Tuesday 31 January 2017

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும்.இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். மேலும் வாஸ்து மற்று ம் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ் களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமை யாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்து ள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்
1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.
2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து  சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.
4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.
5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.
6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.
7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்  தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.
8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.
9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.
10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.
11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்
12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.
13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.
14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.

வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.
விதிமுறை 1
முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனை
வாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.
விதிமுறை 2
மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதியுள்ளேன்.
6-8-10-11-16-17-20-21-22-26-27-28-29-30-32-33-35-36-37-39-41-42-45-50-52-54-56-59-60-64-66-68-71-72-73-74-75-77-79-80-84-85-88-89-90-91-92-94-95-97-99-100 இவை அனைத்தும் அறைகளின் உள் அளவுகளாக அமைக்க வேண்டும்.இருந்தாலும் நம்மிடம் உள்ள இடத்திற்கு சரியாக இந்த அளவு வராத நிலையில் மூன்று அங்குலம் கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம்.
விதி முறை 3
அறைகளின் நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் அமைக்க வேண்டும். அதில் யோகம் தரும் சில நீள அகல முறைகள் , 6 அடி அகலம் 8 அடி நீளமும் , 8அடி அகலம் 10 அடி நீளமும், 10 அடி அகலம் 16 அடி நீளமும் , 16 அடி அகலம் 21 அடி நீளமும் , 21 அடி அகலம் 30 அடி நீளமும் , 30 அடி அகலம் 37 அடி நீளமும் , 37 அடி அகலம் 50 அடி நீளமும் , 39 அடி அகலம் 59அடி நீளமும் , 42 அடி அகலம் 59 அடி நீளமும் , 50 அடி அகலம் 73 அடி நீளமும் , 60 அடி அகலம் 80 அடி நீளமும் , இதில் காட்டியது போல் சரியான அளவில் அறைகள் அமைத்தால் மிகவும் யோகம் தரும். இந்த அளவுகள் தவீர விதிமுறை 1 ல் கூறிய மற்ற மனையடி அளவுகள் கொண்டும் அறைகள் அமைக்கலாம். அது சுமாரான பலங்களைத் தரும்.
விதிமுறை 4
6 அடிக்கு குறைவாக கழிவறை குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற அறைகள் அமைக்கக் கூடாது. கட்டிடத்திற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடைவெளி விடும் போது குறைந்த பட்சம் 3 அடியும் அதற்குமேல் போகும்போது விதிமுறை 1 ல் கூறியுள்ள படி யோகம் தரும் அடிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் .
விதிமுறை 5
போர் அல்லது கிணறு வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது.நாம் கட்டிடம் கட்டும் இடத்தில் எட்டு திசையில் எந்த பாகத்தில் நீரோட்டம் இருந்தாலும் வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது நீரோட்டம் பள்ளத்தை நோக்கி பாய ஆரம்பித்துவிடும். அதனால் கண்டிப்பாக வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் போர் அல்லது கிணறு அமைக்கவும்.எல்லாவிதமான கட்டிடத்திற்கும் இது பொதுவானது.ஆனால் விவசாய நிலத்திற்கு இது பொருந்தாது.விவசாய நிலத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது அருகில் உள்ள மனையடி சாஸ்திரம் வாஸ்து அறிந்தவரின் ஆலோசனைப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.
விதிமுறை 6
கழிவு அறை படுக்கை அறையில் வாயு பாகத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் கழிவுத் தொட்டி மொத்த கட்டிடத்தின் வாயு பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற திசைகள் ஆகாது. கழிவுத் தொட்டிக்கு மேலையும் கழிவறை அமைத்துக் கொள்ளலாம்.
விதிமுறை 7
எந்த திசை தலவாசல் வீடாக இருந்தாலும் சமையலறை மொத்த வீட்டின் அக்னிப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . மற்ற திசைகள் ஆகாது.சமையல் செய்பவர் கிழக்கு பார்த்து நின்று சமையல் செய்யுமாறு சமையல் மேடை அமைத்துக் கொள்ளவும்.மற்ற திசைகள் பார்த்து நின்று சமையல் செய்யக் கூடாது.
