மனை அமைப்பில் கவனிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள்
வீட்டுமனை அல்லது இடங்களை வாங்கும்போது பலரும் அவை வாஸ்து ரீதியாக அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்கிறார்கள். பொதுவாக, மனைகள் வாங்கும்போது வாஸ்து சொல்லும் விதிமுறைகள் அனைத்தையும் கவனத்தில் கொள்வது சற்று சிரமமாக இருக்கும். அதன் அடிப்படையில் வாஸ்து நிபுணர்கள் தரக்கூடிய சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.
ஈசானிய பகுதி அமைப்பு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும், தனுசு, மீனம் ஆகிய ராசிகளிலும் பிறந்தவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை வாங்கும்போது கண்டிப்பாக மனையின் ஈசானியமான, வடகிழக்கில் வலுவான கட்டிட அமைப்புகள் அல்லது எளிதில் சரி செய்ய இயலாத உயரமான அமைப்பு ஆகியவை இருந்தால் அந்த மனையை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
கவனிக்க வேண்டிய நைருதி
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நைருதி பாகமான, தென்மேற்கில் கிணறு அல்லது எளிதில் சரி செய்ய இயலாத பள்ளங்கள் உள்ள மனை அல்லது பூமியை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
பிரம்மஸ்தான பகுதி
மேலே குறிப்பிட்ட நான்கு பாகங்களை கவனிப்பதுடன், மனையின் மைய பகுதியான பிரம்மஸ்தானத்தின் அமைப்பையும் மனதில் கொள்ள வேண்டும். அந்த பகுதியில் பள்ளங்கள் அல்லது மேடுகள் இருப்பது கூடாது. ஒருவேளை அப்படி இருந்தாலும் வாஸ்து ரீதியாக அதை சரி செய்து கொள்ள இயலும் பட்சத்தில் அந்த மனையை வாங்குவது பற்றி முடிவு செய்யலாம்.
மனையின் ஐந்து தத்துவங்கள்
மனையின் நில தத்துவமான நைருதி, நீர் தத்துவமான ஈசானியம், நெருப்பு தத்துவமான ஆக்கினேயம், காற்று தத்துவமான வாயவியம், ஆகாய தத்துவமான பிரம்மஸ்தானம் ஆகிய ஐந்து பாகங்களும் சரியான அமைப்பில் உள்ள இடத்தை தேர்வு செய்வதுதான் நன்மைகளை அளிக்கும். மனையின் அமைப்பு அவ்வாறு இல்லாத நிலையில் தக்க தொழில்நுட்ப ஆலோசனைகளின்படி அவற்றை சரி செய்யும் வாய்ப்புகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மனையை வாங்குவது பற்றி முடிவெடுக்கலாம்.
Saturday 22 September 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பேராசிரியர்.மா.ராமச்சந்திரன் ச மய சான்றோர் கூடி ஆராய்வதற்கு ஏதுவாக இருந்த இடத்தை நம் முன்னோர் பட்டிமண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்த அட...
-
சமூகப் புரட்சி செய்த ஞானி வள்ளலார் ராமலட்சுமி, வள்ளலார் ஏபிஜே அருள்கருணை சபை, மதுரை இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
-
தைப்பூசம் காணாதே போதியோ | By தி. இராசகோபாலன் | தமிழர்களுடைய வாழ்வில் பல விழாக்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆன்மிகத்தோடு தொடர்புடைய விழா தைப...
-
உடுமலை தந்த கவிமலை உடுமலை நாராயணகவி கவிஞர் பிரியன் நாளை (செப்டம்பர் 25-ந்தேதி) உடுமலை நாராயணகவி பிறந்த நாள். வாழும் வாழ்வு கடந்த...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், மரபணு வரிசை செய்யப்பட்ட இந்திய கரோனா நோயாளிகளில் சுமார் 41.2 சதவீதம் புதிய ஏ3ஐ (A3i)என்ற கி...
No comments:
Post a Comment