Thursday 31 October 2019

பாரம்பரிய கலாசாரமும், ஒன்றுபட்ட இந்தியாவும்

இன்று (அக்டோபர் 31-ந் தேதி) சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்.

இந்தியாவின் மண்ணும், காற்றும் சிறப்புமிக்கவை. இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்தாலும் அது முடியாது. இந்தியாவின் மண்ணில் அன்பு நிறைந்திருக்கிறது. காற்றில் உரிமை நிறைந்திருக்கிறது. மொழி, உணவு, சமையல் முறைகள், ஆடை, கலாசாரம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும் இங்குள்ள மக்களின் மனது ‘இந்தியராக’ இருப்பதால் மக்கள் அனைவரும் எப்போதும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.

நாட்டில் மதங்கள், சாதி, இனங்களில் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமையை மனதில் கொண்டு ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அறிவித்தார். தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி அந்த நாளில் பிரதமர் அந்த அறிவிப்பைச் செய்தார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கலாசாரங்களை ஒவ்வொரு மாநிலமும் அறிந்து கொள்ளவும், மக்களிடையே உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டும் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

நல்ல நெறிகளின் தன்மையைப் பொறுத்து தான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அமையும் என்று சர்தார் வல்லபாய் படேல் கூறியுள்ளார். நன்னெறிகள் வளர்வதற்கு, அதற்கான விதைகளை குழந்தைகளின் மனதில் ஊன்றுவது அவசியம். பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை அறிவதில், குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டுவதன் மூலம் அவற்றைப் புரிந்து கொண்டு, மரியாதை அளிக்கும் தன்மை வளரும். இதை மனதில் கொண்டுதான் ‘ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்’ இயக்கம் உருவாக்கப்பட்டது.

அன்பு மட்டும் தான் இணைப்பை ஏற்படுத்த சிறந்த வழி என்றும், மற்றவர்களைப் பற்றி நெருக்கமாக புரிந்துகொள்வதற்கு அது அவசியம் என்றும், நாட்டை நிர்மாணித்த இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் திட்டத்தில் மற்ற மாநிலங்களைப் பற்றி இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதற்காக, சுற்றுலாத் துறையின் ‘பாரத் பரி மற்றும் பர்யத்தன் பரி’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் விவகாரத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும் மாநிலங்களுக்கு இடையிலான இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம், அடுத்த மாநிலத்தைப் பார்வையிட்டு, புரிந்து கொண்டு, அங்கு நண்பர்களை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டில் குறைந்தது 15 இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகை அறிந்து, புரிந்து கொள்ள ஒவ்வொரு தனிநபரும் ஆர்வம் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் திட்டத்தில், தங்கள் நாட்டைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இலக்கியம், கலாசாரம், விளையாட்டு, சுற்றுலா நிகழ்ச்சிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாநிலங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம், பாரம்பரிய கலாசாரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் தமிழகம்-ஜம்மு காஷ்மீர் இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்வி அல்லது வேலைக்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு மக்கள் செல்கின்றனர். அதனால் மற்ற மாநிலங்களின் திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளை கொண்டாட ஆர்வம் ஏற்படுகிறது. மேற்கு வங்கத்தின் துர்கா பூஜை, டெல்லியில் கொண்டாடப்படுகிறது.

அதேபோல மராட்டியத்தின் விநாயகர் பூஜை உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. ‘ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்’ திட்டத்தின் மூலம், இந்த முயற்சியை சிறப்பானதாக ஆக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டுள்ளார். கலாசார அமைச்சகம், குஜராத், கர்நாடகா, டெல்லி மற்றும் நாட்டில் பல இடங்களில் பிரமாண்டமான தேசிய கலாசார திருவிழாக்களை நடத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்த செவ்வியல் மற்றும் தற்கால இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், அரங்க மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் சுற்றுலா பயணிகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடியை தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறை அளித்துள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் அவர்களுக்கு 20 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது.

சில நேரங்களில் வெறும் எண்ண வெளிப்பாடுகள் மட்டுமே வார்த்தைகள் ஏதும் இல்லாமல் நிலைமையைப் புரிய வைத்துவிடும். சிக்கலான நிலைகளையும் சரியான வார்த்தைகள் தீர்த்து வைத்துவிடும். அதுதான் இந்தியாவின் சிறப்பு. இங்கே பேசப்படும் மொழிகளைவிட உணவின் ருசி, அவற்றின் வகைகள் நாவுக்கு விருந்து படைப்பவையாக உள்ளன. ஒரே பாரதம், ஒப்பிலா பாரதம் திட்டம் மூலம் இந்த ருசி மேன்மைப்படுத்தப்படுகிறது. அதனால் தான் டெல்லியில் தென்னிந்திய உணவுகளுக்கு வரவேற்பு இருக்கிறது. வட இந்திய உணவை விரும்புபவர்களை தென்னிந்தியாவில் அதிகம் காண முடிவதற்கும் இது தான் காரணம். பல்வேறு மாநிலங்களில் உணவுத் திருவிழா நடத்துவதன் மூலம் ருசி, மணங்களை தொடர்புபடுத்துவதன் மூலம் இதயங்களுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது.

ஏ.மாரியப்பன்,
கூடுதல் தலைமை இயக்குனர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீரத்திருமகள் இந்திராகாந்தி

இன்று (அக்டோபர் 31-ந் தேதி) இந்திரா காந்தி நினைவுநாள்.

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான யமுனை நதி, கங்கையில் சங்கமிக்கும் அலகாபாத் நகரில், இந்தியாவின் நெஞ்சுரமிக்க வீரத்திருமகள் இந்திரா காந்தி நேரு, கமலா தம்பதியருக்கு மகளாக 1917 நவம்பர் 19-ந் தேதி பிறந்தார். பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு முடித்து இளம் வயதிலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறை சென்றவர். விடுதலை போராட்டத்தில் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேரு, சிறுமி இந்திராவுக்கு இந்தியாவின் பன்முகத் தன்மையையும், உலக வரலாற்றையும் கடிதங்கள் மூலமாக போதித்தார். இதன்மூலம் இந்திராவை இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராக விளங்குவதற்கு அடித்தளம் அமைத்தவர் நேரு. இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்த 17 ஆண்டுகாலம் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் இந்திரா காந்தி. அவர் வெளிநாடு செல்கிறபோதெல்லாம் உடன் சென்றவர். இதன்மூலம் உலகத் தலைவர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.

ஜவஹர்லால் நேரு மறைவிற்கு பிறகு அவரது விருப்பப்படி இந்தியாவின் பிரதமராக பெருந்தலைவர் காமராஜரின் பரிந்துரையின் பேரில் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் குறுகிய காலத்தில் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக எவரை தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. அப்பொழுது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், இந்தியாவை வழிநடத்தக்கூடிய ஆற்றலும், திறமையும் இந்திரா காந்திக்கு இருப்பதை உணர்ந்தார். அதையொட்டி அவரை பிரதமராக்க பலரது ஆதரவுடன் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. இதையொட்டி இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 11 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரித்தார்.

இந்திய அரசியலை ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் தமது ஆளுமைக்குள் வைத்திருந்தவர் இந்திரா காந்தி. இந்திய மக்கள் அவரை நேசித்தார்கள், மதித்தார்கள். அன்பு காட்டி, ஆதரவு தெரிவித்தார்கள். ஏன்? வணங்கவும் செய்தார்கள். அதனால் அவரை ‘துர்காதேவி’ என்றார்கள். ‘காளி தேவியின் மறுபிறவி’ எனச் சொல்லி மகிழ்ந்தார்கள். இந்திரா காந்தியின் 15 ஆண்டுகால ஆட்சியில் அவரது சாதனைகளை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும். வறுமையை எதிர்த்து போர்தொடுத்த பிரதமர் இந்திரா, வங்கிகள் தனியார் நலனுக்காக செயல்பட்ட போது அவற்றை தேசியமயமாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டார். ஜனநாயக நாட்டில் மக்கள் வறுமையில் இருக்கும் போது, மன்னர்களுக்கு மானியமா? என்ற கேள்விக்கு விடை கண்டு, அவற்றை ஒழித்தார். நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினார். வேளாண்மையில் உற்பத்தியை பெருக்குவதற்கு பசுமைப் புரட்சி செய்தவர். சிக்கிம் பகுதியை இந்தியாவோடு இணைத்தவர்.

வங்க தேசத்திற்கு படை நடத்தி, அந்த நாட்டிற்கு விடுதலையை பெற்றுத் தந்தவர். உலக வல்லரசுகள் வியக்கும் வகையில் அணு ஆயுத சோதனையை நடத்தியவர். அதன்மூலம் இந்தியாவை அணுஆயுத பலம் வாய்ந்த நாடாக உலகிற்கு பிரகடனம் செய்தவர். இந்திய-ரஷிய நட்புறவை வளர்த்து, வெளியுறவுக் கொள்கையில் புதிய பாதையை வகுத்தவர். அணி சேரா நாடுகளின் ஒற்றுமையை வலிமைப்படுத்தியவர். அண்டை நாடான பாகிஸ்தானுடன் சிம்லா ஒப்பந்தம் செய்து நட்புறவை வளர்த்தார்.

1967, 1971 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று பொதுத் தேர்தல்களிலும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வெற்றியை பெற்று தந்தவர். குறிப்பாக, நெருக்கடி நிலைக்கு பிறகு 1977 தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டு, பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டுகால ஜனதா ஆட்சியின் அவலங்களால் மீண்டும் 1980-ல் மக்கள் பேராதரவோடு பிரதமராக தேர்வு பெற்றவர் அன்னை இந்திரா. புதிய அதிகாரத்துடனும், பெரும்பான்மையோடும் பதவிக்கு வந்த போதும் புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. பஞ்சாபில் சீக்கியர்கள் தனியாக காளிஸ்தான் கோரி கிளர்ச்சி தொடங்கினார்கள். தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பெரிய சவாலாக அந்த இயக்கம் வளர்ந்தது.

1984-ம் ஆண்டில் பொற்கோவிலில் ஆயுதங்களை குவித்துக்கொண்டு பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை ஆபரேஷன் புளு ஸ்டார் என்ற நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் வெளியேற்றியது. நாட்டு நலன் கருதி இந்த முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டிய நிலை பிரதமர் இந்திராவுக்கு ஏற்பட்டது. இந்தியாவின் ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு ஆளான போது அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமான நிலை உருவானது. இந்த நடவடிக்கையினால் பலர் கொல்லப்பட்டனர். பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்தன. இதையொட்டி பிரதமர் இந்திரா மீது சீக்கியர்கள் மத்தியில் கசப்புணர்வு வளர்க்கப்பட்டது. இந்திரா காந்தியின் கடைசிகாலம் என்பது மிகுந்த சவால்களை கொண்டதாக இருந்தது. பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பிய நடவடிக்கைக்கு பிறகு தமது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற சூழல் உருவாகியிருந்தது. அதை எதிர்கொள்ள அவர் தயாராகவே இருந்தார். ஆனால் வகுப்புவாத சக்திகளுடன் எந்நிலையிலும் சமரசம் செய்துகொள்ள அவர் விரும்பியதில்லை.

1984 அக்டோபர் 31-ந் தேதி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பதற்காக பிரதமர் இந்திரா தமது வீட்டு தோட்டத்திற்கு வந்தபோது அவரது காவலர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்றவர்கள் அவரது பாதுகாவலர்களே என்பதும், அவர்கள் சீக்கிய இனத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மிகுந்த அதிர்ச்சி தரத்தக்க செய்தியாகும்.

பிரதமர் இந்திரா மரணமடைவதற்கு முதல் நாள் மாலை ஒடிசா மாநிலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அதில், “இன்று நான் இங்கு இருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது. என்னை சுட்டுக்கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்த காலத்தை நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்று தான் எனக்கு பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன். நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும், பலப்படுத்தும்” என்று குறிப்பிட்டது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்த உரையின் மூலம் தமது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தார். அதனால் தான் இத்தகைய உரையை அவரால் நிகழ்த்த முடிந்தது. துணிச்சல் மிக்க இந்திரா காந்தி பயங்கரவாத சக்திகளால் வீழ்த்தப்பட்டார். அவரை வீழ்த்தப்பட்ட வீராங்கனையாகவே வரலாறு பதிவு செய்தது.

நாடு சுதந்திரம் பெற்ற போது மதவெறி சக்திகளால் மகாத்மா காந்தியை இழந்தோம். அடுத்து அதே மதவெறிக்கு இந்திரா காந்தியையும் இழந்தோம். இதைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு ராஜீவ்காந்தியை இழந்தோம். இத்தகைய உயிரிழப்புகள் நாட்டிற்காக செய்யப்பட்ட தியாகச் செயல்களாகும். இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமையும், மதநல்லிணக்கமும் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அன்னை இந்திரா மறைந்திருக்கலாம். ஆனால், அவர் புகழ் மறையாது. அவர் காட்டிய வழியில் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்நாளில் சூளூரை ஏற்போம்.

கே.எஸ்.அழகிரி, தலைவர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday 30 October 2019

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் குறித்த விவரங்கள் www.tnsec.tn.nic.in என்ற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்களது பெயரை தொடர்புடைய சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்கு வாக்காளர்கள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அதிகாரியிடமோ, தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

தற்போது சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் திருத்தல் அல்லது மாறுதல் கோரி விண்ணப்பிப்பதற்கும் நவம்பர் 18-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெண் குழந்தைகளின் வளர்ச்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சி

காலங்காலமாக பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, அதே போல தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கருவிலேயே பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதும், பிறந்த பெண் குழந்தைகள் சந்தேக மரணங்களை எதிர்கொள்வதும் மறுப்பதற்கில்லை.

