Thursday 26 March 2020

கரோனா நோய் பரவும் நிலை

முதல் நிலை 1⃣st stage
கொரோனா பரவி வரும் நாடுகளில் இருந்து
இங்கே வந்தவர்களிடம் தொற்று காணப்படுவது
இதை IMPORTATION என்போம்
தொற்று நோய் இறக்குமதி என்று பொருள்.

இதற்கடுத்த நிலை

இரண்டாம் நிலை 2⃣nd  stage
கொரோனா தொற்று கண்ட இறக்குமதி செய்யப்பட்ட தொற்று நோயாளர்களிடம் இருந்து இங்கிருக்கும் ஆரோக்கியமான நபர்களுக்கு தொற்று பரவுவதாகும்

இதை PERSON TO PERSON TRANSMISSION என்போம்

அடுத்த நிலை

மூன்றாம் நிலை 3⃣red stage

சமூகத்தில் கொரோனா தொற்று பெற்ற ஒருவர் , இதற்கு முன் கொரோனா பரவி வரும் எந்த நாட்டிற்கும்/ஊருக்கும் பயணம் செய்யாமலும்/ உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இல்லாமலும் வருவது

இதை COMMUNITY SPREAD என்று சொல்வோம்

அதாவது யாரிடம் இருந்து நோயை வாங்கினார் என்று தெரியாத காரணத்தால்
சமூகத்திடம் இருந்து வாங்கியுள்ளார் என்று பொருள் படும்.

இவருக்கு நோயை பரப்பிய அந்த X இன்னும் கண்டறியப்படாமல் சமூகத்தில் இன்னும் பலருக்கு நோயை பரப்பிக்கொண்டிருக்கிறார்.

மற்றும் அவரால் பாதிப்படைந்த மக்கள்
நோயின் காத்திருப்பு காலம் முடிந்ததும் அவர்களும் நோயை அடுத்தவர்களுக்கு பரப்புவார்கள்

இதைத்தான் மின்னல் வேகப்பரவல் என்று கூறுகிறோம்

இந்த நிலையை எட்டிய கொள்ளை நோயானது Exponential Growth ஐ அடையும்

அதாவது பத்து நோயாளிகள் இப்போது இருந்தால்
அடுத்த பத்து நாட்களில் பத்தாயிரம் நோயாளிகளாக மாறக்கூடும்

இதற்கடுத்த நான்காவது நிலை 4⃣th stage

கொள்ளை நோய் உருவாகி பற்றி எரிய ஆரம்பிக்கும்
அதன் தாக்கத்தை நிறுத்துவது என்பது இம்மண்ணில் யாராலும் இயலாது

அதுவாகவே எப்படி பஞ்சை தீ ஆட்கொண்டு முழுவதையும் எரித்து பின் அணைகிறதோ

அது போல மக்களிடம் பரவி கிட்டத்தட்ட அனைவரையும் ஆட்கொண்டு  பிறகு அணையும்

இந்த நான்காவது நிலையை "காட்டுத்தீயுடன்" ஒப்பிடலாம் 

இந்த நான்காவது கட்டத்தை எட்டுவதற்கு நமக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன

இதை தடுப்பதற்கு நமக்கு முன் இருக்கும் ஒரே ஒரே ஒரே
வழி

சமூகமாக தனித்திருத்தல்

மூன்றாவது நிலையில் கூறினேன் அல்லவா

அந்த நோய் தொற்று பெற்ற நபர்களிடம் இருந்து நோய் தொற்று பெறாதவர்களுக்கு நோயை கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்

இதை தான் பரவும் சங்கிலியை உடைத்தல் என்று கூறுவோம்

தயவு செய்து கூறுகிறேன்

மிகவும் அபாயகரமான சூழலில் இருப்பதால்
யாரும் வெளியே செல்ல வேண்டாம்

தயவு செய்து வீட்டில் இருங்கள்

இந்த கொள்ளை நோயை நாம் நான்காம் நிலைக்கு செல்லாமல் தடுத்திட வேண்டும்.

தனித்திரு
விழித்திரு

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்

No comments:

Popular Posts