விதிமுறை 8
மாடிப்படிகள் மேற்குப் பாகம் அல்லது தெற்குப்பாகம் அல்லது கன்னி பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் . மற்ற திசைகளில் அமைக்கக் கூடாது . படியில் ஏறும் பொழுது மேற்கு பார்த்து அல்லது தெற்கு பார்த்து ஏறும் வண்ணம் முதல் படியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறை 9
எந்த திசை தலவாசல் கொண்ட வீடாக இருந்தாலும் ஈசான்ய அறை பெரிய சன்னல்கள் பயன்படுத்தி கட்ட வேண்டும்.அந்த அறையில் கனம் கொண்ட பொருட்கள் வைத்து அடைத்து வைக்கக் கூடாது. படுக்கை அறையாகவும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் பெரியவர்கள் படிக்கும் அறையாக பயன்படுத்தலாம்.நல்ல கல்வி வளம் பெருகும்.அந்த அறை கோவிலைப்போல் எப்பவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அந்த அறையில் கிழக்குப் பார்த்து சாமிப் படங்கள் வைத்து பூஜை அறையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விதிமுறை 10
படுக்கை அறை மேற்குப் பாகம் அல்லது தெற்குப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . சிறிய வீடு என்றால் கன்னி பாகம் அல்லது வாயுப்பாகத்தில் அமைத்துக்கொள்ளலாம்.தெற்கு அல்லது மேற்கு மட்டுமே தலை வைத்து படுக்கும் வண்ணம் படுக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறை 11
பலமாடிகள் கட்ட வேண்டும் என்றால் கீழ் தளத்தின் உயரத்தைவிட மேல் தள உயரம் குறைந்தப்பட்சம் ஒரு அடியாவது குறைவாக உள்ளவாறு அமைக்க வேண்டும்.
விதிமுறை 12
தண்ணீர்த் தொட்டி தரையில் அல்லது தரைக்குக் கீழ் அமைக்க வேண்டும் என்றால் வடக்கு பாகம் ஈசான்ய பாகம் கிழக்கு பாகம் ஆகியவற்றில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற பாகங்களில் அமைக்கக் கூடாது. வீட்டின் மேல் அமைக்க வேண்டும் என்றால் மேற்குப்பாகம் அல்லது தெற்குப்பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் . மற்ற பாகங்களில் அமைக்க கூடாது . கண்டிப்பாக கன்னி பாகத்தில் அமைக்கக் கூடாது.
விமுறை 13
எந்த திசையில் தல வாசல் அமைந்தாலும் தல வாசல் அமைக்கும் அறையில் சரியாக நடுப்பாகத்தில் வாசல் நிலை அமையுமாறு அமைக்க வேண்டும். நிலைக்கு இரு புறமும் சன்னல்கள் கண்டிப்பாக அமைக்க வேண்டும்.வீட்டின் உள்ளே உள்ள அறைகளில் வசதிக்கு தகுந்தவாறு வாசல் அமைத்துக் கொள்ளலாம். கதவு நிலை இல்லாமல் எந்த அறையும் அமைக்கக் கூடாது.
விதிமுறை 14
வீட்டின் நிலை ,சன்னல், கதவுகள் ஒரே ஜாதி மரத்தில் அமைத்துக் கொள்வது மிகவும் யோகம் தரும்.இரு ஜாதி மரங்களில் அமைத்துக் கொள்வதும் மிகவும் யோகம் தரும்.கண்டிப்பாக இரு ஜாதி மரங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அது மிகப்பெரிய கெடுதல் செய்யும் . கவனம் தேவை.
விதிமுறை 15
வீட்டிற்கு எந்த பாகத்திலும் பொதுச்சுவர் வரக்கூடாது . காம்பவுண்ட் சுவராக இருந்தால் தெற்கு அல்லது மேற்குப் பாகத்தில் மட்டும் பொதுச் சுவர் வரலாம். கண்டிப்பாக வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில் பொதுச்சுவர் அமையக்கூடாது. தொழிற்கூடம் , வியாபார இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
விதிமுறை 16
வியாபார ஸ்தலம் தொழிற்கூடத்திற்கு தலவாசல் மேற்கு அல்லது தெற்கு பார்த்து அமைத்தல் மிகவும் யோகம் தரும். மற்ற திசைகள் சுமாரான யோகம் தரும்.வீடு என்றால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து தலவாசல் அமைத்தால் மிகவும் யோகம் தரும். கிழக்குப் பார்த்து தலவாசல் அமைத்தால் சுமாரான யோகம் தரும் . மேற்குப் பார்த்து வீடுகளுக்கு தலவாசல் அமைக்கக் கூடாது.
விதிமுறை 17
கிழக்கு பார்த்த கோவிலும், மேற்கு பார்த்த அன்னதானக் கூடமும், வடக்கு பார்த்த பொது சத்திரங்களும் , மேற்கு தெற்கு பார்த்த வியாபார தொழிற்கூடங்களும் , வடக்கு தெற்கு பார்த்த வீடுகளும் அமைத்துக்கொள்வது மிகவும் யோகம் தரும்.
விதிமுறை 18
வீடு வியாபார ஸ்தலம் தொழிற்கூடம் இவை அனைத்திலும் எல்லா பாகத்து அறையிலும் பூஜை அறைகள் அமைத்துக் கொள்ளலாம். சுவாமிகள் படம் கிழக்குப் பார்த்து அமைக்க வேண்டும். சுவாமியின் படத்திற்கு இடது பாகத்தில் விளக்கு வைக்க வேண்டும். வீடாக இருந்தாலும் வியாபார ஸ்தலமாக இருந்தாலும் தொழிற்கூடமாக இருந்தாலும் மாலை 5.45 க்கு மேல் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி 45 நிமிடங்கள் பாதுகாப்பாக தீபம் எரியும் வண்ணம் தினசரி வழிபட மஹாலட்சுமி யோகம் அமையும்.எந்த் கட்டிடமாக இருந்தாலும் புதுமனை புகும் போது கண்டிப்பாக கணபதி ஹோமம் செய்ய வேண்டும். பின்பு அதே மாதத்தில் ஆண்டுக்கொருமுறை கணபதி ஹோமம் செய்து வர பலவித யோகங்களை பெறலாம்.

