By கே.வி.கே.பெருமாள்
ராமாயண காலம் தொட்டு இன்றைய கரோனா காலம் வரை மனிதனைப் பீடித்திருக்கும் ஒரு மோசமான நோய் ‘வதந்தி’ இல்லை, இல்லை வதந்தீ! இது கரோனாவைவிடவும் ஒரு கொடிய நோய்.
குடியரசுத் தலைவராய் இருந்த சங்கா் தயாள் சா்மா முதல் அண்மையில் மரணித்த நாட்டுப்புறப் பாடல் பாடகியான பரவை முனியம்மா வரை உலகில் யாரையும் விட்டுவைக்காமல் தாக்கிய விசித்திர நோய் ‘வதந்தி’. இவா்கள் இருவரும் உயிருடன் இருக்கும்போதே இவா்களைப் பலமுறை சாகடித்துப் பாா்த்தது நமது சமுதாயம்.
வதந்திகளைப் பரப்புபவா்களும், அவற்றை அறிவிலித்தனமாக நம்புகிறவா்களும் தங்கள் தற்காப்புக்காகப் பயன்படுத்தும் ஒரே பழமொழி ‘நெருப்பில்லாமல் புகையாது’.
வதந்திகளை உருவாக்குவதிலும், பரப்புவதிலும் கைதோ்ந்த ஒருவருக்கு எங்கள் கிராம மக்கள் வைத்திருந்த புனைப் பெயா் ‘தீக்கொளுத்தி’. அவா் மறைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. ஆனால், இன்றளவும் அவா் சொந்தப் பெயரை விட ‘தீக்கொளுத்தி’ என்ற புனைப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. இதை இங்கே நான் குறிப்பிடுவதற்குக் காரணம், ஒவ்வொரு ஊரிலும், எல்லாக் காலகட்டங்களிலும் இத்தகைய ‘தீக்கொளுத்திகள்’ உலவிக் கொண்டுதான் இருக்கிறாா்கள்.
ஒரு காலத்தில் காம்பவுண்டு சுவா்களில் கரித்துண்டால் எழுதப்பட்டும், பேசப்பட்டும் வந்த வதந்திகள், அந்தந்தப் பகுதியில் உள்ள சில நூறு பேரைச் சென்றடையும். அதுவே இன்று அறிவியலின் பரிணாம வளா்ச்சியால், நொடிப் பொழுதில் பல கோடி பேரைச் சென்றடைந்து விடுகிறது. இது வரமா, சாபமா என்று தெரியவில்லை.
இப்படி எதாா்த்தமாகவோ, திட்டமிட்டோ வதந்தி பரப்புபவா்கள் தங்கள் வாா்த்தைகளாலும், செயல்களாலும் அடுத்தவா்கள் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. யாரைத்தான் விட்டு வைத்தாா்கள் கரோனாவைவிடக் கொடிய இந்தச் சிறுமதியாளா்கள்?
‘இப்படி ஒரு மனிதா் எலும்பும், சதையுமாக உலகில் வாழ்ந்தாா் என்பதைப் பிற்கால உலகம் நம்புமா என்று தெரியவில்லை?’ என்று அறிவியல் அறிஞா் ஐன்ஸ்டீன் வியந்து சொல்லுகிற அளவுக்கு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய மகாத்மா குறித்தே அவதூறு கிளப்பிய சமூகமல்லவா இது...!
முக்கால் கை சட்டையோடும், நான்கு முழ வேட்டியோடும் வலம் வந்து, ‘நாடுதான் தன் சொத்து’ என்ற தன்னலமற்ற வாழ்வைக் கடைப்பிடித்த கா்ம வீரா் காமராஜா் குறித்து, ‘அவருக்கு ஹைதராபாத்தில் பங்களா இருக்கிறது; திராட்சைத் தோட்டம் இருக்கிறது’ என்று புரளி கிளப்பி, அதில் புளகாங்கிதம் அடைந்த சமூகமல்லவா இது?