மக்கள் தொகையில் 1000 பேருக்கு பெண்கள், ஆண்களுக்கு இணையாக அல்லது கூடுதலாக இருப்பதை வைத்து கொண்டு எல்லாம் சரியாகிவிட்டது என்று தீர்மானம் செய்வது தவறு. இந்த புள்ளிவிவரங்கள் பெண்கள் வாழ்நாள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள தாக்கம். அவ்வளவுதான். உண்மையான அளவுகோல் பிறப்பு விகிதம் மற்றும் 5 வயதில் பாலின விகிதம் மற்றும் பெண் கல்வி, ஊட்டச்சத்து, சட்ட பாதுகாப்பு, உயர்கல்வி, இணையான ஊதியம், பதவி உயர்வுகள், அதிகாரமளித்தல் போன்றவைகள் தான். சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவரங்கள், தமிழ்நாட்டில் பெண், ஆண் மக்கள் தொகை விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 2005, 2007-ம் ஆண்டில் 896 என்ற நிலையில் இருந்து இன்றைக்கு 954 என்று உயர்ந்துள்ளதை காட்டுகிறது.

பிறப்பில் பாலின விகிதாச்சாரம் என்ன என்பது தான் முதல் அளவுகோல். தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி 2013-15 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆண், பெண் பாலின விகிதாச்சாரம் 1000-க்கு 911 மட்டுமே. இந்த விகிதாச்சாரம், 2014-16 இரண்டு ஆண்டுகளின் போது 1000-க்கு 915 ஆக உயர்ந்துள்ளது. மிகச்சிறிய, மகிழ்ச்சி தராத வளர்ச்சி. ஸ்கேன் சென்டர்களில் சட்டத்திற்கு புறம்பாக பாலினம் கண்டறியப்பட்டு பெண் குழந்தைகள் கருக்கலைப்பு செய்யப்படுவதும், அப்படி பிறந்துவிட்ட குழந்தைகள் அந்த குடும்பத்தின் இரண்டாவது பெண் குழந்தையாக இருக்கின்ற பட்சத்தில் சில சமயங்களில் சந்தேக மரணம் அடைவதும் தெரியவருகின்றன. 1994-ம் ஆண்டின் சட்டத்தின்படி பிறக்கின்ற குழந்தை பாலினத்தை கண்டறிந்து வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சட்டத்தின்கீழ் 1835 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஸ்கேன் சென்டர்கள் தவறு செய்துள்ளனர் என்று 140 ஸ்கேன் சென்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 119 வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசு கொடுத்துள்ள தகவல்.

தேசிய குற்றங்கள் தகவல் அறிக்கை 2017-ம் ஆண்டுக்குரிய புள்ளி விவரங்கள்படி கருவில் கொல்லுதல், பிறந்த குழந்தைகளை கொல்லுதல், குழந்தைகளை நிர்க்கதியாக விட்டு செல்லுதல் ஆகிய குற்றங்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 313 முதல் 318-ன் கீழ் தமிழ்நாட்டில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரியலூர், சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுவதை இன்றைக்கும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகளிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் இருந்தும் தெரியவருகின்றன.

இந்த 10 மாவட்டங்களில் பிறப்பு விகிதம் ஆண், பெண் 1000-க்கு 928 என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருவதை ஏதோ கற்பனை கதை என்று ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. பெண்களுடைய பிறப்பு விகிதம் கூடுதலாகிவிட்டது அல்லது மொத்த மக்கள்தொகையில் பெண்கள் கூடுதலாக இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சி தரலாம். ஆனால் பெண்கள் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது என்று கருதிவிட முடியாது. பெண் குழந்தைகளின் பிரச்சினைகள் தான் என்ன? ஆண் குழந்தைகளுக்கு நிகராக ஊட்டச்சத்து கிடைக்கப்பெறாமை, பெண் கல்வி அவசியம் என்கிற சூழல் புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் முழுமை பெறாத நிலை, பெண்களின் உயர்கல்விக்கு குடும்பம், உறவுகள் வரவேற்பும், ஆதரவும் தரும் நிலை வளராதது.

பெண்களை பாரமாக கருதி திருமணம் நடத்திவிட்டால் கடமை தீர்ந்தது என்று நினைக்கின்ற அதர பழசான சமூக சிந்தனை பெண்களுக்கு உள்ளது. ஆண்களுக்கு நிகரான ஊதியமும், பதவி உயர்வும் வழங்க மறுக்கும் ஆணாதிக்க மனப்பான்மை, பெண்களே பெண்களுடைய வளர்ச்சிக்கு எதிரிகளாக மாறுகின்ற மனப்பாங்கு நிலவுகிறது. அரசும், மக்களும் ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும். அடிப்படைக்கல்வி இலவசமாக வழங்கப்பட்டாலும் அனைத்து பெண்களும் இலவச கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணிபுரியும் போது அவர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்

பெண் குழந்தைகள் தொடர்பான சட்டங்களை செயல்படுத்த அதிகமான பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட ஒரு புதிய காவல் பிரிவினை ஏற்படுத்தி அதன் செயல்பாடுகளை காவல் துறை தலைவரே நேரில் கண்காணித்தல். பெண் குழந்தைகள் மீதான தேவையற்ற பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், ஏளனப் பார்வைகள், பொது இடங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான சேட்டைகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மாற வேண்டும்.

நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கொண்டு வந்து முடிவு செய்ய வேண்டும். தவறான அல்லது விருப்பமில்லாத முறையில், புலனாய்வு மேற்கொண்டு தண்டனை வழங்க இயலாத அளவிற்கு சாட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொறுப்பற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து அந்த பரிந்துரை மீது அரசு ஆய்வு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் நிலை தான் சமுதாய வளர்ச்சியின் அளவு கோல். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அரசும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமுதாய நலன் காக்கும் பொதுமக்களும் இணைந்து தங்களுடைய பங்கை வழங்கும் போது நிச்சயமாக நேர்மறை மாறுதல்கள் நடைமுறைக்கு வரும். பல விஷயங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு, பெண் குழந்தைகள் முன்னேற்றத்திலும் ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று எதிர்பார்ப்போம்.

எஸ்.எஸ்.ஜவகர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மரணங்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள்

மனிதனின் பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்கும் எத்தனையோ சம்பவங்கள் இடையில் வந்துபோகின்றன. சில சம்பவங்கள் மட்டும் வரலாற்றில் இடம் பிடிக்கிறது. அது போன்ற ஒரு வரலாற்றுச் சம்பவம் தான் குழந்தை சுஜித்தின் மரணம்.

ஒரு விஷயத்தை முன்கூட்டியே முடிவு செய்ய முடியாமல் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு தான் விழித்துக்கொள்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு உயிர்களை பலி வாங்கி இருக்கிறது இந்த ஆழ்துளை கிணறுகள். ஆனாலும் ஏன் இந்த சமூகம் விழித்துக்கொள்ளவில்லை. அறியாமையா? விழிப்புணர்வு பெறவில்லையா? அரசின் கெடுபிடிகள் இல்லையா? இவற்றை எல்லாம் யோசிக்க வேண்டிய தருணத்தில் சுஜித்தின் மரணம் கேள்வி எழுப்பிச் சென்று இருக்கிறது.

நாடு நவீனமாக்கப்படுகிறது, இணையம் உள்ளங்கையில் இணைக்கப்பட்டு விட்டது. சந்திரனிலும், செவ்வாயிலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகள் போற்றி வளர்த்த ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற இந்த அறிவியலுக்கும், விஞ்ஞானத்திற்கும் முடியாமல் போய்விட்டதே. முப்பது அடியில் இருந்தவனை நூறடிக்கு இழுத்துச் சென்ற இயற்கையிடம் இந்த அறிவியலும், விஞ்ஞானமும் தோற்றுப்போய்விட்டதே. இதற்காகவா நாம் இத்தனை ஆராய்ச்சிகளை செய்து சாதனை படைத்தோம். நாகரிக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டோம் என்று மெச்சிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சமூகத்தில் நடக்கும் பல மரணங்கள் நமக்கு இன்னும் பாடம் கற்பித்துக்கொண்டு இருக்கிறது என்பதனை மட்டும் யாராலும் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.

ஆம் நாவரசு என்ற மருத்துவ மாணவர், தான் மருத்துவம் படித்து மிகப்பெரிய மருத்துவர் ஆக வேண்டும் என்ற பெரிய கனவோடு கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தார். அங்கே அவருக்கு நடந்தது என்ன? ராக்கிங்கால் கொலை செய்யப்பட்டு கோணிப்பையில் அள்ளிச்சென்ற அவலம் நடந்தது. நாவரசுவின் மரணம் இந்த சமூகத்திற்கு விட்டுச்சென்ற பாடம் தான் பல லட்சம் மாணவர்களை ராக்கிங் என்ற எமனிடமிருந்து காப்பாற்றியது. அந்த மாணவரது மரணம் வரைக்கும் ராக்கிங் என்பதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது வெளி உலகிற்கும் தெரியவில்லை. மரணத்திற்கு பின்பு தான் நாம் விழித்துக்கொண்டோம்.

சுவாதி என்ற இளம்பெண் பட்டப்பகலில் ரெயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டாள். படித்து முடித்து கைநிறைய சம்பாதிக்கும் வயதில் கயவனுக்கு தன் உயிரை பலி கொடுத்துச் சென்றாள். அவளது மரணம் விட்டுச்சென்ற பாடம் என்ன? அதன் பிறகு தான் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. லட்சம் பேர் வந்து செல்லும் ரெயில் நிலையத்தில் அதுவரை கண்காணிப்பு கேமராக்கள் கூட பொருத்தப்படவில்லை. சுவாதியின் மரணத்திற்கு பின்பே நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீக்கிரையாயினர். அதுவரை பள்ளிக்கூடங்கள் கூரைக்கொட்டகையில் இயங்கி வருகிறதா என்பது கூட யாருக்கும் தெரியாது. அகரம் படிக்கச்சென்ற அக்குழந்தைகளின் மரணம் தான் கூரையில்லாத பள்ளிக்கூடங்களுக்கு பாதை போட்டது. அந்த பச்சிளம் குழந்தைகளின் மரணம் இந்த சமூகத்திற்கு விட்டுச்சென்ற பாடம் தான் இன்றைக்கு பாதுகாப்பான கட்டிடங்களின் பல லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடிகிறது.

பள்ளி பேருந்தின் ஓட்டை வழியே பள்ளிக்குழந்தை விழுந்து இறந்து போனது. இச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. பேருந்தில் இவ்வளவு பெரிய ஓட்டையா என்று அது வரைக்கும் சோதனை செய்யப்படாத பேருந்துகள் அந்த குழந்தையின் மரணத்திற்கு பின்புதான் பள்ளிப்பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன. அக்குழந்தையின் மரணம் விட்டுச்சென்ற பாடத்தால் தான் இன்றைக்கு பல லட்சம் குழந்தைகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கின்றனர். மரணத்திற்கு பின்பே விழித்துக்கொண்டோம்.

தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா தேவாலயத்தில் கொலை செய்யப்பட்டார். சேலத்தில் மாணவி தேசாஸ்ரீ வகுப்பறையில் கொலை செய்யப்பட்டார். கோவையில் தண்யா என்ற இளம் பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டார். இவை எல்லாம் ஒருதலை காதலால் ஏற்பட்ட மரணங்கள் இம்மரணங்களுக்கு பிறகே சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. சென்னையில் விளம்பர பதாகை விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு பிறகு தான் வீதிகளில் விளம்பர பதாகைகள், கட்-அவுட், பேனர் வைக்கக்கூடாது என்று சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. அனைத்துக் கட்சி தலைவர்களும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். இம் மரணங்கள் விட்டுச்சென்ற பாடங்கள்தான் பெண்களின் பாதுகாப்பிற்கு வேலிபோட்டது. பாதுகாப்பை பலப்படுத்தியது.

மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த அனிதாவின் மரணம் கனவாகவே போய்விட்டது. அனிதாவின் மரணத்திற்கு பிறகு இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறோம். இப்படி நமது சமகாலத்தில் பல்வேறு மரணங்களை நாம் சந்தித்து போராடி வந்திருக்கிறோம். ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு பாடத்தை இந்த சமூகத்திற்கு கற்றுக்கொடுத்துப்போகிறது. ஆனால் மரணங்களை தடுக்க முடியாமல் நம்மால் பாடம் கற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த வரிசையில் தான் குழந்தை சுஜித்தின் மரணம் இன்று இடம்பிடித்து இருக்கிறது. ஆழ்துளை மரணங்கள் பல இம்மண்ணில் இடம் பெற்று இருந்தாலும் சுஜித்தின் மரணம் மிகப்பெரிய பாடத்தை இச்சமூகத்திற்கு விட்டுச்சென்று இருக்கிறது. உன்னுடைய அறிவியலும், ஆராய்ச்சியும், விஞ்ஞானமும் இயற்கை என்னும் என்னிடம் தோற்றுப்போகும் என்று சவால்விட்டுச் சென்று இருக்கிறது. நான்கு நாள் போராட்டம், பல மணி நேர காத்திருப்பு, பகைவன் கூட மனம் இளகிப்போகும் பரிதாபம், கை நீட்டிய குழந்தைக்கு கை கொடுக்க முடியாமல் போன இயலாமை, இவை எல்லாம் நம் எல்லோருடைய மனதையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மீண்டு வா என்ற பிரார்த்தனை உலகம் எங்கும் ஒலித்தது. ஆனால் மீளாமலேயே போய்விட்டான். பல்வேறு மரணங்கள் பாடம் கற்றுக்கொடுத்ததைப்போல குழந்தை சுஜித் மரணம் இந்த சமூகத்திற்கு பாடம் கற்பித்துச் சென்று இருக்கிறது.

மு.ஜெயமணி, உதவி பேராசிரியர், ராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday 24 October 2019

வெள்ளையர் ஆதிக்க எதிர்ப்புப் போர்..!