புதிய வீடு கட்டுபவர்கள் மேலே உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்தி 100% வாஸ்து பலமுள்ள வீட்டை அமைத்துக்கொள்ளவும்.பழைய வீட்டில் உள்ளவர்கள் இதில் உள்ள படி மாற்றம் செய்து கொள்ளவும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 17 January 2017

தேசிய இளைஞர் தினம் | எப்படிப்பட்ட 100 இளைஞர்கள்?

தேசிய இளைஞர் தினம் | எப்படிப்பட்ட 100 இளைஞர்கள்? | ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமாக இருக்க முடியும்? அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொன்னார்? அவருடைய வழிகாட்டுதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பொருந்துமா என்பதை போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா! எல்லாரையும்விட இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார் விவேகானந்தர். "துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல" என்றார் அவர். ஆன்மிகத்தைக் கடந்தும் உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத் திறன் மேம்பாடு குறித்துத் தொடர்ந்து அவர் பேசினார். சொல்லப்போனால் விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகி ஆகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர் செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார். அறிவுத் திறனை நாடு! கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர். "வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி" என்றவர், தேசியக் கல்விக் கொள்கையானது, "மதச்சார்பின்மையோடு சமய நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார். "வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி" என்றார். உடல் ஆரோக்கியத்தைத் தேடு! வாழ்க்கையில் எத்தகைய உயரத்தை எட்டினாலும் அர்த்தமுள்ளதாக அதை மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும் என்றார் விவேகானந்தர். அதற்கு முதல் கட்டமான அச்சம் தவிர்க்கச் சொன்னார். "எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே!" என்று அறைகூவல் விடுத்தார்.  இங்குத் தெய்வீகத் தன்மை என்கிற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இது முழுக்க முழுக்க ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான பொன்மொழியே. நிச்சயமாக இந்த வரிகள் இளைஞர்களுக்கு எக்காலமும் பொருந்தும், உத்வேகம் ஊட்டும். மனவலிமையை மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தி அவர் உரையாற்றினார். "கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்" என்கிற வரி, அவர் எத்தனை யதார்த்தமாக யோசிக்கக்கூடியவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் ஆன்மிகவாதியாக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் ஒருவர், அதைவிடவும் நிதர்சன உலகுக்கு முக்கியத்துவம் தருவது ஆச்சரியமளிக்கிறது. 'இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்' என அவர் தொடர்ந்து போதித்தார். 'பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்' என்பதைத் தூக்கிப்பிடித்தார். சமூகப் பொறுப்போடு செயல்படு! சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதினார் விவேகானந்தர். "அற்புதமான தாய்நாடு இந்தியா என்கிற சிந்தனையைத் தவிர, அத்தனை கடவுளர்களும் நம் மனதிலிருந்து மறைந்து போகட்டும்.- அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்முடைய தொடக்க உரை இதுவே" என்றார். மனதைச் சுத்தப்படுத்திச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க அழைப்புவிடுத்தார். "நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே! பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்" என்றார். அவர் சுட்டிக்காட்டும் சக மனிதர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும் சாமானியர்களும்தான். சொல்லப்போனால், சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தித் தொடர்ந்து அவர் மக்களிடம் பேசினார். "எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்" என எழுச்சி உரை ஆற்றினார். இதில் கவனிக்க வேண்டியது. விவேகானந்தர் ஏதோ 100 இளைஞர்களைக் கேட்கவில்லை. வலிமை மிகுந்த, நம்பத்தகுந்த எனும்போது அங்கு உடல் பலம், சிந்தனை வளம், கொள்கையில் உறுதி உடைய இளைஞர்களையே அவர் தேடினார். அப்போதுதான் புரட்சி சாத்தியம் என்று குரல் எழுப்பினார். இப்படி எது கல்வி என்பதில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம் என்பதுவரை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் விவேகானந்தர். ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை ஆன்மிகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 8 January 2017

சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

கடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது. வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என அத்தனைக்கும் கடன்தான். இந்தக் கடன்களுக்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது சிபில் ஸ்கோர். சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால்தான் ஒருவருக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும். எனவே, சிபில் ஸ்கோரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

சிபில் என்றால்..?
சிபில் என்பது Credit Information Bureau (India) Ltd என்பதன் சுருக்கம். சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை, கடன் வழங்கிய வங்கிகள் சிபில் அமைப்புக்கு தெரிவிக்கும். இந்த தகவல்களை சிபில் அமைப்பு சேமித்து வைக்கும். இதனால் கடன் வாங்கு பவர்கள் சரியாக பணத்தை திரும்ப செலுத்துகிறார்களா என்பதைத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.

ஏன் சிபில்?
இன்றைய காலகட்டத்தில் பலரும் கடன் வாங்கியே தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பல தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இப்படி வாங்கும் கடனை எப்படித் திரும்பச் செலுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் அடுத்து அவர்களுக்கு கடன் கிடைக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனை ஒருவர் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், அடுத்து வங்கியிலோ அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் கடன் வாங்க நினைப்பவர் அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தவிர, கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை எனில், வங்கியின் வாராக் கடன் அதிகரித்துவிடும். எனவே, வாங்கிய கடனை  சரியாக திரும்பக் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே கடன் தர வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் ஸ்கோர்!
கடன் வாங்குபவர்கள் கடனை திரும்பச் செலுத்துவதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படுகிறது. அதாவது, எந்தவிதமான கடனை வாங்கியிருந்தாலும், கடனுக்கான இஎம்ஐ தொகையை சரியான தேதியில் திரும்பச் செலுத்துகிறார்களா என்பதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும். குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான இஎம்ஐ தொகையை ஒருமுறை சரியாகச் செலுத்தவில்லை என்றால்கூட அதனுடைய பாதிப்பு கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

எந்த வகையான கடன்?
நீங்கள் வாங்கும் கடனின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, சொத்து உருவாக்குவதற்காகக் கடன் வாங்கும்போது அதற்கான வெயிட்டேஜ் அதிகமாக இருக்கும். ஏனெனில் கடன் வாங்கியவர் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், சொத்துகளை முடக்க முடியும். எனவே, வங்கிக்குப் பெரிய பாதிப்பு இருக்காது. வீட்டுக் கடன், வாகனக் கடன், அடமானக் கடன் போன்றவை இதில் அடங்கும். அதே தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன்கள் சொத்து உருவாக்க உதவாது. எனவே, இதற்கான வெயிட்டேஜ் குறைவாக இருக்கும். இதில் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லையெனில், வங்கிக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கடனின் கால அளவும், தொகையும்!
கடன் கால அளவின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, வீட்டுக் கடன் நீண்ட காலத்தில் இருக்கும். எனவே, இஎம்ஐ தொகை குறைவாக இருக்கும். நீண்ட காலத்தில் வருமானம் உயரும்போது எளிதாகக் கடனை அடைக்க முடியும்.கடன் தொகையின் அளவானது கடன் வாங்குபவரின் சம்பள தொகையில் அதிகபட்சம் 60% அளவுக்கே இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் தொகை அதிகரிக்கும்போது, அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரிதிபலிக்கும். மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்படும். அதாவது, கிரெடிட் கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்திவிட்டு, பில் தொகையில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது முற்றிலும் தவறு. நீங்கள் எப்போதுமே கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கும்.