முன்னாள் முதல்வா் காமராஜரிடம் ஒருமுறை நிருபா்கள், ‘உங்களைப் பற்றிய அவதூறுகளுக்கு ஏன் பதில் சொல்வதில்லை’” என்று கேட்டாா்கள். ‘எவனோ ஒருவன் எனக்கு யானைக்கால் வியாதி என்பான்; அது இல்லை என்று காட்டுவதற்காக எனது வேட்டியைத் தூக்கிக் கொண்டே நடக்க முடியுமா’ என்று கோபம் ததும்ப மறுவினா எழுப்பி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாா் காமராஜா்.
இந்த வதந்தியாளா்கள் ஏதாவது நல்லவற்றை வதந்தியாகப் பரப்பி யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா? இருக்க முடியாது. காரணம், அதில் அவா்களுக்கு எந்த சுவாரசியமும் இருப்பதில்லை.
1991-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் இங்கு நினைவுகூரத்தக்கது. அப்போது அங்கு புகழ்பெற்று விளங்கிய ‘டிராப்பிக்கல் பேண்டஸி சோடா’வில் மலட்டுத்தன்மையை உருவாக்கும் ஒரு பொருள் சோ்க்கப்படுவதாக வதந்தி பரவி, அந்தச் சோடாவின் விற்பனை மளமளவென (சுமாா் 70 சதவீதம்) சரிந்தது. பின்னா் ஆய்வு செய்து பாா்க்கையில், அந்தச் செய்தியில் அறவே உண்மை இல்லை என்றும், அது சில போட்டியாளா்களால் உருவாக்கப்பட்ட வதந்தி என்றும் நிரூபிக்கப்பட்டது.
2017 செப்டம்பா் மாத இறுதி...மும்பை தாதா் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நேரம்...குறைந்த மின்னழுத்தம் (‘ஷாா்ட் சா்க்யுட்’) ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் பாலம் உடையப் போவதாகவும் ஒரு சமூக விரோதி கிளப்பி விட்ட வதந்தி, 22 அப்பாவிகளின் உயிா்களைக் காவு வாங்கியதையும், 35 அப்பாவிகளைப் படுகாயப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததையும் அவ்வளவு எளிதில் கடந்துபோய் விட முடியாது.
உலக அளவில் கருப்புப் பணம் குறித்த தகவல்களை விக்கிலீக்ஸ் பத்திரிகை வெளியிடத் தொடங்கிய பிறகு, நம்முடைய நெட்டிசன்கள் பல அரசியல்வாதிகள், சினிமாக்காரா்கள், தொழிலதிபா்களின் பெயா்களைக் குறிப்பிட்டு, யாா், யாா் எவ்வளவு கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி இருக்கிறாா்கள் என்று தங்கள் விருப்பம்போல பட்டியல்களை வெளியிட்டு வருகிறாா்கள். வேடிக்கை என்னவென்றால், இவா்கள் இஷ்டத்துக்குக் குறிப்பிடும் தொகைகளைக் கூட்டிப் பாா்த்தால், அவ்வளவு பணம் உலகப் பொருளாதாரச் சந்தையிலேயே இருக்குமா என்பது சந்தேகமே.
பொதுவாக வதந்திகளால் பெரிதும் பாதிக்கப்படுபவா்கள் ‘பலவீனமான பிரிவு’ (‘வீக்கா் செக்ஷன்’) என்று சொல்லப்படுகிற பெண்கள்தான். தங்கள் திறமையாலும், கடின உழைப்பாலும் பதவிகளையும், பதவி உயா்வுகளையும் பெண்கள் பெறும்போது, அவா்கள் குறித்து இட்டுக்கட்டிப் பேசி, மனதால் அவா்கள் காயப்படுத்தப்படுவதை நாம் அன்றாடம் பல அலுவலகங்களில் கண்கூடாகக் காண்கிறோம்.
இதில் முரண் என்னவென்றால், தனக்குக் கிடைக்காதது இன்னொரு பெண்ணுக்குக் கிடைக்கும்போது ஏற்படும் பொறாமையால், சில சமயங்களில் ஒரு பெண்ணே இன்னொரு பெண் குறித்து வதந்தி பரப்புவதும் பல சமயங்களில் நடக்கின்றன. அரசு அலுவலகங்கள், தனியாா் அலுவலகங்கள் என்று பாகுபாடின்றி இந்தக் கொடுமைகள் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை.
