அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல் | நிலத்தடி நீரை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதி நிலத்தின் வரைபடத்தை கொண்டு பாறைகளை அளவிட்டு, அவை எந்த வகையை சேர்ந்தவை என்று அறிந்து, பொருத்தமான தளங்களில் ஆழ்குழாய் தோண்டப்படுகிறது. பெரும்பாலும், சுண்ணாம்பு பாறைகள் உள்ள பகுதிகளில் அதிகமாக நிலத்தடி நீர் இருக்கும் சாத்தியம் உள்ளதால், நீரியல் நிபுணர்கள் அந்த இடங்களில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்க பரிந்துரை செய்கின்றனர். பூமியின் ஆழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நீரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டிய இடத்திற்கு அருகில் ஏற்கனவே உள்ள கிணறுகள் பற்றிய தகவல்களை அறிவார்கள். அதன் மூலம் கிணறுகளில் எவ்வகை பாறை படிமங்கள் அமைதிருக்கின்றன என்பதை அறிந்து, ஆழ்குழாய் கிணறு அமைத்தால் நீர் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக நீரியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அவர்கள், ஏரியல் (கிமீக்ஷீவீணீறீ) புகைப்படங்களை ஆய்வு செய்து, அதன் மூலம் பாறைப் படுகைகளை கண்டறிந்து அந்த பகுதியில் கிணறு அமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் கிடைக் கும் என்றும் தெரிவிக்கின்றனர். பொதுவாக, பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் பாறை இடுக்குகளில் இருப்பது இயற்கை. அதை கண்டுபிடிக்க பூமியில் ஆழ்துளை இடுவதன் மூலம் பூமியின் மாதிரிகள் அதாவது மண்ணின் தரத்தை துளை இயந்திரம் நமக்கு வெளிக்கொண்டு வந்து காட்டும். இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் இருக்குமா என்பதை கண்டறியலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்டவை தவிரவும், தற்போது வெவ்வேறு விதமான நவீன முறைகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
இந்திய திருநாட்டில் செந்தமிழ் பெயர்கள்...! பேராசிரியர் இரா.மதிவாணன் உ லகின் தொன்மையான மொழி, திராவிட மொழிகளில் தனித்து நிற்கும் மொழி என...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
சரித்திரம் படைத்த சத்ரபதி சிவாஜி | எழுத்தாளர் எம்.குமார் | இன்று (பிப்ரவரி 19) சத்ரபதி சிவாஜி பிறந்தநாள். | மராட்டிய மன்னர்களுள் ஒருவர...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...

No comments:
Post a Comment