Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சொத்துக்களின் உரிமையை குறிப்பிடும் சொத்து வரி ரசீது

வீடுகள் மற்றும் குடியிருப்புகள் வாங்கப்படும் சமயத்தில் அதற்கான பதிவுக் கட்டணங்கள் மற்றும் முத்திரைக் கட்டணங்கள் ஆகியவை செலுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து சொத்திற்கான வரியை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செலுத்தப்படுவது அவசியம். பல்வேறு சேவைகள் சுற்றுப்புறத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தூய்மை, சுகாதாரம், பூச்சிகள் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சேவைகளை வழங்க ஊராட்சி அல்லது நகராட்சிகள் இத்தகைய வரி வசூல் பல்வேறு சேவைகளை அளிக்கின்றன. தவறாது செலுத்த வேண்டும் ஏதேனும் காரணங்களால் சொத்து வரி செலுத்தப்படாத நிலைகளில் நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கான இணைப்பு உள்ளிட்ட சில சேவைகளை வழங்க மறுக்கலாம். அதனால், வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருக்கும் பட்சத்திலும், சொத்து வரிகளை சரிவர செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சொத்துவரிக் கணக்கீடு சொத்துவரி விதிப்பு என்பது நகர் மன்ற நிர்வாக முடிவின் அடிப்படையில் சொத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டிய கட்டணமானது கீழ்க்கண்ட அடிப்படைகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது. * சொத்து அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அளவுகள். * சொத்தின் நிலையானது, குடியேறும் நிலையில் உள்ளதா அல்லது கட்டுமான பணிகள் நடந்து கொண்டுள்ளதா என்பதை பொறுத்தும் வரிவிதிப்பு அமையும். * சொத்தின் உரிமையாளர் ஆணா அல்லது பெண்ணா என்ற நிலையும் வரி விதிப்பில் கணக்கில் கொள்ளப்படுகிறது. பெண்ணாக இருக்கும் பட்சத்தில் வரி விதிப்பில் சில தள்ளுபடிகள் அளிக்கப்படும். * சொத்து உரிமையாளர் மூத்த குடிமக்களாக இருந்தால் சில பொருந்தக் கூடிய தள்ளுபடிகளும் தரப்படுகிறது. * நகராட்சி மன்ற நிர்வாகத்தால் அளிக்கப்படும் குடியிருப்புகளுக்கான பல்வேறு வசதிகளையும் கணக்கில் கொண்டு கட்டணத்திற்கான சலுகைகள் தீர்மானிக்கப்படும். உரிமைக்கான ஆதாரம் சமீப காலங்களில், சொத்து வரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சொத்துக்களுக்கான மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்து வரியின் மதிப்பு தீர்மானம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சொத்து ஒருவருக்கு சொந்தம் என்பதை தீர்மானிப்பதில் சொத்து வரி செலுத்திய ரசீதும் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் சொத்தின் உரிமையாளர் யாரென்பதையும் சொத்து வரி செலுத்திய ரசீது தீர்மானிக்கிறது. மேலும், சொத்துக்களின் மீது வங்கிக்கடன் பெறுவதற்கான ஆவணங்களில் சொத்து வரி செலுத்திய ரசீதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து வரி விலக்கு தொழுகைக்காக பயன்படுத்தும் காலி இடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சொத்து வரி கிடையாது.

கல்விச்சோலை - kalvisolai Articles

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement