சரித்திர சாதனையாளர் ‘ஆல்பிரட் நோபல்’
ஆல்பிரட் நோபல்
இ ன்று(அக்டோபர் 21-ந் தேதி) ஆல்பிரட் நோபல் பிறந்த நாள்.
சாதனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அடைய துடிக்கும் மைல் கல் ‘நோபல் பரிசு’. டைனமைட் என்ற வெடிபொருளை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் தான் இந்த பரிசின் தந்தை ஆவார். சுவீடன் நாட்டை சேர்ந்த இமானுவேல் நோபல் என்ற பொறியியலாளருக்கு 4-வது மகனாக பிறந்தார் ஆல்பிரட் நோபல். குடும்ப வறுமையின் காரணமாக அவருடன் பிறந்த 8 பேரில் இவரும், மேலும் 3 சகோதரர்களும் மட்டுமே குழந்தை பருவத்தை கடக்க முடிந்தது. பொறியியலாளரை தந்தையாக கொண்டதாலோ என்னவோ இவருக்கு வேதியியல் துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது 18-வது வயதில் பாரீஸ் சென்று ஜான் எரிக்சன் என்பவரிடம் 4 ஆண்டுகள் பணிபுரிந்து வேதியியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார்.
அதன் பயனாக எரிவாயு மீட்டரை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். அதன் பின்னர் அவரது எண்ணமும், செயலும் முழுக்க முழுக்க நைட்ரோகிளிசரினுக்கு மாற்றாக எளிமையாக கையாளக்கூடிய வகையில் வெடிமருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதை நோக்கியே இருந்தது. அதன் முடிவில் கிடைத்தது தான் எளிதில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பாதுகாப்பான வெடிபொருளான டைனமைட். 1867-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெடிபொருளுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் காப்புரிமை வாங்கினார். இதன் மூலம் 90 ஆயுத தொழிற்சாலைகளின் அதிபராகி செல்வ செழிப்புடன் வாழ்ந்தார். 1888-ம் ஆண்டு நோபல் இறந்துவிட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து பிரெஞ்சு நாளிதழ் ஒன்றில் மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார் என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் உண்மையில் இறந்தது அவருடைய சகோதரர் லுக்விட் தான். இவ்வாறு நாளிதழில் வெளியான மரண அறிக்கை ஆல்பிரட் நோபலை வேதனையடைய செய்ததுடன், அவருக்கு தாங்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியது. அதனால் தான், எக்காலமும் தன்பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக நோபல் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கினார். அதன் மூலம் இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்களுக்கும், இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்க திட்டமிட்டார். மேலும் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்க முடிவு செய்தார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பரிசுத்தொகை வழங்குவதற்காக தனது சொத்துகளின் பெரும் பங்கை அந்த அறக்கட்டளையின் பேரில் உயில் எழுதி வைத்திருந்தார்.
அவ்வளவு பெரிய மனம் படைத்த ஆல்பிரட் நோபலுக்கு கணிதத்துறை மீது என்னதான் கோபமோ என்று தெரியவில்லை. அறிவியலின் அரசியாக கருதப்படும் கணிதத்திற்கு இந்த பரிசு வழங்க அவர் அனுமதி வழங்கவில்லை. அவரது மறைவிற்கு பிறகு 1901-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இப்போது வரை நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
-நெல்லை கணேஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
சமூகப் புரட்சி செய்த ஞானி வள்ளலார் ராமலட்சுமி, வள்ளலார் ஏபிஜே அருள்கருணை சபை, மதுரை இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
-
பேராசிரியர்.மா.ராமச்சந்திரன் ச மய சான்றோர் கூடி ஆராய்வதற்கு ஏதுவாக இருந்த இடத்தை நம் முன்னோர் பட்டிமண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்த அட...
-
தைப்பூசம் காணாதே போதியோ | By தி. இராசகோபாலன் | தமிழர்களுடைய வாழ்வில் பல விழாக்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆன்மிகத்தோடு தொடர்புடைய விழா தைப...
-
உடுமலை தந்த கவிமலை உடுமலை நாராயணகவி கவிஞர் பிரியன் நாளை (செப்டம்பர் 25-ந்தேதி) உடுமலை நாராயணகவி பிறந்த நாள். வாழும் வாழ்வு கடந்த...
-
‘நான் தொலைக்காட்சி விவாதங்களைப் பாா்ப்பதை நிறுத்திவிட்டேன். நேரம்தான் வீணாகிறது’ என்கிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரு...
-
குடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு-ப.சு.அஜிதா-‘பெண் குழந்தை பிறந்தாலே செலவு' என்று நினைக்கிற சமூகத்தில் பெண்ணுக்குச் சொத்தில் ...
No comments:
Post a Comment