அடுக்குமாடி வீடா, தனி மனையா?
ஆனந்தர்
அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை, திருச்சி ஆகிய இரண்டாம் கட்ட மாநகரங்களுக்கும் இன்று பரவியிருக்கிறது. ஆனாலும் இன்னும் சிலருக்கு அடுக்குமாடிக் கலாச்சாரத்தில் ஓர் ஒவ்வாமை இருக்கவே செய்கிறது. அப்படிப்பட்டவர்கள் தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என மனை வாங்கி வீடு கட்டலாம் என நினைப்பார்கள். சிலர் மனையா, அடுக்குமாடி வீடா என்ற குழப்பத்தில் இருப்பார்கள். எது சிறந்தது என்ற கேள்வி எழும். இந்த இரண்டிலும் சில சாதகங்கள் உண்டு. பாதகங்கள் உண்டு. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து எது சிறந்தது எனத் தேர்வுசெய்யலாம்.
முதலில் மனை வாங்குவதில் சில அனுகூலங்களைப் பார்க்கலாம். நம் வசதிக்கு ஏற்பச் சிறியதாகவோ பெரியதாகவோ அதில் கட்டிடம் கட்டிக்கொள்ளலாம்.
சொந்த மனை என்பதால் நம் கனவுத் தோட்டத்தையும் வீட்டு மனையில் நிர்மாணிக்கலாம். மேலும் நம் மனையில் என்னென்ன செய்து பார்க்க விரும்புகிறோமோ அதை எந்தத் தடையும் இன்றி நிறைவேற்றலாம். வீட்டுமனையில் சில இடங்களை வாடகைக்கு விட்டு வருவாயைப் பெருக்கிக்கொள்ளலாம். மனை உள்ள பகுதியின் தன்மைக்கேற்ப கடைகள் மற்றும் வணிக வளாகங்களையும் கட்டலாம்.
மனை வாங்குவதில் உள்ள பாதகங்களைப் பார்ப்போம். ஒரு வீட்டு மனையை வாங்கும்போது சட்ட ரீதியாகப் பல சிக்கல்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். நில உரிமை தொடர்பான பத்திரம் தெளிவாகவும், வில்லங்கம் இல்லாமலும் இருத்தல் அவசியம். தாய்ப் பத்திரம் வில்லங்கம் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் வாங்கப்போகும் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டியது அவசியம். வாங்கப்போகும் மனையின் லே அவுட்டில் வழியும், சாலையும் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். மனை எந்த மண்டலத்தில் வருகிறது என்பதையும் பரிசீலிப்பது அவசியம். வர்த்தக மண்டலப் பகுதிக்கு உட்பட்டதெனில் அதைக் குடியிருப்பாகப் பயன்படுத்த முடியாது.
அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்குவதிலும் சில சாதகங்கள் உள்ளன. முக்கியமாக அடுக்குமாடி வீடுகள் பாதுகாப்புணர்வை அளிப்பவை. அரசு நடைமுறைகள் அனைத்தையும் கட்டுமான நிறுவனமே பார்த்துக்கொள்ளும். குறிப்பிட்ட வரைமுறைகளுக்குள் உங்களுக்குத் தேவையான மாறுதல்களைச் செய்துகொள்ள முடியும். பராமரிப்பு தொடர்பான கவலை தேவையில்லை.
அடுக்குமாடி வீடுகளைப் பொறுத்தவரை உங்களுக்கான இடம் என்பது வரைமுறைக்குட்பட்டது என்பதுதான் இதிலுள்ள முக்கியமான பாதகம். விரிவாக்கம் என்பது சாத்தியம் இல்லை. எந்த மாற்றம் வேண்டுமானாலும் அந்தப் பரப்பளவுக்குள்தான் செய்துகொள்ள முடியும். மற்ற குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்துதான் பொது இடத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒலி மாசுபாடு அதிகம். மற்ற தொந்தரவுகளும் உண்டு. உங்களது பால்கனி மட்டுமே உங்களுக்குரிய தோட்டமாக இருக்கும். உங்களுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு மட்டுமே விடமுடியும். அதன் மூலம் வருவாய் மட்டுமே சாத்தியம்.
Saturday, 23 June 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
-
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
-
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
-
ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி...! ராஜாஜி எச்.வி.ஹண்டே, முன்னாள் தமிழக சுகாதார அமைச்சர் இ ன்று (டிசம்பர் 10-ந்தேதி) ராஜாஜி பிறந்தநாள். 1...

No comments:
Post a Comment