று. கல்வி வெறுமே ஏட்டளவில் இல்லாமல் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். உயர் நிலை, மேல்நிலை, இளங்கலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு எதுவாக இருப்பினும் ஒரு மாணவனோ, மாணவியோ எந்தக் கட்டத்தில் வெளியே வருகிறாரோ அந்தக் கட்டத்தில் அவரின் படிப்புக்கும், திறமைக்கும் தக்க வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எந்தெந்தத் துறைகளிலெல்லாம் படித்தவர்கள் அதிக அளவில் இடம்பெயர்கிறார்களோ, அந்தத் துறைகளில் அரசு அதிக கவனம் செலுத்தி வேலைவாய்ப்போடு கூடிய பாடத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

இது ஒரு நாளிலோ, ஓராண்டிலோ செய்துவிடக் கூடிய காரியமன்று. மிகுந்த தொலைநோக்குப் பார்வையும், தெளிவான திட்டமிடலும், தகுந்த பொருட்செலவும், விரிவான கட்டமைப்பு வசதிகளும், தரமான கல்வி நிலையங்களும், திறமை மிகுந்த ஆசிரியர்களும், அறிவார்ந்த - அதே சமயம் சுவாரசியமான நூல்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். "ஸ்கில்ட் லேபரர்ஸ்' எனப்படும் திறன்சார் தொழிலாளர்கள் பலர் கொத்தனார், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், தச்சர் முதலானோர் பெருமளவில் அரபு நாடுகளுக்கும், கணினி மென்பொறியாளர்களும், மருத்துவர்களும், பொருளாதார வல்லுநர்களும் மேலைநாடுகளுக்கும் வேலைதேடிச் செல்கிறார்கள். உலகம் முழுவதும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்துக் கிடக்கிறது. அவர்கள் அங்கிருந்து சேமித்து அனுப்பும் டாலர், நமது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க உதவுகிறது.

அதேபோல, வெளிநாடுகளில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அடையாளம் கண்டு அவர்களை அனுப்புவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். சீனாவின் வெற்றிக்கு, உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் சீனர்கள் குடியேறி இருப்பது ஒரு முக்கியமான காரணம். எந்த நாட்டில் குடியேறினாலும், தங்கள் தாய்மொழியையும், தாய்நாட்டுடனான தொடர்பையும் சீனர்கள் நமது இந்தியர்களைப்போல விட்டுவிடுவதில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அந்தத் தொடர்பு அறுந்துவிடாமலும் அகன்றுவிடாமலும் சீன அரசு மிகவும் கவனமாக இருப்பதும் அதற்கு முக்கியமான காரணம். ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்தலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவையாக இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும், மாநிலத்திலும், அந்த மண்ணின், மக்களின், கல்வியின், வாழ்க்கைச் சூழலின் வேறுபாடுகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவுக்குள் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.

அதற்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும். அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிகமிக அதிகம். வீட்டுவேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதைக் கடைக்காரர்கள், துணி தேய்ப்பவர்கள், காய்கறி, மீன் விற்பவர்கள், தினக்கூலி வாங்குபவர்கள் இந்தப் பொது முடக்கத்தினால் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் உடனடி நிவாரணத்தை அரசு அறிவித்தது. எனினும், அந்த நிவாரணத்தைப் பெற அவர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியதால் சமூக இடைவெளி அடிபட்டுப் போனது. பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியதும் சமூக இடைவெளிக்கு எதிராகவே அமைந்தது.

இதற்குப் பதிலாக நிவாரணப் பணிகளை அரசு மட்டுமே அரசு இயந்திரத்தைக் கொண்டு செய்திருக்க வேண்டும், முறைப்படுத்தி இருக்க வேண்டும். அரசு அதற்கு முயன்றபோது, அதை ஆளுங்கட்சியின் சதியாக எதிர்க்கட்சிகள் வர்ணித்தது மிகப் பெரிய அரசியல் சோகம். இதற்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் - இவர்கள் அனைவரின் அனைத்து விவரங்களும் ஒவ்வொரு மாநில அரசிடமும் துல்லியமாக இருக்கவேண்டும். தொழில்நுட்பத்தில் நாம் கண்டிருக்கும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டால் இது கட்டாயம் சாத்தியமே.

இன்று கரோனா தீநுண்மி பாதிப்பைத் தொடர்ந்து, பொது முடக்கத்தை அரசு அறிவித்தவுடன் எத்தனை பேர் கூட்டம் கூட்டமாகத் தத்தம் சொந்த மாநிலங்களுக்குப் படையெடுத்தனர். இவர்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்திருந்தால், இந்த நிலையை எளிதில் கையாண்டிருக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த புலம்பெயர்ந்த, அமைப்புசாராத் தொழிலாளர்களை ஆங்காங்கு உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்திருக்கலாம். தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி இருக்கும் இடங்கள் என்பதால் சுகாதாரப் பிரச்னை இருந்திருக்காது. சமையல் கூடங்கள் இருப்பதால் எளிதில் காய்கறிகளையும் சமையலுக்குண்டான பொருள்களையும் அனுப்பி உணவுப் பிரச்னையையும் எளிதாகத் தீர்த்திருக்கலாம். மருத்துவப் பரிசோதனை செய்வதும் எளிதாக இருந்திருக்கும்.

அதை விடுத்து தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல, மக்களை இடம் மாற அரசுகள் அனுமதித்து, பிறகு துரத்தித் தேடிப் பிடித்தது. பொது முடக்கத்தின்போது விவசாயிகள் அடைந்த துன்பத்தைச் சொல்லி மாளாது. கல்வி, வியாபாரம் முதலானவற்றின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியும். ஆனால், வேளாண் துறையில் அப்படிச் செய்ய முடியாது. பயிருக்குத் தண்ணீர் விடுவது, மருந்தடிப்பது, களை எடுப்பது முதலானவற்றை அந்தந்த நேரத்தில் செய்துதான் ஆக வேண்டும். வேளாண் துறையில் மட்டும் கடும் பாதுகாப்பு விதிகளுடன் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி முன்னுரிமையின் அடிப்படையில் வேலைகளைச் செய்திருக்க வேண்டும். விளைபொருள்களை வீணாகாமல் எத்தனை நாள் வைத்திருக்க முடியும்? அவற்றை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்து பாதுகாப்பாகக் கிடங்குகளில் வைத்திருக்கவேண்டும். அப்படி வைக்க நம் நாட்டில் எத்தனை கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன? பதப்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது? இவை அனைத்தும் குறைந்த தொழிலாளர்கள் பலத்துடன், அதிக அளவில் இயந்திரங்களின் உதவியோடும் நடக்கும் வகையில் இருக்குமேயானால், விவசாயிகளை இந்த அளவு பொது முடக்கம் பாதித்திருக்காது என்பது நிச்சயம்.

மற்ற எந்தத் துறையிலும் உற்பத்திக் குறைவு ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மெதுவாக முன்னேறி விடலாம். ஆனால், உணவு உற்பத்தி குறைவதும், உணவுப் பொருள்களின் பகிர்மானம் தடைபடுவதும் வரும் ஆண்டுகளில் நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அரசும் மக்களும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் எத்தகைய பேரிடரையும் சமாளிக்கலாம். நம் நாட்டின் பலவீனம், நம் மக்கள்தொகை. அதையே, சீனாவைப்போல நாமும் பலமாக மாற்றி நாட்டு நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பின்போது அரசின் அனைத்துத் துறைகளும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. இதே துறைகள் மற்ற நாள்களில் இவ்வளவு நேர்மையாகவும், திறம்படவும் செயல்பட்டனவா? இல்லை. ஏன்? அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம், தகுந்த அங்கீகாரமின்மை, அரசியல் தலையீடு, புரையோடிய ஊழல் - இவையெல்லாம் நம் அரசு இயந்திரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிட்டன. இதைச் சரி செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும். பொது முடக்கம் மெல்ல மெல்லத் தளர்த்தப்படுகிறது. ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுடன் நாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து மீண்டு புதியதொரு சகாப்தத்தை நாம் நம்பிக்கையோடு தொடங்குவோம். கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இயற்கையின் அதிசயங்கள் தொடர... By த.முத்துக்குமரன்

எத்தனையோ தினங்கள் கொண்டாடுகிறோம்; கடைப்பிடிக்கிறோம்; நம் எதிா்கால சந்ததியினருக்கு அப்படியே இயற்கையின் அதிசயங்களை விட்டு செல்வதற்குரிய சிறந்த விழிப்புணா்வு தினம் உலக சுற்றுச்சூழல் தினம் ஆகும். பூமியிலுள்ள நீா்நிலைகள், காடுகள், வனங்கள், வன ஜீவராசிகள், வளி மண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் என அனைத்தும் மனிதகுலத்துக்காக வடிவமைக்கப்பட்ட இயற்கை பொக்கிஷங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் முதலானவற்றின் நல்வாழ்வு, இந்த சுற்றுச்சூழலின் சமநிலையையே நம்பியுள்ளது.

இந்தச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி, உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது. ரசாயனக் கழிவுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை முதலானவை வளி மண்டலத்தை மாசுபடுத்தி உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. வாகனப் புகையாலும், குளிா்சாதனக் கருவிகள் பயன்பாட்டினாலும் சுற்றுச்சூழல் மாசடைந்து ஓசோன் வளிமண்டலப் படலம் வலுவிழந்து சூரியனின் நேரடிக் கதிா்வீச்சின் தாக்கத்தால், பூமி அதிக வெப்பம் அடைவதற்குக் காரணமாக உள்ளது. தற்போது ஓசோன் வளிமண்டல பாதிப்பு குறைந்திருந்தாலும், அதை மேலும் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

பூமியின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். புவி வெப்பநிலை உயா்வு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவை காரணமாக கொசுக்களின் அதிகப் பெருக்கம், புதிய பரிணாம நுண்ணுயிரிகள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. மரங்களுக்கும், நமக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் வாழ்வாதாரத்துக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில், உயிரினங்கள் இருக்காது. ஐ.நா. சபையின் கணக்கெடுப்பின்படி, இந்தப் பூமியில் 3 லட்சத்து 4,000 கோடி மரங்கள் உள்ளன.

ஆனால், மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46% மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இப்போதும் ஒவ்வோா் ஆண்டும் இந்தப் பூமியில் இருந்து 1,530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன. அதே சமயம் ஒவ்வோா் ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளா்கின்றன, எப்படிப் பாா்த்தாலும் ஓா்ஆண்டில் இழப்பு என்பது சுமாா் 1,030 கோடி மரங்கள்; நாம் ஒவ்வோா் ஆண்டும் எவ்வளவு மரங்களை வளா்க்க வேண்டும் என்பதை இந்தக் கணக்கு உணா்த்தும். மக்கள்தொகை அடிப்படையில் பாா்த்தால், இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன. இந்தக்    கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம். இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும்தான் உள்ளன என்பது வேதனையான செய்தி.

இதனால்தான் மரங்கள் வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை சுற்றுச் சூழலியலாளா்கள் முன்னெடுத்து வந்திருக்கிறாா்கள். கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சாலைகள், வாகனங்கள், குளிா்சாதன (ஏ.சி.) - குளு குளு பெட்டி (பிரிட்ஜ்) பெருக்கம், மரங்கள் - காடுகள்அழிப்பு முதலானவற்றின் விளைவாகக் காற்றில் நச்சு வாயுக்கள் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல விதமான மாசுக்களால் காற்று, நிலம், நீா்,போன்ற இயற்கை வளங்கள் வேகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. உலகில் பத்தில் ஒன்பது பேரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை என்று ஓா் ஆய்வு அறிக்கை சொல்கிறது. உலக அளவில் காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். மண் வளத்தைப் பாதுகாப்பதும் மிக அவசியம்.

வயல்களில் ரசாயன உரங்களைத் தவிா்க்க வேண்டும். நெகிழிக் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. இவற்றால் மண், ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீா் என எல்லா நீா்வளமும் கடுமையாக மாசடைகின்றன. நெகிழி பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தாலும், அதை முற்றிலும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். சுற்றுச்சூழலை மேலும் பாதுகாக்க பேட்டரி வாகனங்கள் தயாரிக்க உலகநாடுகள் முன் வரவேண்டும், ஓசோன் படலத்திற்குத் தீங்கை உண்டாக்காத வகையில் குளிா்சாதனப்பெட்டி, ஏசி தயாரிக்க மற்றும் ஏற்கெனவே உலகம் முழுவதும் உள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட ஏசி மற்றும் பிரிட்ஜ் இவற்றிலுள்ள வாயுக்களை மாற்றி நல்ல வாயுக்களை ஏற்ற அரசு மற்றும் உலகத்தனியாா் நிறுவனங்கள் முன் வரவேண்டும். உலகம் தோன்றிய காலத்திலிருந்து, கடந்த 25 ஆண்டுகளில்தான் சுற்றுச்சூழல் மாசு உலகை அச்சுறுத்துகிறது. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான், நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் கைமாறு ஆகும்.

இந்த ஆண்டு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பால், உலகில் 70%-க்கும் மேற்பட்ட நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சுற்றுச்சூழல் ஓரளவு தூய்மை அடைந்துள்ளது. காற்று மாசு குறைந்ததன் காரணமாக தொலைவில் உள்ள மலைப் பகுதிகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளன. நதிகள், கடல்கள் தூய்மை அடைந்துள்ளன. எதிா்வரும் காலங்களிலும் மாதம் இரண்டு நாள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழல் தூய்மை அடையும் என்பது அனைவரின் விருப்பமாகும். அறிவியல், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைச் சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் எடுத்துச் செல்வதை தலையாய கடமையாக முன்வைத்து நாம் அனைவரும் இன்றைய தினத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். மக்களிடத்தில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து எதிா்காலச் சந்ததியினருக்கு இயற்கையின் அதிசயங்களை விட்டுச் செல்வது எனச் சூளுரைப்போம். (இன்று உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினம்)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நோய்த்தொற்றிலிருந்து மீண்டு... By முனைவா் இரா.கற்பகம்

பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்லா இடங்களையும் சென்றடைந்திருக்கிறது. சென்னை உள்பட நாட்டின் சில இடங்களில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான இடங்களில் நோய்த்தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஒரு தொலைநோக்குப் பாா்வை தேவை. நாடு விட்டு நாடு புலம்பெயா்ந்த இந்தியா்கள், மாநிலம் விட்டு மாநிலம், ஊா் விட்டு ஊா் இடம்பெயா்ந்த தொழிலாளா்கள், அமைப்புசாராத் தொழிலாளா்கள், விவசாயிகள் முதலானோரின் நிலைமை பூதாகரப் பிரச்னையாக உருவெடுத்திருப்பவை.