அடுத்தடுத்து கடன் வாங்கக் கூடாது!
கடன் தேவைப்படுவர்கள் ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து அங்குக் கிடைக்க வில்லை என்றால் உடனே அடுத்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வது தவறுஅதேபோல, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பம் செய்வதும் தவறு. ஏனெனில் கடன் கிடைக்காது எனத் தெரிந்தும் விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றே வங்கிகள் எண்ணும். இதனால் உங்களுக்குக் கடன் கிடைக்காமல் போவதுடன், கிரெடிட் ஸ்கோரும் குறைய வாய்ப்புள்ளது. வங்கிக் கடன் அல்லது கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்து ஆறு மாதம் கழித்துத்தான் அடுத்தக் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கடனை முடித்தபிறகு!
வங்கிக் கடனை சரியாகத் திரும்பச் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது சிபில் ரிப்போர்ட் எடுப்பது. கடனை கட்டி முடித்த 3 - 6 மாதங்கள் கழித்து சிபில் ரிப்போர்ட்டுக்கு விண்ணப்பித்து சிபில் ஸ்கோர் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சில நேரங்களில் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தாமல் அல்லது முன்கூட்டியே கடனைக் கட்டி முடித்து இருப்போம். எனவே, அந்தச் சமயத்தில் எல்லாம் உங்களின் சிபில் ரிப்போர்ட்டுக்குத் தேவையான தகவல்களை வங்கி சரியாக அளித்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.சிபில் ரிப்போர்ட்டில் உள்ள எந்தத் தகவலையும் தனிநபரால் மாற்ற இயலாது. ஒருவேளை வங்கியின் கவனக்குறைவு அல்லது வேறு காரணங்களினால் சிபில் ரிப்போர்ட்டில் தகவல்கள் தவறாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, கடனை முடித்தவுடன் சிபில் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்து, அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை வங்கியுடன் பேசி திருத்த முயற்சிக்கலாம்.

எதற்கு, எவ்வளவு வெயிட்டேஜ்?
கடனை திரும்பச் செலுத்தும் முறையில், உங்களின் நடவடிக்கைக்கு 30 சதவிகிதமும், எந்த வகையான கடன், கடனின் கால அளவு ஆகியவைக்கு 25 சதவிகிதமும், சம்பளத்துக்கும், கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசத்துக்கு 25 சதவிகிதமும், கடன் வாங்க முயற்சி செய்யும் முறை, கிரெடிட் கார்டு லிமிட்டில் எத்தனை சதவிகித தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கு 20 சதவிகிதமும் வெயிட்டேஜ் இருக்கும்.

ஸ்கோர் மற்றும் இண்டெக்ஸ்!
சிபில் அமைப்பு தற்போது CIBIL TransUnion Score 2.0 என முறையில் ஸ்கோர் வழங்குகிறது. இந்த முறையில் இதுவரை கடன் வாங்காதவர்கள், கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது அவர்கள் குறித்த விவரம் சிபில் அமைப்பில் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு  NA அல்லது NH எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும். 1-5 வரை இண்டெக்ஸ் உள்ளது. இது கடன்  வாங்கியவரின் கடந்த 6 மாதக் கடன் வரலாறு அடிப்படையில் இருக்கும். இண்டெக்ஸில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பவர்கள் குறைந்த ரிஸ்க் உடையவர்கள் என்றும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதிக ரிஸ்க் உடையவர்கள் என்றும் குறிப்பதாகும்.சிபில் ஸ்கோர் 300 - 900 வரை இருக்கும். இதில் அதிக மதிப்பெண் வைத்திருந்தால், குறைவான ரிஸ்க் உடையவர்கள் என்பதைக் குறிக்கும். ஆனால், வங்கிகள் 750 மதிப்பெண்களுக்கு மேல் இருப்பவர்களுக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன.