பிரிட்டிஷாரின் ஆட்சி 1792-ல் ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்றதில் இருந்தே தொடங்குகிறது. அதன்பின்னரே ரெவெனியூ போர்டு என்றும், வருவாய் ஆணையம் அமைக்கப்பட்டு, வரிவசூல் செய்ய கலெக்டர் பதவிகள் உருவாக்கப்படுகின்றன. பாளையக்காரர்கள் தோற்றம் தென்னிந்தியாவின் மத்தியகால வரலாறு 1311 ஆப்கானியர்கள் நம் நாட்டைச் சூறையாடியதிலிருந்து தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து விஜயநகரப் பேரரசு மலர்ந்து, தமிழகம் நாயக்கர் கட்டுப்பாட்டில் வருகிறது. அதைப்போலவே மராத்தியர்களின் மேலாதிக்கத்தால் மைசூர் பிரபலம் அடைகிறது. கர்நாடகப் பகுதி அரசியல் ஒற்றுமை பெறுகிறது.

வேணாடு திரு வாங்கூர் அரசாக உருவாகிறது. இவ்வாறு 1311 முதல் 1800 வரையான இடைக்காலத்தின் வரலாறு ஒரு தெளிவான ஆட்சியில் அமையவில்லை. பாண்டியர் அரசும் பலவீனமுற்று மறைகிறது. அதன்பின் தென்னிந்திய அரசியல் நிர்வாகம் ஐரோப்பிய வெள்ளையர்கள் கையில் வந்து சேர்கிறது. மன்னராட்சி முடிந்து ஓர் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு 3 அடுக்காக உருவாகிறது. மேலே, மன்னராட்சி (கர்நாடக நவாப் மைசூர் தஞ்சை அரசர்கள் ஆட்சி ஹைதராபாத் நிஜாம் ஆட்சி), 2வது படிநிலையில் பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள், ஜாகிர்தார் கள் என்ற நிர்வாக அமைப்பு உருவாக்கப்படுகிறது. மூன்றாவது கடைசிப்படி நிலையில் கிராம சமூகங்கள் - இப்படியாக அமைகின்றன.

பாதுகாப்பு, வரி வசூல் ஆகியவற்றை மன்னர்களும், சட்டம் ஒழுங்கு போன்றவற்றை துணையாட்சிக் குழுக்களும், சமுதாய நலம் உள்ளாட்சி இவை சார்ந்த கிராம சமூகங்களும் அமைகின்றன. இந்த முறையில் நிர்வாக அடுக்குகள் உருவாக்கப்படுகின்றன, உருவாகின்றன. இந்தப் பாளையப்பட்டுகள் தென்னிந்திய அரசியல் நிர்வாகத்தின் தமிழகப் பகுதியாகவும், ஆந்திராவின் அரசமைப்பில் பாளையக்காரர்கள் இருக்கின்ற னர். தெற்கே தென்னகப் பாளையக்காரர்களும், மேற்கே ராயலசீமாவிலும், வடக்கில் ஆந்திரக் கடற்கரையிலும் பாளையப்பட்டுகள் உருவாகின்றன.

தென்னகப் பாளையங்கள் நெல்லை , ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அமைகின்றன. விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம் பதினாறாம் நூற்றாண்டில் தென்னகம் நோக்கி பரவுகிறது. மதுரையில் விஜய நகர ஆட்சியின் பிரதிநிதியாக விஸ்வநாத நாயக்கர் தலைமையில் அமைகி றது. 1565 தலைக்கோட்டைப் போருக்குப்பின், பாமினி சுல்தான்களால் விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடை கிறது. மதுரை, தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தொடர்கின்றனர். கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609) ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், போர்த்துக்கீசர்களுடைய அத்துமீறலைத் தடுக்கவும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

திருமலை நாயக்கர் (1623-1659) ரகுநாத சேதுபதியையும் நியமிக்கிறார். சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் ரகுநாத சேதுபதி நாயக்கர் மைய ஆட்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். 1702-ல் ராணி மங்கம்மாள் தாக்குதலை மறவர் படைகள் வளைத்து, அதன் விளைவாக ரகுநாத சேதுபதி மறவர் நாட்டினை சுதந்திர நாடாக அறிவிக்கி றார். கிழக்கு கடற்கரை முதல் மதுரைக் கு 6 கல் தொலைவு வரையிலும், தெற்கே வைப்பாறு, வடக்கே தஞ்சை வரையிலும் மறவர் நாடு அமைகிறது. 1711-ல் ரகுநாத சேதுபதியின் மைத்துனர் புதுக்கோட்டைப் பகுதியை ரகுநாதருக்கு அளிக்கிறார். ஆங்கிலேயர்கள் மறுபுறம் வளர்ந்து வருகின்றனர்.

போரில் கேள்ளையோடு தர்மத்துரையும், இங்கிலாந்து பாராளு மன்றமும், ஆட்சியும் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் துணை நிற்கிறது. அதைப்போலவே வணிகத்துக்கு வந்த பிரஞ்சு ஆட்சி ஒத்துழைப்பும் அரசு ஆதரவும் இன்றி மறுகுகின்றனர். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கும்பினி முதன்மை பெறுகிறது! இதைத்தொடர்ந்துதான் பல்வேறு பாளையப்பட்டுகள் தென்தமிழகத்தில் நெல்லையில் தொடங்கி திருச்சி வரை உருவாகின்றன. 1761-ல் பிறந்த பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீரபாண்டியனின் மகன் கட்ட பொம்மன் 1691-ல் பொறுப்புக்கு வரு கிறார்.

1798 நெல்லை கலெக்டர் ஜாக்சன் துரை வரி பாக்கியை கேட்டு, குற்றம்சாட்டி கண்டனத்துக்கு உரிய முறையில் கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதுகிறார். “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கு ஏன் வரி” என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஜாக்சனை சந்திக்க உடன்பட்ட கட்டபொம்மன் பல ஊர்களுக்கு மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்ப்படுகிறார். கடைசியில் கட்டபொம்மன் சந்திக்கும்போது அவருக்கு உட்காரக்கூட ஆசனம் தராமல் நிற்க வைத்தே ஜாக்சன் பேசுகிறான். தன்னுடைய படை வீரர்களை வைத்து அவரைக் கைது செய்யவும் முயற்சி செய்கிறான். ஆனால், கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரை முன்யோசனையால் வீரர்கள் தாக்கப்பட்டு கட்டபொம்மனும், ஊமைத்துரையும், அமைச்சர் தானாபதி பிள்ளையோடு தப்பிக்கின்றனர்.

இந்தப் போரில் கேப்டன் பிளாக் என்பவன் கொல்லப்படுகிறான். இதை வைத்து தானாபதி பிள்ளையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என புதிய கலெக்டர் லூசிங்டன் கோருகிறான். அதை மறுத்த பின் திடீரென்று பிரிட்டிஷ் படைகள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுக்கின்றன. அன்று கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவியின் திருவிழாவில் கலந்துகொள்ள கட்டபொம்மன், ஊமைத்துரையும், குழுவினரும் திருச்செந்தூரில் இருக்கின்றனர். அமைச்சர் பிள்ளை அவர்கள் சொந்த ஊரான ஆற்றூருக்குச் சென்று விடுகிறார்.

இதை புதுக்கோட்டை மன்னர் மூலம் தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் படை, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகை இடுகின்றன. பிரிட்டிஷ் தளபதி பானர்மேன், ராமலிங்கம் என்பவரைத் தூதராக கோட்டைக்குள் அனுப்புகிறான் பானர்மேன். அவன் கோரிக்கையை கட்டபொம்மன் நிராகரிக்க, உள்ளே வந்து செல்லும் ராமலிங்கம் கோட்டைப் பாதுகாப்பு பற்றிய செய்திகளை பானர்மேனுக்கு வழங்குகிறார். ஆனால், செய்தியைக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும் கட்டபொம்மனும் எப்படியோ கோட்டைக்குள் புகுந்து விடுகின்றனர்.

மிகக் கடுமையான போரில், ஏற்கெனவே சேதமாகி உள்ள ஒரு பகுதியைத் தாக்கி பிரிட்டிஷ்படை உள்ளே வருகிறது. ஆயினும் அவர்களை பாளையக்காரர் படை துரத்தி அடிக்கிறது. கோட்டையில் இல்லாத போது முற்றுகையிட்டு, பிடிக்க நினை த்த பானர்மேன் சோர்ந்த முகத்தோடு திரும்புகிறார். கூடுதல் படைகளை அனுப்பச் சொல்லி அரசிடம் கேட்டுக்கொள்கிறார். படைகளோடு எட்டயபுரம் மன்னன் தன் 4,000 வீரர்களை அனுப்பி வைக்கிறார். கடுமையான போரில் கோட்டை விழுகிறது. கட்டபொம்மன், ஊமைத்துரை, அமைச்சர் தானாபதிப்பிள்ளை தப்பித்துச் செல்கின்றனர். போகும் வழியில் தானாபதி பிள்ளை கைது செய்யப் படுகிறார். கட்டபொம்மனும் ஊமைத் துரையும் நாகலாபுரம் பாளையக் காரரிடம் தஞ்சம் புகுந்தனர்  தானாபதி பிள்ளையைத் தூக்கிலிட்டு, அவர் தலையை வேல்கம்பில் சொருகி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் வைக்கின்றனர். அதன் வழியாக மற்றைய பாளையக்காரர்களுக்கு, இப்படி உங்களுக்கும் நடக்கும் என அச்சுறுத்தப்படுகின்றனர்.

நாகலாபுரம் பாளையக்காரர் சௌந்தரபாண்டியன் தூக்கிலிடப்படுகிறார். நாகலாபுரத்திலிருந்து தப்பிய கட்டபொம்மன், ஊமைத்துரை தமது நெருங்கிய நண்பரான புதுக்கோட்டை தொண்டைமானிடம் செல்கின்றனர். அவர் அவர்களை வரவேற்று இரண்டு நாள் தங்க வைத்து, விருந்தளித்து பிரிட்டிஷாருக்கு தகவல் சொல்கிறார். இருவரும் பிடிபடுகின்றனர். கட்ட பொம்மனை ராணுவ விசாரணைக்காக கயத்தாறு எனுமிடத்தில் 1610-1799 அன்று விசாரிக்கப்படுகிறார். அவர் மீது பிரிட்டிஷாருக்கு எதிராக ஈடுபட்டதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பானர்மேன் விதிக்கிறான்.தண்டனையை ஏற்றுக் கொண்ட கட்டபொம்மன், எட்டப்பனையும், புதுக்கோட்டை மன்னனையும் மிக துச்சமாகநோக்குகிறான். கட்டபொம்மனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நாட்டு மண்ணைக் காப்பதற்கு அன்னியர்களை எதிர்க்க மீண்டும் தயங்க மாட்டேன் என்று கூறி, தூக்குக் கயிறைத் தானே தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு அமரர் ஆகிறார்! பாஞ்சாலங்கோட்டை அடித்து நொறுக்கப்பட்டு, அந்த நிலம் உழுது போடப்படுகிறது.அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் வீடு, நிலம், சொத்து அனைத்தும் அரசாங்கத்தால் கவரப்படுகிறது. பாளையங்கோட்டை சிறையில் வைக்க ப்பட்டுள்ள ஊமைத்துரையைக் காப்பாற்ற அவர் சார்ந்த தோக்கலவார் இனத்தினர் தங்களுக்குள் கூட்டம் போட்டு, பாளையங்கோட்டை சிறையைத் தாக்கி ஊமைத்துரையை விடுவிக்கின்றனர்.

சில நாட்களிலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீண்டும் கட்டப்படுகிறது. ஊமைத்துரை கோட்டைக்குள் புகுந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். வெள்ளை அரசு மிகப் பெரும் படையோடு மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. ஆறு நாட்கள் நடந்த போரில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்கிறது! ஊமைத்துரை தப்பிச்சென்று சிவகங்கையில் உள்ள மருது சகோதரர்களிடம் அவர்களுக்கு உதவ, போய்ச் சேருகிறார். 1801 மே 28 அன்று மருது சகோதரர்களுக்கு எதிரான சிவகங்கைப் போர் நான்கு மாதங்கள் நீடிக்கிறது.

இறுதியில் இருவரும் கைது செய்யப்பட்டு, திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்படுகின்றனர். ஊமைத்துரை பாஞ்சாலங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பீரங்கி மேடையில் தூக்கிலிடப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் பாளையக்காரர்களின் ஆட்சி நிர்வாக முறை முற்றாக அழிக்கப்படுகிறது. ஆங்கில அரசுக்கு பயந்த பாளையக்காரர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பை இழந்து ஊர்க் காவல் பணியாளராக மாறுகின்றனர்.

காட்டிக் கொடுத்த புதுக்கோட்டைத் தொண்டமானுக்கு, பிரிட்டிஷாருக்குக் கட்ட வேண்டிய வரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது எட்டப்பருக்கு சிவஞானபுரம் என்ற கிராமம் பரிசாக வழங்கப்படுகிறது. வீரமிக்க பாளையக்காரர் பரம்பரை காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்படு கிறது! தென்தமிழகத்தில் அன்னியருக்கு எதிரான போராட்டம் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு ஒரு துயரமுடிவுக்கு வருகிறது!

நெய்வேலி பாலு,
தொடர்புக்கு: jee40.bala@gmail.com
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday 23 October 2019

கலாமின் காலடி...

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று சொன்னது மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவர் கலாம். கடற்கரை ஊரான ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து 2015-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27-ம் தேதி ஷிலோங் என்ற மலைப்பிரதேசத்தில், தான் மிகவும் உயர்வாக நினைத்த ஆசிரியப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்ற மாமனிதர்தான் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

ஒரு மனிதன் பிறந்தது முதல் இறுதிப் பயணம் வரை வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று கூறாமல் வாழ்ந்து காட்டிய ஓர் நல்லாசிரியர் அவர். “தூங்கும்பொழுது வருவதல்ல கனவு நம் தூக்கத்தை கலைப்பதுதான் கனவு” என கனவில்கூட காவியம் படைக்க ஊக்கமளித்த தலைவன்.