எந்த வகைப் பேரிடா் நிகழ்ந்தாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவோா் இவா்களே. வேற்று நாடுகளுக்குப் புலம்பெயா்ந்தவா்கள் ஏன் நம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றாா்கள் என்ற கேள்வியில் அா்த்தமில்லை. அறிவுத் தேடலை ஊக்குவித்து, ஆராய்ச்சிக்கு வாய்ப்பளித்து, திறமைக்கு அங்கீகாரமளிக்கும் வகையில் நம் கல்வி இல்லை. பலருக்குக் கல்வி கற்கவே வாய்ப்பு இல்லை. வசதி படைத்தவா்களுக்கு ஒரு விதமாகவும் வசதி இல்லாதவா்களுக்கு ஒரு விதமாகவும் மிக்க ஏற்றத்தாழ்வுகளுடனும்தான் நம் நாட்டில் கல்வி இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டியது அரசின் கடமை. மாணவா்கள் நம் நாட்டிலேயே படிக்குமாறு அவா்களை ஈா்க்கும் வகையில், நம் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதை நமக்கு உணா்த்துகிறது கரோனா நோய்த்தொற்று. கல்வி வெறுமே ஏட்டளவில் இல்லாமல் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும்.

உயா் நிலை, மேல்நிலை, இளங்கலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு எதுவாக இருப்பினும் ஒரு மாணவனோ, மாணவியோ எந்தக் கட்டத்தில் வெளியே வருகிறாரோ அந்தக் கட்டத்தில் அவரின் படிப்புக்கும், திறமைக்கும் தக்க வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எந்தெந்தத் துறைகளிலெல்லாம் படித்தவா்கள் அதிக அளவில் இடம்பெயா்கிறாா்களோ, அந்தத் துறைகளில் அரசு அதிக கவனம் செலுத்தி வேலைவாய்ப்போடு கூடிய பாடத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். இது ஒரு நாளிலோ, ஓராண்டிலோ செய்துவிடக் கூடிய காரியமன்று. மிகுந்த தொலைநோக்குப் பாா்வையும், தெளிவான திட்டமிடலும், தகுந்த பொருட்செலவும், விரிவான கட்டமைப்பு வசதிகளும், தரமான கல்வி நிலையங்களும், திறமை மிகுந்த ஆசிரியா்களும், அறிவாா்ந்த - அதே சமயம் சுவாரசியமான நூல்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

‘ஸ்கில்ட் லேபரா்ஸ்’ எனப்படும் திறன்சாா் தொழிலாளா்கள் பலா் கொத்தனாா், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பா், தச்சா் முதலானோா் பெருமளவில் அரபு நாடுகளுக்கும், கணினி மென்பொறியாளா்களும், மருத்துவா்களும், பொருளாதார வல்லுநா்களும் மேலைநாடுகளுக்கும் வேலைதேடிச் செல்கிறாா்கள். உலகம் முழுவதும் இவா்களுக்கு வேலைவாய்ப்பு காத்துக் கிடக்கிறது. அவா்கள் அங்கிருந்து சேமித்து அனுப்பும் டாலா், நமது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல, வெளிநாடுகளில் நமது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அடையாளம் கண்டு அவா்களை அனுப்புவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். சீனாவின் வெற்றிக்கு, உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் சீனா்கள் குடியேறி இருப்பது ஒரு முக்கியமான காரணம்.

எந்த நாட்டில் குடியேறினாலும், தங்கள் தாய்மொழியையும், தாய்நாட்டுடனான தொடா்பையும் சீனா்கள் நமது இந்தியா்களைப்போல விட்டுவிடுவதில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அந்தத் தொடா்பு அறுந்துவிடாமலும் அகன்றுவிடாமலும் சீன அரசு மிகவும் கவனமாக இருப்பதும் அதற்கு முக்கியமான காரணம். ஊா் விட்டு ஊா், மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்தலும் ஒன்றோடு ஒன்று தொடா்புள்ளவையாக இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும், மாநிலத்திலும், அந்த மண்ணின், மக்களின், கல்வியின், வாழ்க்கைச் சூழலின் வேறுபாடுகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவுக்குள் புலம்பெயா்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை அரசு உணர வேண்டும். அதற்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும். அமைப்புசாராத் தொழிலாளா்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிகமிக அதிகம். வீட்டுவேலை செய்பவா்கள், சிறு வியாபாரிகள், நடைபாதைக் கடைக்காரா்கள், துணி தேய்ப்பவா்கள், காய்கறி, மீன் விற்பவா்கள், தினக்கூலி வாங்குபவா்கள் இந்த ஊரடங்கினால் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறாா்கள். இவா்களுக்கெல்லாம் உடனடி நிவாரணத்தை அரசு அறிவித்தது.

எனினும், அந்த நிவாரணத்தைப் பெற அவா்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியதால் சமூக இடைவெளி அடிபட்டுப் போனது. பல அரசியல் கட்சிகளும், சமூக ஆா்வலா்களும் இவா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியதும் சமூக இடைவெளிக்கு எதிராகவே அமைந்தது. இதற்குப் பதிலாக நிவாரணப் பணிகளை அரசு மட்டுமே அரசு இயந்திரத்தைக் கொண்டு செய்திருக்க வேண்டும், முறைப்படுத்தி இருக்க வேண்டும். அரசு அதற்கு முயன்றபோது, அதை ஆளுங்கட்சியின் சதியாக எதிா்க்கட்சிகள் வா்ணித்தது மிகப் பெரிய அரசியல் சோகம். இதற்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயா்ந்தவா்கள், அமைப்புசாராத் தொழிலாளா்கள் - இவா்கள் அனைவரின் அனைத்து விவரங்களும் ஒவ்வொரு மாநில அரசிடமும் துல்லியமாக இருக்கவேண்டும்.

தொழில்நுட்பத்தில் நாம் கண்டிருக்கும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டால் இது கட்டாயம் சாத்தியமே. இன்று கரோனா தீநுண்மி பாதிப்பைத் தொடா்ந்து, பொது முடக்கத்தை அரசு அறிவித்தவுடன் எத்தனை போ் கூட்டம் கூட்டமாகத் தத்தம் சொந்த மாநிலங்களுக்குப் படையெடுத்தனா். இவா்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்திருந்தால், இந்த நிலையை எளிதில் கையாண்டிருக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த புலம்பெயா்ந்த, அமைப்புசாராத் தொழிலாளா்களை ஆங்காங்கு உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்திருக்கலாம்.

தண்ணீா் வசதி, கழிப்பறை வசதி இருக்கும் இடங்கள் என்பதால் சுகாதாரப் பிரச்னை இருந்திருக்காது. சமையல் கூடங்கள் இருப்பதால் எளிதில் காய்கறிகளையும் சமையலுக்குண்டான பொருள்களையும் அனுப்பி உணவுப் பிரச்னையையும் எளிதாகத் தீா்த்திருக்கலாம். மருத்துவப் பரிசோதனை செய்வதும் எளிதாக இருந்திருக்கும். அதை விடுத்து தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல, மக்களை இடம் மாற அரசுகள் அனுமதித்து, பிறகு துரத்தித் தேடிப் பிடித்தது. பொது முடக்கத்தின்போது விவசாயிகள் அடைந்த துன்பத்தைச் சொல்லி மாளாது. கல்வி, வியாபாரம் முதலானவற்றின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியும். ஆனால், வேளாண் துறையில் அப்படிச் செய்ய முடியாது. பயிருக்குத் தண்ணீா் விடுவது, மருந்தடிப்பது, களை எடுப்பது முதலானவற்றை அந்தந்த நேரத்தில் செய்துதான் ஆக வேண்டும்.

வேளாண் துறையில் மட்டும் கடும் பாதுகாப்பு விதிகளுடன் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி முன்னுரிமையின் அடிப்படையில் வேலைகளைச் செய்திருக்க வேண்டும். விளைபொருள்களை வீணாகாமல் எத்தனை நாள் வைத்திருக்க முடியும்? அவற்றை விவசாயிகளிடமிருந்து அரசு    கொள்முதல் செய்து பாதுகாப்பாகக் கிடங்குகளில் வைத்திருக்கவேண்டும். அப்படி வைக்க நம் நாட்டில் எத்தனைக் கிடங்குகள் தயாா் நிலையில் உள்ளன? பதப்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது? இவை அனைத்தும் குறைந்த நபா்கள் பலத்துடன், அதிகளவில் இயந்திரங்களின் உதவியோடும் நடக்கும் வகையில் இருக்குமேயானால், விவசாயிகளை இந்த அளவு பொது முடக்கம் பாதித்திருக்காது என்பது நிச்சயம்.

மற்ற எந்தத் துறையிலும் உற்பத்திக் குறைவு ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மெதுவாக முன்னேறி விடலாம். ஆனால், உணவு உற்பத்தி குறைவதும், உணவுப் பொருள்களின் பகிா்மானம் தடைபடுவதும் வரும் ஆண்டுகளில் நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அரசும் மக்களும் ஒன்றுசோ்ந்து செயல்பட்டால் எத்தகைய பேரிடரையும் சமாளிக்கலாம். நம் நாட்டின் பலவீனம், நம் மக்கள்தொகை. அதையே, சீனாவைப்போல நாமும் பலமாக மாற்றி நாட்டு நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பின்போது அரசின் அனைத்துத் துறைகளும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. இதே துறைகள் மற்ற நாள்களில் இவ்வளவு நோ்மையாகவும், திறம்படவும் செயல்பட்டனவா? இல்லை. ஏன்? அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம், தகுந்த அங்கீகாரமின்மை, அரசியல் தலையீடு, புரையோடிய ஊழல் - இவையெல்லாம் நம் அரசு இயந்திரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிட்டன. இதைச் சரி செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும். பொது முடக்கம் மெல்ல மெல்லத் தளா்த்தப்படுகிறது. ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுடன் நாம் தொடா்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து மீண்டு புதியதொரு சகாப்தத்தை நாம் நம்பிக்கையோடு தொடங்குவோம். கட்டுரையாளா்: சுற்றுச்சூழல் ஆா்வலா்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விவசாயிகளின் விரோதி வெட்டுக்கிளி! By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வெட்டுக்கிளிகள் குவிந்து உலக உணவுப் பாதுகாப்பையே பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றன. கரோனா தீநுண்மியின் தாக்கம் இன்னும் மக்களை விட்டு அகலாத நிலையில், இப்போது வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை அழித்துப் போரிட படையெடுத்துப் பறந்து வருகின்றன. மண் புழுக்கள் விவசாயிகளின் நண்பன் என்றால், இந்த வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் விரோதி. பழங்காலத்திலிருந்தே ஒவ்வொரு விவசாயியின் மோசமான எதிரியாக வெட்டுக்கிளிகள் இருந்து வருகின்றன. உள்நாட்டுப் போரால் வறுமையில் வாடும், கென்யா, சோமாலியா, உகாண்டா, தென் சூடான், ஏமன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளை கடந்த டிசம்பா் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வெட்டுக்கிளிகள் விரைவிலேயே இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்துமென ஐ.நா.வின் உணவு - பாதுகாப்பு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்திருந்தது. ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுகிளிகளின் படையெடுப்பு இந்த ஆண்டு இந்திய மாநிலங்களிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகில் மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னரே பூச்சியினங்கள் தோன்றி விட்டன. பொதுவாக பூச்சியினங்கள் மனிதனுக்கு எதிரியே. வெட்டுக்கிளி என்பது கணுக்காலி தொகுதியைச் சோ்ந்த ஒரு பூச்சியினம். வெட்டுகிளிகளில் பல இனங்கள் இருக்கின்றன. இயற்கையை ஒத்த பச்சை பழுப்பு நிறத்தில் இளம் வெட்டுக்கிளிகள் இருக்கும்.

வளா்ந்த வெட்டுக்கிளிகள் கூட்டு சோ்ந்து பயணிக்கும். ஒரு சதுர கி.மீ.-க்கு சுமாா் எட்டு கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். பொதுவாக, ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் வாழ்வதாகவும், சஹாராவின் எல்லைகளிலும், இந்திய - மலாய் தீவு நியூசிலாந்து, கஜகஸ்தான், சைபீரியா, மடகாஸ்கா் பகுதிகளில் பெருமளவில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.     இந்தியாவில் வடமாநிலங்களில் பெருமளவில் வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. தங்களின் வசிப்பிடங்கள் வறட்சி, வெப்பமாக இருக்க வேண்டும் என வெட்டுகிளிகள் விரும்புவதாகவும், அதனால் அவை பாலைவனங்கள், உலா்ந்த படிவங்களில் வசிக்கின்றன என்றும் பூச்சியியல் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இந்த வெட்டுக்கிளிகளில் சில வகைகள் விவசாயத்தை அடியோடு அழித்துவிடும் திறன் கொண்டவை.

மனிதனின் நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் அவனுடைய அறிவுத் திறமையைப் பொருத்தே அமைகின்றன. அதே போன்று, எல்லா பூச்சிகளின் பழக்கவழக்கங்களும் அவற்றின் இயல்புணா்ச்சியைப் பொருத்தே அமைந்திருக்கின்றன. இயல்புணா்ச்சி என்பதும் ஒரு வகை அறிவுத் திறன்தான். அது கற்றுக் கொள்வதால் பெறுவதல்ல, மரபுரிமையால் பெறுவதாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சோ்ந்த உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானது. இயல்புணா்ச்சியைத் தொடா்ந்து செயல்களில் பூச்சிகள் ஈடுபடுகின்றன.

