Tuesday 1 October 2019

டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் - இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதா..? 

டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் - இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதா..? 
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
சென்னை
இளைஞர்கள் மத்தியில் இன்று பரவ லாகப் பேசப்படுகிற செய்தி - குரூப் 2 தேர்வுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கும் புதிய பாடத் திட்டம். ஞாயிற்றுக்கிழமை மாலை ‘தி இந்து’ குழுமம் பதிப்பான ‘என்றும் காந்தி’ நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு தொடுத்த ஒரே வினா, ‘டிஎன்பிஎஸ்சி' புதிய பாடத் திட்டம் குறித்து ஏன் கட்டுரை எழுதவில்லை..?

இரண்டு உண்மைகள் புலப்பட்டன. நமது நாளிதழின் கருத்துக்கு, போட்டித் தேர்வுக்கு முனையும் இளைஞர்கள் அசாத்திய முக்கியத்துவம் தருகிறார்கள்; ஆணையம் அல்லது வேறு யாரும் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

தேர்வாணையம் ‘தெளிவான' விளக் கம் அளித்த பின்னரும் இந்த நிலை நீடிப்பது ஒரு வகையில் மன வருத்தம் தருவதாகத்தான் இருக்கிறது. அமைப்பு முறை மீது, ஆணையம் மீது, முழு நம் பிக்கை வையுங்கள் என்றுதான் இளை ஞர்களை நாம் வலியுறுத்துகிறோம்.

சரி... புதிய பாடத் திட்டம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது...? மொழித் தாளுக்கு என்று தனியே கேள்வித் தாள் இருக்கப் போவது இல்லை. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளுக்குமே இந்த நிலைதான்.

தமிழ் தெரியாதவர்கள் தேர்வு எழுது வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்வாணையம் கூறுகிறது. இது, ஒருபக்க உண்மை மட்டுமே. தமிழ் மொழித் தாளில் நன்றாக எழுதினால், தேர்ச்சி பெறுவது எளிது என்கிற தற் போதைய நடைமுறை இனி இருக்காது. இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகப் போவது, அநேகமாக, தமிழ் வழிப் பயின்ற கிராமத்து இளைஞர்கள்தாம். இதுதான், மறுபக்க உண்மை.

இவ்விரு உண்மைகளையும் சமன் செய்து பார்த்து, பாடத் திட்ட மாற்றம் குறித்த தீர்ப்புக்கு வருவதுதான் நியாயம் ஆகும். பயிற்சி மையங்கள், நகர்ப்புற மாணவர்கள், ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கிற ஒருவரின் அன்றாட வழிகாட்டுதல் பெறக்கூடிய ‘வசதி' கொண்டவர்கள், புதிய மாற்றத்தால் பெரிதும் பலன் அடையலாம்.

முதல் தலைமுறைப் பட்டதாரிகள், கிராமத்து எல்லைகளைத் தாண்டிச் செல்லாதவர்கள், கோரிக்கை மனுக்க ளுடன் அரசு அலுவலக வாசற் கதவு களில் கால்கடுக்க மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிற சாமான்யர்களின் பிள் ளைகள், கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். இது, மாற்றம் அன்று; மிகப் பெரிய ஏமாற்றம்.

பொது அறிவு (முதல் நிலைத்தேர்வு) - 10 அலகுகள் கொண்டுள்ளது.

I. பொது அறிவியல் பகுதியில், சுற்றுச் சூழல் மற்றும் சூழலியல் - கடைசி இடம் பிடித்து இருக்கிறது.

கேள்வித்தாளில் ஒருவேளை, முதலிடம் பிடிக்கலாம்.

III. இந்தியாவின் புவியியல் - போக்கு வரத்து - தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் - குறிப்பாக, இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல் என்று பயனுள்ள பல தலைப்புகள் வரவேற்கத் தக்கதாய் உள்ளன.

IV இந்தியாவின் வரலாறும் பண்பாடும் VII இந்திய தேசிய இயக்கம் - என்று வழக்கமான பகுதிகள் உள்ளன. அலகு VIII தமிழகத்தின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக இயக்கங்கள் பகுதி, ஓர் இன்ப அதிர்ச்சி தருகிறது.

உலகப் பொதுமறை திருக்குறள் - மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மன துக்கு இதமாக இருக்கிறது. பாராட்டுகள்.

முதன்மைத் தேர்விலும் இப்படித்தான். மிக நல்லது.

IX - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம். கவனிக்கவும் - வெறுமனே ‘நிர்வாகம்' அன்று; ‘வளர்ச்சி நிர்வாகம்'! ஆணையம், தன்னிச்சையாகத் தந்த தலைப்பு என்று நம்புகிறோம். இதில் ஒரு தலைப்பு - ‘தமிழகத்தில் மின்னாளுகை'! தவறு இல்லை. ஆனாலும்..... நிறைவாக அலகு X - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும். நன்கு வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.