வாழ்க்கையில் லட்சியம் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பாதையில் பயணித்து தோல்வியுற்றால் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. எது கிடைக்கிறதோ அதில் தலை சிறந்து விளங்க முயற்சிக்க வேண்டும் என்று உணர்த்திக் காட்டிய உத்தமர். அவர் விமானியாக வேண்டும் என்பது தான் லட்சியம். ஆனால், அது முடியவில்லை என்றதும் சோர்ந்துவிடாமல் விமானம் செய்யும் தொழில் நுட்பத்தை கற்று பின்னர் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அறியப்பட்டவர்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் முடித்து சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் விண்வெளி படித்து 40 வருடகாலம் ஒரு விஞ்ஞானியாக விளங்கியவர்.

டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த குழந்தைகள் இவரைக் கண்ட பின்னர்தான், தான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று கூறினர். அப்படிப்பட்ட லட்சியக் கனவுகளை இளம் பிஞ்சுகளின் மனத்தில் விதைத்தவர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் தன்னை உருவாக்கிய குருவை என்றும் அவர் மறந்ததில்லை . பிறரையும் குருவிற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என அறிவுறுத்தியதோடு, குருவே வாழ்விற்கு வழிகாட்டி எனவும் கூறியவர். டிஆர்டிஓ மற்றும் ஐஎஸ்ஆர்ஓ-ல் தன் வாழ்நாளில் பெருமளவில் கழித்தவர். அதுதான் அவரை ஒரு ஏவுகணை மனிதனாக உலகிற்குக் காட்டியது.

ஒருமுறை அவரிடம் ஐஎஸ்ஆரோவில் அவருடைய மறக்க முடியாத அனுபவத்தை கேட்டபொழுது, “எப்பொழுதுமே குழுவாக திட்டமிடுதலும் அனைவரின் ஒத்துழைப்பும் வெற்றிதரும். ஆனால், ஒரு குழுவிற்கு தலைவன் என்பவர் தனக்கு பின்னே கீழே உள்ளவர்களைத் தொண்டர்களாக உருவாக்கவேண்டும் என்று எண்ணக்கூடாது. தன்னைப்போல் பிறரையும் தலைவனாக்க முயல வேண்டும். அதுவே, ஒரு தலைமைப் பண்பு, அப்படி ஒருமுறை அவர்களின் திட்டம் ஒன்று தோற்ற பொழுது இதனைப் பற்றி தெரிந்துகொள்ள பத்திரிகையாளர்கள் அரங்கத்திற்கு வெளியே காத்திருந்தனர். அப்பொழுது குழுவில் உள்ள ஒருவர் தலைவரிடம் நாங்கள் பத்திரிகையாளர்களை சமாளிக்கிறோம் என்ற பொழுது தலைவர், நீங்கள் சோர்ந்து போக வேண்டாம் நான் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் பொறுமையாக பதில் கூறினாராம். ஆனால், அடுத்த முறை வெற்றி பெற்ற பொழுது கலாமிடம் நீங்கள் சென்று பத்திரிகையாளரை சந்தியுங்கள் என்றாராம். ஏன் என்று கேட்ட பொழுது வெற்றி தன்னம்பிக்கை தரும், மேலும், உங்களை உழைக்க வைக்கும், அடுத்த தலைமுறையினரை உலகம் போற்ற வேண்டும் என்றாராம். குழுத்தலைவர் மூலம் தலைமைப்பண்பு என்ன என்றால் என்ன என்று உலகிற்கு உணர்த்தியவர்.

"கர்மயோகம் தனையே புரியும் முயற்சிக்கென்றுமே அழிவில்லை . அறத்தால் இதனால் தீதும் இல்லை சற்றே புரியினும் வீடுருவாய். தர்மம் தனிலே அதர்மம் தனையும் அதர்மத்தின் கண் வினையினையும் காண்போன் மேலோன் மேதை யோகி அவனே யாவும் துறந்தோனாம் " என்று பகவத் கீதையைப் படித்து அதன்படி வாழ்ந்தவர்.

ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் காரியங்களை அர்ப்பணிப்பாக செய்ய வேண்டும். முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும், பலன் கிடைக்கவில்லை என்றாலும் வினையை செய்ய வேண்டும். செய்யும் செயலில் நேர்மை, தூய்மை, கடைப்பிடிக்க வேண்டும். அதில் அதர்மம் செய்தால் அதனால் ஏற்படும் விளைவை உணர வேண்டும். இதனை உணர்ந்து நேர்மையாக இருப்பவனை மேதை, மேலானவன், யோகி, முற்றும் துறந்தவன். செய்யும் வேலையில் பற்றற்று கடமை ஒன்றே கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்த கீதை வரிகள் மூலம் அறிந்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வரும் இதனைப் பின்பற்ற வேண்டும் என அறிவுரை கூறியவர். தோற்றத்தில் எளியவர், பழகுவதற்கு இனியவர், சொல்லில் வல்லவர்.

இந்தியா 2020-ல் வல்லரசாகும் என்று 130 கோடி இந்தியர்களுக்குமாக கனவு கண்டவர். கனவு கண்டது மட்டுமல்லாமல் அதற்கு விஷன் 2020 என்று பெயர் வைத்து, மத்திய அரசுக்கு அதில் வெற்றி காண பல்வேறு திட்டங்களை வகுத்து அளித்தவர். தமிழ்நாட்டிலும் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் பதவி ஏற்ற பொழுது அவர்கள் குழுவினரை அழைத்துவந்து தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய முக்கிய உடனடித் திட்டங்களை விவாதிக்குமாறு அழைக்கப்பட்டவர்.

இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்டவர். அதன்பின்னர்தான் ஒரு ஜனாதிபதி இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா? என்று அனைவரையும் வியக்க வைத்தவர். தன் அண்ணன் குடும்பத்தை ராஜ் பவனுக்கு ரயிலில் வரவழைத்து சுற்றிக் காட்டிவிட்டு ஒரு வாரத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டு அவர்கள் சாப்பாட்டிற்கும் ராஜ்பவனுக்கு பணம் கொடுத்த பண்பாளர்.

ஜனாதிபதியாகும் முன்னர் கண் பார்வை குறைபாடு ஏற்பட்ட பொழுது மதுரையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் பொதுப்பிரிவில் மருத்துவ சிகிச்சை எடுத்து அங்கு தரையில் படுத்து உறங்கியவர். இரண்டு நாளில் அவரின் வீட்டிலிருந்து அவரை தேடி வந்த பின்பு அவரின் பதவியும் புகழும் தெரிந்து தலைமை மருத்துவர் ஏன் அப்படி செய்தீர்கள்? என்று கேட்டபோது இங்கு எல்லோருக்கும் ஒரே சிகிச்சை நல்ல சிகிச்சை அளிக்கப்படுவது கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நானே நேரில் உணர்ந்துவிட்டேன். சிகிச்சை சமமாக இருக்கும் பொழுது எதற்கு ஆடம்பரம்? என்று அந்த மருத்துவமனையை வாழ்த்தியவர்.

இன்று புவியின் வெப்பநிலை மாறுபாட்டை இந்தியா முன்னர் இருந்ததை விட 20% முன்னேறி இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அதற்கு கலாம் அவர்களின் ஒரு மனிதன் ஒரு மரம் என்று மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை சொன்னதோடு மட்டுமல்லாமல் அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர்

ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பின்னர் ஓர் ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக இறுதிவரை இருந்தவர். எந்தத் துறையில் யார் சாதனைகள் செய்தாலும் அவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்கத் தவறாதவர், இந்தியாவை உருவாக்க இளம் தலைமுறையினர் ஏற்றவர் என லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளை சந்தித்தவர். அதில் ஒரு குழந்தை நீங்கள் விஞ்ஞானி, ஏவுகணை மனிதன், ஆராய்ச்சியாளர், ஜனாதிபதி, ஆசிரியர் இத்தனை பதவி வகித்து உள்ளீர்கள், உங்களுக்குப் பிடித்தமான பதவி எது? என்று கேட்ட பொழுது தான் எப்பொழுதும் ஒரு ஆசிரியராக இருக்கவே ஆசைப்படுகிறேன் அது பதவி அல்ல பொறுப்பு. ஓர் ஆசிரியராக அனைத்துத் துறையிலும் வல்லுநர்களை உருவாக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறியவர்.

உங்களின் கண்டுபிடிப்புகளில் எது பிடிக்கும் என்று கேட்டபொழுது எல்லா கண்டுபிடிப்புகளும் பிடிக்கும் ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது என்பதை விட மனநிறைவு தந்தது கால்களை இழந்தவர்களுக்கு கனமான மரங்களுக்கு பதிலாக விமானம் தயாரிக்கும் இலகுரக உலோகத்தால் கால்கள் தயாரித்து அதனை உபயோகித்த பிள்ளைகள் மிகவும் எடை குறைவாகவும் நடப்பதற்கு எளிதாக இருப்பதாகவும் கூறிய தருணம்தான் என்று நிறைந்தவர்.

சில கட்சிகளால் கூட்டங்களால் அவர் மறு முறை ஜனாதிபதியாக வர முடியாவிட்டாலும் இன்று கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, ஏழைப் பங்காளி முதல் ஏவுகணை செலுத்தும் விஞ்ஞானி வரை அனைவரும் அனைவரின் நெஞ்சிலும் குடியிருக்கும் நிரந்தர முதல் இந்தியக் குடிமகன்.

இசையை ரசிப்பது, வீணை வாசிப்பதிலும் விற்பன்னர். சாதி மத பேதமின்றி சங்கராச்சாரியார் முதல் ஜக்கிவாசுதேவ் வரை அனைவரிடமும் பழகியவர். மரியாதை கொண்டவர், ஒரு விஞ்ஞானிக்கு ஒட்டுமொத்த இந்தியாவே அழுதது தொழுதது இதுவே முதல் முறை. அவருடைய வாழ்க்கை ஒரு வரலாறு, இறப்பு ஒரு சரித்திரம், செயல் ஒரு சகாப்தம் என நம் எண்ணத்தில், செயலில், என்றும் அவரை நினைவில் நிறுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.

பேரா. ஆர்.காயத்ரி
கல்வியாளர்/ஊடகவியல் ஆலோசகர்
தொடர்புக்கு: r.gayatrisuresh@yahoo.com 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இருபெரும் நாடுகளான இந்தியா, சீனா ஆகிய இந்த இரண்டு நாடுகளில்தான் மிகப்பெரும் வணிகச் சந்தைகள் உள்ளன. சீன எல்லையில் பதற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் ஏற்படுகிற அமைதி இரண்டு நாடுகளுக்கும் மிகப்பெரிய முன்னேற்றத்தை வழங்கும்.

அதன் அடிப்படையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்கிற வேண்டுகோளை முன்வைத்தார். அதனடிப்படையில், சீன அதிபர், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் இந்தியாவிற்கு வருகை தந்தார். இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மாமல்லபுரத்தை தேர்வு செய்தது தமிழகத்துக்கான பெருமையே.

2,000 ஆண்டு பழைமையான வணிக கலாசாரத்தைக் கொண்ட நகரம்தான் மாமல்லபுரம். இந்தியா, சீனா கடல்சார் வணிகத்திற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாமல்லபுரம் கடற்கரை என்பது மிகப்பெரிய துறைமுகமாக இருந்திருக்கிறது. சீன யாத்திரிகர்கள் உள்ளிட்ட வணிகர்கள் வந்து சென்றுள்ள இடத்தில்தான், இன்று இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்புரிமையை மத்திய அரசு நீக்கியது. சீனா, இந்த விவகாரத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஐ.நா சபையில் பிரச்சனையை கிளப்பியது.

பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் சீனா சர்வதேச அரங்கில் நடந்து கொண்ட இந்தக் காலகட்டத்தில் சீன அதிபரின் இந்திய வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவிற்கான வருகை உறுதியானவுடன் சீனா, காஷ்மீர் விவகாரத்தில் கொஞ்சம் சுருதிமாறிப் பேசியது. 'இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். பரஸ்பர நம்பிக்கைகளை உண்டாக்கும் வண்ணம் இரண்டு நாடுகளும் செயல்படுவதுதான் உலகத்தின் விருப்பம்' என்று சீனா கருத்து தெரிவித்தது.

சமீபத்தில் சீனாவிற்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார். இச்சந்திப்பிற்குப் பிறகு நடுநிலைமை என்கிற முடிவிற்கு சீனா வந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது. சீனாவின் இந்த நடுநிலைமை என்பது கிட்டத்தட்ட இந்தியாவிற்குச் சாதகமானதாகவே சர்வதேச சமூகம் கவனிக்கிறது. ஏனென்றால், 2017-ல் சீனா-பூடான் எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீன ராணுவம் ஈடுபட்ட போது இந்தியா கடுமையாக எதிர்த்தது.

