அறிவியல் சாதனையாளர் மைக்கேல் பாரடே
மைக்கேல் பாரடே
வித்யா வெற்றிச்செல்வன்
இன்று (செப்டம்பர் 22-ந் தேதி) விஞ்ஞானி மைக்கேல் பாரடே பிறந்தநாள்.
அறிவியலில் பல புதுமைகளை படைத்த மைக்கேல் பாரடே 1791-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள நியூவிங்க்டன் பட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார்.இவருடைய தந்தை ஜேம்ஸ் பாரடே. ஏழ்மை காரணமாக மைக்கேல் பாரடே தனது பள்ளிப்படிப்பை 14 வயதில் நிறுத்த வேண்டியதாயிற்று. அப்போது பிரபலமாக இருந்த வேதியியல் விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியிடம் உதவியாளராக சேர்ந்தார்.தற்போது உலகம் முழுவதும் உள்ள ஆய்வுக்கூட சோதனைச் சாவடிகளில் பொருட்களை சூடாக்குவதற்கு பயன்படும்‘பன்சன் சுடர்’அடுப்பின் ஆரம்ப வடிவத்தை கண்டுபிடித்தவர் பாரடே. 1831-ல் காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தியாகிறது என்பதை கண்டுபிடித்து வெளியிட்டார். இதன் அடிப்படையிலேயே பின்னாளில் மின்சார ஜெனரேட்டர்கள், டிரான்ஸ்பார்மர்கள் உருவாக்கப்பட்டன. மின் ஏற்புத்திறன் என்பதை பாரடே நினைவாக பாரட் எனும் அலகால் அளக்கிறோம். பாரடேவின் மின்காந்த தூண்டல் விதி இல்லையெனில் இன்று எந்த மின்சாதனமும் இல்லை. மைக்கேல் பாரடே காந்தப்புலனும்மின்சாரமும் எத்தகைய தொடர்புடையவை என நிரூபித்திருக்காவிட்டால் பீல்டு தியரி என்று அழைக்கப்படும் மின்சார கோட்பாடு இல்லை.
உலகின் முதல் மின்சார டைனமோவை கண்டுபிடித்தவர்பாரடே. வாயுக்களை முதலில் திரவமாக மாற்றியவரும் இவர்தான். எளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும்படி அறிவியலை எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு அவருடைய “மெழுகுவர்த்தியின்வேதியியல் வரலாறு” என்ற புத்தகம் மிகச் சிறந்த சான்று. இன்று வரையில் பாரடே விளைவு தான் மூலக்கூறுகளின் வடிவத்தை விளக்கப் பயன்படுகிறது. இதுமட்டுமல்லாது எக்கில் உலோகக் கலவைகளை ஆய்வு செய்தார். மேலும் பல புதிய வகையான கண்ணாடிகளை ஒளியியல் நோக்கங்களுக்காக உருவாக்கினார். இவை தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் அறிஞர் என்று பெயர் பெற்ற மைக்கேல் பாரடே, 1867-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி தன்னுடைய 76-வது வயதில் காலமானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
பேராசிரியர்.மா.ராமச்சந்திரன் ச மய சான்றோர் கூடி ஆராய்வதற்கு ஏதுவாக இருந்த இடத்தை நம் முன்னோர் பட்டிமண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்த அட...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
-
உலகை ஆளும் தமிழ் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர், இயக்குனர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உலகெங்கும் தமிழர்கள் 12 கோடிக்கு மேல் பரந்து...
-
குடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு-ப.சு.அஜிதா-‘பெண் குழந்தை பிறந்தாலே செலவு' என்று நினைக்கிற சமூகத்தில் பெண்ணுக்குச் சொத்தில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
உங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...
No comments:
Post a Comment