இடையே, அலகு II நடப்பு நிகழ்வு கள், ஆட்சியியல் பகுதியில், பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம், நலன்சார் அரசுத் திட்டங்கள் முதலானவை, முறை யான பள்ளிப்பாடத்தை விட்டு விலகி நிற்பவை. கிராமப்புற சாமான்ய இளை ஞர்கள், ‘அனுபவரீதியாக' மட்டுமே கற்றுக்கொள்ள முடிகிற கசப்பான சங்கதிகள் இவை.

அலகு V இந்திய ஆட்சியியல் - லோக் ஆயுக்தா, தகவல் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள், மனித உரிமைகள் சாசனம் ஆகியன மிக நல்ல, ஆரோக்கியமான பகுதிகள்தாம். ஆனால் இவை எல்லாம், எமது கிராமப்புற இளைஞர்களுக்கு ‘அறிமுகம்' ஆகாதவை.

இவை எல்லாம் கூடப் பரவாயில்லை. ‘விரிவான எழுத்து தேர்வு' பகுதியின் தொடக்கமே அதிர்ச்சி தருகிறது. ‘தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல்', ‘ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்' எந்த வகையில் கிராமத்து இளைஞர்களுக்கு சாதகமான பகுதியாக இருக்கும்..?

தமிழகத்தில், தமிழக அரசுப் பணியில் சேர, ஆங்கில மொழிபெயர்ப்புத் திறன் என்ன அத்தனை அடிப்படைத் தகுதியா...? சத்தியமாகப் புரியவில்லை.

தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசு வதும் எழுவதும் தண்டனைக்கு உரிய குற்றமா என்ன...? பக்கத்தில் ஒரு தமிழ் - ஆங்கில அகராதி வைத்துக் கொண்டால் போகிறது. தேர்வின் போது, அகராதி தரப்படுமா..? இல்லைதானே...? பிறகு...? நம்முடைய பார்வையில், தமி ழக அரசுப் பணிக்கான போட்டித் தேர் வில், ஆங்கிலப் புலமை மிகவும் அத்தியா வசியம் ஆகிறது. ஒருவகையில், தமிழ் இளைஞர்கள் மீது ஆங்கிலம் திணிக்கப் படுகிறது. நம்முடைய கிராமத்து இளை ஞர்கள் இதனால் பலன் பெறுவார்கள் என்று நம்ப முடிகிறதா?

சுருக்கி வரைதல், பொருள் உணர் திறன், சுருக்கக் குறிப்பில் இருந்து விரிவாக் கம் செய்தல் ஆகியன, பொதுவாய் எல்லோருக்குமே சற்றே கடினமானதாக இருக்கலாம். தரப்படும் கேள்வியைப் பொறுத்து, கடினத் தன்மை மாறுபட லாம்.

தமிழகத்தின் இசை மரபு, நாடகக் கலை, சமூகப் பொருளாதார வரலாறு, பெண்ணியம், இக்காலத் தமிழ்மொழி ஆகிய பகுதிகள் உண்மையிலேயே ‘சபாஷ்' போட வைக்கின்றன.

ஆனாலும், ஏற்கெனவே தனியாக இருந்த மொழித்தாளைத் தக்க வைத்து இருக்கலாம். மேலும், தரமானதாக நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து இருக்கலாம். மொழி அறிவு, அதிலும் ‘உள்ளூர் மொழி' மாநில அரசுப் பணிகளில் மிக முக்கிய இடம் வகித்தாக வேண்டும். மாறாக, ‘உள்ளூர் அரசியல்' அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது.

‘உள்ளூர் மொழியில் உலக அறிவு' என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டிய ஆணையம், ‘உலக மொழியில் உள்ளூர் அரசியல்' திசையில் பயணித்து இருக்கிறது.

கேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத் திட்டம் இல்லை. ‘வழிகாட்டுதல்' தேவைப் படும் பகுதிகள், முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளில் அதிகம் உள்ளன. இது, ஆரோக்கியமான மாற்றம் இல்லை.

புதிய பாடத் திட்டம் சொல்லும் செய்தி....?

‘வடிகட்டுகிற' பணிதான் ஆணையத் தேர்வுகளின் பிரதான நோக்கம். ‘தேர்வு செய்வது' அல்ல.

ஏற்போர் - வாழ்க!

மறுப்போர் - எப்படியேனும் வாழ்க!!கேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத்திட்டம் இல்லை.

No comments:

Popular Posts