சீனா இந்தப் பகுதியில் சாலை வசதிகள் செய்து கொண்டால், சீன ராணுவம் ஆயுதங்களுடன் வந்து கூடாரம் அமைப்பதற்கு வசதியாகிவிடும் என்றாலும், அதைவிட இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கான பாதைகளும் இந்தப் பகுதிகளில் இருந்துதான் தொடங்குகின்றன என்ற நிலையில், அதன்பிறகான தொடர் பேச்சுவார்த்தை மூலம் டோக்லாம் பகுதி அமைதி மண்டலமாக மாறியது என்பது அண்மை வரலாறு இந்தநிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 8 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

சீன அதிபரை நம் பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வரவேற்றது தமிழக மக்களை உற்று நோக்க வைத்தது. மேலும் இரண்டு நாட்டு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் பேசியதும், அதேபோல தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன் என தமிழில் பதிவு செய்ததும் ஒருபுறம் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

இந்த சந்திப்புக்காக, சுற்றுலா நகரங்களின் ஒன்றான மல்லையின் புதுப்பொலிவு அனைவரின் மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தது. ஆனாலும், இந்தப் பொலிவு குறையாமல் இருக்கவும் நகரெங்கும் சுத்தமாக இருந்த இருநாள் நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். இவ்வாறே மாமல்லபுரத்தை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் முழு கவனத்தோடு செயலாற்றி பராமரித்தல் வேண்டும். இந்தப் பராமரிப்பு தொடரும் பட்சத்தில் நாடெங்கிலும் இருந்து மட்டுமின்றி உலகின் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் வருகை தருவர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால், அரசுக்கும் அங்குள்ள வியாபாரிகளுக்கும் பயன் விளைவிக்கும். எனவே, தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள தமிழகத்தின் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தை அக்கறையுடன் நோக்கி, சீன அதிபரின் வருகையை ஒட்டி உருவாக்கிய சாலை சீரமைப்பு, செயற்கை புல் தளம் போன்ற அம்சங்களை தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இதனால் அனைத்துப் பகுதி சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை தரும் வாய்ப்புகள் பெருகும் என்பது திண்ணம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கலை நுணுக்கம் அறிந்த மன்னன்...!

அக்பர் தன்னுடைய தாயிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொண்டவர். அவர் சொல்லை எப்போதும் தட்டாதவர். ஒரு முறை ஆக்ராவுக்கும் லாகூருக்கும் இடையே உள்ள ஓர் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தபோது, பணியாளர்களுடன் சேர்ந்து அக்பரும் தாயின் பல்லக்கை சுமந்திருக்கிறார். அந்தளவிற்குத் தாயை மதித்து வந்தார்.

அப்படிப்பட்டவர் ஒரு முறை தாயின் கட்டளையை ஏற்க மறுத்து விட்டார், போர்ச்சுகீசியர் ஒரு முறை முஸ்லிம்களின் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினார்கள். அந்தக் கப்பலில் கிடைத்த 'குர்ஆன்' நூலை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, ஓர் மூஜ் நகரத் தெருவிவிலே விட்டு, அடித்துத் துரத்தி விட்டார்கள். இதற்குப் பதில் நடவடிக்கையாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை ஒரு கழுதையின் கழுத்தில் கட்டியடிக்க வேண்டும் என்று அக்பரின் தாய் அவரிடம் கூறினார்.

அதற்கு அக்பர், “அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது ஓர் அரசனுக்கு அழகல்ல. எந்த மதத்தைப் பழித்துக் கூறினாலும் அது கடவுளை அவமதிப்பதேயாகும். எனவே, உயிரற்ற அந்தப் புத்தகத்தின் மீது வஞ்சம் தீர்த்து, அந்த மதத்தினரைப் பழிக்க நான் விரும்பவிலை” என்று கூறிவிட்டார். அக்பர் ஆட்சிக்கு வந்து (கி.பி. 1556 - 1605), ஆளத்தொடங்கிய போது, பெருபான்மையான மக்கள் இந்துக்கள் மற்றும் அவர்களது ஒத்துழைப்பு, உழைப்பு, உதவி இல்லாமல் பாரதம் முழுவதையும் யாராலும் ஆட்சி செய்ய முடியாது என்பதனை அறிந்து கொண்டார்.

தெற்கே 1336லிருந்து விஜயநகர சாம்ராஜ்யம் இருந்தது, அது 1646 வரை சிறந்து விளங்கியது. ஒரு தடவை அதிரடியாகத் தாக்கி, குறிப்பிட்டப் பகுதியில் உள்ள ஆட்சியாளரை வென்று விடுவதால் மட்டும் அப்பகுதி முகலாய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தாலும், மக்கள் தொடர்ந்து தங்களது வேலைகளை சாதாரணமாகத்தான் செய்து கொண்டிருந்தார்கள், மேலும், முகமதியரைப் பற்றி வெறுப்பைத்தான் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டார்.

முகமதியர் என்றாலே, மோசமானவர்கள் என்றுதான் தீர்மானித்துள்ளார்கள், அவ்வாறுதான் *மிலேச்சர், துருக்கர்” என்று குறிப்பிடப்பட்டு நடத்தப் படுகிறார்கள் என்றறிந்து கொண்டார். அதனால், அவர்கள் அரசுடன் சுமுகமாக இருக்க வழியைத் தேடினார். அப்பொழுது உருவான எண்ணம் தான் “தீன் இலாஹி”. அல்லாவுத்தீன் கில்ஜியும் 14-ம் நூற்றாண்டில் அத்தகைய திட்டத்தை வைத்திருந்தாலும், அவர் கத்தியால் சாதிக்க நினைத்தார், ஆனால், அக்பர் பணம் மூலம் சாதிக்க முடிவு செய்தார், அதாவது உரையாடலுக்கு வந்தவர்களுக்கு பரிசளித்தார். அவர் இந்துஸ்தானத்தின் இதர மதங்கள் கொண்ட மக்களிடையே ஒன்றிணைந்து இருக்கவே விரும்பினார். இந்து, கிருத்தவம், சீக்கியம் மற்றும் பொத்த மதக் கூறுகளை உள்ளடக்கிய புதிய சமயத்தினை உருவாக்கினார்.

ஆனால், இது இஸ்லாத்தின் வழிப்பாட்டு முறைகளுக்கு முரணாக இருந்தது. பரந்துப்பட்ட தேசத்தினை கட்டமைக்க விரும்பிய அக்பருக்கு இந்துஸ்தான் தேசத்தின் தனிச் சிறப்பியல்புகள் சவால் நிறைந்ததாகவும், கவனிக்கத் தக்கதாகவும் இருந்தன. தனித்தனியான வழிப்பாட்டு முறைகளில் மக்கள் பிளவுப்பட்டிருப்தை ஒன்றிணைக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். இதர மதத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை உருவாக்கினார். அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி, தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர்.

அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர், தனது ஆட்சியின்போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.

கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் அக்பர் நாமா, அயினி அக்பரி போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன், பலரும் புகழும் கட்டடங்களைக் கட்டினார். அவர் முதன் முதலில் இழையில் ஆன வீட்டைக் கட்டினார்.

மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டுபிடித்தார். அக்பர் மத சம்பந்தமான வாதங்களை சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லிம் அறிஞர்களுக்கும் இந்து சமயத்தினருக்கும், இடையே நடத்தினார். கார்வக கொள்கையை உடையவர்களிடமும் மற்றும் போர்த்துக்கலில் (Portugal) இருந்து வந்த யேசு சபையினருடனும், இசுலாமிய அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும். இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது. அவருக்குப் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின. அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday 9 October 2019

வினையாகும் விளையாட்டு

வினையாகும் விளையாட்டு

சேவியர்

கடந்த வாரம் தனது ஆறு மாதக் கைக்குழந்தையோடு வீட்டுக்கு வந்திருந்தார் உறவினர் ஒருவர். கொஞ்ச நேரத்தில் அம்மாவின் கையிலிருந்த குழந்தை அழத் தொடங்கியது. உடனே குழந்தையின் அப்பா தனது ஸ்மார்ட்போனை ஆன் பண்ணிக் குழந்தையின் கையில் கொடுத்தார். சட்டென அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்தது குழந்தை.

சமீபத்தில் இரண்டு செய்திகளைப் படித்தேன். பப்ஜி விளையாட்டில் ஆர்வமாயிருந்தான் ஒரு பதின் வயது சிறுவன். அவனைப் பெற்றோர் கண்டித்தார்கள் என்பதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். இன்னொரு செய்தியில், தொடர்ந்து பப்ஜி விளையாடிக்கொண்டே இருந்த இளைஞனை பெற்றோர் கண்டித்தார்கள். விளைவு தனது தந்தையையே கொலை செய்து விட்டான் மகன். மழலைப் பருவத்தில் விதைக்கின்ற தவறுகள் பதின் வயதுகளில் விளையத் தொடங்குகின்றன. கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பார் என படித்த காலங்கள் எல்லாம் பழசாகிப் போய்விட்டன. இப்போது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஸ்மார்ட்போன்கள் தான்.

ஜவுளி கடைகளில் பெற்றோர் துணி எடுத்துக்கொண்டிருக்கும்போது ஓரமாய் இருக்கைகளில் அமர்ந்து பிள்ளைகள் போனில் கேம் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். துணி எடுக்கும் பெற்றோருக்கு தொந்தரவு இருக்கக் கூடாதாம். ரெயில் பயணங்களில் பிள்ளைகள் கைகளில் ஸ்மார்ட்போனோடு இருக்கைகளில் ஒட்டவைக்கப்பட்டிருப்பார்கள். அங்குமிங்கும் ஓடிட்டு திரியக் கூடாதாம்.

“பையன் அழுவான், கொஞ்ச நேரம் விளையாடட்டும்”. “போனை குடுக்கலேன்னா ஒரு வேலை செய்ய முடியாது.. சத்தம் போட்டுட்டே இருப்பான்”. “அவன் ரொம்ப சேட்டை, போனை குடுங்க அவன் ஏதாச்சும் பண்ணிட்டு இருக்கட்டும்” என்பன போன்ற சிந்தனைகள் தான் பிற்காலத்தில் பிள்ளைகளை ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக்குகிறது. முதலில் பிள்ளைகளை அமைதியாக உட்கார வைக்கும் சங்கிலியாய் இருக்கும் போன்கள், பின்னர் அவர்களுடைய வாழ்வின் குரல்வளையை நெரிக்கும் தூக்குக் கயிறுகளாய் மாறிவிடுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக உலக நலவாழ்வு நிறுவனம் தனது பட்டியலில் விளையாட்டு அடிமைத்தனம் என்பதையும் புதிதாகச் சேர்த்திருக்கிறது. சர்வதேச அளவில் விளையாட்டுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதே இதன் காரணம். எனவே இது விளையாட்டு சமாச்சாரமல்ல, சீரியஸ் சமாச்சாரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிள்ளைகளை இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.

முதலில் அதை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். நமது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் குழந்தைகளோடு இருக்கும் போதாவது செல்போன்களை மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட வேண்டும். பெற்றோரின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்பதை உணரவேண்டும்.

பிள்ளைகள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாய் இருக்கிறார்களா என்பதைச் சோதித்தறிய சில வழிகள் உண்டு. கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

விளையாட்டைப்பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பது. மற்ற விஷயங்களைப் பேசும்போது கூட விளையாட்டு நினைவாகவே இருப்பது. விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லையேல் வருந்துவது. எரிச்சல் படுவது. கோபப்படுவது. எதிர்ப்பை ஏதோ ஒரு வகையில் தீவிரமாய்க் காட்டுவது. விளையாட ஆரம்பித்தால் நிறுத்த முடியாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்பது. இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என நீடிப்பது. முன்பு ஈடுபட்டிருந்த மற்ற செயல்களிலெல்லாம் ஆர்வம் குறைவது. அல்லது வேறெதிலும் ஆர்வமே இல்லாமல் போவது. படிப்பில் ஆர்வம் குறைவது. கவனம் செலுத்த முடியாமல் போவது. கவனச்சிதைவு ஏற்படுவதுமற்ற விஷயங்களிலுள்ள பாதிப்பு எதையுமே கருத்தில் கொள்ளாமல் விளையாட்டின் மீது மீண்டும் மீண்டும் வேட்கை கொள்வது. பிறரோடு உள்ள உறவுகள் குறைந்து குறைந்து, டிஜிட்டல் உறவு அதிகரிப்பது. மற்ற நேரங்களில் அமைதியாய் இருக்க நினைப்பது. குணாதிசயங்களில் மாறுதல்கள் நிகழ்வது. இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தை விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கிறது என்று பொருள். அந்த ஆர்வம் வளர்ந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கலாம் என்பதைப் இப்போதே புரிந்து கொள்ளுங்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர உதவுங்கள். அதற்காக உடனே ஓடிப்போய் எல்லா டிஜிட்டல் கருவிகளையும் உடைத்து விட்டு, “சுபம்” போட நினைக்காதீர்கள். அது எதிர் விளைவுகளைக் கொண்டு வரும். சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

எதுவும் அளவோடு இருப்பது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு விளையாட குறிப்பிட்ட நேரம் கொடுங்கள். உதாரணமாக, வார இறுதிகளில் தினம் ஒன்றோ இரண்டோ மணி நேரங்கள் கொடுக்கலாம். எவ்வளவு நேரம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் விளையாடும் நேரத்தை நாள்காட்டியில் குறித்து வைக்க வேண்டும். இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விளையாட அனுமதிக்கவே கூடாது. அதில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

கணினியையோ, விளையாட்டு கருவியையோ, மொபைலையோ விளையாட அனுமதித்தால் அது பெற்றோரின் முன்னால், பொது இடத்தில் இருக்க வேண்டும். தனியறைகளில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். டிஜிட்டல் நேரத்தைக் குறைத்து பிள்ளைகளை வேறு விளையாட்டுகளில் ஈடுபட வைக்க வேண்டும். வெளியே அழைத்துச் செல்வது. பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் ஆர்வத்தைக் குறைக்கலாம்.

வீட்டுப்பாடம், படிப்பு போன்றவற்றை முதன்மையாய் வைத்திருப்பது. அதை எல்லாம் முடித்த பின்பே விளையாட அனுமதிப்பது மிக முக்கியம். விதிமுறைகளை மீறாமல் இருக்க வேண்டியது அவசியம். மீறினால் டிஜிட்டல் டைம் குறையும் என சொல்லுங்கள். டிஜிட்டல் விளையாட்டுகளினால் நிகழ்கின்ற உடல், உளவியல் பிரச்சினைகளை பிள்ளைகளிடமும், அவர்களுடைய நண்பர்களிடமும் வாய்ப்புக் கிடைக்கும்போது பேசுவது. அதை தகவல் பகிர்தலாகவோ, ஒரு நண்பனின் அறிவுரை போலவோ சொல்வது பயனளிக்கும்.