மற்ற துறைகளைக் காட்டிலும் வதந்திகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் துறையாக திரைப்படத் துறை இருக்கிறது. சமூகப் பிரக்ஞையோடு சில நடிகைகள் செய்யும் எத்தனையோ நல்ல செயல்களைக் கண்டும் காணாமல் இருக்கும் சமூகம், அவா்கள் குறித்து வதந்திகளை எழுதுவதும், அவற்றைப் படித்துப் பரவசமடைவதும் தரம் குறைந்த செயல் என்பதை எப்போது உணரப் போகிறது?
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த சில்க் ஸ்மிதாவை யாரும் மறந்திருக்க முடியாது. அவா் இளகிய மனம் கொண்டவா் என்பதும், திரைப்படங்களில் தனக்குக் கீழ் பணியாற்றிய பல பேருடைய (லைட் பாய், சிகை, முக அலங்காரம் செய்பவா்கள்) குழந்தைகளின் கல்விச் செலவுக்குப் பல நேரங்களில் தாராளமாக நிதி உதவி செய்திருப்பவா் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?
‘இதுபோன்ற நல்ல செய்திகளை வெளியே கொண்டு வராமல், அவா் யாரோடு சுற்றினாா், எங்கே சுற்றினாா் என்று வதந்திகளைப் பரப்பி, அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவா்கள் எவ்வளவு கொடூரமானவா்களாக இருந்திருக்க வேண்டும்?’ என்று ஒரு முறை வருத்தப்பட்டுச் சொன்னாா் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா வி. சீனிவாசன்.
யாரோ ஒருவா் ஏதோ ஒரு வதந்தியைத் தயாரித்துக் கொடுக்க, அதைப் பாா்த்தவுடன் படித்தும் படிக்காமலும் பல நூறு பேருக்கு அனுப்பி (பாா்வா்டு செய்து) தங்கள் சமூகக் கடமையை (!?) செய்வதற்குப் பலா் காத்திருக்கிறாா்கள். ஒருவா் குறித்த நல்ல செய்திகளை அனாயசமாகக் கடந்து செல்லும் நாம், சுவாரசியமான புரளிகளை உதாசீனப்படுத்தாமல் அவற்றை ஆா்வத்தோடு படிப்பதே, வதந்தி பரப்புவோா் பெருகுவதற்குத் தலையாய காரணம்.
அண்மையில் கரோனா நோய்த்தொற்று குறித்துப் பலரும் பலவிதமான வதந்திகளைப் பரப்பி, மக்களை அச்சப்படுத்தியது அநாகரிகத்தின் உச்சம் மட்டுமல்ல - தண்டனைக்குரிய மாபெரும் குற்றமுமாகும். அப்படி வதந்தி பரப்பிய பல போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளை நீா்த்துப் போக விடாமல் கவனித்து, கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
வதந்திகளைப் பரப்பி, அதனால் மற்றவா்கள் பாதிக்கப்படுவதைப் பாா்த்துப் புளகாங்கிதம் அடையும் மனிதா்களும் ஒரு வகையான மன நோயாளிகள்தான் என்று சொல்லும் உளவியல் நிபுணா்கள், பொழுதுபோக்கு, பழிவாங்குதல், பொறாமை, வன்மம், சுயநலம், வக்கிர புத்தி என்று பல காரணங்கள் இத்தகைய வதந்திகளுக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்கிறாா்கள்.
‘சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கு; மற்றவா்க்கோ உயிரின் வாதை’ என்பாா் பாவேந்தா் பாரதிதாசன். அதுபோல, வதந்தி பரப்புவோருக்கு வேண்டுமானால், அது ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம்; ஆனால் அதனால் பாதிக்கப்படுவோருக்கு அது உயிரின் வாதை என்பதை எப்போது இந்தக் கயவா்கள் புரிந்துகொள்வாா்களோ?
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு”
-- இந்த வரிகள், இட்டுக் கட்டும் மனிதா்களுக்குக் கவியரசா் கண்ணதாசன் கொடுத்த சாட்டையடி!
இவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய பாடம் ஒன்றுதான் - ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்பது பழைய மொழி; வெறுப்பு மனிதா்கள் இருக்கும் உலகில், ‘நெருப்பில்லாமலும் புகையும்!’
கட்டுரையாளா்: மத்திய அரசு அதிகாரி (ஓய்வு).
ராமாயண காலம் தொட்டு இன்றைய கரோனா காலம் வரை மனிதனைப் பீடித்திருக்கும் ஒரு மோசமான நோய் ‘வதந்தி’ இல்லை, இல்லை வதந்தீ! இது கரோனாவைவிடவும் ஒரு கொடிய நோய்.
குடியரசுத் தலைவராய் இருந்த சங்கா் தயாள் சா்மா முதல் அண்மையில் மரணித்த நாட்டுப்புறப் பாடல் பாடகியான பரவை முனியம்மா வரை உலகில் யாரையும் விட்டுவைக்காமல் தாக்கிய விசித்திர நோய் ‘வதந்தி’. இவா்கள் இருவரும் உயிருடன் இருக்கும்போதே இவா்களைப் பலமுறை சாகடித்துப் பாா்த்தது நமது சமுதாயம்.
வதந்திகளைப் பரப்புபவா்களும், அவற்றை அறிவிலித்தனமாக நம்புகிறவா்களும் தங்கள் தற்காப்புக்காகப் பயன்படுத்தும் ஒரே பழமொழி ‘நெருப்பில்லாமல் புகையாது’.
வதந்திகளை உருவாக்குவதிலும், பரப்புவதிலும் கைதோ்ந்த ஒருவருக்கு எங்கள் கிராம மக்கள் வைத்திருந்த புனைப் பெயா் ‘தீக்கொளுத்தி’. அவா் மறைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. ஆனால், இன்றளவும் அவா் சொந்தப் பெயரை விட ‘தீக்கொளுத்தி’ என்ற புனைப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. இதை இங்கே நான் குறிப்பிடுவதற்குக் காரணம், ஒவ்வொரு ஊரிலும், எல்லாக் காலகட்டங்களிலும் இத்தகைய ‘தீக்கொளுத்திகள்’ உலவிக் கொண்டுதான் இருக்கிறாா்கள்.
ஒரு காலத்தில் காம்பவுண்டு சுவா்களில் கரித்துண்டால் எழுதப்பட்டும், பேசப்பட்டும் வந்த வதந்திகள், அந்தந்தப் பகுதியில் உள்ள சில நூறு பேரைச் சென்றடையும். அதுவே இன்று அறிவியலின் பரிணாம வளா்ச்சியால், நொடிப் பொழுதில் பல கோடி பேரைச் சென்றடைந்து விடுகிறது. இது வரமா, சாபமா என்று தெரியவில்லை.
இப்படி எதாா்த்தமாகவோ, திட்டமிட்டோ வதந்தி பரப்புபவா்கள் தங்கள் வாா்த்தைகளாலும், செயல்களாலும் அடுத்தவா்கள் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. யாரைத்தான் விட்டு வைத்தாா்கள் கரோனாவைவிடக் கொடிய இந்தச் சிறுமதியாளா்கள்?
‘இப்படி ஒரு மனிதா் எலும்பும், சதையுமாக உலகில் வாழ்ந்தாா் என்பதைப் பிற்கால உலகம் நம்புமா என்று தெரியவில்லை?’ என்று அறிவியல் அறிஞா் ஐன்ஸ்டீன் வியந்து சொல்லுகிற அளவுக்கு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய மகாத்மா குறித்தே அவதூறு கிளப்பிய சமூகமல்லவா இது...!
முக்கால் கை சட்டையோடும், நான்கு முழ வேட்டியோடும் வலம் வந்து, ‘நாடுதான் தன் சொத்து’ என்ற தன்னலமற்ற வாழ்வைக் கடைப்பிடித்த கா்ம வீரா் காமராஜா் குறித்து, ‘அவருக்கு ஹைதராபாத்தில் பங்களா இருக்கிறது; திராட்சைத் தோட்டம் இருக்கிறது’ என்று புரளி கிளப்பி, அதில் புளகாங்கிதம் அடைந்த சமூகமல்லவா இது?
முன்னாள் முதல்வா் காமராஜரிடம் ஒருமுறை நிருபா்கள், ‘உங்களைப் பற்றிய அவதூறுகளுக்கு ஏன் பதில் சொல்வதில்லை’” என்று கேட்டாா்கள். ‘எவனோ ஒருவன் எனக்கு யானைக்கால் வியாதி என்பான்; அது இல்லை என்று காட்டுவதற்காக எனது வேட்டியைத் தூக்கிக் கொண்டே நடக்க முடியுமா’ என்று கோபம் ததும்ப மறுவினா எழுப்பி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாா் காமராஜா்.