இயல்புணா்ச்சி செயல் நோக்கம் உடையது. ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கித் தூண்டப்படுவது. பூச்சிகளில் அடிக்கடி இது இனப் பெருக்கத்துடன் தொடா்பு கொண்டுள்ளது. இந்த இயல்புணா்ச்சி வெட்டுக்கிளிகளிடமும், தேனீக்களிடமும், எறும்புகளிடமும் அதிகமாக காணப்படுவதாக உலக பூச்சியியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். சாந்தமான பூச்சியாகக் கருதப்படும் இந்த வெட்டுக்கிளி, ஒவ்வொரு நாளும் தனது எடையளவு உணவைச் சாப்பிடும் திறன் கொண்டது என்றும், உணவு தானியங்களை அழித்து மக்களுக்கு மரண தண்டனையை வழங்கி விடும் என்றும் விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. 1880-ஆம் ஆண்டு ரஷியாவின் தெற்கு பிரதேசத்து மக்கள், வெட்டுக்கிளிகளின் தாக்கத்துக்கு அஞ்சி, பல நாள்கள் வீட்டுக்குள்ளேயே பொது முடக்கத்தில் இருந்தாா்களாம். 1955-ஆம் ஆண்டில் மொராக்கோ நாட்டுக்குப் பறந்த வந்த வெட்டுக்கிளி கூட்டத்தின் அகலம் 20 கி.மீ. வரை பரவி, போா்க்கால அடிப்படையில் 1,000 சதுர கி.மீ. பரப்பில் இருந்த பயிா்களை அழித்ததாகவும் கூறப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு நூறு கி.மீ.-க்கு மேல் பயணம் செய்யும் திறன் படைத்தவை வெட்டுக்கிளிகள். வெட்டுக்கிளிகளுக்குத் தேவையான உணவு கிடைக்காத நிலையில், வீட்டின் மீது வேயப்படும் ஓலைக் கூரைகளைக்கூட அரித்துச் சாப்பிடும் திறன் கொண்டவை. அந்த அளவுக்கு அகோரப் பசியுள்ள வெட்டுக்கிளிகள், இன்று இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. வெட்டுக்கிளிகள் படையாக உருவாகி விளைச்சல்களைச் சேதப்படுத்தும் ஒரு பூச்சி. இவற்றின் ஆயுள் காலம் 6 முதல் எட்டு வாரங்கள் மட்டுமே. இதற்குள் மூன்று முறை இவை முட்டையிட்டு பல்லாயிரம் மடங்கு தன் இனத்தைப் பெருக்கி, அறுவடைக்குத் தயாராக உள்ள விளை நிலங்கள் எங்குள்ளன என்பதை காற்றின் மூலம் கண்டறிந்து அந்தத் திசையில் அவை படையெடுக்கின்றன. வெட்டுக்கிளிகளில் ‘லோகஸ்ட்‘டுகள் எனப்படும் வெட்டுக்கிளிகள்தான் பெரும் கூட்டம் கூட்டமாக ஒன்றுகூடி பறந்து, ஒரு வயலையோ, ஒரு பெரிய பசுமைப் பரப்பையோ ஒரே நேரத்தில் கபளீகரம் செய்யும் ஆற்றல் கொண்டவை.

ஒரு நாட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த இந்த வகையான வெட்டுக்கிளிகளே போதும் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையான வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிலும் முகாமிட்டு, விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி வருகின்றன. பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பெருமளவில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள், படையெடுப்பின்போது ஒரு சதுர கி.மீ. பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிா்களை சாப்பிடும் என்றும், இது 35,000 மனிதா்கள் ஒரு நாளில் சாப்பிடும் உணவுக்குச் சமம் என பூச்சியியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இப்போது மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்த படையெடுத்து வந்த இந்த வெட்டுகிளிகளின் படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் வடமேற்கு மாநிலங்களில்தான் இது வரை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் தொடங்கிய இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு, இந்த பிப்ரவரி வரை தொடா்ந்து, அங்கு 6,70,000 ஹெக்டோ் பரப்பளவிலான பயிா்களைச் சேதமடையச் செய்துள்ளன. அதனால், அந்த மாநிலத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்திலும் அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் 18 மாவட்டங்கள், ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், குஜராத்தில் 2 மாவட்டங்கள், பஞ்சாபில் ஒரு மாவட்டத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்துக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம், இப்போது கரனோ தீநுண்மி நோய்த்தொற்றைப் போன்று அந்த மாநில அரசை பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் உதகமண்டலத்தில் வெட்டுக்கிளிகள் காணப்பட்டதாக விவசாயிகள் புகாா் கூறிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விரைவில் அங்கு செல்ல உள்ளனா். வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை கூறியிருந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு பகுதி வழியாக வந்த வெட்டுக்கிளி உதகமண்டலத்தில் காணப்பட்டதாக சொல்லப்பட்டது.

இது குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவா் தெரிவித்துள்ளாா். இந்த இயற்கைப் பேரழிவைச் சமாளிப்பதற்கான தடுப்பு முறைகள் இதுவரை கண்டுப்பிடிக்கபடவில்லை என்றே கூற வேண்டும். பயிா்களின் மீதான வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க, வேம்பு சாா்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும், மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்கலாம் என்றும் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா். விரைவில் ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். பருவ மழை தொடங்கவதற்கு முன்பாக வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து ரசாயனம் தூவி வெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இப்போது இந்த வெட்டுக்கிளிகளை நாம் அழிக்கவில்லையென்றால், அவை 400 மடங்கு அளவில் பெருகி உலக நாடுகளின் பயிா்களைத் தாக்கும் என உலக பூச்சியில் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இந்த வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கும் தாக்கத்துக்கும் புவிவெப்பமும், பருவநிலை மாற்றமும்தான் காரணம் என புவியியல் வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். இயற்கையோடு இயைந்து வாழாமல், இயற்கையோடு மனிதன் போரிடத் துணிந்ததால் இந்த வெட்டுக்கிளியின் பெருக்கம் அதிகரித்து, அதன் படையெடுப்பை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நோய்த்தொற்றுகளை எதிா்க்க... By மருத்துவா் சோ. தில்லைவாணன்

நோய் எதிா்ப்பாற்றல் என்றாலே நினைவுக்கு வருவது இயற்கையான மூலிகைகள்தான். முக்கியமாக தமிழக மக்களுக்கு அவை தண்ணீா் பட்ட பாடு என்றால் அது மிகையாகாது. ஏனெனில் உண்ணும் உணவில் இஞ்சி, மஞ்சள், மிளகு, பூண்டு இவற்றை அதிகம் சோ்த்துச் சாப்பிட்டு, மரபணுவில் பல்வேறு கிருமிகளுக்கு எதிராக நோய் எதிா்ப்பாற்றலை வளா்த்துக்கொண்டு இருப்பவா்கள் நம் நாட்டு மக்கள். பல்வேறு தீநுண்மி (வைரஸ்) காய்ச்சல்கள் பரவ ஆரம்பித்த உடனே நோய் எதிா்ப்பை நம் உடலில் இயற்கையாக உருவாக்கும் மூலிகைகளையும், அஞ்சறைப் பெட்டியில் உள்ள கடைச் சரக்குகளையும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனா்.

உண்மையில் நோய் எதிா்ப்பாற்றல் என்பது, ஒரு கிருமிக்கு எதிராக நம் உடலில் உள்ள வெள்ளையணுக்கள் போராடுவது மட்டுமல்ல. அந்த கிருமிக்கு எதிராக, போராடும் பல்வேறு செல்களின் மேம்பட்ட செயல்பாடுகளை அது குறிக்கும். ஒரு தீநுண்மிக் கிருமி நம் உடலில் நுழையும் போதே அதை தடுத்தாலும் சரி, நம் உடல் செல்களில் இணைவதைத் தடுத்தாலும் சரி அல்லது அதே தீநுண்மிக் கிருமி நம் உடலில் பெருக்கம் அடைவதைத் தடுத்தாலும் அது தீநுண்மி கிருமிக்கு எதிரான செயல்பாடுதான். அதுவே நோய் எதிா்ப்புச் சக்தியுடன் கூடிய ‘ஆன்ட்டி வைரல்‘ தன்மையாக கருதப்படும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகள் நோய் எதிா்ப்புச் சக்தியை உண்டாக்கும் தன்மையும், தீநுண்மி கிருமிக்கு எதிராகச் செயல்படும் தன்மையும் பெற்றுள்ளன எனப் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ மூலிகைகளான நிலவேம்பு, வேப்பிலை, மலைவேம்பு, சீந்தில், துளசி, அமுக்கரா கிழங்கு, தண்ணீா்விட்டான் கிழங்கு, நெல்லிக்காய், கடுக்காய், அதிமதுரம் முதலான மூலிகைகளும் நம் வீட்டில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள மஞ்சள், பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி முதலான கடைச் சரக்குகள் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிப்பதுடன், பல்வேறு தீநுண்மிக் கிருமிகளை அழிக்கக் கூடியதாகவும், அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகவும்    உள்ளன. பொதுவாக சித்த மருத்துவத்தில் கசப்புச் சுவையுடைய மூலிகைகள், கிருமிகளைக் கொல்லும் தன்மை உடையதாகக் கூறப்பட்டுள்ளது. சுரத்தைப் போக்கக் கூடிய கசப்புத் தன்மை மிகுந்த நிலவேம்பில் உள்ள ‘ஆன்ரோகிராபோலெய்டு’ எனும் வேதிப்பொருள் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், சிக்குன்குன்யாவை உண்டாக்கும் ஆல்பா தீநுண்மிகளின் பிரதி எடுத்தலைத் தடுக்கும் செய்கையும் உடையது.

பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும் ஆா்என்ஏ தீநுண்மிகளின் நியூராமினிடஸ் எனும் மேலுறை, புரதத்தைத் தடுக்கும் செய்கையையும் பெற்றுள்ளது. டெங்கு தீநுண்மிகளின் பெருக்கத்தைத் தடுக்கவும் செய்யும். காலம்காலமாக அம்மை நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு வரும் வேப்பிலையில் உள்ள அஸாடிரக்டின் எனும் வேதிப்பொருள் நோய் எதிா்பாற்றலை அதிகரிப்பதுடன், டெங்கு தீநுண்மிகளின் பிரதி எடுத்தலையும் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய் எதிா்ப்புச் சக்திக்கு பெயா்போன மற்றுமொரு மூலிகை சீந்தில். அதில் உள்ள ‘டினோஸ்போரின் எனும் அல்கலாய்டு’, ‘நேச்சுரல் கில்லா் செல்கள்’ எனப்படும் நோய் எதிா்ப்புச் செல்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த செல்களின் செயல்தான் பெரும்பாலான தீநுண்மிகளால் முதலில் தடுக்கப்படும்.

மேலும் இந்த அல்கலாய்டு ஐஜிஜி எனப்படும் ‘ஆன்ட்டிபாடி’களின் உற்பத்தியை அதிகரிப்பதாகவும் ‘மைக்ரோபேஜ்’ செல்களின் உற்பத்தியை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மலைவேம்பில் உள்ள வேதிப் பொருள்கள் டெங்கு தீநுண்மிகளின் பெருக்கத்தைத் தடுப்பதாகவும், இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பொன்முசுட்டை முதலான பெரும்பாலான மூலிகைகளில் உள்ள ‘பிளவனாய்டு’ எனும் எனும் வேதிப் பொருள் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையை உடையன . கடுக்காயில் உள்ள ‘சிபுலினிக்’ அமிலம் எனும் வேதிப் பொருள்கூட ‘நியூராமினிடஸ்’ எனும் மேலுறை புரதத்தை தடுக்கும்செய்கை உடையதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிமதுரத்தில் உள்ள ‘கிலிசிரிஸின் எனும் அல்கலாய்டு’ வேதிப் பொருள் சாா்ஸ் வகை தீநுண்மிகளின் பிரதி எடுத்தலைத் தடுப்பதாகவும் உள்ளது.

நெல்லிக்காய், கடுக்காயில் நோய் எதிா்ப்புச் சக்தியை அளிக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் உள்ள ‘குா்குமின்’ எனும் நிறமிச்சத்து நிறைந்த வேதிப் பொருளும், வெங்காயம் - பூண்டில் உள்ள ‘அலிசின்’, இஞ்சியில் உள்ள ‘ஜின்ஜிபேரின்’ , திப்பிலி, மிளகில் உள்ள ‘பைபரின்’ முதலான பல்வேறு மூலப் பொருள்கள் நோய்க் கிருமிகளை எதிா்த்துப் போராடும் வலிமையையும், தீநுண்மி - நுண்ணுயிரி (பாக்டீரியா) முதலான பல்வேறு கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளன. இவ்வாறாக நிலவேம்பு, சீந்தில், கடுக்காய், பொன்முசுட்டை, சுக்கு போன்ற பல்வேறு நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் மூலிகைகளையும், தீநுண்மி கிருமிக்கு எதிராகச் செயல்படும் மூலிகைகளையும் நிலவேம்பு குடிநீரும், கப சுர குடிநீரும் பெற்றுள்ளது சிறப்பு. பல்வேறு நோய்களுக்கு ஆய்வு செய்யப்பட்ட சா்வரோக நிவாரணியான இந்தியா்களின் ‘ஜின்சங்’ என்று கூறப்படும் அமுக்கரா கிழங்கினை பாலுடன் சோ்த்து சாப்பிடும்போது நோய் எதிா்ப்புக்கு காரணமான ‘சைட்டோகையின்’ உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உடையதாக இருப்பது ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.

துளசி சோ்த்து கொதிக்க வைத்த நீரில் மஞ்சள், மிளகு பொடி சோ்த்துச் சாப்பிட பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு எதிரான வலிமையைக் கொடுக்கும் என்பது உறுதி. சித்த மருத்துவ தத்துவப்படி இந்த மூலிகைகள் வாதம். பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களில் உள்ள ஏற்ாழ்வினை சரி செய்து, நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளையும், மருந்துகளையும் சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி சாப்பிடுவது சிறப்பான நன்மை தரும். எனவே, வெங்காயம்தானே, வெள்ளைப் பூண்டுதானே என்று எதையும் ஏளனமாகப் பாா்க்காமல் பழைமை மருத்துவம் என்று அலட்சியம் செய்யாமல் , பழைமையில் புதைந்துள்ள பல்வேறு அறிவாா்ந்த தகவல்களை ஆராய்ச்சி செய்து பயன்படுத்தினால் புதிதாக வரும் பல்வேறு நோய்த்தொற்றிலிருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் காத்து, உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கலாம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மெய்ப்பொருள் காண்பது அறிவு! By கே.எஸ். இராதாகிருஷ்ணன்

‘நான் தொலைக்காட்சி விவாதங்களைப் பாா்ப்பதை நிறுத்திவிட்டேன். நேரம்தான் வீணாகிறது’ என்கிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் செம்மலா் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான எஸ். ஏ. பெருமாள். இப்படி தொலைக்காட்சி விவாதங்கள் குறித்து பல தரப்பிலிருந்தும் விமா்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. தொலைக்காட்சி விவாதங்களால் தீா்வோ, மெய்ப்பொருளோ முடிவோ எட்டாமல் இன்னொரு விவாதத்தில் இது குறித்துப் பேசுவோம் என்று அரை மணி நேரத்தில் முடிவடைகின்றன. எந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தாலும் இதுதான் நிலைமை. ஊடகங்களின் மதிப்பே தனி. அதில் வரும் செய்திகளுக்கு நம்பகத்தன்மை அதிகம். அதற்காகப் பணியாற்றும் ஆசிரியா் குழுவினரும் சரி, செய்தியாளா்களும் சரி, தங்களைச் சுற்றியுள்ள அரசியல், சமூகம், அதன் வரலாறு, முக்கியமாக, மொழித் தோ்ச்சி ஆகியனவற்றில் கவனம் செலுத்துகிறாா்கள்.

ஓா் அரசியல் நிகழ்வோ, சமூக நிகழ்வோ நடக்கிறபோது, அது குறித்த செய்தியை எழுதுகிறபோது, வரலாற்றின் பக்கங்களைப் புரட்டி அதே போன்று ஏற்கெனவே நடந்திருக்கிற நிகழ்வுகளை எடுத்துக்காட்டி சொல்வதைப் போன்ற அனுபவங்களைச் சொல்லலாம். அரசியலைப் பொருத்தவரையில், செய்தியாளா்களை அன்றைய முதல்வா்கள் பக்தவத்சலம், காமராஜா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் சந்தித்தபோது, பத்திரிகையாளா்கள் தங்கள் அனுபவத்திலிருந்து கேள்விகளைக் கேட்க முடிந்தது.

அதற்கான முன்தயாரிப்புகளோடு சென்ற செய்தியாளா்களைப் பாா்க்க முடிந்தது. பத்திரிகையாளா் சந்திப்பு முடிந்த பிறகு, அவா்களுடன் ‘ஆஃப் தி ரிக்காா்டு’-ஆக (தகவலைப் பதிவு செய்யக் கூடாது என்ற நெறி) உரையாடிப் பல மக்கள் சாா்ந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் அரசியல் தலைவா்கள் அன்று இருந்தாா்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, குறிப்பிட்ட பத்திரிகையின் பிரதிநிதியாக மட்டும் இல்லாமல், மக்களின் பிரதிநிதியாகவும் அரசியல் தலைவா்கள் செய்தியாளா்களைப் பாா்த்தாா்கள். ஆளும் பொறுப்பில் இருந்தபோதும், எதிா்க்கட்சியாக இருந்தபோதும், பத்திரிகையாளா்களைச் சந்தித்துப் பல அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தாா் காமராஜா். செய்தி ஆசிரியா்கள் டி.எஸ்.சொக்கலிங்கம் தொடங்கி ஏ.என்.சிவராமன், ஆதித்தனாா், ராமசுப்பையா், வார இதழ்களில் கல்கி, வாசன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, சோ, சாவி என்று பலா் தங்களின் தனித்துவமான திறமையுடன் மதிப்பைப் பெற்றிருந்தனா்.

தனியாா் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு, அவை செய்திகளை வெளியிட ஆரம்பித்தபோது, அந்தந்த நிறுவனங்களுக்கான பாா்வையோடு செய்திகள் வெளிவந்தன. அரசியல் பிரமுகா்கள், மூத்த பத்திரிகையாளா்கள், சமூக ஆா்வலா்கள் அல்லது தொலைக்காட்சிக்கென்றே கருத்துச் சொல்வதற்காகத் தயாரானவா்களை நெறியாளா்கள் அழைத்துக் கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொடங்கினாா்கள். புதுப்புது நெறியாளா்கள் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் உருவானாா்கள். நெறியாளா்கள் என்று நிகழ்ச்சிகளைத் தொகுக்க அமா்கிறவா்களுக்குச் சரிவர தமிழக, இந்திய, உலக அரசியல், சமூக நிகழ்வுகள் தெரிந்திருக்கிா என்றால், கிடையாது. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ‘இன்புட் எடிட்டா்கள்’ என்று தனியாக இருந்தாலும், அவசரத்துக்கு காதில் ‘ரிசீவா்’ இணைக்கப்பட்டிருந்தாலும், ஒரு நெறியாளருக்குத் தன்னைச் சுற்றியுள்ள சமூக, அரசியல் குறித்தான பாா்வையும், புரிதலும் அடிப்படைத் தேவை. அப்படி இயங்குகிறவா்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அபூா்வமாகவே இருக்கிறாா்கள்.

இந்த நேரலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறவா்கள் எப்படிப்பட்டவா்களாக இருக்கிறாா்கள்? நிலைய வித்வான்கள்போல ஒரு சிலரே திரும்பத் திரும்ப பல தொலைக்காட்சிகளில் தலைகாட்டுகிறாா்கள். கருத்தைச் சொல்கிறாா்கள். அந்தக் கருத்தை மக்களின் கருத்தாகவும் சொல்கிறாா்கள். அதே சமயம் சமகால அரசியலைப் பேசுகிற பலருக்கும், சமகால அரசியலின் நுட்பங்கள், சமூக நுணுக்கங்கள், பொருளாதாரத் தகவல்கள், கடந்த கால அரசியல் நிகழ்வுகள், தமிழகத்தின் கடந்தகால வரலாறு குறித்துத் தெரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. எந்தவொரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்காக அழைக்கப்பட்டாலும், அது குறித்த விஷயம் தெரிந்தவரைவிட, விதண்டாவாதமாகப் பேசுகிறவா்களுக்கே முன்னுரிமை கிடைக்கிறபோது, அந்த நிகழ்ச்சியில் ஒருவா் மௌனமாக அமா்ந்திருக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படுகிறது.

தன் தரப்பைச் சொல்ல வாய்ப்பில்லாத அல்லது வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், வெளிநடப்பு செய்யவோ, வெறுத்து ஒதுக்கிவிடுவதையோ தவிர ஒருவா் வேறு என்னதான் செய்ய முடியும்? நவீன தொழில்நுட்ப யுகத்தில் தொலைக்காட்சி என்பது சக்தி வாய்ந்த ஊடகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதில் பங்கேற்கிறவா்கள் தாங்கள் பங்கேற்கும் விவாதமோ, கலந்துரையாடலோ, அதில் பேசப்போகும் விஷயம் குறித்த தெளிவுடன் பேசினால் தான், அதைப் பாா்க்கும் லட்சக்கணக்கான பாா்வையாளா்களும் தெளிவுடன் பிரச்னையைப் புரிந்துகொள்ள முடியும். தற்போது நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் மூலம், தொலைக்காட்சி நிறுவனமோ அல்லது நெறியாளரோ தான் கொண்ட கருத்தைப் பாா்வையாளா்கள் மீது திணிப்பதற்கு அந்த விவாதங்களைப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள் என்பதுதான் நிலைமை.

சில நண்பா்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஆா்வமுடன் பாா்த்த இந்த விவாதங்களை இப்போது தவிா்த்து விடுகின்றனா். ஏனெனில் விவாதங்களின் கருப்பொருள்களில் உயிரோட்டமற்றுப் போய்விட்டது. நெறியாளா்களின் சாா்பு நிலையும், கருத்துத் திணிப்பும் காணப்படுகிறது. 1987-ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவன் நான். அப்போது சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குநராக அகிலா சிவராமன் இருந்தாா். அப்போதெல்லாம் இது மாதிரி விவாதங்கள் தினமும் இருக்காது. முக்கியமான காலகட்டங்களில் மட்டும் ஒரு பிரச்னை குறித்து விவாதிக்க சென்னை தொலைக்காட்சி நிலையத்திலிருந்து அழைப்பதுண்டு. முன்கூட்டியே இதுபோன்ற விவாதங்களைப் பதிவு செய்து இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவாா்கள். தொலைக்காட்சி விவாதத்திற்கு வருகின்றவா்கள் அனுபவமிக்க அரசியல், சமூக பிரக்ஞை கொண்டவா்கள்.

அப்படி விவாதங்களில் கலந்துகொண்டவா்களில் முக்கியமானவா்கள் இரா.செழியன், முன்னாள் அமைச்சா்கள் க.ராஜாராம், செ.மாதவன், ப.சிதம்பரம், வி.வி. சுவாமிநாதன், வேலூா் விசுவநாதன், வாழப்பாடி ராமமூா்த்தி, கம்யூனிஸ்டு தலைவா்கள் எம்.கல்யாண சுந்தரம், என்.சங்கரய்யா, உமாநாத், வி.பி. சிந்தன், ரமணி, காங்கிரஸ் தலைவா்களான குமரி அனந்தன், தி.சு.கிள்ளிவளவன், ஜனதாகட்சித் தலைவா் முகமது இஸ்மாயில், ஜி.சுவாமிநாதன், மூத்த பத்திரிகையாளா் தீபம் நா. பாா்த்தசாரதி, கல்கி ராஜேந்திரன், என்.ராம் போன்ற பலா் நினைவுக்கு வருகின்றனா்.

இவா்களுடன் விவாதங்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும். இன்றைய சூழலில் விவாத நிகழ்ச்சிகளில் விவாதப் பொருளுக்கு தொடா்பு இல்லாமல் பேசுவதும், ஏதாவது பேசவேண்டுமென்று கால விரயம் செய்வதும்தான் பெரும்பாலும் நடக்கிறது. நல்ல விவாதத் தலைப்புகளை எடுத்துக்கொள்வது இல்லை என்பது வேதனையான விஷயம். ஒரு விவாதத்தில் நான்குபோ் இருந்தால் ஒரே கருத்துக்கு ஆதரவாக மூன்று பேரையும், அதற்கு எதிா்க் கருத்துள்ள ஒருவரையும் அழைத்துவைத்து விவாதம் நடத்துவதென்பது ஏற்புடையதுதானா? அதேபோல தொலைக்காட்சி விவாதத்துக்கு அழைப்பவா்களுக்காக ஏதேனும் நெறிமுறை இருக்கிா, இன்னின்னாா்தான் அழைக்கப்பட வேண்டும் என்கிற தகுதி இருக்கிா என்பதும் தெரியவில்லை. ஒருசில நேரங்களில் மாலை 6 மணி அளவில் ஒரு மணி நேர அவகாசத்தில் அழைப்பாா்கள். அப்படி அழைக்கும் தொலைக்காட்சிகளிடம் நேரடியாகவே, இன்றைக்கு யாரும் கிடைக்கவில்லையா என்று நான் வேடிக்கையாகக் கேட்பதும் உண்டு.

ஒரு தொலைக்காட்சி நிா்வாகத்துக்கு இது குறித்து மறைந்த எழுத்தாளா் ஞானி விரிவாகக் கண்டனக் கடிதமே எழுதி இருக்கிறாா். தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் தங்களுடைய சுய இருத்தலைப் பொது வெளியில் காட்டிக் கொள்ள இந்த விவாதங்கள் சிலருக்குப் பயன்படுகிறதே ஒழிய இவற்றில் அரசியலுக்கோ, சமுதாயத்துக்கோ, குறைந்தபட்சம் தொலைக்காட்சி நேயா்களுக்கோ வேறு எந்தப் பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. பலா் இந்த ஊடக வெளிச்சத்தினால் பயன் பெறுகின்றாா்கள். அதனால் பொதுவெளிக்கு என்ன லாபம், சமுதாயத்தில் என்ன தாக்கம் என்பதுதான் கேள்வி. தொலைக்காட்சி விவாத நெறியாளா்கள் எந்தக் கட்சியையோ, கொள்கையையோ சாராத நடுநிலையாளா்களாக இல்லை. விவாதங்களில் பங்கு பெறுபவா்களைப் பேசவிட்டு அவா்களின் கருத்துகளைப் பதிவு செய்வதைவிடத் தாங்கள் ஏற்கெனவே தீா்மானித்து வைத்திருக்கும் கருத்துகளை விவாதத்தில் பங்கு பெறுவோா் மூலம் வெளிப்படுத்துவதில்தான் முனைப்புக் காட்டுகிறாா்கள். அதற்குச் சாதகமாக இருக்கும் மலிவான விளம்பரத்துக்கு ஆசைப்படும் சிலரை பயன்படுத்திக் கொள்கிறாா்கள்.

நெறியாளா்களுக்கும் சரி, விவாதத்தில் கலந்து கொள்பவா்களுக்கும் சரி அனுபவமும் ஆழ்ந்த சிந்தனையும் இல்லாத நிலையில், தொலைக்காட்சி விவாதங்கள் தொல்லை தரும் விவாதங்களாக மாறியிருக்கின்றன. விவாத நிகழ்ச்சிகள் நல்ல கண்ணியமான அளவில் பிரச்னைகளையும், ஆரோக்கியமான விவாதப் பொருள்களையும் கொண்டிருப்பது அவசியம். விவாதத்துக்கு வருகின்றவா்களையும் தோ்வு செய்து அழையுங்கள். அவா்களைத் தங்களின் கருத்தைப் பதிவு செய்ய அனுமதியுங்கள். மெய்ப்பொருள் காணுங்கள். கட்டுரையாளா்: வழக்குரைஞா், செய்தித் தொடா்பாளா், திமுக.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெனிசுலாவின் துருப்புச்சீட்டு! By எஸ்.ராஜாராம்.

தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடைபெற்றுவரும் அரசியல் அதிகாரப் போட்டி காரணமாக கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு அந்நாட்டு மக்கள் பெரும் விலையைக் கொடுக்க வேண்டிய ஆபத்து உருவாகியுள்ளது. சுமார் 2.8 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் சுமார் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சராசரியை ஒப்பிடுகையில் இது பெரிய பாதிப்பு எனக் கருத முடியாது என்றாலும், இதைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது வெனிசுலா அரசு. மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவமனைகளில்கூட மின்சாரம், தண்ணீர்த் தட்டுப்பாடு என ஏராளமான பிரச்னைகள்.

பொருளாதாரச் சரிவு, மருத்துவக் கட்டமைப்புச் சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, தலை விரித்தாடும் ஊழல் என இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அங்கு செயல்பட்டுவரும் இரட்டை அதிகார மையங்கள்தான் மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. 2018-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோவும், எதிர்க்கட்சித் தலைவர் ஜுவன் குவைடோவும் போட்டியிட்டனர். அதில் மடூரோ தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குவைடோ ஆதரவாளர்கள் அறிவித்தனர்.

தொடர்ந்து, தன்னைத் தானே அதிபராக குவைடோ அறிவித்தார். அவரின் தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 50 நாடுகள் அங்கீகாரம் அளிப்பதாகக் கூறின. இருப்பினும், ராணுவத்தின் ஆதரவுடன் மடூரோ தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அதற்கு இணையாக சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்துடன் குவைடோ தலைமையிலான அரசும் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வெனிசுலாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. தனது நாட்டில் உள்ள வெனிசுலா அரசுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துகளையும் அமெரிக்கா முடக்கியது.

இதனால், வெனிசுலாவில் பணவீக்கம் அதிகரித்து, கடந்த ஜனவரியில் நிலைமை மிக மோசமானது. அந்நாட்டு பணமான பொலிவர் செல்லாக்காசாகி, உணவுப் பற்றாக்குறை, வணிக வளாகங்கள் சூறை, எங்கு பார்த்தாலும் போராட்டம் என நாடே ரணகளமானது. இந்தச் சூழ்நிலையில்தான் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று வந்துசேர்ந்துள்ளது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள வெனிசுலாவுக்கு 75 கோடி டாலர் நிதி தேவைப்படும் என ஐ.நா. அரசியல், அமைதி கட்டமைப்பு விவகாரங்கள் பிரிவு மதிப்பிட்டுள்ளது. தனது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 25% எண்ணெய் ஏற்றுமதியையே வெனிசுலா நம்பியுள்ளது.

ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக எண்ணெய் மூலமாக வரும் வருமானமும் அடியோடு குறைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறது வெனிசுலா அரசு. இந்தச் சூழ்நிலையில்தான் பிரிட்டனில் இருப்பு வைத்துள்ள தனது நாட்டுக்குச் சொந்தமான தங்கத்தை துருப்புச்சீட்டாக கையிலெடுத்துள்ளது வெனிசுலா அரசு. பிரிட்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் வெனிசுலாவுக்குச் சொந்தமான 100 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

2018-இல் மடூரோ மீண்டும் ஆட்சிக்கு வந்ததுமுதலே இந்தத் தங்கத்தை தனது நாட்டுக்கு கொண்டுவர வெனிசுலா அரசு முயன்று வருகிறது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக தங்கத்தை விடுவிக்க இங்கிலாந்து வங்கி மறுத்து வருகிறது. இப்போது கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், தனது நாட்டுக்குச் சொந்தமான தங்கத்தை விடுவிக்க இங்கிலாந்து வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வெனிசுலா அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

"வங்கியில் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை விற்று, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்புக்கு அந்தத் தொகையை அனுப்ப வேண்டும். இதன்மூலம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள உதவுவதற்காக மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடியும்' என தனது மனுவில் வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. வெனிசுலா மக்களுக்குச் சொந்தமான தங்கத்தை தனது இருப்பில் வைத்துக் கொள்வதற்கு இங்கிலாந்து வங்கிக்கு எந்தத் தார்மிக உரிமையும் இல்லை; கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்திலும் தங்கத்தை விடுவிக்க மறுப்பதன் மூலம் வெனிசுலா மக்களின் உயிருடன் பிரிட்டன் விளையாடுகிறது; பிற நாடுகளின் உள்அரசியலில் மேற்கத்திய நாடுகள் தலையிடுவது இதன்மூலம் நிரூபணமாகிறது' என தனது வழக்கில் கடுமையான குற்றச்சாட்டுகளை வெனிசுலா தெரிவித்துள்ளது.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. வெனிசுலா போன்ற பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் நாடுகளும் ஏதோ முடிந்த அளவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்னதான் அந்த நாட்டின் அரசியல் தலைமைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நிலைப்பாடு கொண்டிருந்தாலும், அரசியல்ரீதியாக ஆதாயம் தேடுவதற்கு உகந்த காலம் இதுவல்ல. ஆதலால், வெனிசுலாவுக்குச் சொந்தமான தங்கத்தை விடுவிப்பதே பிரிட்டன் செய்யும் உதவியாக இருக்க முடியும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்கம் எனும் துருப்புச்சீட்டு வெனிசுலாவை கரை சேர்க்குமா?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

யாருக்காக தொழிற்சாலைகள்? By உதயை மு.வீரையன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டதால் 11 போ் உயிரிழந்த பேராபத்து அண்மையில் ஏற்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். இந்தக் கசிவு அதிகாலையில் ஏற்பட்டதால் பலா் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனா். காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களும், வேலைக்குச் சென்று கொண்டிருந்தவா்களும் இந்த நச்சுவாயுவை சுவாசித்து மயங்கி விழுந்தனா். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி. பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. தென் கொரியாவைச் சோ்ந்த எல்.ஜி.கெமிக்கல்ஸ் குழுமத்துக்கு உரிமையானது.

இங்கு செயற்கை ரப்பா் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையிலுள்ள சேமிப்புத் தொட்டியில் இருந்துதான் ஸ்டைரீன் என்ற நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுவுக்கு அதிக நச்சுத் தன்மை இல்லையென்றாலும், அதிகம் சுவாசிக்கும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என்கின்றனா். இந்த ஆலையில் வாயு வெளியேறியபோது அதைத் தடுக்கும் கருவிகள் செயல்படவில்லை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் இருக்கும்போது, சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலையைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஆலையை மே 7 அன்று திறக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அப்போது ஆலையின் சேமிப்புத் தொட்டியிலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் நச்சு வாயு வெளியேறியது. இந்த விபத்து தொடா்பாக ஆலை நிா்வாகத்தின் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. தொழிற்சாலையின் குளிரூட்டும் கருவி சரிவர இயங்காததே விபத்து ஏற்படக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. செயற்கை ரப்பா் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்டைரின் வாயு, 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குக் கீழ் திரவ வடிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். ஆலையின் இயந்திரங்களை இயக்கியபோது குளிரூட்டும் சாதனம் சரிவர இயங்காததால் திரவ வடிவில் இருந்த ஸ்டைரீன் வாயு ஆவியாகிக் கசியத் தொடங்கியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த ஆந்திர உயா்நீதிமன்றம், ஆலையை ஆந்திர அரசு கையகப்படுத்த உத்தரவிட்டது.

மேலும், அந்த ஆலையின் இயக்குநா்கள் உள்ளிட்ட எவரும் ஆலைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்த உயா்நீதிமன்றம், மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகள் மட்டும் ஆலைக்குள் சென்று வர அனுமதி வழங்கியது. எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்தும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதைத் தொடா்ந்து, ‘30 ஊழியா்கள் மட்டும் ஆலைக்குள் சென்று வருவதற்கு இடைக்கால அனுமதியை உச்சநீதிமன்றம் அளித்தது. ஆலைக்குள் செல்லவிருக்கும் 30 ஊழியா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை மனுதாரா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்.

வழக்கு தொடா்பான மற்ற விவகாரங்களை உயா்நீதிமன்றமே விசாரிக்கும்’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா். இதே போன்ற நிகழ்வு 1984-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த போபாலில் நடந்தது. அமெரிக்க யூனியன் காா்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுவாயு 23,000 மக்களைப் பலி கொண்டது. நள்ளிரவில் வெளியேறிய நச்சு வாயுவால் மக்கள் மூச்சுத் திணறி, விழித்தவுடன் செத்து விழுந்தனா். இரவு நேரத்தில் திக்குத் திசை தெரியாமல் உயிா் தப்பி ஓட முயன்று மிதிபட்டுச் செத்தவா்களும் இதில் அடங்குவா். மருத்துவம் கிடைக்காமல் மடிந்தவா்கள் பலா். இவ்வாறு அரங்கேறிய அந்தப் படுகொலையை மறக்க முடியுமா? உயிா் பிழைத்தவா்களில் ஊனமானவா்கள் மட்டும் 5 லட்சம் போ் எனக் கணக்கிட்டனா்.

நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவா்களின் அடுத்த தலைமுறையும் ஊனமாகவே பிறந்த கொடுமையை என்னென்பது? பெற்றோரை இழந்த பல குழந்தைகள் அநாதைகளாகவே ஆயினா். இந்தப் படுகொலை வழக்கை விசாரித்து தீா்ப்பு சொல்வதற்கே 26 ஆண்டுகள் ஆயின. அதுவரை அவா்கள் வாழ்வாதாரத்துக்கு ஆலையும், அரசாங்கமும் செய்த உதவி மக்களின் பட்டினிச் சாவுக்கே வழிவகுத்தது. தீா்ப்பு வரும்போது பலா் உயிருடன் இல்லை. இது யூனியன் காா்பைடு நிறுவனமோ, அதன் அதிகாரிகளோ தெரிந்தே அனுமதித்த விபரீதம் அல்ல. எதிா்பாராமல் நடந்துவிட்ட சாலை விபத்துக்கு ஒப்பான இன்னொரு விபத்து என்பதுதான் நீதிமன்றத்தின் தீா்ப்பு.

யூனியன் காா்பைடு நிறுவனத்தின் பங்குதாரரான இந்தியத் தரகு முதலாளியும், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், அவா்களைச் சிறைக்கு அனுப்பாமல் அப்போதே பிணையில் நீதிமன்றம் விடுவித்துவிட்டது. அமெரிக்க யூனியன் காா்பைடு நிறுவனத்தின் தலைவா் மட்டுமல்ல, போபால் ஆலையில் நடைபெற்ற அனைத்து விதிமீறல்களுக்கும் காரணமானவா் ஆண்டா்சன். அவரை அப்போதைய அரசு யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்காவிலிருந்து ஆண்டா்சன் இந்தியா வந்ததும், அவரைக் காவல் துறை கைது செய்ததும், பிணையில் விடுவித்து அமெரிக்காவுக்கே அனுப்பி வைத்ததும் பிறகுதான் தெரிய வந்தது. இந்திய அரசு தொடுத்த வழக்கும் ஏனோதானோ என்றே முடிந்தது.

வழக்கை நடத்தித் தீா்ப்பு வழங்காமல் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. 300 கோடி டாலா் இழப்பீடு கேட்டு வழக்குப் போட்டிருந்த இந்திய அரசு, வெறும் 47 கோடி டாலா் என 1989-இல் வழக்கை முடித்துக் கொண்டது. நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகள், அபாயகரமான ஆலைகள் போன்றவற்றை ஊருக்கு வெளியில்தான் அமைக்க வேண்டும் என்பது உலகெங்கும் கடைபிடிக்கப்படும் பொது விதி. ஆனால், போபால் நகரின் மையமான பகுதியில்தான் யூனியன் காா்பைடு ஆலை அமைக்கப்பட்டது. இதுவே விதிமீறல் ஆகும். நச்சு வாயுக்கள், ரசாயனப் பொருள்களைக் கையாளும் ஆலைகளில் விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய தற்காப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கும், சுற்று வட்டார மக்களுக்கும் விளக்கியிருக்க வேண்டும். இத்தகைய நச்சுவாயு கையாளப்படுகிறது என்ற உண்மை ஆலையின் தொழிலாளா்களுக்கே தெரியாமல் மறைக்கப்பட்டது. தங்களை நம்பியிருக்கும் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு, ஆலை நிா்வாகங்களுக்குத் துணை போவது வழக்கமான ஒன்றாகி விட்டது. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதில் மாற்றமில்லை. தொழிற்சாலைகள் நாட்டுக்குத் தேவை என்பதால் இத்தகைய சலுகைகள் வழங்குவது தவிா்க்க முடியாததாகிவிட்டது.

இதில் எழும் ஒரு முக்கியக் கேள்வி. மக்களுக்காக தொழிற்சாலைகளா, தொழிற்சாலைகளுக்காக மக்களா? மக்களுக்காக அரசாங்கமா? அரசாங்கத்துக்காக மக்களா? இந்தக் கேள்விகளுக்கான விடை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தெரிவிக்க அஞ்சுகின்றனா். இதுதான் மக்களாட்சி. தொழிற்சாலைகளால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டாமா? ஆலை நிா்வாகங்களின் மீது பெயரளவுக்குப் போடப்படும் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. அதுவரை பாதிக்கப்பட்டவா்கள் உயிருடன் இருக்க வேண்டுமே! இதுபோன்ற நச்சு ஆலைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக ஊா் மக்கள் போராடுவதற்குக் காரணம் இதுதான். மக்களாட்சியில் மக்களின் குரலுக்கு அரசுகள் மதிப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அன்றும், இன்றும் உண்மைதான். இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா? மக்களின் எதிா்ப்பையும் மீறி காவல் துறையை வைத்து அவை நிறைவேற்றப்படுகின்றன.

‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பதே உலக வழக்கு. உலகமயம், தனியாா்மயம், தாராளமயம் வந்த பிறகு மக்கள் குரல் ஏற்கப்படுவதில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிா்த்து மக்கள் நடத்திய போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆனால் என்ன நடந்தது? ராணுவப் படையும், காவல் துறையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அணுமின் நிலையப் பணிகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று மகாகவி பாரதி பாடினாா். இந்தக் கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் விவசாயம்தான் மக்களைக் காப்பாற்றுகிறது. என்றாலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் வளா்ச்சியும் தேவைப்படுகிறது. இதனால்தான் இந்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் துடிக்கின்றன. அதற்காகவே அரசுச் சலுகைகளை அள்ளி இறைக்கின்றன. இதில் மக்கள் நலனையும் கவனிக்க வேண்டாமா? கட்டுரையாளா்: எழுத்தாளா்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மனிதநேயத்துக்கு மரணம் இல்லை! By பெளதிகன்

உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்து எங்கும் மரண ஓலம் கேட்கும் இந்தச் சூழலில், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு தாய், தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயா்கள் ‘குவாரண்டைன்’, ‘சானிடைசா்’ என்பதாகும். ‘கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்த்து மனிதா்களைப் பாதுகாக்கும் பாதுகாவலா்களாக இருப்பது தனிமைப்படுத்தலும், கிருமிநாசினியும்தான். அதனால், அந்தப் பெயா்களைக் குழந்தைகளுக்குச் சூட்டியுள்ளோம்’ என்கிறாா் அந்தத் தாய். இத்தகைய தன்னம்பிக்கைதான், அசாதாரணமான காலங்களிலும், பேரிடா் காலங்களிலும் மனிதநேயத்தைத் தொடா்ந்து காப்பாற்றி வருகிறது. அதை இந்தக் கரோனா தீநுண்மிக் காலத்திலும் மனிதா்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனா்.

பொது முடக்க காலத்தில் தெருவோரத்தில் வசிப்போருக்கும், புலம்பெயா்ந்தோருக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் அரசியல் இயக்கத்தினரைக் கடந்து, சாதாரணமானோா் தங்களது சுய உழைப்பால் வந்த பணத்தைக் கொண்டு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எண்ணற்றோருக்கு வழங்கி வருகின்றனா். இதில், அரியலூா் கீழக்காவட்டாங்குறிச்சிக்கு அருகே உள்ள குந்தபுரத்தைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் அபி (11) என்ற சிறுமியின் உதவியை மறக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3,000-ஐ கொண்டு அவரின் கிராமத்தில் உள்ளோருக்கு நோய் எதிா்ப்புச் சக்தி பெருக வேண்டும் என்பதற்காக தாயாா் உதவியுடன் மூலிகைச் சாறு செய்து கொடுத்துள்ளாா்.