குழந்தைகளுக்கு உடற்பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும். உடல் உற்சாகமாக இருக்கும் போது டிஜிட்டல் ஆர்வம் குறையத் துவங்கும். உடலின் சோர்வும், உடலின் ஆக்சிஜன் குறைபாடும் டிஜிட்டல் ஆர்வத்தை அதிகரிக்கும். குடும்ப நேரம், நண்பர்களின் நேரம், உறவினர்களின் நேரம் இவற்றை அதிகரிக்க வேண்டும். உறவுகளைக் கட்டியெழுப்பும் போது மாற்றங்கள் உருவாகும்.

‘இந்த ஒரு கேமையும் முடிச்சுட்டு வரேன்’ போன்ற விண்ணப்பங்களை நிராகரியுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் விளையாட்டை முடித்து விட்டு, அல்லது ‘சேமித்து’ விட்டு வெளிவர குழந்தைகளைப் பழக்குங்கள். ‘இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு... கேமை சேவ் பண்ணிக்கோ’ என அன்பாய் அறிவுறுத்தி அவர்களை மெல்ல மெல்ல பழக்குங்கள். தொடர் விளையாட்டுகள், நண்பர்களோடு ஆன்லைனில் இணைந்து விளையாடுவது, அடிமைத்தனத்துக்கு மிக எளிதில் கூட்டிச் செல்லும் விளையாட்டுகள் போன்றவற்றை தவிர்த்து வேறு விளையாட்டுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விளையாடச் சொல்லுங்கள்.டிஜிட்டல் விளையாட்டுக்கு அடிமையாகிப் போன சிறுவர்களை மீட்பது எளிதான செயல் அல்ல. ஆனால் மிகவும் தேவையான செயல். மது, போதை, புகைபோன்ற அடிமைத்தனங்களைப் போலவே வலிமையானது டிஜிட்டல் அடிமைத்தனம். ஒருவேளை உங்களால் உங்கள் குழந்தையை வெளிக்கொணர முடியவில்லையேல் உளவியலாளர்களின் ஆலோசனையை நாடுங்கள். சிறுவர் கவுன்சிலிங் பயனளிக்கும்.

ஸ்மார்ட்போன்களும், டிஜிட்டல் கருவிகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால் நிச்சயம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடியவையே. தடுமாறாமல் இருப்போம், தலை முறையைக் காப்போம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உடல் பருமன் உயிருக்கு எமன்...!

உடல் பருமன் உயிருக்கு எமன்...!

மருத்துவர் ஆ.முருகநாதன், முன்னாள் தலைவர்,

இந்திய மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு கிளை.

எ ழுமின் விழிமின் என்பது சுவாமி விவேகானந்தரின் பிரபலமான முழக்கம். இப்போது அதில் பருமன் ஒழிமின் என்பதையும் இணைத்து முழங்க வேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகிறது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது. அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.

ஒருவருடைய உடல் எடை, இயல்பாக இருக்க வேண்டியதைவிட 20 சதவீதம் கூடுதலாகிவிட்டால் அவர் உடல் பருமனுடன் இருக்கிறார் என்று அர்த்தம். இந்தியர்களுக்கு மரபு வழியாகவே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இடையைச் சுற்றி கொழுப்பு அதிகமாகும் வாய்ப்பு அதிகம். இடைச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ, பெண்களுக்கு 80 செ.மீ. இருக்க வேண்டும் இது தான் சரியான அளவாகும்.

முக்கியமாக அதிக சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளுதல். அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடலுக்கு அதிக வேலை தராமலும், உடற்பயிற்சி இல்லாமலும் இருப்பது. மரபு வழிக் காரணங்கள் ஹார்மோன் நிலை மாற்றங்கள் சர்க்கரைநோய் உடல் பருமனாக காரணமாகி விடுகிறது. உடல் பருமனால் முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். இருதய நோய்களை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடல் பருமனும் ஒன்று அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது. பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் சோர்வும் ஏற்படும்.

பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும். உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணும். அதிக உடல் பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.

நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்ப வேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது. குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

பருமனானவர்களின் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. குறட்டை நோய் உண்டாக வாய்ப்புள்ளது.

உடல் பருமனை தடுக்கும் முறைகள்: துரித உணவு, கொழுப்புப் பண்டங்கள், எண்ணெயினால் செய்த பலகாரங்கள், இறைச்சி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும் அல்லது விலக்கி விட வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக இனிப்பு மற்றும் கார உணவுகளை தவிர்க்கவும். வெண்ணெய், நெய், ஜாம் வகைகள், சாக்லேட், கேக்குகள், முட்டை போன்றவற்றை விலக்க வேண்டும். உணவில் உப்பை மிகவும் குறைக்க வேண்டும். அது உடலில் நீரைப் பெருக்கி உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

தொலைக்காட்சி முன் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு அதை தவிர்க்க வேண்டும். புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல். ஒவ்வொருவரும் தனது உடல் எடையையும் மற்றும் இடுப்பு அளவையும் குறைந்தது மாதம் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பேக்கரி உணவுகளான சிப்ஸ் மற்றும் கேக்ஸ் போன்றவைகளை தவிர்த்தல் நல்லது.

ஒவ்வொரு உணவுப் பொருளையும் கடைகளில் வாங்கும்போது அதன் வெளிப்புறம் உள்ள அட்டையில் இந்த உணவுப்பொருளில் எவ்வளவு கலோரிகள் அடங்கியுள்ளன என்ற விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும். (எவ்வளவு கொழுப்பு உள்ளது, எவ்வளவு கார்போஹைட்ரெட் உள்ளது, எவ்வளவு சர்க்கரை உள்ளது என்ற விவரம்) அவற்றை கண்டறிந்து அதில் கொழுப்பு அதிகம் உள்ள உணவை தவிர்ப்பது நல்லது.

தவறான உணவுப்பழக்கங்கள் என்பது நமது மண் சார்ந்த உணவுகளை மறந்து பிற வகை உணவுகளை உட்கொள்வதாகும்.

‘உண்டி சுருக்கல் பெண்டிர்க்கு அழகு’ என்ற மூதுரையை நாம் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம் அதாவது பெண்கள் குறைவாக உண்ண வேண்டும் என்பதாகும், ஆனால் உண்மை அதுவல்ல! உணவு சமைப்பதை பெண்கள் சுருக்கி அளவாக சமைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு அளவாக பரிமாறி எல்லோரும் உடல் பருமனின்றி நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே உண்மையாகும்.

ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை பழங்கள், காய்கறிகளைக் சிறிதளவாவது சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இரவு உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகே உறங்கச் செல்வது சாலச்சிறந்ததாகும். ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இடை இடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிடக் கூடாது. வாழ்வதற்காக உண்கிறோம் உண்பதற்காக நாம் வாழவில்லை என்ற கோட்பாட்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் தவிர்க்க முடிகின்ற காரணங்களில் தவறான உணவுப்பழக்கம் மற்றும் குறைவான உடற்பயிற்சி இரண்டும் வருகின்றன.மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், யோகப் பயிற்சி செய்தல். அன்றாடம் உடற்பயிற்சி செய்வது உடல் பருமனை தடுப்பதற்கான மிகச்சிறந்த வழி. உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான எடை, உணவு போன்ற அம்சங்களை இணைத்துக்கொள்ளும்போது அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகம். உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த உதவும். ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் சீராக இயங்குவதற்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சியுடன், தோட்டக்கலை, வீட்டு பராமரிப்பு பணிகள், உங்கள் செல்லப்பிராணியுடன் நடைப்பயிற்சிக்கு செல்வது என அனைத்துமே உடற்பயிற்சி செய்வது போலத்தான். அதனால் எடுத்தவுடனே கடுமையான உடற்பயிற்சி முறைகளை தேர்ந்தெடுக்காமல் எளிமையான நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்புப் பணிகள் போன்றவற்றிலிருந்து உங்கள் அன்றாட உடற் பயிற்சியைத் தொடங்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 5 October 2019

மானிட இனத்தின் மொழி

ஆங்கிலத்தை கற்கும் ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை தமிழில் பேச, படிக்க, எழுத வைப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

அரசாங்க பரிவர்த்தனைகள், வங்கி மற்றும் வணிக செயல்பாடுகளில் நடைமுறை தமிழை அரசு பயன்படுத்த வேண்டும். மின்னணு வடிவ தொலைதொடர்புகள் அனைத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். இன்று ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த முடிந்த நிலை மக்களுக்கு உள்ளது. தமிழ் பயன்பாடு குறைந்து வருவதால், எதிர்காலத்தில் அதற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

செ ப்டம்பர் 27-ந்தேதி ஐ.நா பொது சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, சங்க கால தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பாடல் வரியை மேற்கோள் காட்டி பேசினார். முன்னதாக டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் அவர் உரையாற்றியபோது, ‘எல்லாம் நலமாக உள்ளது’ என்ற வாக்கியத்தை தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் கூறினார்.

சில வருடங்களுக்கு ஒருமுறை மொழி பற்றிய சர்ச்சை இந்தியாவில் வெடிக்கிறது. ஆனால் தமிழகத்திற்குள் மெதுவாக நுழைய முயலும் மோடியின் முயற்சியினால் 6.9 கோடி தமிழர்கள் (2011 இந்திய அரசு சென்சஸ் படி) ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய மக்கள் தொகையில் 5.7 சதவீதத்தினர் பேசும் மொழியாக 5-வது இடத்தில் தமிழ் உள்ளது. முதல் இடத்தில் இந்தியும் (52 கோடி மக்களினால் பேசப்படுகிறது), இரண்டாவதாக பெங்காலியும் (9 கோடி), மூன்றாவது இடத்தில் மராத்தியும் (8.3 கோடி), நான்காவது இடத்தில் தெலுங்கும் (8.11 கோடி) உள்ளன. 1961 சென்சஸில் இருந்து தமிழ் பேசக் கூடியவர்களின் எண்ணிக்கை, ஐந்தாவது இடத்தில் தொடர்கிறது.

“1961 முதல் 2011 வரையில் தமிழ் மொழியின் வளர்ச்சியும், மக்கள் தொகை வளர்ச்சியும் ஏறக்குறைய நிலையாக உள்ளன. சமஸ்கிருதத்தை போல் அல்லாமல், சங்க இலக்கியங்களின் காலம் முதல் இன்று வரை தமிழ் ஒரு உயிர் வாழும் மொழியாகும். தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் தத்துவார்த்த ரீதியாகவும், மொழியில் ரீதியாக மிகவும் நுட்பமான, கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த நூலாகும். 2,000 வருடங்களாக தமிழ் மொழி உயிர் வாழ அதன் நெகிழ்வு தன்மை மற்றும் காலத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் தன்மைகள் தான் காரணம். பல இதர மொழிகள் அழிந்து போய்விட்டன” என்கிறார் இந்திய மக்களின் மொழியியல் ஆய்வு (பி.எல்.எஸ்.ஐ.) திட்டத்தின் தலைமை ஆசிரியரான ஜி.என்.டேவி.

பி.எல்.எஸ்.ஐ. திட்டத்தில், 3,000 நபர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், 35,000 அச்சிடப்பட்ட பக்கங்கள் கொண்ட, 91 நூல்களை கொண்ட, (தமிழ் மொழிக்கும் ஒரு விரிவான தொகுப்பு உள்ளிட்ட) 50 தொகுப்புகளாக வெளியிடப்பட்டது.

இந்தி திணிப்பிற்கு எதிரான தமிழுணர்வு தீவிரமான அரசியலாக வெளிப்பட்டாலும், மொழி ஆய்வாளர்கள் மற்றும் மொழியில் வல்லுனர்கள் தமிழ் மொழி எதிர்கொண்டுள்ள சவால்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். முக்கியமாக அடுத்த தலைமுறை தமிழ் பேசுபவர்களுக்கு உள்ள சவால்கள் பற்றி.

“இந்த திராவிட மற்றும் இந்தியஆரிய மொழிகள் பற்றிய சர்ச்சைகள் தேவையற்றது. திராவிட மொழிகளுக்கும், இந்திய ஆரிய மொழிகளுக்கும் எந்த மோதல்களும் இல்லை. மொழிகளின் மானிடவியல் தர்க்கம், அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. வேற்றுமைகள் இருப்பது ஒற்றுமைக்கு எதிரானது அல்ல. ஒரு பகுதியில் நான் ஒரு மொழியை பேசினால், பள்ளி மற்றும் கல்லூரியில் என் சொந்த மொழி மூலம் கற்பது, அதிக பலன்களை தரும் எந்த மொழியில் பேசுவது என்பது நம்முடைய ஜனநாயக உரிமையாகும்.” என்கிறார் பேராசிரியரும் தமிழறிஞருமான கே.ரங்கன். பி.எல்.எஸ்.ஐ. திட்டத்தில் தமிழ் மொழி தொகுப்பை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். “2,000 வருட பழமையான மொழியான தமிழ் பற்றி, தமிழர்கள் பெருமை கொள்வது இயல்பு தான். பெரியார் இந்த பெருமையை இயக்கமாக மாற்றினார். திராவிட இயக்கத்தின் தந்தையான பெரியார், நாகரிக வளர்ச்சி கோட்பாடு பற்றி நம்பிக்கை கொண்டவர்” என்கிறார் டேவி.

ஆங்கில பயன்பாடு தேவைப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் வலுவான ஆதிக்கம், மக்களிடையே அதிகரித்து வரும் ஆங்கில மோகம், விற்பனை மற்றும் இதர தளங்களில் கணினி சார்ந்த தொழில்களுக்கு தேவையான தமிழ் வழி மென்பொருட்கள் ஆகியவை தமிழ் மொழி தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் ஆகும்.