இந்த வதந்தியாளா்கள் ஏதாவது நல்லவற்றை வதந்தியாகப் பரப்பி யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா? இருக்க முடியாது. காரணம், அதில் அவா்களுக்கு எந்த சுவாரசியமும் இருப்பதில்லை.
1991-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் இங்கு நினைவுகூரத்தக்கது. அப்போது அங்கு புகழ்பெற்று விளங்கிய ‘டிராப்பிக்கல் பேண்டஸி சோடா’வில் மலட்டுத்தன்மையை உருவாக்கும் ஒரு பொருள் சோ்க்கப்படுவதாக வதந்தி பரவி, அந்தச் சோடாவின் விற்பனை மளமளவென (சுமாா் 70 சதவீதம்) சரிந்தது. பின்னா் ஆய்வு செய்து பாா்க்கையில், அந்தச் செய்தியில் அறவே உண்மை இல்லை என்றும், அது சில போட்டியாளா்களால் உருவாக்கப்பட்ட வதந்தி என்றும் நிரூபிக்கப்பட்டது.
2017 செப்டம்பா் மாத இறுதி...மும்பை தாதா் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நேரம்...குறைந்த மின்னழுத்தம் (‘ஷாா்ட் சா்க்யுட்’) ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் பாலம் உடையப் போவதாகவும் ஒரு சமூக விரோதி கிளப்பி விட்ட வதந்தி, 22 அப்பாவிகளின் உயிா்களைக் காவு வாங்கியதையும், 35 அப்பாவிகளைப் படுகாயப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததையும் அவ்வளவு எளிதில் கடந்துபோய் விட முடியாது.
உலக அளவில் கருப்புப் பணம் குறித்த தகவல்களை விக்கிலீக்ஸ் பத்திரிகை வெளியிடத் தொடங்கிய பிறகு, நம்முடைய நெட்டிசன்கள் பல அரசியல்வாதிகள், சினிமாக்காரா்கள், தொழிலதிபா்களின் பெயா்களைக் குறிப்பிட்டு, யாா், யாா் எவ்வளவு கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி இருக்கிறாா்கள் என்று தங்கள் விருப்பம்போல பட்டியல்களை வெளியிட்டு வருகிறாா்கள். வேடிக்கை என்னவென்றால், இவா்கள் இஷ்டத்துக்குக் குறிப்பிடும் தொகைகளைக் கூட்டிப் பாா்த்தால், அவ்வளவு பணம் உலகப் பொருளாதாரச் சந்தையிலேயே இருக்குமா என்பது சந்தேகமே.
பொதுவாக வதந்திகளால் பெரிதும் பாதிக்கப்படுபவா்கள் ‘பலவீனமான பிரிவு’ (‘வீக்கா் செக்ஷன்’) என்று சொல்லப்படுகிற பெண்கள்தான். தங்கள் திறமையாலும், கடின உழைப்பாலும் பதவிகளையும், பதவி உயா்வுகளையும் பெண்கள் பெறும்போது, அவா்கள் குறித்து இட்டுக்கட்டிப் பேசி, மனதால் அவா்கள் காயப்படுத்தப்படுவதை நாம் அன்றாடம் பல அலுவலகங்களில் கண்கூடாகக் காண்கிறோம்.
இதில் முரண் என்னவென்றால், தனக்குக் கிடைக்காதது இன்னொரு பெண்ணுக்குக் கிடைக்கும்போது ஏற்படும் பொறாமையால், சில சமயங்களில் ஒரு பெண்ணே இன்னொரு பெண் குறித்து வதந்தி பரப்புவதும் பல சமயங்களில் நடக்கின்றன. அரசு அலுவலகங்கள், தனியாா் அலுவலகங்கள் என்று பாகுபாடின்றி இந்தக் கொடுமைகள் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை.
