5 நிமிட பயிற்சியும்... அற்புத மாற்றங்களும்...
பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒரு ஒழுங்கு முறையுடன் செயல்படுபவர்களுக்கு வெற்றிகள் குவியும். அவர்கள் சிறந்த மாணவராகவும், எதிர்கால தலைவராகவும் உச்சம் தொடுவது நிச்சயம். அப்படி சிறப்பான திறன் மேம்பாட்டை வளர்க்கும், தினசரி பயிற்சிக்கு ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். தன்னம்பிக்கை வளர்த்து தங்களை உயர்த்தும் அந்த பயிற்சிகளை அறிவோமா...
சுவாசப் பயிற்சி: நமது சுவாசம் உயிர்வாழ மட்டுமல்ல உற்சாகத்திற்கும் அவசியமாகும். தூய்மையான காற்றும், அதிகமான ஆக்சிஜனும், மூளையை சுறுசுறுப்பாக்கும் மூச்சுப் பயிற்சி மூலம் காசு கொடுக்காமலே இந்த உற்சாக டானிக்கை உடலில் ஏற்றிக் கொள்ளலாம். தினசரி காலையில் எழுந்ததும் 5 நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்வதை வழக்கமாக்கினால் முன்னேற்றம் தேடி வரும் என்பது முன்னோர் கூறிய அமுதவாக்காகும்.
பிரச்சினையான ஒரு சூழலில், சில வினாடிகள் அமைதியாக மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் மனம் தெளிவடைவதை உடனே உணரலாம். மூச்சுப் பயிற்சி செய்வதற்கு தேர்ந்த வழிமுறைகள் இருக்கின்றன. இருந்தாலும் சாதாரணமாக மூச்சை இழுத்துவிடும் முறையிலேயே பயிற்சி செய்யலாம். நீளமாக மூச்சை இழுத்து நிதானமாக வெளியிடுவதுதான் மூச்சுப் பயிற்சியின் முக்கிய அம்சம். முடிந்தால் ஒரு நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு மூச்சை நீளமாக இழுத்து நிதானமாக வெளியிட்டு பழகுங்கள். அதேபோல சில முறை மறு நாசித் துவாரத்தின் வழியே பயிற்சி செய்யலாம். அமைதியான சூழலில், காற்றோட்டமான இடத்தில் இதைச் செய்தால் பலன் பெருகும். குறைந்தபட்சம் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் 20 நிமிடம் செய்வதால் சிறந்த முன்னேற்றம் கிடைப்பதை உடலும், மனமும் உணரத் தொடங்கும்.
பலத்தை அதிகரியுங்கள் : உடலும், மனமும் பலமாக இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம்். கடும் பயிற்சியால் உடலை பலப்படுத்துவதைவிட, திட சிந்தனையால் மனதை பலப்படுத்தி காரியங்களை கைகூட வைக்க முடியும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையால் மனம் உறுதி பெறும். எண்ணியன எல்லாம் ஈடேறத் தொடங்கும். முடிந்தால் உடல் வலுவையும் அதிகரித்து பலவானாகவும் திகழுங்கள்.
தினசரி மதிப்பீடு: எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடாதவர்கள், மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டவர்களை வெற்றி என்றும் தழுவியிருக்கிறது. நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள், மற்றவர்களுடன் இணக்கமாக செயல்படுங்கள். மற்றவர்களைவிட்டு மாறுபட்டு செயல்படுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பணிகளை திறம்பட செய்தால் வெற்றி உங்கள் வசமாவதை உணர்வீர்கள். தினசரி உங்களுக்கு நீங்களாவே சொல்லுங்கள், “நான் உயர்கிறேன், வெற்றி பெறுகிறேன்” என்று. நிச்சயம் ஓர் நாள் வெற்றி சிகரத்தின் மீது நிற்பீர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
- 
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
 - 
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
 - 
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
 - 
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
 - 
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
 - 
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
 - 
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
 - 
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
 - 
முன்னேற்றங்கள் எப்போதுமே உடனே சாத்தியப்படுவதில்லை. வழக்கமான செயல்பாடுகள் வெற்றியைத் தர தாமதமாகலாம். நமது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்ற...
 - 
எதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வ...
 

No comments:
Post a Comment