“மொழி தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மாறிவிட்டன. இது உலகெங்கும் உள்ள அனைத்து மொழி பேசுபவர்களையும் பெரிதும் பாதித்துள்ளது” என்கிறார் டேவி.

“அரசாங்க பரிவர்த்தனைகள், வங்கி மற்றும் வணிக செயல்பாடுகளில் நடைமுறை தமிழை அரசு பயன்படுத்த வேண்டும். மின்னணு வடிவ தொலைதொடர்புகள் அனைத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். இன்று ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த முடிந்த நிலை மக்களுக்கு உள்ளது. தமிழ் பயன்பாடு குறைந்து வருவதால், எதிர்காலத்தில் அதற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என்று சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி மற்றும் மொழியியல் துறையின் முன்னாள் தலைவரும், மென்தமிழ் என்ற, தமிழ் மொழியில் இயங்கும் சொல் செயலி மென்பொருளை, 2011-ல் உருவாக்கிய எம்டிஎஸ் லிங்க்சாப்ட் சொல்யுசன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான தெய்வ சுந்தரம் கூறுகிறார்.

தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள புதிய வகையான சவால்களை தெய்வ சுந்தரத்தின் கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றது. “தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் வர்க மக்களால் தமிழை நன்கு பேச முடிந்தாலும், தமிழில் எழுத கற்பதற்கு சிரமப்படுகின்றனர். மாற்றாக, சிங்கப்பூரில் உள்ள தமிழ் சிறார்கள் மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையினராக அங்கு இருப்பதால் தமிழில் பேச சிரமப்படுகின்றனர். அவர்களின் வீடுகளில் ஆங்கிலம் அல்லது மலாய் சீன மொழிகள் பேசப்படுவதாலும், அவர்களின் சமூக பொருளாதார சூழல் அவ்விதமாக இருப்பதாலும் இந்த சிரமம் ஏற்படுகிறது. சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சரகம், அதன் இரு மொழி கொள்கையின் அடிப்படையில், அங்கு உள்ள தமிழ் சிறார்கள் தமிழில் பேச ஊக்கம் அளிக்க விரும்புகின்றது. ஆனால் அங்கு உள்ள கல்வி பயிற்சி நூல்கள், நவீனப்படுத்தப்படாமல், தற்காலத்திற்கு ஏற்ற வகையில் இல்லை” என்கிறார் தெய்வ சுந்தரம்.

சிறார்கள் தமிழில் பேசுவதற்கு உதவுவதற்காக ஒரு மின்னணு வடிவ நவீன தமிழ் அகராதியை வடிவமைக்க, சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சரகம் அவரை அழைத்துள்ளது. தற்காலத்து பேச்சு தமிழை போன்ற நவீன சமகால மொழியை பயன்படுத்தி, தமிழ்ஆங்கில கையடக்க அகராதி ஒன்றை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். “தமிழகத்தில் உள்ள எந்த ஒரு தனியார் பள்ளியிலும் பயிற்று மொழியாக தமிழ் இல்லை. ஆங்கிலத்தில் பேசுமாறு மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களிலும் இதே பிரச்சினை இருக்கிறது” என்கிறார் தெய்வ சுந்தரம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 1 October 2019

முதுமை முழு நிலவா? தேயும் பிறையா?

முதுமை முழு நிலவா? தேயும் பிறையா?

டாக்டர் வி.எஸ்.நடராஜன், முன்னாள் தலைவர் முதியோர் நலப்பிரிவு, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை சென்னை.

இன்று(அக்டோபர் 1-ந்தேதி)உலக முதியோர் நாள்.

முதுமை என்பதும் ஓர் பருவமே என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதில் பல தொல்லைகளுக்கு இடையே மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நிறையவே உண்டு. ஒருவர் நடுத்தர வயதிலிருந்தே தன்னை முதுமைப் பருவத்திற்காக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எண்ணங்களும், செயல்பாடுகளும் ஓரே சீராகவும், ஆணித்தரமாகவும் இருந்து செயல்பட்டால் முதுமையில் பல தொல்லைகளைத் தவிர்க்க முடியும். வயதான பருவத்திலும் வசந்தத்தை அனுபவிக்க இதோ சில வழிமுறைகள். தீவிரமாக கடைபிடியுங்கள், குறுகிய காலத்திலேயே நிறைய பலன்களை அனுபவிப்பீர்கள். இது ஓர் நிதர்சனமான உண்மை!

ஐம்பது வயதிற்கு மேல் பலருடைய உடல், பல நோய்களின் மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடன் போல பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். முதல் முறையாக பரிசோதனை செய்யும் போது முழு உடல் பரிசோதனை மிகவும் அவசியம். ரூ.4ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம் வரை செலவாகலாம். அடுத்த ஆண்டு பரிசோதனைக்குச் செல்லும்போது, முன்பு செய்துக் கொண்ட எல்லா பரிசோதனையும் செய்ய வேண்டியது இல்லை. முதல் பரிசோதனையில் எது சரியாக இல்லையோ அதை மட்டும் செய்துக் கொண்டால் போதும். இதனால் மறைந்திருக்கும் நோய்களை எளிதில் கண்டறிந்து அந்நோய்களுக்கு ஆரம்ப நிலையிலேயே தக்க சிகிச்சையளிக்க முடியும்.

வயது ஆக ஆக பசியும் ருசியும் குறையும், அதனால் உண்ணும் உணவின் அளவும் தரமும் குறையும். இதன் விளைவு உடல் இளைத்தல் மற்றும் சத்துணவு குறைவால் தொல்லைகள் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க இதோ சில எளிய வழிகள்.

உணவில் அதிகம் புரதச் சத்து அதிகமுள்ள எல்லா பருப்பு வகைகள், கொத்துக் கடலை, பட்டாணி, காளான், முட்டையின் வெள்ளைக் கரு, சோயா, கோதுமை, சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணம்: கம்பு, ராகி, சோளம், தினை போன்றவை. தண்ணீர் தாகம் இல்லாமல் இருந்தாலும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும். இதயம் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நீர்அருந்த வேண்டும். மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி, கிழங்கு வகைகளை குறைக்க வேண்டும், எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும், உடலில் எந்த நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உப்பின் அளவைச் சற்று குறைத்து உண்பது நல்லது.

முதியவர்கள் தங்கள் உடல்நலம், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றை மனதிற்கொண்டு தங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தூரம் நடப்பது நல்லது. அல்லது முப்பதிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தடுப்பூசி அவசியம் வயது ஆக ஆக நோய் எதிர்ப்புச் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வரும். இதனால் பல தொற்றுநோய்கள் வர வாய்ப்பு அதிகம் ஆகிறது. சில தொற்றுநோய்களுக்கு தடுப்பூசி மூலம் அந்நோய்கள் வராமலேயே தடுத்து நலமாய் வாழ முடியும்.

முதியோர்களுக்கு வரும் இருமல், சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி. இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும்போது சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் உயிருக்கே ஆபத்தைக் கூட விளைவிக்கும். இதற்கு தடுப்பூசி உண்டு. சுமார் 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒரு முறை இந்த ஊசியை எடுத்துக்கொண்டால் போதும்.

ஓரு சிலர் மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். இந்த தடுப்பூசியினால் பக்க விளைவுகள் எதுவுமில்லை. தேவைப்படுவோருக்கு நிமோனியா தடுப்பு ஊசியோடு இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் சேர்த்து ஒரே சமயத்தில் போட்டுக் கொள்ளலாம்.

உங்களது தேவைகளை நீங்களே செய்துகொள்ள பழகிக்கொள்ளுங்கள். பின்னால் உங்களுக்குச் சிரமம் இருக்காது. இது மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தனியாக வாழ ஒரு தைரியத்தை ஏற்படுத்தும்.

வயது ஆக ஆக மனதளவில் பந்த, பாசங்களை குறைத்துக்கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். ஒரேடியாக, மனைவி, பிள்ளை, பேரன், பேத்தி என்று பாசத்தைக் கொட்டக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், அம்முதியவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், கொஞ்சம், கொஞ்சமாக பாச வலையிருந்து மீண்டு, தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீரைப்போல வாழக் கற்றுக்கொள்வது முதியவர்களுக்கு நல்லது.

முதுமைக் காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிகவும் அவசியம். முதுமையில் மனிதர்கள் பக்க பலமாக இருப்பதைவிட நாம் முதுமையை எதிர்நோக்கி இளமையில் சேமித்து வைக்கும் சேமிப்பே நமக்கு பக்கபலமாகும். நடுத்தர வயதிலிருந்தே முதுமைக்காலத்திற்காக ஓரு கட்டாய சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நல்ல உடல் நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மனஉறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் மேற்கொண்டால் முதுமை தேயும் பிறையாக அல்லாமல் முழுநிலவாக மலரும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கலை உலகின் சிங்கம்

இன்று(அக்டோபர் 1-ந்தேதி) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு சகாப்தமாக திகழ்ந்தவர். சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ளகண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சரியத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.

‘பாச மலர்’ படத்தில் ‘மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்’ என்ற பாடல் வரிகள் தொடங்கும்முன் பால் தம்ளர் கையில் ஏந்தி வந்தவர், கண்ணுறங்கும் தங்கையைப் பார்த்து, வட்டக் கருவிழியின் அடியில் லேசாக, நீர் தேக்கி, பாசத்தை வெளிப்படுத்துவார்.

‘உடல் ஊனம் ஊனமல்ல, உன்னைத்தான் நான் மணந்து கொள்வேன்’ என்று ‘பாகப் பிரிவினை’யில் சரோஜாதேவி சொல்ல, வாதம் வந்த கையை ஒரு முறை பார்த்துவிட்டு, ‘இந்தப் பரிதாபத்துக்குரியவன் மேலா ஆசைப்படுகிறாய்’ என்று பரிதாபம், அடி மனதில் ஆனந்தம், அவளுக்கு நன்றி கூறுதல் அனைத்தையும் சில நொடி கண்ணசைவில் காட்டுவார். தமிழை அவரைப்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை.

“அய்யோ ஏமாந்தேன்! எத்தனையோ கஷ்டப்பட்டு, கடல் கடந்து வந்தேன்! கல்யாணி! காலையிலே உன்னைக் காணலாம், அத்தானைக் காணலாம், அப்பாவைக் காணலாம் என்று ஆசை அலைமோதிக் கிடந்தேனே! நெஞ்சிலே நஞ்சை அள்ளிக் கொட்டிவிட்டாள். கொஞ்சிக் குலவிக் கொடுமை செய்து விட்டாள்-வஞ்சகி!” என்று ‘பராசக்தி’யில் ஆட்டக்காரியிடம் உடைமைகளை இழந்த அப்பாவியாகப் பேசுவது...

“நீலவானிலே செந்நிறப் பிழம்பு, அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன். சுட்டெரிக்கும் செஞ்சுடர் அது. அதுதான் நீரின் நெற்றியிலே இட்ட, இந்த வட்டமான நிறப்பொட்டு” என்று ‘கட்டபொம்மனில்’ மனைவியிடம் போர் முழக்கமிடுவது...

“கைவீசம்மா கைவீசு! கடைக்குப் போகலாம் கைவீசு!” என்று நொறுங்கிய இதயத்துடன், உடைந்த குரலில் ‘பாசமலர்’ கடைசிக் காட்சியில் நடிப்பது...

“கலைவாணி! கருணாகரி! கல்விக்கரசி! சொல்லின் செல்வி! கற்றவர் போற்றும் கலாதேவி! வித்தை படித்தோர் வணங்கும் வேதவல்லி! காவிய நாயகர்கள் போற்றும் கலையுலகின் நாயகியே!” என்று பெருமையுடன் சரஸ்வதியைப் போற்றித் துதிப்பது...

“கொங்குதேர் வாழ்க்கை

அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது கண்டது மொழிமோ!

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற்றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே!”

என்ற பல்லை உடைக்கும் சங்க இலக்கியப் பாடலைத் ‘திருவிளையாடல்’ சிவன் வேடத்தில் உச்சரிப்பது - இப்படித் தமிழ் மொழியில். அளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது.

ஒரு நடிகன், வேஷம் கட்டுவதிலேயே 50 சதவீதம் மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு. சரித்திர நாயகர்களாக இருந்தாலும் சரி, புராண வேடங்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் காணும் வித்தியாசமான மனிதரின் வேடமாக இருந்தாலும் சரி அவற்றை ஆதாரபூர்வமாகச் செய்து பார்க்கப் பெரிதும் முயற்சி எடுத்துக்கொள்வார்.

சங்கிலியால் கட்டிச் சபையில் இழுத்துவர, புலிபோல் ஒரு நடை நடந்து வருவார் - மனோகரா - படத்தில்.

மரமேறும் சாமுண்டி கிராமணியாய் ‘காவல் தெய்வத்தில்’ கைதட்டல் பெறவே ஒரு நடை நடப்பார்.

‘போனால் போகட்டும் போடா’ பாடலில் இசைக்கேற்ப, தாளத்துக்கேற்ப ஒரு நடை நடப்பார்.

‘சட்டி சுட்டதடா, கைவிட்டதடா’ பாடலுக்கு ஒரு வித்தியாசமான ‘வாக்கிங் ஸ்டிக்’ ஊன்றிய நடை.

அப்பர் சுவாமிகளாக ‘திருவருட் செல்வரில்’ முதிர்ந்த பெரியவர் நடை.

“வெற்றிவேல்! வீரவேல்! சுற்றிவந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்” என்ற ‘கந்தன் கருணை’ பாடலில் முழங்கும் போர் முரசுக்கு இசைவாக ஒரு கம்பீர நடை!