சிபில் ஸ்கோர்
சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வாங்க முடியும். இதற்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கேஒய்சி ஆவணங்களையும் சமர்பித்தால், 7 வேலை நாட்களில் உங்களின் மெயில் ஐடிக்கு சிபில் ரிப்போர்ட் வரும்.

சிபில் ஸ்கோர் படிவத்தை
இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சிபில் ஸ்கோர் வந்தபிறகு அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்த வீடியோவை
இணையதளத்தில் பார்க்க முடியும்.
தகவல் உதவி: பிபிஎம்.முருகேசன், உதவி பொது மேலாளர் (ஓய்வு) பேங்க் ஆஃப் பரோடா.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 7 January 2017

சென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா?

சென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா? | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதற்கு ஆகும் செலவும் மிகமிக அதிகம். எனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதே சென்னையில் யதார்த்தமான விஷயம். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகைகள் என்ன? யார் எந்த வகையான அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குகிறார்கள்? சென்னயில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும் மக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் கீழ்ப் பிரிவு நடுத்தர மக்கள், ரூ. 50 லட்சத்துக்குள் வீடு வாங்கும் நடுத்தர மக்கள், சுமார் ரூ. 55 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான வீடு வாங்கும் உயர் நடுத்தர மக்கள், எல்லா வசதிகளையும் விரும்பும் உயர் வகுப்புப் பிரிவினர் என்றழைக்கப்படும் எலைட் பிரிவினர் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். சென்னையில் மத்திய சென்னை மற்றும் மத்திய சென்னையை ஒட்டியுள்ள தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர், கே.கே. நகர், மாம்பலம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விலை கோடிகளைத் தொட்டுவிட்டது. இந்தப் பகுதிகளில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான். நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடுகளை விரும்புகிறார்கள். வீடு ஒட்டுமொத்தமாக 700 முதல் 800 சதுர அடியில் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த வகையில் உள்ள வீடுகள் பெரும்பாலும் ரூ. 50 லட்சத்துக்குள் விற்பனை செய்யப்படுகின்றன. சராசரியாக ரூ. 45 லட்சம் முதல் 50 லட்சத்துக்குள் விற்பனையாகின்றன. இந்த அளவுக்குள் விற்பனையாகும் வீடுகள் குன்றத்தூர், வேளச்சேரி, ஓஎம்ஆர், மடிப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. உயர் பிரிவு மக்கள் விரும்பும் எலைட் பிரிவு வீடுகள் சென்னையில் பல இடங்களிலும் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கோடி ரூபாய் முதல் அதற்கும் அதிகமாக இந்தப் பிரிவில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பிரிவு வீடுகள் வாங்குவோரின் ஒரே எண்ணம் எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பகுதியாக இருந்தாலும் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார்கள். இதில் ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் பிரிவினர் என்பது எப்படியும் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். இந்தத் தொகைக்குப் பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளே சென்னை நகருக்குள் கிடைக்கும். அதுவும் சென்னயின் புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த வீடுகள் பெரும்பாலும் கிடைக்கின்றன. எனவே சொந்த வீட்டுத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இந்தப் பிரிவு மக்கள் ஒரு படுக்கையறை வீட்டை வாங்குகிறார்கள். இப்படி வீடு வாங்கும் பிரிவினர் அலுவலகத்தை விட்டு தூரமாக இருந்தாலும் வீடு வாங்கிவிடுகிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களின் தேவையான பள்ளிக்கூடம், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்தே இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் பல்லடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவர்களது விருப்பத் தேர்வாக இவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் அதிகபட்சமாக 15 - 20 வீடுகளை மட்டுமே வைத்து கட்டும் அடுக்குமாடிகள் அல்லது 6 முதல் 8 வரையுள்ள சிறு அடுக்குமாடி வீடுகளையே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். பிரிக்கப்படாத மனையில் கிடைக்ககூடிய பாகத்தையும் (யூடிஎஸ்) மனதில் கொண்டே வீடு வாங்குகிறார்கள். இதில் நீங்கள் எந்த வகை என்பதை மனதில் கொண்டு வீடு வாங்குகளேன்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts