மகாத்மாவாக காந்தி பிறக்கவில்லை. ஒரு சாதாரண மனிதராகத்தான் பிறந்தார். வளர்ந்தார். அதனால் தவறுகளைச் செய்தார். பிற்காலத்தில் தாம் செய்த தவறுகளை நினைத்து வருந்தினார். இனி தவறு செய்யக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டார். அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டினார். எளிய வாழ்க்கை, அகிம்சை போன்றவற்றைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் காந்தியை மகாத்மா என்று மக்கள் ஏற்றுக்கொண்ட பிறகும் தாம் சின்ன வயதில் செய்த தவறுகளை மறைக்காமல், தம் சுயசரிதையில் எழுதினார். இதைச் செய்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்! குற்றம் குறைகளோடு இருந்த சாதாரணமான காந்தி, பிற்காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமேற்று வழிநடத்தினார். உலக நாடுகளுக்கு அகிம்சையின் அடையாளமாகத் திகழ்ந்தார். நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற உலகத் தலைவர்கள் காந்தியின் வழியைப் பின்பற்றினார்கள். அவர் மறைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அகிம்சைப் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையை உலகத்தில் விதைத்துக்கொண்டிருக்கிறார். காந்தியை ’மகாத்மா’ என்று அழைப்பது பொருத்தம்தானே,
Wednesday, 18 September 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
-
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
-
முன்னேற்றங்கள் எப்போதுமே உடனே சாத்தியப்படுவதில்லை. வழக்கமான செயல்பாடுகள் வெற்றியைத் தர தாமதமாகலாம். நமது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்ற...
-
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
-
எதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வ...
No comments:
Post a Comment