புத்தகம் சிறந்த நண்பன் தலை குனிந்து என்னை படித்தால் தலை நிமிர்ந்து வாழ வைப்பேன்- புத்தகம். இந்த வாசகத்தை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். வரலாறு, தொழில்நுட்பம், பொது அறிவு, கலை, மொழி, புராணம் என அனைத்து வகையான தகவல்களையும் புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ள முடியும். வாழ்வை நல்வழியில் கொண்டு செல்வதற்கு புத்தகம் ஒரு சிறந்த நண்பனாக திகழ்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 'காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் புத்தகம் திகழும்' என்று அறிஞர்கள் கூறுவார்கள். எனவே, இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் அறிவு விருத்தி அடையும். நமக்கு தேவையான, பயனுள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது முக்கியம். 'இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என்று கூறுவார்கள். அன்றைய தலைவர்கள் அதிகமான புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக வாழ்வில் உயர்ந்ததை யாராலும் மறுக்க முடியாது. எனவே பாடப்புத்தகங்கள், செல்போன்களை கடந்து புத்தகங்களை வாசிக்க பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தகங்கள் கிடைக்காமல் இளைஞர்கள் சிரமப்பட்டனர். ஆனால் இன்று நூலகங்களில் பல புத்தகங்கள் வாசிக்கப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது. உலகத்தை கைக்குள் கொண்டு வந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான தகவல்களை செல்போனில் தேடி எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் அவர்களுடைய புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கைவிட வைக்கிறது. ஆனால் தேவையானதை தேடும்போது முழுமையான தகவலை புத்தகம் கொடுக்கிறது. மேலும் சிலர் தேவையான புத்தகங்களை செல்போன், கணினியில் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் புத்தகத்தை நேரடியாக வாசிக்கும் அனுபவம் செல்போன், கணினியின் திரையில் வாசிக்கும்போது கிடைக்காது என்பதை உணர வேண்டும். எனவே, வாழ்வை நெறிப்படுத்தும் சிறந்த நண்பனை தேர்ந்தெடுப்போம்.
Wednesday, 24 January 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
- 
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
- 
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
- 
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
- 
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
- 
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
- 
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
- 
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
- 
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
- 
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
- 
ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி...! ராஜாஜி எச்.வி.ஹண்டே, முன்னாள் தமிழக சுகாதார அமைச்சர் இ ன்று (டிசம்பர் 10-ந்தேதி) ராஜாஜி பிறந்தநாள். 1...

 
 
 
 
 
 
No comments:
Post a Comment