அவருடைய நினைவாற்றல், கிரகிக்கும் சக்தி அபாரமானது! காட்சிக்கான வசனங்களை, மற்றவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பதில் அவரைவிட வேறு யார் செய்ய முடியும்?

நடிக்கின்ற எந்தக் காட்சியிலும் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடும் சிவாஜி, அடிக்கிற காட்சிகளில் பாசாங்கு செய்யமாட்டார். பட்டையைக் கழற்றி விடுவார்.

‘உயர்ந்த மனிதன்’ உச்சகட்டக் காட்சியில், திருட்டுப் பழி சுமத்தப்பட்ட என்னை, பிரம்பால் அடிக்கும் காட்சியில் பிரம்பு நாலாய்த் தெறிக்கும் அளவுக்கு விளாசித் தள்ளி விட்டார்!

அவரைக் கட்டுப்படுத்த சவுகார் ஜானகியும், பாரதியும் எவ்வளவோ முயன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கூச்சல் போட்டார்.

இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்காதவர் இருக்க முடியாது.

ஜெமினியின் ‘விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் ஒரு காட்சியில் பத்மினி கன்னத்தில் ஓர் அறை விட்டார். காது தோடு கழன்று ஓடி, அடுத்த படப்பிடிப்பு தளத்தில் விழுந்து விட்டது.

‘ஷாட்’ முடிந்ததும், பத்மினி ஐந்து நிமிடம் அனுமதி பெற்று வெளியே போனார்.

போனவர் சிறிது நேரம் உள்ளே வரவில்லை. என்ன நடந்தது என்று பார்க்க உதவி இயக்குனர் சென்றார். அந்தப் படப்பிடிப்புத் தளத்துக்குள் நாற்காலியில் உட்கார்ந்து, முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்களில் நீர் பெருகியவாறு இருந்தவரைப் பார்த்துப் பதறிப்போய் ‘என்னம்மா’ என்று கேட்டார்.

“ஒன்றுமில்லை. வலி தாங்க முடியவில்லை. முழுசா அழுதிட்டு வந்திடுறேன். ஐந்து நிமிடம் பொறுத்துக்குங்க!” என்றாராம் பத்மினி!

‘ராஜராஜசோழன்’ படப்பிடிப்பு, வாசு ஸ்டூடியோவில் தஞ்சை பெரிய கோவிலின் ஒரிஜினல் அளவில் ‘செட்’ போட்டிருந்தார்கள்.

அதிகாலை ஏழு மணிக்குப் படப்பிடிப்பு. சிவாஜி, ஒரு அடி உயரமுள்ள அலங்காரக் கொண்டையுடன், திருப்பாச்சி அரிவாள் மீசையுடன், ஆடை அலங்காரங்களுடன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு 6.50-க்கு கம்பீரமாக நடந்து வந்தார்.

நான், அவருக்கு அரை மணி நேரம் முன்னதாக ‘ஸ்பாட்டு’க்கு போயிருந்தேன். எனக்கு ‘ஷாட்’ வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.

சிவாஜிக்குக் கோபம், ஆத்திரம். “என்னடா! நான் ரெயில்ல வந்தா. நீ பிளேன்ல வர்றியா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“நடிப்பில்தான் கிட்டயே நெருங்க முடியல! இந்த மாதிரி விஷயங்கள்லயாவது உங்களோட போட்டிப் போடலாம்னுதான்” என்றேன்.

உடனே கோபம் மறைந்து, ஹ... ஹ... ஹ... என்று சிரித்தவாறு, “வா... வா, நல்லா முன்னுக்கு வா” என்றார்.

உடலில் எந்த ஒரு நடிகனும், ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. சிவாஜி, காலையில் ரிக்‌ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும், கிழிந்த கோட்டுமாய் கை ரிக்‌ஷா இழுத்து நடிப்பார். பிற்பகல் மகாவிஷ்ணு வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார். இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு, பளபளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக, ‘சொர்க்கம்’ படத்தில் நடிப்பார்...! ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படிச் செய்திருக்க வாய்ப்பு இல்லை.

பேராசை பிடித்த அந்தக் கலைஞன், சிங்கமாய்க் கலையுலகில் உலவியவன்! சிங்கத்தின் பங்கு என்று சொல்வதுபோல இரையின் பெரும் பங்கை எடுத்துக்கொண்டு, எல்லா விதமான வேடங்களையும் தானே போட்டு நடித்து விட்டான்! அடுத்த தலைமுறைகளுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த வேடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.

நாங்கள் எந்த வேடம் போட்டு நடித்தாலும், அவர் நடித்த அந்த வேடங்களைத் தாங்கிய படங்களை முன்மாதிரியாக ஒருமுறை பார்த்துக் கொள்கிறோம்.

அந்த யுகக் கலைஞன் ஹாலிவுட்டில் பிறக்காதது அவரது துரதிர்ஷ்டம்! தமிழ்நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷ்டம்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் - இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதா..? 

டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் - இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதா..? 
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
சென்னை
இளைஞர்கள் மத்தியில் இன்று பரவ லாகப் பேசப்படுகிற செய்தி - குரூப் 2 தேர்வுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கும் புதிய பாடத் திட்டம். ஞாயிற்றுக்கிழமை மாலை ‘தி இந்து’ குழுமம் பதிப்பான ‘என்றும் காந்தி’ நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு தொடுத்த ஒரே வினா, ‘டிஎன்பிஎஸ்சி' புதிய பாடத் திட்டம் குறித்து ஏன் கட்டுரை எழுதவில்லை..?

இரண்டு உண்மைகள் புலப்பட்டன. நமது நாளிதழின் கருத்துக்கு, போட்டித் தேர்வுக்கு முனையும் இளைஞர்கள் அசாத்திய முக்கியத்துவம் தருகிறார்கள்; ஆணையம் அல்லது வேறு யாரும் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

தேர்வாணையம் ‘தெளிவான' விளக் கம் அளித்த பின்னரும் இந்த நிலை நீடிப்பது ஒரு வகையில் மன வருத்தம் தருவதாகத்தான் இருக்கிறது. அமைப்பு முறை மீது, ஆணையம் மீது, முழு நம் பிக்கை வையுங்கள் என்றுதான் இளை ஞர்களை நாம் வலியுறுத்துகிறோம்.

சரி... புதிய பாடத் திட்டம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது...? மொழித் தாளுக்கு என்று தனியே கேள்வித் தாள் இருக்கப் போவது இல்லை. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளுக்குமே இந்த நிலைதான்.

தமிழ் தெரியாதவர்கள் தேர்வு எழுது வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்வாணையம் கூறுகிறது. இது, ஒருபக்க உண்மை மட்டுமே. தமிழ் மொழித் தாளில் நன்றாக எழுதினால், தேர்ச்சி பெறுவது எளிது என்கிற தற் போதைய நடைமுறை இனி இருக்காது. இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகப் போவது, அநேகமாக, தமிழ் வழிப் பயின்ற கிராமத்து இளைஞர்கள்தாம். இதுதான், மறுபக்க உண்மை.

இவ்விரு உண்மைகளையும் சமன் செய்து பார்த்து, பாடத் திட்ட மாற்றம் குறித்த தீர்ப்புக்கு வருவதுதான் நியாயம் ஆகும். பயிற்சி மையங்கள், நகர்ப்புற மாணவர்கள், ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கிற ஒருவரின் அன்றாட வழிகாட்டுதல் பெறக்கூடிய ‘வசதி' கொண்டவர்கள், புதிய மாற்றத்தால் பெரிதும் பலன் அடையலாம்.

முதல் தலைமுறைப் பட்டதாரிகள், கிராமத்து எல்லைகளைத் தாண்டிச் செல்லாதவர்கள், கோரிக்கை மனுக்க ளுடன் அரசு அலுவலக வாசற் கதவு களில் கால்கடுக்க மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிற சாமான்யர்களின் பிள் ளைகள், கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். இது, மாற்றம் அன்று; மிகப் பெரிய ஏமாற்றம்.

பொது அறிவு (முதல் நிலைத்தேர்வு) - 10 அலகுகள் கொண்டுள்ளது.

I. பொது அறிவியல் பகுதியில், சுற்றுச் சூழல் மற்றும் சூழலியல் - கடைசி இடம் பிடித்து இருக்கிறது.

கேள்வித்தாளில் ஒருவேளை, முதலிடம் பிடிக்கலாம்.

III. இந்தியாவின் புவியியல் - போக்கு வரத்து - தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் - குறிப்பாக, இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல் என்று பயனுள்ள பல தலைப்புகள் வரவேற்கத் தக்கதாய் உள்ளன.

IV இந்தியாவின் வரலாறும் பண்பாடும் VII இந்திய தேசிய இயக்கம் - என்று வழக்கமான பகுதிகள் உள்ளன. அலகு VIII தமிழகத்தின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக இயக்கங்கள் பகுதி, ஓர் இன்ப அதிர்ச்சி தருகிறது.

உலகப் பொதுமறை திருக்குறள் - மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மன துக்கு இதமாக இருக்கிறது. பாராட்டுகள்.

முதன்மைத் தேர்விலும் இப்படித்தான். மிக நல்லது.

IX - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம். கவனிக்கவும் - வெறுமனே ‘நிர்வாகம்' அன்று; ‘வளர்ச்சி நிர்வாகம்'! ஆணையம், தன்னிச்சையாகத் தந்த தலைப்பு என்று நம்புகிறோம். இதில் ஒரு தலைப்பு - ‘தமிழகத்தில் மின்னாளுகை'! தவறு இல்லை. ஆனாலும்..... நிறைவாக அலகு X - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும். நன்கு வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.

இடையே, அலகு II நடப்பு நிகழ்வு கள், ஆட்சியியல் பகுதியில், பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம், நலன்சார் அரசுத் திட்டங்கள் முதலானவை, முறை யான பள்ளிப்பாடத்தை விட்டு விலகி நிற்பவை. கிராமப்புற சாமான்ய இளை ஞர்கள், ‘அனுபவரீதியாக' மட்டுமே கற்றுக்கொள்ள முடிகிற கசப்பான சங்கதிகள் இவை.

அலகு V இந்திய ஆட்சியியல் - லோக் ஆயுக்தா, தகவல் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள், மனித உரிமைகள் சாசனம் ஆகியன மிக நல்ல, ஆரோக்கியமான பகுதிகள்தாம். ஆனால் இவை எல்லாம், எமது கிராமப்புற இளைஞர்களுக்கு ‘அறிமுகம்' ஆகாதவை.

இவை எல்லாம் கூடப் பரவாயில்லை. ‘விரிவான எழுத்து தேர்வு' பகுதியின் தொடக்கமே அதிர்ச்சி தருகிறது. ‘தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல்', ‘ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்' எந்த வகையில் கிராமத்து இளைஞர்களுக்கு சாதகமான பகுதியாக இருக்கும்..?

தமிழகத்தில், தமிழக அரசுப் பணியில் சேர, ஆங்கில மொழிபெயர்ப்புத் திறன் என்ன அத்தனை அடிப்படைத் தகுதியா...? சத்தியமாகப் புரியவில்லை.

தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசு வதும் எழுவதும் தண்டனைக்கு உரிய குற்றமா என்ன...? பக்கத்தில் ஒரு தமிழ் - ஆங்கில அகராதி வைத்துக் கொண்டால் போகிறது. தேர்வின் போது, அகராதி தரப்படுமா..? இல்லைதானே...? பிறகு...? நம்முடைய பார்வையில், தமி ழக அரசுப் பணிக்கான போட்டித் தேர் வில், ஆங்கிலப் புலமை மிகவும் அத்தியா வசியம் ஆகிறது. ஒருவகையில், தமிழ் இளைஞர்கள் மீது ஆங்கிலம் திணிக்கப் படுகிறது. நம்முடைய கிராமத்து இளை ஞர்கள் இதனால் பலன் பெறுவார்கள் என்று நம்ப முடிகிறதா?

சுருக்கி வரைதல், பொருள் உணர் திறன், சுருக்கக் குறிப்பில் இருந்து விரிவாக் கம் செய்தல் ஆகியன, பொதுவாய் எல்லோருக்குமே சற்றே கடினமானதாக இருக்கலாம். தரப்படும் கேள்வியைப் பொறுத்து, கடினத் தன்மை மாறுபட லாம்.

தமிழகத்தின் இசை மரபு, நாடகக் கலை, சமூகப் பொருளாதார வரலாறு, பெண்ணியம், இக்காலத் தமிழ்மொழி ஆகிய பகுதிகள் உண்மையிலேயே ‘சபாஷ்' போட வைக்கின்றன.

ஆனாலும், ஏற்கெனவே தனியாக இருந்த மொழித்தாளைத் தக்க வைத்து இருக்கலாம். மேலும், தரமானதாக நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து இருக்கலாம். மொழி அறிவு, அதிலும் ‘உள்ளூர் மொழி' மாநில அரசுப் பணிகளில் மிக முக்கிய இடம் வகித்தாக வேண்டும். மாறாக, ‘உள்ளூர் அரசியல்' அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது.

‘உள்ளூர் மொழியில் உலக அறிவு' என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டிய ஆணையம், ‘உலக மொழியில் உள்ளூர் அரசியல்' திசையில் பயணித்து இருக்கிறது.

கேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத் திட்டம் இல்லை. ‘வழிகாட்டுதல்' தேவைப் படும் பகுதிகள், முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளில் அதிகம் உள்ளன. இது, ஆரோக்கியமான மாற்றம் இல்லை.

புதிய பாடத் திட்டம் சொல்லும் செய்தி....?

‘வடிகட்டுகிற' பணிதான் ஆணையத் தேர்வுகளின் பிரதான நோக்கம். ‘தேர்வு செய்வது' அல்ல.

ஏற்போர் - வாழ்க!

மறுப்போர் - எப்படியேனும் வாழ்க!!கேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத்திட்டம் இல்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts