மத்திய அரசாங்கத்தின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்தியாவில் உள்ள 111 பெரிய நகரங்களில் மக்கள் வாழ்வதற்கு தேவையான வசதிகள் எந்தவகையில் இருக்கிறது? என்பதை ஆய்வுசெய்து முதல் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீடு கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி தொடங்கியது. நிர்வாகம், அடையாளம் மற்றும் கலாசாரம், கல்வி, பொதுசுகாதாரம், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு, வீட்டுவசதி மற்றும் உள்ளடக்கிய வசதிகள் பொதுவெளியிடங்கள், நிலத்தின் பயன்பாடு, மின்சார சப்ளை, போக்குவரத்து, குடிநீர் சப்ளை, கழிவு நீர்நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை நிர்வாகம், குறைவான மாசு ஆகிய 15 பிரிவுகளின் கீழ் 78 குறியீடுகளை வைத்து அனைத்து நகரங்களிலும் மதிப்பீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த வசதிகளையும் கணக்கிட்டு பார்த்த பட்டியலில், தமிழ்நாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகளில், ஒரு மாநகராட்சியும் முதல் 10 இடங்களில் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும். திருச்சி 12-வது இடத்திலும், சென்னை நகரம் 14-வது இடத்திலும், கோயம்புத்தூர் (25), ஈரோடு (26), மதுரை (28), திருப்பூர் (29), திருநெல்வேலி (37), திண்டுக்கல் (40), சேலம் (42), தஞ்சாவூர் (43), தூத்துக்குடி (44), திண்டுக்கல் (48) என்ற பட்டியலிலும் இருக்கிறது. 40 லட்சம் மக்கள் தொகைக்குமேல் உள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னை 2-வது இடத்தில் இருக்கிறது.
சென்னை நகரத்தை பொறுத்தமட்டில், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் மதிப்பெண்களை கூட்டியிருந்தாலும், மின்சார வசதி, வீட்டுவசதி, வெளியிடங்கள், திடக்கழிவு மேலாண்மையில் வசதிகுறைவு இருக்கிறது என்பதுதான் அந்தப்பட்டியல் காட்டும் உண்மையாகும். மருத்துவவசதியை கணக்கிட்டால், சென்னை நகரம் மிகஉயர்ந்த வசதிகளில் இருக்கிறது. உலக சுகாதாரநிறுவனம் 10 ஆயிரம் மக்களுக்கு 10 டாக்டர்கள் இருக்கவேண்டும் என்று நிர்ணயித்து இருக்கிறது. ஆனால், சென்னையில் 18 டாக்டர்கள் இருக்கிறார்கள். சுகாதாரத்தில் திருச்சி முதலிடத்தில் இருக்கிறது. நகரை சுத்தமாக வைத்ததில் திருச்சி மாநகராட்சியின் சேவையை பாராட்ட வேண்டுமென்றாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயமாக செய்திருக்க முடியாது.
இதுபோல, குடிநீர் வழங்குவதில் ஈரோடு முதல் இடத்திலும், வீட்டுவசதி மற்றும் உள்ளடக்கிய வசதியில் வேலூர் 3-வது இடத்திலும் இருக்கிறது. அடையாளம் மற்றும் கலாசாரத்திலும், குறைவான மாசு என்பதிலும் திருச்சி 3-வது இடத்திலும், மின்சார சப்ளையில் 2-வது இடத்திலும், போக்குவரத்து வசதியில் சென்னை 3-வது இடத்திலும் இருக்கிறது. மாநகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதும் இந்தநிலைக்கு முக்கிய காரணமாகும். தமிழக அரசும், மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும், இந்த மதிப்பீட்டை அடிப்படையாக வைத்து, 15 பிரிவுகளிலும் முதல்இடத்திற்கு வரவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு செயல்படவேண்டும். மத்திய அரசாங்கம் மாநகராட்சிகள் பட்டியலை எடுத்துக்கொண்டதைப்போல தமிழக அரசு, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் இதுபோன்ற வசதிகளை அடிப்படையாக வைத்து ஒரு தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிட்டால், நிறை இருந்தால் பாராட்டவும், குறை இருந்தால் ஊக்குவிக்கவும் முடியும்.
Location: Chennai
Edition: Tiruvallur
Date : 15/08/2018
Page : 04
Stories : 4
சுதந்திரத்தின் மாண்பைக் காப்போம்
வாழ்வதற்கு வசதியான நகரங்கள்
வேண்டவே வேண்டாம் சூதாட்டம்
எதிரொலி
Thursday, 16 August 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
மணி ஓசைக்குரலால் மனம் கவர்ந்த இசைமணி...! தந்தை சீர்காழி கோவிந்தராஜனுடன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம். டாக்டர் சீர்காழி சிவசிதம்பர...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
நேர மேலாண்மை - வெற்றிக்கு அடிப்படை! By எஸ்ஏ. முத்துபாரதி இந்தியாவின் சில மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத...
-
சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?" | கே.கே.மகேஷ் |பெரியகுளம் மக்களிடமும், பன்னீர்செல்வத்தின் முன்னாள், இந்நாள் நண்பர்களிடமும் நான் பேச...
-
பிரிட்டிஷாரின் ஆட்சி 1792-ல் ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்றதில் இருந்தே தொடங்குகிறது. அதன்பின்னரே ரெவெனியூ போர்டு என்றும், வருவாய் ஆணை...
No comments:
Post a Comment