ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் | ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இமாலய அளவில் உள்ளது. இது ஆண்டுக்காண்டு ஒரு உன்னத நிலையை எட்டி பிடித்து ஸ்மார்ட் போன்கள் மீதான மக்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஸ்மார்ட்போன்கள் பேசுவதற்கும், சமூக தளங்களில் இயங்குவதற்கு என்பது மட்டுமல்லாது சிறு நிறுவனங்களின் வளர்ச்சி, பாதுகாப்பு அம்சங்கள், ஆப்ஸ்களின் மூலமான பெரும் வளர்ச்சி, சிறப்புமிகு இடந்தேடல் என பல முன்னேற்ற அம்சங்களை கொண்டு மக்களுடன் இணைந்த நபராய் உள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அடுத்த கட்டம் நோக்கி பயணிக்கிறது. ஆம் அடுத்த ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட போகும் சில மாற்றங்களை ஆராயும்போது அதன்மீது அதிக ஆர்வமும், கூடுதல் கவன ஈர்ப்பும் ஏற்படுகிறது. மின்னணு அதிர்வலை தொழில்நுட்பத்தின் மூலமாக தொடுதிரை அனுபவம் என்பது முற்றிலுமாக மாறுபடும். நாம் எதனை எண்ணி கொண்டு ஸ்மார்ட்போனை தொடுகிறோமோ அது அங்கே காட்சியாக விரியும். ஆம் ஷாப்பிங் செய்ய வேண்டும் என நினைத்தால் ஷாப்பிங் இணையதள முகவரிகள் மற்றும் நிறுவனங்கள் பகுதி செல்லும். அதுபோல் நாம் என்ன பொருள் ஆடையா, காலணியா, ஸ்மார்ட்போனா என்று எதை நினைத்து தொடுகிறோமோ அதற்கு ஏற்ப செயல்படும். நாம் நினைத்து செயல்பட்டு தொடுதிரை ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் முன் மின்னணு அதிர்வலை வாயிலாக நாம் தொடும்போது எலக்ட்ரோ ஸ்டிக் அதிர்வுகள் மூளைக்குள் பாய்ந்து நமது எண்ணங்களை வாங்கி உடனடியாக ஸ்மார்ட் போனுக்கு தகவல்களை தருகிறது. எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்து டிஸ்னி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள ஏற்கனவே பலவித ஆய்வுகள் மேற்கொண்டு அதனை செயல்படுத்த பல அமைப்புகளை அமைத்துள்ளன. அதுபோல் ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்தான சில உரிமங்களையும் பதிவு செய்து உள்ளன. ஸ்பீச்-டூ-ஸ்பீச் என்பது 2012-ல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய போதும் தற்போது தான் பன்மொழி கான்ப்ரன்ஸ் கால்கள் என்பது வணிக ரீதியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது இன்னும் முன்னேற்றம் பெற்று பல நாட்டு மக்களும் முக்கியமான விஷயங்களை எந்தவொரு மொழி பெயர்ப்பான் மற்றும் மீடியேட்டர் உதவியின்றி தங்களது மொழியில் விஷயங்களை அறிய இது உதவிகரமாக இருக்கும். நெகிழ் தன்மையுடன் மற்றும் உபயோகத்திற்கு தேவையான அளவில் மாற்றம் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்கள். அதாவது மடித்து இயக்க கூடியவாறும், சுருக்க திலையில் சிறியதாக மாற்றி பின் பெரிய அளவில் விரிய செய்யக் கூடிய ஸ்மார்ட்போன்கள் வரபோகின்றன. OLED எனும் தொழில்நுட்பம் வாயிலாக ஸ்மார்ட்போன் காட்சி திரைகளை சுருட்டலாம். மடக்கலாம், சுருக்கலாம். எனவே வேண்டும்போது பெரிய காட்சி தரையில் படம் பார்ப்பது. பிறகு மடித்து சிறியதாக வைத்து கொள்வது. அதுபோல் இருபக்க காட்சி திரை கொண்ட செயல்பாடு. நாம் நமக்கு பிடித்ததை பார்க்க மறுபுறம் நமது நண்பர் பிற தேடல்களை நிகழ்த்தும் வகையிலான வசதியமைப்பு. ஏற்கனவே ஸ்மார்ட் வளர்ச்சிகளின் வளைய கூடிய அமைப்பு திறம்பட இயங்கிட அடுத்து ஸ்மார்ட் போன்களின் உருவ ரீதியிலான நெகிழ்வும் கைகூட போகிறது. பலதரப்பட்ட பணிகளை ஸ்மார்ட் போனில் செய்ய வேண்டி இருப்பதால் உடனுக்குடன் பேட்டரி சார்ஜ் போய்விடுகிறது. இதற்கான பிரத்யேகமான அல்ட்ரா-ராபீட் சார்ஜர் வரபோகிறது. இதன் மூலம் 30 செகண்டில் முழு பேட்டரியும் சார்ஜ் செய்யப்பட்டு விடும். இவை அனைத்தும் கூடிய விரைவில் ஸ்மார்ட்போன் உலகின் தொழில்நுட்ப வசதிகளாய் நுழைய போகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பேராசிரியர்.மா.ராமச்சந்திரன் ச மய சான்றோர் கூடி ஆராய்வதற்கு ஏதுவாக இருந்த இடத்தை நம் முன்னோர் பட்டிமண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்த அட...
-
சமூகப் புரட்சி செய்த ஞானி வள்ளலார் ராமலட்சுமி, வள்ளலார் ஏபிஜே அருள்கருணை சபை, மதுரை இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
-
தைப்பூசம் காணாதே போதியோ | By தி. இராசகோபாலன் | தமிழர்களுடைய வாழ்வில் பல விழாக்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆன்மிகத்தோடு தொடர்புடைய விழா தைப...
-
உடுமலை தந்த கவிமலை உடுமலை நாராயணகவி கவிஞர் பிரியன் நாளை (செப்டம்பர் 25-ந்தேதி) உடுமலை நாராயணகவி பிறந்த நாள். வாழும் வாழ்வு கடந்த...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், மரபணு வரிசை செய்யப்பட்ட இந்திய கரோனா நோயாளிகளில் சுமார் 41.2 சதவீதம் புதிய ஏ3ஐ (A3i)என்ற கி...
No comments:
Post a Comment