பல்வேறு நோய்களுக்கும், குறைபாடு களுக்கும் மரபணுக்களே காரணமாக இருக்கின்றன என்பது எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த மரபணுக்களை மாற்றியும், வளர்ச்சி அடைய வைத்தும் மரபணு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெகுசில வியாதி களுக்கே மரபணு சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மரபணு மாற்று சிகிச்சையில் பல்வேறு பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் மரபணுக்களில் திருத்தம் செய்வது இதுவரை இயலாத காரியமாக இருந்து வந்தது.
தற்போது முதல் முறையாக மரபணுக்களை மாற்றுவதற்குப் பதிலாக உடலுக்குள்ளேயே திருத்தம் செய்யும் முயற்சியில் முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், கிரிஸ்பர் எனும் மரபணு மாற்ற முறையில் ஒரு ஊசியை எலியின் மரபணுவில் செலுத்தினர். அது நிறம் மாறி மருந்து வேலை செய்வதை காட்டியது. இதனால் மரபணுக்களை திருத்தம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
மரபணுக்களை அகற்றிவிட்டு புதிய மரபணுக்களை உள்ளே செலுத்தும்போது உடல் ஏற்றுக்கொள்ளாத பிரச்சினை, ஆய்வக சூழலில் மரபணுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக அமையப்போகிறது இந்த மரபணு திருத்த முறை.
Monday, 10 June 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
'நீட் ' இனி என்ன செய்யும்? 'நீட் ' தேர்வு (National Eligibility Cum Entrance Test - NEET) நெடுவாசலை போன்று முக்கிய...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
-
பெண்ணுரிமை போற்றிய பல்துறை வித்தகர் திரு.வி.க. பேராசிரியை பானுமதி தருமராசன் திருவாரூர் விருத்தாசல முதலியாரின் மகன் திரு.வி.கல்யாணசுந்...
-
பேசப் பழகணும்... பேசிப் பழகணும்... ஒரு மொழியைக் கற்கவும், நமது கருத்துகளை எடுத்துச் சொல்லவும் பேச வேண்டும். தேவைக்குப் பேச வேண்டும், வ...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
No comments:
Post a Comment