மற்ற துறைகளைக் காட்டிலும் வதந்திகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் துறையாக திரைப்படத் துறை இருக்கிறது. சமூகப் பிரக்ஞையோடு சில நடிகைகள் செய்யும் எத்தனையோ நல்ல செயல்களைக் கண்டும் காணாமல் இருக்கும் சமூகம், அவா்கள் குறித்து வதந்திகளை எழுதுவதும், அவற்றைப் படித்துப் பரவசமடைவதும் தரம் குறைந்த செயல் என்பதை எப்போது உணரப் போகிறது?
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த சில்க் ஸ்மிதாவை யாரும் மறந்திருக்க முடியாது. அவா் இளகிய மனம் கொண்டவா் என்பதும், திரைப்படங்களில் தனக்குக் கீழ் பணியாற்றிய பல பேருடைய (லைட் பாய், சிகை, முக அலங்காரம் செய்பவா்கள்) குழந்தைகளின் கல்விச் செலவுக்குப் பல நேரங்களில் தாராளமாக நிதி உதவி செய்திருப்பவா் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?
‘இதுபோன்ற நல்ல செய்திகளை வெளியே கொண்டு வராமல், அவா் யாரோடு சுற்றினாா், எங்கே சுற்றினாா் என்று வதந்திகளைப் பரப்பி, அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவா்கள் எவ்வளவு கொடூரமானவா்களாக இருந்திருக்க வேண்டும்?’ என்று ஒரு முறை வருத்தப்பட்டுச் சொன்னாா் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா வி. சீனிவாசன்.
யாரோ ஒருவா் ஏதோ ஒரு வதந்தியைத் தயாரித்துக் கொடுக்க, அதைப் பாா்த்தவுடன் படித்தும் படிக்காமலும் பல நூறு பேருக்கு அனுப்பி (பாா்வா்டு செய்து) தங்கள் சமூகக் கடமையை (!?) செய்வதற்குப் பலா் காத்திருக்கிறாா்கள். ஒருவா் குறித்த நல்ல செய்திகளை அனாயசமாகக் கடந்து செல்லும் நாம், சுவாரசியமான புரளிகளை உதாசீனப்படுத்தாமல் அவற்றை ஆா்வத்தோடு படிப்பதே, வதந்தி பரப்புவோா் பெருகுவதற்குத் தலையாய காரணம்.
அண்மையில் கரோனா நோய்த்தொற்று குறித்துப் பலரும் பலவிதமான வதந்திகளைப் பரப்பி, மக்களை அச்சப்படுத்தியது அநாகரிகத்தின் உச்சம் மட்டுமல்ல - தண்டனைக்குரிய மாபெரும் குற்றமுமாகும். அப்படி வதந்தி பரப்பிய பல போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளை நீா்த்துப் போக விடாமல் கவனித்து, கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
வதந்திகளைப் பரப்பி, அதனால் மற்றவா்கள் பாதிக்கப்படுவதைப் பாா்த்துப் புளகாங்கிதம் அடையும் மனிதா்களும் ஒரு வகையான மன நோயாளிகள்தான் என்று சொல்லும் உளவியல் நிபுணா்கள், பொழுதுபோக்கு, பழிவாங்குதல், பொறாமை, வன்மம், சுயநலம், வக்கிர புத்தி என்று பல காரணங்கள் இத்தகைய வதந்திகளுக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்கிறாா்கள்.
‘சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கு; மற்றவா்க்கோ உயிரின் வாதை’ என்பாா் பாவேந்தா் பாரதிதாசன். அதுபோல, வதந்தி பரப்புவோருக்கு வேண்டுமானால், அது ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம்; ஆனால் அதனால் பாதிக்கப்படுவோருக்கு அது உயிரின் வாதை என்பதை எப்போது இந்தக் கயவா்கள் புரிந்துகொள்வாா்களோ?
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு”
-- இந்த வரிகள், இட்டுக் கட்டும் மனிதா்களுக்குக் கவியரசா் கண்ணதாசன் கொடுத்த சாட்டையடி!
இவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய பாடம் ஒன்றுதான் - ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்பது பழைய மொழி; வெறுப்பு மனிதா்கள் இருக்கும் உலகில், ‘நெருப்பில்லாமலும் புகையும்!’
கட்டுரையாளா்: மத்திய அரசு அதிகாரி (ஓய்வு).
No comments:
Post a Comment