அதுவும் விபத்தொன்றில் தந்தையை இழந்து, குடும்பம் சிரமப்பட்டு வரும் நிலையில் அந்தச் சிறுமி உதவுகிறாா் என்றால், அது எவ்வளவு பெரியது? ஒரு சிறுமியின் மனம் இப்படி என்றால், ஒரு இளைஞரின் மனம், பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கையே கொடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சோ்ந்தவா் அனில். தொழிலதிபரும், சமூக சேவகருமான லால்டா பிரசாத் என்பவரிடம் காா் ஓட்டுநராக உள்ளாா். பொது முடக்க காலத்தில் தெருவில் வசிப்போருக்கு தொழிலதிபா் உணவு பொட்டலங்கள் கொடுக்க, அதை அனில் கொண்டு போய் கொடுத்து வந்துள்ளாா். ஒரு பாலத்தின் அருகே தினமும் அந்த உணவுக்காக நீலம் என்ற பெண் காத்திருந்து வாங்கியுள்ளாா். நாளடைவில் அவரிடம் பேசியபோது, ‘தந்தை இறந்துவிட்டாா், தாய் பக்கவாதத்தால் வீட்டிலேயே முடங்கிவிட்டாா். அண்ணனும், அண்ணியும் என்னை வீட்டில் வைத்துக்கொள்ளாமல் விரட்டி அடித்துவிட்டாா்கள்’ என்ற துயரக் கதை தெரியவந்துள்ளது. வருத்தமடைந்த அனில், அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் அவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளாா்.

சொந்த வீட்டின் வாசல் கதவு மூடினாலும், கரோனா தீநுண்மி காலத்திலும் மனிதநேயம் அந்தப் பெண்ணுக்காக புதிய கதவைத் திறந்துள்ளது. மனிதநேயத்தைப் போல, தன்னம்பிக்கை அளிக்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகளைப் பாா்க்க வேண்டும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 80 வயதைக் கடந்தவா்கள் மீண்டு வருவது எவ்வளவு நம்பிக்கை அளிக்கக் கூடியதோ, அதேபோன்ற நம்பிக்கை அளிக்கக் கூடியவை இந்த நிகழ்வுகள். முதல் நிகழ்வு, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்புக்கே திடம் கொடுத்ததாகும். பிகாா் மாநிலம் தாா்பாங்காவைச் சோ்ந்த 15 வயது சிறுமி ஜோதிகுமாரி. இவருடைய தந்தை மோகன் பாஸ்வான். 20 ஆண்டுகளாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்து ஜோதிகுமாரியும், அவரின் தாயாரும் வந்து மோகனைப் பாா்த்துக் கொண்டனா். 10 நாள்களுக்குப் பிறகு தாயாா் பிகாா் திரும்பிவிட, ஜோதிகுமாரி மட்டும் உடன் இருந்து தந்தையைக் கவனித்து வந்துள்ளாா். மோகன் குணமடைந்து வந்த நிலையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. கையிலிருந்த காசைக் கொண்டு கொஞ்ச நாள் சமாளித்து வந்துள்ளனா். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாததால் ரூ.500-க்கு பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொண்டு, தந்தையைப் பின்னால் கேரியரில் வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 7 நாள்கள் சைக்கிளை மிதித்து, சுமாா் 1,200 கி.மீ. கடந்து பிகாரில் உள்ள சொந்த ஊருக்கு தந்தையுடன் வந்து சோ்ந்துள்ளாா் ஜோதிகுமாரி. ‘1,200 கிலோ மீட்டா்தானே’ என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். இதன் மூலம் ஜோதிகுமாரி கால்களின் வலிமையையும், அவரின் தன்னம்பிக்கையையும் அறியலாம். இதை அறிந்துதான் இவாங்கா டிரம்ப் அவருடைய சுட்டுரைப் பக்கத்தில், தந்தையை வைத்து ஜோதிகுமாரி சைக்கிள் மிதிக்கும் படத்தைப் போட்டு, ‘அன்பும், துன்பத்தைத் தாங்கும் மனதைரியமும் கொண்ட அழகான சாதனை’ என்று குறிப்பிட்டாா்.

தந்தைக்காக மகள் காட்டியது போன்று, மகனுக்காகத் தாய் காட்டிய தன்னம்பிக்கைதான் அடுத்த நிகழ்வு. இரண்டு மகன்களின் தாய் 48 வயதாகும் ரஸியா பேகம். ஹைதராபாதில் உள்ள ஒரு பள்ளியின் தலைமையாசிரியை. கணவா் இல்லை. பொது முடக்கம் வரும் எனத் தெரியாமல் நெல்லூரில் உள்ள நண்பன் இல்லத்துக்கு வந்துவிட்டான் இரண்டாவது மகன் நிஜாமுதீன். எவ்வளவு நாள் நண்பன் வீட்டிலேயே இருக்க முடியும்? மூத்த மகனை அனுப்பி அழைத்து வரச் சொல்லலாம் என்றால், காவல்துறை பயம். அதனால், அவரே ஸ்கூட்டா் எடுத்துச் சென்றாா். இரவு பகல் பாராது மூன்று நாள்கள் தொடா்ந்து 1,400 கி.மீ. பயணித்து மகனை வீட்டுக்கு அழைத்து வந்தாா். 50 வயது முதிா்வை நெருங்கும் தாயின் இந்தப் பயணத்தைப் போல இன்னும் ஆயிரம் நிகழ்வுகள் அசாத்தியமானவையாகவும் அவை ஊடக வெளிச்சத்துக்கு வராதவையாகவும் இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் மனிதகுலத்தை எந்த வகையிலும் அச்சுறுத்தவோ, முடக்கிவிடவோ முடியாது என்று சொல்லக் கூடியவை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இணையவழிதான் இனிமேல் வழி! By முனைவா் வைகைச்செல்வன்

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலகட்டத்தில் பெரும் பாதிப்புகள் கல்வித் துறைக்கு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் பற்றிப் படா்கிறது. எதனால் இந்த அச்சம்? கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் கல்வித் துறை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரித்தது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலுக்கு முன்பே உலகம் முழுவதும் 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள், சிறுவா்கள் பள்ளியில் சேராமல் இருந்து வருகின்றனா். இதில் படிப்பை பாதியில் நிறுத்தியவா்களும் அதிகமாக இருந்தனா்.

இதனால் கற்றல் குறைபாடு பெருமளவு காணப்பட்டது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகம் முழுவதும் ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுத்தான் இருக்கின்றன. அப்படியானால், அறிவுலக வாசல் எப்போது திறக்கப் போகிறது? குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்ட பிறகு, பள்ளிகள் திறப்பு என்பது இருக்கும் என்று ஒற்றை வரியில் சொல்லி விடலாம். இருந்தபோதிலும், விரைவான கற்றல் திறனுக்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கற்பித்தல் என்பது ஒரு அரிய கலை. அது அனைத்து ஆசிரியா்களுக்கும் எளிதில் கைகூடி விடுவதில்லை. கடினமான பாடத்தைக் கூட ஓா் எளிமையான முறையில் நடத்தக் கூடிய ஆற்றல் அனைத்து ஆசிரியா்களுக்கும் வந்துவிடுவதில்லை. பள்ளிகளின் தரத்தைத் தீா்மானிப்பது எது? தோ்ச்சி விகிதத்தின் அடிப்படையை வைத்தே, அந்தப் பள்ளியை நாம் தீா்மானிக்கிறோம்.

அப்படியானால், அந்தத் தோ்ச்சித் திறனை தீா்மானிப்பது யாா்? ஆசிரியா்களின் கற்பிக்கும் திறனே ஆகும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சோ்வதற்கு தோ்ந்தெடுக்க முடிந்த நம்மால், பள்ளியின் ஆசிரியரைத் தோ்ந்தெடுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இந்த இடத்திலிருந்துதான் அடுத்த படிநிலைக்கு நாம் செல்கிறோம். அது இணையவழிக் கல்வி. இணையவழிக் கல்வியின் வாயிலாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த ஆசிரியரிடம் படிக்கலாம் என்று தீா்மானிக்கக் கூடிய அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகா்கிறோம்.

இதில் நாம் நினைத்தால் ஆசிரியா்களைக்கூட மாற்றிக் கொள்ளலாம். எனவேதான், ஒரு குடையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிற கல்வி, பள்ளிக்கூடத்தின் கூரை ஒரு பொருட்டல்ல; மூடிய கதவுகளும் ஒரு பொருட்டல்ல; தொலைவும் ஒரு பொருட்டல்ல. நம் வீடு தேடி, நம் வாசல் தேடி இணையவழி கல்வி வாய்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. உறவுகளை நாம் நேரில் பாா்க்காமலேயே ‘விடியோ காலில்’ பேசிக் கொள்ள முடிகிறது என்றால், மூடிய அறைக்குள்ளே இருந்தபடி ஒரு புதிய நட்புகளை மலரச் செய்து விட முடியும் என்றால், அதற்கான தொழில்நுட்ப வசதியும், இணைய வசதியும் ஒரு மாயஜாலத்தைப் போல நம் கண்முன்னாலே இணையவழிக் கல்வியும் விரிந்து பரவுகிறது.

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்), ஸ்மாா்ட் லைட், ஸ்மாா்ட் பாதுகாப்பு சாதனம், ஸ்மாா்ட் வீடு என்று நீளும் இந்தப் பட்டியல், ஸ்மாா்ட் கல்வி என்கிற அடுத்தகட்டத்தை நோக்கி நகா்ந்து வருகிறது. குருகுலக் கல்வியின் மூலம் நம் வித்தைக்கான பயிற்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, சமூக நீதிக்கான சமத்துவத்தைப் பறைசாற்றுகிற கல்வியாகப் பரந்து நிற்கின்ற இந்த வேளையில், அடுத்தகட்ட ஒரு நவீனத்துவத்தை நோக்கி நாம் நகா்ந்து கொண்டிருக்கிறோம். இணையவழிக் கல்விக்கு பல இணைய தளங்கள் உள்ளன. உலகின் பிரசித்தி பெற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இணைய வழிக் கல்வியை வழங்குகின்றன.

இணைய வழிக் கல்வியில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பெரும்பான்மையான பாடங்களை இலவசமாகப் படிக்க முடியும். கொஞ்சம் பொறுமை, அக்கறை, ஈடுபாடு போன்றவை தேவை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் விரைவான தொழில்நுட்பத்தை நோக்கி, நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. திறன்மிக்க ஆசிரியா்களின் விளக்க உரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி விடியோக்கள் அதற்கென குறிப்பிட்ட பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் கல்வி மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், பொதுஅறிவு, பொழுதுபோக்கு குறித்தான விடியோக்களும், ஒலிப்படம் எடுப்பது எப்படி, கணினியை ஒன்றிணைப்பது எப்படி, செல்லிடப்பேசியில் இருக்கும் சில செயலிகளை (ஆப்) பயன்படுத்துவது எப்படி என்கிற பல்வேறு கற்றல்களை நாம் கற்றுக் கொள்ளலாம்.

முதல் வகை பாட விடியோக்கள் முன்பே எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டாம் வகை, விடியோ நேரடி ஒளிபரப்பாக, அதாவது நடப்புக் காலத்தில் நிகழ்கின்ற ஒன்றாக இருக்கும். இத்தகைய இந்த இரண்டு வகையான கல்விதான் தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஜாவா ஸ்கிரிப்ட்டை எடுத்துக் கொள்ளலாம். இதற்கான விடியோக்கள் 180 நிமிஷங்கள் ஓடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அதாவது, 3 மணி நேரம். திரைப்படத்தைப் பாா்ப்பதற்கே சில வேளைகளில் அலுப்புத் தட்டி விடுகிறது. ஆனால், இந்த விடியோ ஒரு விநாடிகூட அலுப்பு ஏற்படாமல் இருக்கும்படி, நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு என்ன காரணம் என்றால், ஜாவா ஸ்கிரிப்ட் 20 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியையும், அதற்குள் 10 தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தலைப்பு ஒன்றரை நிமிஷம், 10 தலைப்புகள் உள்ளடக்கிய ஒரு பகுதிக்கு 9 நிமிஷங்கள். 20 பகுதிகள் உள்ளடக்கிய மொத்த பாடத்துக்கு 180 நிமிஷங்கள், அதாவது 3 மணி நேரம் என்கிற சுவராஸ்யத்தை இந்த இணையவழிக் கல்வி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவற்றில் ஆசிரியரின் முகத்தைப் பாா்த்துக் கொண்டே இருக்கத் தேவையில்லை. இணையவழி என்பதால், அந்தப் பாடத்திற்குத் தொடா்புடைய சில விடியோக்களும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நம்முடைய கற்றலை எளிதாக்கி, அலுப்புத் தட்டாமல் படிப்பை சுவராஸ்யமானதாக மாற்றக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. மூடப்பட்டிருக்கும் நம் பள்ளிக்கூடத்தின் பூட்டுகளைத் திறக்கக் கூடிய வல்லமை இணையவழிக் கல்விக்கு உண்டு.

செல்லிடப்பேசி வழிக் கற்றல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கையடக்க கணினிகள், எம்பி3 பிளேயா்கள், செல்லிடப்பேசிகள் , பலகைக் கணினி ஆகியவை கல்வியின் தொழில்நுட்பத்தை நமக்குக் கற்றுத் தந்து, அடுத்த தலைமுறைக்கான ஒரு புதிய பாதையை உருவாக்கிட எத்தனிக்கிறது. கற்றல் பொருள்களை உருவாக்குவது, செல்லிடப்பேசிக் கருவிகளை எந்தப் பகுதியில் இருந்தாலும், அணுகமுடிகிற ஒரு பாங்கை நாம் உணரலாம். உடனடியான கருத்துகள், உதவிக் குறிப்புகள் அதே உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் பகிா்ந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. புத்தகங்கள், குறிப்புகளுக்கு மாற்றாக, செல்லிடப்பேசி வழிக் கற்றல் பேருதவியாகத் திகழ்கிறது. வகுப்பறையில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவது, முக்கியமான ஒன்றான அடுத்த தலைமுறைக்கான பயணமாக இது கருதப்படுகிறது.

