இனி தேர்வுக் காலம்
மாணவர்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டிய அவசிய விதிகள்
மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் தேதியிலேயே தேர்வு தொடங்குகிறது. 6-ந் தேதியில் பிளஸ்-1 வகுப்புக்கும், இரண்டாவது வாரத்தில் 10-ம் வகுப்புக்கும் தேர்வு தொடங்குகிறது. தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதுவே வெற்றிவாய்ப்பை எளிமையாக்கும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்...
‘தேர்வு’ பற்றிய பயத்தை கைவிடுங்கள். நீங்கள் ஆண்டு முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன. இதில் பயம் கொள்ள என்ன இருக்கிறது? நிதானமாக, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
தேர்வுக்கு சில நாட்களே இருப்பதால் இனி புதிய பாடங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. ஏற்கனவே படித்த பாடங்களையும், முக்கியமானவற்றை மட்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பழகுங்கள்.
நீண்ட நேரம் தொடர்ந்து படிக்காமல் போதிய இடைவெளியுடன் படியுங்கள்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல் நலனை கெடுக்கும் விஷயங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக நீண்ட நேரம் கண்விழித்து படிப்பது, சாப்பிடாமல் படிப்பது வேண்டாம். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். காயங்கள் உண்டாக்கும் சாகச செயல்களிலும் ஈடுபடாதீர்கள்.
எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.
நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், பேனா முதல் தேர்வு அட்டை வரை அனைத்தும் இருக்கிறதா? என்பதை வீட்டைவிட்டு கிளம்பும் முன் பரிசோதனை செய்யுங்கள். எதையும் தவற விடாமல் இருக்க ஒரே இடத்தில் வைத்து பராமரியுங்கள். சிறிய பொருட்களை ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
தேர்வுக்கு கிளம்பும் முன், காலை உணவை தவிர்க்கக்கூடாது.
தேர்வுக்கு முந்தைய இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிக்க வேண்டாம். அது தேர்வை திருப்தியாக எழுத முடியாமல் செய்துவிடும்.
தேர்வு அறைக்குள் நுழையும் கடைசி நிமிடம் வரை படிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். சுமார் அரை மணி நேரம் முன்னதாகவே புத்தகங்களை மூடிவிட்டு, மனதை தேர்வுக்கு தயாராக்குங்கள். முக்கிய பகுதிகளை மனதில் நினைவூட்டிப் பாருங்கள்.
தேர்வுக்கு நீங்கள் இதுவரை பயன்படுத்திய பேனா, பென்சில்களையே பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. அப்படி புதிதாக வாங்கியிருந்தால் நன்கு எழுதி பயிற்சி செய்து பழக்கப்படுத்திவிடுங்கள்.
தேர்வு தொடங்கும்போது முதலில் கேள்வித்தாளை நன்கு படித்துப்பாருங்கள். எந்ெதந் வினாக்களுக்கு விடையெழுத வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். யோசித்து விடையளிக்க வேண்டிய வினாக்களை ஒதுக்கிவைத்துவிட்டு தெரிந்தவற்றை வேகமாக எழுதி முடியுங்கள்.
ஒவ்வொரு வினாவுக்கும் குறித்த நேரத்தில் விடையளியுங்கள். இறுதியில் எல்லாவற்றுக்கும் விடையளித்திருக்கிறீர்களா? முக்கியமான விஷயங்கள், வாய்ப்பாடுகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறீர்களா? என்பதை திருப்பிப் பாருங்கள். அதற்கெனவும் சில நிமிடங்களை ஒதுக்கி வையுங்கள்.
ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கான குறிப்புகளை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். எதை தவறவிட்டால் மதிப்பெண் குறையும் என்பதையும் அறிவுறுத்தியிருப்பார்கள். அதைப் பின்பற்றி தேர்ச்சி பெறவும், முழு மதிப்பெண் பெறவும் முயற்சி செய்யுங்கள்.
பதில்களை ஸ்கெட்ச், ஜிகினா பேனாக்களால் அலங்காரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரம் கிடைத்தால் மட்டும் அனுமதிக்கப்பட்ட பேனாக்களைக் கொண்டு அழகுபடுத்தலாம்.
அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம். தேர்வாளரின் நேர அறிவுறுத்தலை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு வேகமாக பதிலளியுங்கள்.
தேர்வு எழுதி முடித்தபின், அதைப் பற்றி ஆராய வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள். வெற்றி உங்களுக்கே. வாழ்த்துக்கள்!
Monday, 25 February 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment