அணு உலையின் தந்தை | அணு உலைக்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும், அணு என்பது அபாரமான சக்திதான். உலகின் முதல் அணு உலையை வடிவமைத்தவர் என்ரிக்கோ பெர்மி என்ற இத்தாலிய விஞ்ஞானி ஆவார். இவர் ரோம் நகரில் 1901-ம் ஆண்டு செப்டம்பர் 29-ல் பிறந்தார். பெர்மி தன் அண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்டவர். அவரது 14-வது வயதில் திடீரென்று அண்ணன் இறந்துவிட, பித்து பிடித்தவர் போல் ஆனார். தந்தை எவ்வளவோ சமாதானம் செய்தும், அண்ணன் இறந்த அதிர்ச்சியிலிருந்து பெர்மி மீளவில்லை. அந்த நிலையில்தான் பெர்மியிடம் ஒரு இயற்பியல் புத்தகம் கிடைத்தது. அதைப் படிக்க படிக்க அந்தத் துறையின் மீது அவருக்கு தீராத மோகம் ஏற்பட்டது. அதனால், உலகத்துக்கு தன்னால் இயன்ற ஒரு கண்டுபிடிப்பை தர வேண்டும் என்று உறுதி கொண்டார். தன்னுடைய 17-வது வயதில் பைசா நகர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். 26 வயதில் ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். வேலையின் ஊடே கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றை கட்டுரைகளாகவும் வெளியிட்டார். இந்த காலக்கட்டத்தில் தான் அணுக்களின் மையமான கருவை உடைக்கலாம் என்று ஸ்ட்ராஸ்மேன் என்ற அறிஞர் எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த பெர்மி, நியூட்ரானை உடைப்பது சாத்தியம் என்று கருதினார். அதன் விளைவாக உலகின் முதல் அணு உலையை உருவாக்கினார். அணுவின் மையமான நியூட்ரானை உடைத்தால் அது உடனே மேலும் சில அணுக்களையும், நியூட்ரான்களையும் உருவாக்கும். அப்படி புதிதாக உருவான அணுக்கள் உடையும்போது அவைகளும் புதிய அணுக்களை உற்பத்தி செய்யும். இது ஒரு சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து நடைபெறும். இப்படியே வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் அணுக்களை உடைத்து புதிய அணுக்களை உருவாக்கிக் கொண்டே இருந்தால் சக்தி வாய்ந்த அணு உலை உருவாகிவிடும் என்று முதன்முதலில் அறிவித்தவர் பெர்மி. அதனால் அவர் அணு உலையின் தந்தை என்று அழைக்கப்பட்டார். 1942 டிசம்பர் 2-ந்தேதி சிகாகோ பல்கலைக்கழக உலோகவியல் ஆய்வகத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனைக்கு முன்பே, பெர்மிக்கு 1938-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அணு உலைகள் நல்லதா, கெட்டதா என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும், மக்களை பாதிக்காத வகையில் பாதுகாப்பாக செயல்படுத்துவதே நல்லது.
Thursday 15 December 2016
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பேராசிரியர்.மா.ராமச்சந்திரன் ச மய சான்றோர் கூடி ஆராய்வதற்கு ஏதுவாக இருந்த இடத்தை நம் முன்னோர் பட்டிமண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்த அட...
-
சமூகப் புரட்சி செய்த ஞானி வள்ளலார் ராமலட்சுமி, வள்ளலார் ஏபிஜே அருள்கருணை சபை, மதுரை இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
-
தைப்பூசம் காணாதே போதியோ | By தி. இராசகோபாலன் | தமிழர்களுடைய வாழ்வில் பல விழாக்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆன்மிகத்தோடு தொடர்புடைய விழா தைப...
-
உடுமலை தந்த கவிமலை உடுமலை நாராயணகவி கவிஞர் பிரியன் நாளை (செப்டம்பர் 25-ந்தேதி) உடுமலை நாராயணகவி பிறந்த நாள். வாழும் வாழ்வு கடந்த...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், மரபணு வரிசை செய்யப்பட்ட இந்திய கரோனா நோயாளிகளில் சுமார் 41.2 சதவீதம் புதிய ஏ3ஐ (A3i)என்ற கி...
No comments:
Post a Comment