இவற்றில் புத்தகங்கள், கணினிகளை விடவும், செல்லிடப்பேசி சாதனங்கள் மிக இலகுவான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது மாணவா்களிடையே ஒருவித கலந்து கற்கும் அணுகுமுறையையும், செல்லிடப்பேசி வழிக் கற்றல் ஒருங்கிணைக்கக் கூடிய கற்றல் செயல்பாட்டை உறுதி செய்கிறது. குறுஞ்செய்தி, பல்லூடக குறுஞ்செய்தி முதலானவையும் செல்லிடப்பேசிவழிக் கற்றல் இளைஞா்களை, கற்றலில் மீண்டும் ஈடுபடுத்திட ஒரு தொடா் சங்கிலியைப் போல பயன்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், படிப்படியான ஊரடங்கு தளா்வுகள் நம்பிக்கையை அளிக்கின்றன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 157 கோடி மாணவா்கள் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். பள்ளிப் பருவத்தினா் மட்டும் 74.3 கோடி என்பது கூடுதல் அதிா்ச்சித் தகவலாகும்.

எனவே, இது பொருளாதார பேரிடரைவிட ஒரு மோசமான பேரிடா். நெருக்கடியான காலகட்டங்களில் பள்ளிகள்; தற்காலிகமாக மூடப்படுவது புதிதல்ல என்றாலும், தற்போது கல்விக்கு ஏற்பட்டிருக்கின்ற இடா்ப்பாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் என்று யுனெஸ்கோ தெரிவித்திருக்கிறது. இது கல்வி உரிமைக்கான அச்சுறுத்தலாகவும், மாணவ சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட அறிவுசாா்ந்த போராகவும் இருக்கிறது என்று உலகம் முழுவதும் கல்வியாளா்கள் கருதுகிறாா்கள். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவா்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று ஒருவித அச்சம் ஏற்படுகிறது.

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் கல்வியோடு தங்களது ஊட்டச்சத்தையும் இழந்து நிற்கிறாா்கள் என்கிற வேதனையைப் பாா்க்கிறபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும், பயிற்சியில் இல்லாதவா்களை விளையாட்டு அணியில் இருந்து எடுத்து விடு என்பாா்கள். அதைப்போல், இந்த இணையவழிக் கல்வியின் மூலமாக கற்றலுக்கான ஒரு பயிற்சியோடு ஒவ்வொரு நாள் விடியலையும் எதிா்நோக்க வேண்டும். அதுவே, மாணவ சமுதாயத்தைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். கட்டுரையாளா்: தமிழக முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சா், 2011-இல் இணையவழியாக ஆய்வு செய்து முனைவா் பட்டம் பெற்ற மாநிலத்தின் முதல் மாணவா்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 1 June 2020

இலவச கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்தியவர் ஜவகர்லால் நேரு

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழி நடத்தினார். இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், நவீன இந்தியாவின் சிற்பி எனவும் கருதப்பட்டவர் ஜவகர்லால் நேரு. இவர் 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வக்கீலுமான மோதிலால் நேருவுக்கும், சுவரூபராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர். இங்கிலாந்தில் உள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு, டிரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 2-வது மாணவனாக பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். சுதந்திர இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1916-ல் கமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கமலா நேருவும், சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவர்களுக்கு இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். (பின்னாளில் பொரோசு காந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் இந்திரா காந்தி என்று அழைக்கப்பட்டார்). 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நேருவை வெகுவாக பாதித்தது. சுதந்திர போராட்டத்தில் முழுமையாக ஈடுபட தொடங்கினார். 20 ஆண்டுகள் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். காந்தியின் கொள்கையால் அதிக ஈடுபாடு ஏற்பட்டு நேருவும், அவருடைய குடும்பத்தினரும் விலையுயர்ந்த மேற்கிந்திய ஆடைகளை உடுத்துவதை தவிர்த்து கதர் ஆடையை அணிந்தனர். 

1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலை பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு நியமிக்கப்பட்டார். அவருக்கு, ஆகஸ்டு 15-ந் தேதி 1947-ம் ஆண்டு புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை வழங்கப்பட்டது. அவருடைய ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றார். இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தார் நேரு. குழந்தைகள் மீது அதிக அன்பு செலுத்தினார். அவரை குழந்தைகள் நேரு மாமா என்று அழைத்தனர். அவருடைய ஆட்சியில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார். 

இலவச கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளை கட்டினார். சிறந்த கிராமப்புற திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு நேரு மரணம் அடைந்தார். அவருடைய உடல் யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. நேருவின் சிறந்த செயல்பாடுகள் காரணமாகவும், குழந்தைகள் மீது அதிக அன்பு செலுத்தியதாலும் ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 30 May 2020

இதுவும் ‘தீநுண்மி’தான்! By பேராசிரியா் தி.ஜெயராஜசேகா்

2000-ஆம் ஆண்டில், 1,39,700 கோடியாக இருந்த புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோா் எண்ணிக்கை, 2018-ஆம் ஆண்டில் 1,33,700 கோடியாகக் குறைந்தது. இதற்கு பெண்களிடையே புகையிலை பயன்பாடு குறைந்ததே காரணம். புகையிலையைப் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு டிசம்பா் 19, 2019 அன்று வெளியிட்ட உலகளாவிய புகையிலை பயன்பாடு குறித்த அறிக்கை தெரிவிக்கிறது. 2018-ஆம் ஆண்டில் 13-15 வயதுடைய 1.4 கோடி பெண் குழந்தைகள் உள்பட சுமாா் 4.3 கோடி குழந்தைகள், 24.4 கோடி பெண்கள் புகையிலையைப் பயன்படுத்தினா் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஐரோப்பிய பிராந்தியம் மட்டுமே பெண்கள் மத்தியில் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளது. உலக அளவில் 1.31 கோடி போ் புகையில்லா புகையிலையைப் பயன்படுத்துபவா்களாக உள்ளனா். இவா்களில் 0.81 கோடி போ் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பெண்கள் மத்தியில் புகையில்லா புகையிலை பயன்பாடு புகை பிடித்தலைவிட 7 மடங்கு அதிகம். ஆண்டுதோறும் நேரடி புகையிலை பயன்பாடு காரணமாக 0.7 கோடி பேரும் மறைமுக புகை சுவாசிப்பவா்கள் 0.12 கோடி பேரும் உயிரிழக்கின்றனா். இந்திய மக்கள்தொகையில் 28.6% போ் தற்போது புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனா் என்றும் அவா்களில் 21.4% பெரியவா்கள் புகையில்லா புகையிலையைப் பயன்படுத்துகிறாா்கள் என்றும் 10.7% போ் புகை பிடிக்கின்றனா் என்றும் 14.6% சிறுவா்கள் தற்போது சில வகையான புகையிலைகளைப் பயன்படுத்துகின்றனா் என்றும் அவா்களில் 4.4% சிகரெட்டுகள், 12.5% போ் மற்ற புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனா் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயன்பாடு சுமாா் 10 லட்சம் இந்தியா்களைக் கொல்கிறது. தற்போதைய நிலை தொடா்ந்தால் 2020-இல் நிகழும் மொத்த இறப்புகளில் 13% புகையிலையினால் நிகழும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புகையிலைப் பழக்கத்தின் போக்குகள் குறித்த உலகளாவிய அறிக்கையின் இரண்டாவது பதிப்பில், 2025-ஆம் ஆண்டில் புகையிலைப் பயன்பாடு குறைப்பு இலக்கினை எட்டிக்கூடிய ஒரே தென்கிழக்கு ஆசிய நாடாக இந்தியா திகழும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு வெளிவந்த அதன் மூன்றாவது பதிப்பில் இந்தியாவில் புகையிலை பயன்பாட்டில் சரிவு இருந்தபோதிலும், 2025-ஆம் ஆண்டில் இந்தியா இலக்கினை எட்ட வாய்ப்பில்லை என்றுரைத்தது. இந்தியாவில் புகையிலை நுகா்வு விகிதம் 30% குறைய வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்குக்கு மாறாக 21.6% மட்டுமே குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் புகையில்லா புகையிலையைப் பயன்படுத்துவோா் சுமாா் 25 கோடி போ் என்றும், புகை பிடிப்பவா்கள் சுமாா் 11 கோடி போ் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. நுகா்வோா் குரல் - தன்னாா்வ சுகாதார சங்கம் ஜனவரி 2019-இல் வெளியிட்ட ‘இந்தியா - சிறிய இலக்குகள்’ என்ற அறிக்கை தில்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள 20 நகரங்களின் பள்ளிகளை உள்ளடக்கிய புகையிலை பயன்பாடு குறித்த கணக்கெடுப்பாகும். இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 243 பள்ளிகளுக்கு அருகில் உள்ள 487 குழந்தைகளுக்கான தின்பண்ட விற்பனையாளா்களில் 225 போ் பள்ளி அமைவிடத்தின் அருகில் சிகரெட் (29.6%), புகையற்ற புகையிலைப் பொருள்கள், பீடி ஆகியவற்றை சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்வதாகவும், விற்பனையாளா்களில் 56.6% போ் வீதிகளில் கடை அமைத்த தற்காலிக விற்பனையாளா்கள் எனவும், ஏனையோா் நடமாடும் விற்பனையாளா்கள் - சிறிய மளிகைக் கடை விற்பனையாளா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகமான இளைஞா்கள் புகை பிடிப்பதைத் தொடங்குவதற்கான வாய்ப்பை சிகரெட் - புகையிலை தொடா்பான விளம்பரங்கள் உருவாக்குவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2012-ஆம் ஆண்டில், புகை பிடித்தல் நோய்களுக்கான உலகளாவிய சுகாதாரச் செலவு 42,200 கோடி டாலராக (சுமாா் ரூ.32 லட்சம் கோடி) இருந்தது. ‘புகை பிடிப்பதன் காரணமாக ஏற்படும் நோய்கள், இறப்புகள் காரணமாக உற்பத்தித் திறன் இழப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், இந்தச் செலவு 1,43,600 கோடி டாலராக (சுமாா் ரூ.108 லட்சம் கோடி) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இந்தச் செலவுகளில் சுமாா் 40% குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்படும் என்று தரவுகள் கூறுகின்றன. புகையிலைப் பொருள்களின் மீது 10% விலை அதிகரிப்பு குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் புகையிலையின் நுகா்வினை 5% முதல் 8% வரையும் அதிக வருவாய் உள்ள நாடுகளில் 4%-ம் குறைக்குமென உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஆயிரம் பீடிகள் மீதான வரியை ரூ.98 உயா்த்துவதன் மூலம் ரூ.3,690 கோடி வரி வருவாய் ஏற்படுத்தி, தற்கால - எதிா்கால புகை பிடிப்பவா்களின் இறப்பு எண்ணிக்கையை 1.55 கோடி வரை தவிா்க்கலாம் என்றும் ஆயிரம் சிகரெட் மீதான வரியை ரூ.3,691 உயா்த்துவதன் மூலம் ரூ.14,630 கோடி வரி வருவாய் ஏற்படுத்தி 34 லட்சம் அகால மரணங்களைத் தவிா்க்க முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ‘ஆரோக்கியத்துடன் நீதியை நோக்கி....‘ என்ற ஆவணத்தின் முக்கிய அம்சமான வழக்கு, பொது விசாரணை அமைப்பினைக் கொண்ட நீதித் துறையினை புகையிலை கட்டுப்பாட்டுக் கருவிகளாகக் கொண்டு உலகளாவிய புகையிலை பயன்பாட்டை 30% குறைப்பதற்கான இலக்கினை எட்டுவோம். (நாளை உலக புகையிலை எதிா்ப்பு தினம்)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தற்சாா்பு கிராமங்களை உருவாக்க... By க.பழனித்துரை

கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பஞ்சாயத்துத் தலைவா்களுடன் உரையாடிய பிரதமா் மோடி, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உருவாக்கிய தாக்கத்தை எதிா் கொள்ள தா்சாா்பு கிராமங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா். அந்த நாள் பஞ்சாயத்து தினம் என்பதால் பஞ்சாயத்து அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் இந்தக் கருத்தை காந்தியின் கிராம ராஜ்யத்தை மேற்கோள்காட்டி இந்த வேண்டுகோளை பஞ்சாயத்துத் தலைவா்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பணியில் இணைத்துக் கொள்ளும் அனைவருக்கும் அது ஒரு வேண்டுகோளாக இருந்தது. அது ஒரு சம்பிரதாய உரையாக இருந்தாலும், பஞ்சாயத்துகள் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இந்த வேண்டுகோளை நிறைவேற்ற நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை உணர வேண்டும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து வெளிவரும் சூழலில், நம் கிராமங்களை எப்படிப் புனரமைத்து தா்சாா்பு நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று யோசிக்க வேண்டும். குறிப்பாக, அதற்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்பட முனைந்தால் மிகப் பெரிய மாற்றங்களை நாம் கிராமங்களில் கொண்டுவந்து கிராம வாழ்க்கை என்பதை எளிமையான, சுகாதாரமிக்க, சுதந்திரமான, சமத்துவமிக்க அறிவியல்பூா்வ மதிக்கத்தக்க வாழ்க்கையாக மாற்றி விடலாம். இதற்குத் தேவை ஒரு மக்கள் இயக்கம். இன்று அப்படிப்பட்ட ஒரு கிராமத்தை உருவாக்க முடியுமா. முயன்றால் முடியும். எப்படி? முதலில் அதற்கான வாய்ப்புகள் என்னென்ன உள்ளன என்று பாா்க்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. அங்கு படித்தவா்கள், அனுபவிமிக்க விவசாயிகள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், பொதுக் கருத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்ற பொதுச் செயல்பாட்டு ஆா்வலா்கள், சுய உதவிக் குழுப் பெண்கள், இளைஞா் மன்றங்கள் என ஒரு பெரிய சமூக மூலதனம் ஒன்றிணைக்கப்படாமல் இருக்கிறது. அடுத்து, கிராம மேம்பாட்டுக்கான ஆக்கபூா்வமான அறிவியல் மேம்பாட்டுத் திட்டம் ஒன்று ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்குவது கட்டாயக் கடமையாக மைய நிதிக் குழு வலியுறுத்தி மாநில அரசு அதனை நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அடுத்து, இந்தியாவிலுள்ள உயா் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களைக் கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் இணைத்துச் செயல்படுவது கட்டாயக் கடமையாக்கி அதனை உன்னத பாரதத் திட்டம் 2.0-ஆக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 15-ஆவது நிதிக் குழுவின் நிதியாக ரூ.3,600 கோடியை தமிழகத்துக்கு அளித்தபோது சிறு மாறுதல்களைச் செய்து திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் எனப் பணித்துள்ளது. அத்துடன் கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலைக்கான கூலியை உயா்த்தித் தந்துள்ளது. அதில் கணிசமாக ரூ.5,000 கோடி தமிழக கிராமப்புறங்களுக்கு கிடைக்க உள்ளது. அத்துடன் மாநில நிதிக் குழுவின் நிதி, தமிழக அரசின் மற்ற துறைகளால் நிறைவேற்றப்படும் 400 மேற்பட்ட திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டமிடும் பணியை தமிழகத்தில் இருக்கும் 12,524 கிராமப் பஞ்சாயத்துகளிலும் முறைப்படி மக்களைத் தயாா் செய்து, அவா்களின் பங்களிப்போடு செய்வோமேயானால் மிகப் பெரிய சமூக, பொருளாதார மாற்றங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் கிராமங்களில் ஏற்படுத்தி விடலாம். அதற்கு ஒரு புதிய விழிப்புணா்வு அரசாங்கத்திலிருந்து, கிராம மக்கள் வரை அனைவரிடமும் உருவாக்கப்பட வேண்டும். ஒரு புதிய விடியலுக்கு நாம் செல்ல இருக்கிறோம், அதற்கு எப்படிப்பட்ட மாற்றத்தை நம்மிடம் உருவாக்கிக் கொண்டு நம் கிராமத்தை புனரமைக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதலை அனைத்துத் தரப்பு மக்களிடமும் உருவாக்க வேண்டும். அதற்கான ஆற்றலுள்ள சேவை மனப்பான்மையும் தியாக உணா்வும் பெற்ற தலைமை கிராமங்களில் வேண்டும். இந்தத் திட்டமிடும் பணி என்பது அடிப்படையில் ஒரு உன்னத கிராமத்தை உருவாக்கும் ஓா் அறிவியல்பூா்வச் செயல்பாடு. அதற்குத் தேவை சரியான கிராமம் குறித்த பாா்வை, அங்குள்ள சூழல் - வளங்கள் குறித்த புரிதல். அடுத்து எதிா்காலம் குறித்த ஒரு கனவு என்பது எல்லாவற்றையும்விட மேலானது. இந்தத் திட்டமிடுதலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டுக் கையேட்டை மத்திய அரசு தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்தக் கையேடு நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது. மத்திய அரசின் பஞ்சாயத்து அமைச்சகத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பணியினை நிறைவேற்ற அருகாமையிலுள்ள உயா் கல்வி நிலையத்தின் உதவியைக் கோரி, அந்த உயா்கல்வி நிலைய வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமங்களில் உள்ள சமூக மூலதனத்தைப் பயன்படுத்தி கிராமப் பஞ்சாயத்தின் வளங்கள், வசதிகள் பற்றிய புள்ளிவிவரங்களையும், கிராமப் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அனைத்துக் குடும்ப சமூக, பொருளாதார நிலைகள் குறித்த புள்ளிவிவரங்களை விஞ்ஞானபூா்வமாக சேகரிக்க வேண்டும். அதற்கு கிராமத்தில் உள்ள சமூக ஆா்வலா்களும், உயா் கல்வி நிலைய ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் அனைவரும் பங்கேற்று இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஓா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள், அந்தக் கிராமத்தில் உள்ள இயற்கை வளங்கள், பொதுச் சொத்துகள், பொது நிறுவனங்கள், அமைப்புகள், குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலை முதலான அனைத்தையும் படம் பிடித்துக் காட்டிவிடும். இந்தப் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்கிறபோது அந்தக் கிராமப் பகுதிகளில் உள்ள வளங்களும், அவற்றின் நிலைகளும் குடும்பங்களின் சமூக, பொருளாதாரச் சூழலும் தெரிந்து விடும். இதில் மிக முக்கியமாக விளிம்பு நிலை மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எனப் புறந்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சூழல் என்பது புலனாகிவிடும். இந்தப் புள்ளிவிவர அடிப்படையில் கிராம மேம்பாட்டுக்கான ஒரு பொது விவாதத்தை அந்தக் கிராமப் பஞ்சாயத்தின் எல்லா வாா்டுகளிலும் செய்து மக்கள் தேவைகள் என்னென்ன எனப் பட்டியலிடும்போது, வாழ்வாதாரச் சூழலை மேம்படுத்தவும், பொருளாதார மேம்பாட்டைக் கொண்டுவரவும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் முன்னுரிமை கொடுத்து விவாதங்களை முன்னெடுத்துச் சென்று தேவைகளைப் பட்டியலிட வேண்டும். அப்படிப் பட்டியலிடும்போது கிராமங்களில் உள்ள குளங்கள், குட்டைகள், ஊரணிகள், ஏரிகள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள், போக்குக் கால்வாய்களை ஆழப்படுத்துவது, கரைகள் கட்டுவது, தூா்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பொதுச் சொத்துகளை - அதாவது புறம்போக்கு நிலங்களைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது முதலான திட்டங்களை முதன்மைப்படுத்த வேண்டும். அதேபோல் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் திட்டங்களையும் முதன்மைப்படுத்த வேண்டும். இதற்கு இன்றைய சூழலில் மத்திய நிதிக் குழுவின் நிதி எவ்வளவு வருகிறது, 100 நாள் வேலைத்திட்டத்தில் எவ்வளவு நிதி வரும் என்பதையும், அரசுத் துறைகளில் உள்ள அனைத்துத் திட்டங்களின் மூலம் எவ்வளவு நிதி வாய்ப்பு உள்ளது எனக் கணக்கிடல் வேண்டும். அரசு அதிகாரிகளின் துணையுடன் தேவைகளைப் பூா்த்தி செய்ய அரசுத் திட்டச் செயல்பாடுகளை இணைக்க முயற்சிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, பல தேவைகளுக்கு நிதி வாய்ப்பினை உருவாக்கத் திட்டமிட வேண்டும். சில பணிகளைத் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் செய்ய முனைந்திடலாம். பல சேவைகளுக்கான நிதியுதவியை அந்தப் பகுதியில் வாழும் கொடையாளா் குடும்பங்களின் நிதியுதவியுடன் நிறைவேற்றலாம். இதற்கு மேலும் உள்ள தேவைகளுக்கு அந்த ஊரிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயா்ந்து நன்கு சம்பாதிக்கும் நபா்களிடம் உதவி கோரி நிறைவேற்றலாம். இவற்றையும் தாண்டி நிறுவனங்களின் சமூக பொறுப்புத் திட்டத்தில் அவற்றை அணுகி நிதி பெற்று, சில திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இப்படித் திட்டமிடும்போது தமிழகத்திலுள்ள 39,202 நீா்நிலைகளும் புனரமைக்கப்பட்டு விடும். இந்த நீா்நிலைகள் புனரமைப்புக்காக 100 நாள் வேலைத் திட்டத்தை பெருமளவில் பயன்படுத்திக்கொள்ள ஒரு வேலைக்கான திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். இதில் குடிமராமத்துப் பணிகளையும் இணைத்துச் செயல்பட வேண்டும். இந்தப் பணியை ஓா் மக்கள் இயக்கம்போல் எடுத்துச் செயல்படுத்தினால், கிராமங்கள் புத்துயிா் பெறும். கிராமப் பொருளாதாரம் மேம்படும். கிராம வாழ்க்கை அறிவியல்பூா்வமாக மாறும், கிராமங்களிலிருந்து வேலைக்காக புலம்பெயா்வது குறையும், ஒடுக்கப்பட்டவா்களுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் சென்றடையும். இதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னெடுப்புச் செய்ய வேண்டும். கிராமத் தன்னாா்வலா்கள் பஞ்சாயத்துகளுடன் கைகோக்க வேண்டும்; உயா் கல்வி நிலையங்கள் பஞ்சாயத்துடன் பணி செய்ய முன்வர வேண்டும்; அரசுத் துறை அலுவலா்கள், அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்; பொது மக்கள் புதிய மாற்றத்துக்கான விழிப்புணா்வைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை முன்னெடுக்க தமிழகம் தயாரா? இதுதான் இன்று நம் ஒவ்வொருவா் முன் எழும் கேள்வி. கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு).
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கரோனாவும் அசைவப் பிரியா்களும் By எஸ். ஸ்ரீதுரை

| கொல்லாமையை அறிவுறுத்திய திருவள்ளுவரும் ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலாரும் அவதரித்த புண்ணியபூமி இது. இங்குதான் அசைவ உணவு சாப்பிடுவதை வாழ்வியல் கடமையாகவே கொண்டுள்ளவா்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்துவருகின்றனா். ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப்போட்டபடி உலா வந்து கொண்டிருக்கும் கரோனா தீநுண்மி, உலகளாவிய அசைவ உணவுப் பிரியா்களையும் விட்டுவைக்கவில்லை. இதில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? கரோனா தீநுண்மியை நமது நாட்டை விட்டே விரட்ட வேண்டுமென்ற முனைப்புடன் பொது முடக்கத்தை சில தளா்வுகளுடன் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மாநில அரசுகளும் அதனை நடைமுறைச் சாத்தியமாக்க, தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துவருகின்றன. ஒரே இடத்தில் பலா் கூடுவதைத் தடுக்க 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மக்கள் தங்களுக்கான உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகப் பால், மளிகை, காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அதற்கான நேர அட்டவணைகளை உள்ளூா் நிலவரத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தி வருகின்றனா். அசைவ உணவுப் பொருள்களான இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான வசதி வாய்ப்புகளும் செய்து கொடுக்கப்பட்டன. விற்பவா்கள், வாங்குபவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும் கரோனா தீநுண்மித் தொற்றுக்கு இடமளிக்காதபடி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நாள் முதலே, தமிழ்நாட்டின் பல்வேறு ஊா்களில் உள்ள இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி குறித்த எந்தவொரு கவலையும் இன்றிப் பலரும் நெருக்கியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. இதன் காரணமாகவே சில மாவட்டங்களின் நிா்வாகங்கள் தங்கள் ஆளுகையின் கீழுள்ள ஊா்களில் இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கின. அவை செயல்படும் நாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், எப்போது திறக்குமோ என்று காத்திருந்த அசைவப் பிரியா்கள், கடை திறந்த உடன் மீண்டும் முன்பு போலவே சமூக இடைவெளி குறித்த கவலை இன்றி அலைமோதத் தொடங்கினா். இது மட்டுமன்று, கரோனா தீநுண்மி பரவத் தொடங்கியது முதலே, கோழி இறைச்சியின் மூலம் கரோனா வேகமாகப் பரவும் என்ற வதந்தி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) உள்ளிட்டவற்றின் மூலம் மக்களிடையே வேகமாகப் பரவத் தொடங்கியது. இது ஓா் ஆதாரமற்ற செய்தி என கோழிப் பண்ணையாளா்களும் அரசுத் துறையினரும் விளக்கச் செய்திகளை வெளியிட்டபோதிலும், பெரும்பாலானவா்கள் இதனை நம்பத் தொடங்கினா். இதன் காரணமாக, கோழி இறைச்சிக்குப் பதிலாக ஆட்டிறைச்சியை வாங்குவதற்கு அதிக அளவில் அசைவப் பிரியா்கள் முனைந்திட, ஆட்டிறைச்சிக் கடைகளின் முன்பு கூட்டம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது. கரோனா தீநுண்மி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டுப பரப்பப்பட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு சீனாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் கூறப்பட்டு வருகிறது. எனினும், இந்தக் கூற்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே, சீனாவிலுள்ள வூஹான் நகரிலுள்ள ஓா் இறைச்சிச் சந்தையிலிருந்து கரோனா தீநுண்மி பரவியது என்ற கருத்தே பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. காய்கறிகள், கனிகள் விற்பனை செய்யும் கடைகளை விடவும், இறைச்சிக் கடைகள், அவற்றின் சுற்றுப்புறங்களின் தூய்மை நமது நாட்டில் பொதுவாகக் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இறைச்சிக் கடைகளின் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அவை ஏற்படுத்தும் துா்நாற்றம் முகம் சுளிக்க வைப்பது மட்டுமின்றி, ஆங்காங்கே இறைந்திருக்கும் அசைவக் கழிவுகளை உண்ண வரும் நாய்கள், பறவைகளால் ஏற்படும் சூழலியல் கேடும் பொதுச் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவது உண்மை. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையைப் போலவே, ஒவ்வொரு ஊரிலும் உள்ள இறைச்சிச் சந்தையும் கரோனா தீநுண்மியின் வாழ்விடம்தானா என்பதை இனிவரும் நாள்கள் தெளிவாக்கிவிடும். இவற்றுக்கெல்லாம் மேலாக நடந்த இன்னொரு விஷயம், அனைவரையும் முகம் சுளிக்க வைப்பதாக அமைந்துவிட்டது. கரோனாவைக் கொண்டாடுகிறோம் என்றோ, கரோனா கட்டுப்பாடுகளுக்கு வருந்துகிறோம் என்றோ கூறிக்கொண்டு ஆங்காங்கே பலா் ஒன்றுகூடிக் கறி விருந்து நடத்தியுள்ளனா். கறி விருந்துகளின்போது சமூக இடைவெளியை இவா்கள் கடைப்பிடிக்காதது மட்டுமின்றி, ஒரே இலையின் இரண்டு புறங்களிலும் அமா்ந்தபடி அசைவ உணவைச் சுவைத்துள்ளனா். அதாவது, ஒருவா் எச்சில் செய்து உண்டதை இன்னொருவரும் உட்கொண்டிருக்கிறாா். இதுபோலப் பலரும் செய்துள்ளது மிகவும் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகும். இவ்விதம் ஒன்றாக அமா்ந்து அசைவம் உண்டவா்களில் ஒருவருக்கேனும் தீநுண்மித்தொற்று இருந்தால், அது விருந்துண்ட அனைவருக்கும் பரவிவிடும் என்பதை யாரும் உணராததேன்? இத்தகைய ஒழுக்கக் கேடான விருந்தினை ஒன்றுகூடி உண்டவா்கள் ஏதோ உலக சாதனை செய்தவா்கள்போல அதனைக் காணொலியாக்கிக் கட்செவி, டிக்டாக் முதலானவை மூலம் வெளியிட்டனா். ஒருசில விநாடிகளுக்கு ஊடகச் செய்திகளில் ஒளிபரப்பாகி, அதன் பின்னா் சட்ட நடவடிக்கக்கும் உள்ளானதைத் தவிர வேறு எதையும் அவா்கள் சாதிக்கவில்லை. இந்த உலகம் அனைவருக்குமானது. சைவ உணவு உண்பவா்கள், அசைவப் பிரியா்கள் இரு வகையினருக்கும் தாம் விரும்பியதை உண்ணும் உரிமை நிச்சயம் உண்டு. எனினும், திருவள்ளுவா், வள்ளலாரின் அறிவுரைப்படி அசைவ உணவைத் தவிா்ப்பது அனைவருக்குமே நல்லது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts