உலகத்துக்கு தமிழர் தந்த நன்கொடை யோகா
பேராசிரியர் இரா.மதிவாணன்
யோகா என்பது மனதை ஒருமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தவநிலையாகும். இதனை அக்காலத்தில் ஒகம் என்றனர். மனதை ஒருமுகப்படுத்தும் யோக நிலைக்கு அடுத்து, உயிரை ஒருமுகப்படுத்தும் தியான நிலையை பழந்தமிழர் உருவாக்கினர். திருவள்ளுவர் யோகாவை தவம் அல்லது நோற்றல் என்றும், தியானத்தை மெய்யுணர்தல் என்றும் குறிப்பிட்டார். ஏதேனும் ஒன்றை அடைவதற்காகப் பட்டினி இருந்து வேண்டிக் கொள்வதை நோன்பு என்கிறோம்.
குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது. சிந்துவெளி முத்திரைகளில் யோக நிலைக் காட்சிகளும், தியான நிலைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சிந்துவெளி நாகரிகம் கி.மு. 7000 அளவில் அரும்பியது என்றும் கி.மு. 3000 அளவில் முதிர்ந்த நாகரிகமாயிற்று என்றும் கூறுகின்றனர். இதனால் தமிழரின் யோகா என்பது 5000 ஆண்டுகால பழமை உடையது என்பது உறுதிப்படுகிறது. இன்றைய கன்னியாகுமரிக்குத் தெற்கே கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் மாவிந்த மலை என்னும் மகேந்திர மலையில் கல்லால மரத்தின் கீழ் தியான நிலையில் தெற்கு நோக்கி அமர்ந்திருந்த சிவபெருமான் தமிழ் ஆகமங்களை அருளினார். இதனை மன்னுமாமலை மகேந்திரமதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும் என்று திருவாசகத்தில் மாணிக்க வாசகர் கூறியிருக்கின்றார். யோகாவும், தியானமும் வடமொழியில் அறிமுகமாயிற்று. ஆரியர் இந்தியாவுக்கு வந்த போது அவர்களிடம் எழுத்தறிவும் இலக்கியமும் இருந்ததில்லை. வடநாட்டில் அக் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பாணர்களின் பாட்டுச்சந்தங்களே வேதம் ஓதும் சந்தங்களாயின. சிந்துவெளி முத்திரையில் மாபாணன் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. இதனால் யோகாவும் தியானமும் தமிழரின் தனிச்சொத்து என்பதை எவரும் மறுக்க இயலாது.
நான் என்று சொல்லும்போது அது அழியும் உடலைக் குறிக்காமல், அழியாத உயிரைக் குறிக்கிறது. தியான நிலையில் கடவுளோடு கலக்கும் ஒளிவடிவாக இணைந்து விடுகிறது என்பதே நெற்றிச் சுழியில் நினைவை நிலைப்படுத்தும் யோகிகளின் கொள்கை. மனிதனின் விலங்கு உணர்வுகளை அடக்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த உள்ளுணர்வை மேலோங்கச் செய்வதால் இதனைப் பழந்தமிழர் தம் வாழ்வோடு இணைத்துக் கொண்டனர்.
கணவனும் மனைவியும் இனிய இல்லறம் நடத்தி, குழந்தைகளைப் பெற்று நல்லறம் காத்து, மூத்த வயதில் தவம் என்னும் துறவு நிலை மேற்கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். மனைவி மக்களை வீட்டில் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் காட்டுக்குச் சென்று, துறவு மேற்கொள்வது தகாது என்று தமிழர் கருதினர். இதனை, தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கி தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். திருவள்ளுவர் இல்லறத்துக்கு அடுத்து துறவறத்தை வற்புறுத்தியிருக்கிறார். இத்தகைய இல்லறத் துறவிகள் அந்தணர் எனப்பட்டனர். இவர்கள் பூணூல் அணிவதில்லை. ஒலைச் சுவடி, தண்ணீர்க்குடுவை யோக நிலையில் கையை ஊன்றிக் கொள்ளும் முத்தலைக்கோல், தவம் செய்யும்போது உட்காரும் மணை, ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வர். இதனை நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும்காலை அந்தணர்க்குரிய என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார்.
மேற்கண்ட வரலாற்று உண்மைகளால் யோகாக்கலை தமிழ்நாட்டில்தான் உருவாகியது என்பதும் இது உலகத்துக்குத் தமிழர் உவந்தளித்த ஒப்பற்ற நன்கொடை என்பதும் உலக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்க பெருமையுடையனவாகின்றன.
தமிழர் தம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளைத் தம்முடையவை என்று நிலைநாட்டத் தயங்க வேண்டியதில்லை.
யாகம் செய்தால் ஆரியர், யோகா செய்தால் தமிழர். இது உலகறிந்த உண்மை.
Tuesday, 3 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment