கல்லூரிக்கு வந்த முதல் நாளிலேயே கத்தியும்கையுமாக பிடிபட்டனர்சில கல்லூரிமாணவர்கள். மாறுவேஷத்தில் இருப்பதுபோல மாணவர் தோற்றமே இல்லாமல் காணப்பட்டசிலருக்கு காவல் நிலையத்திலேயே சிகை அலங்காரம் செய்யப்பட்டது. மகிழ்ச்சியான கல்லூரி வளாகம், கோஷ்டி மோதலுக்கான கொலோசிய அரங்கமா? என கேள்விகேட்க வைத்தது மாணவர்களின் இந்த நடவடிக்கைகள்.கல்லூரிச் சூழலைமகிழ்ச்சியாக எதிர்கொள்ளமாணவர்களுக்கு தேவையானசில பண்புகளைபற்றி பார்ப்போம்....
* மோதலுக்கு வழி வகுக்கும் ‘ராக்கிங்’ போன்ற நிகழ்வுகளை தடைசெய்ய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதன்முதலாக கல்லூரியில் நுழையும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ‘ராக்கிங்’ பிரச்சினைகளே குழு சேரவும், மோதல் உருவாகவும் காரணங்களாக இருக்கின்றன என்பது கண்கூடு. தாங்கள் மூத்த மாணவர்களால் கேலி, கிண்டல், வற்புறுத்தல்களில் ஈடுபடுத்தப்படும்போது இளம் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்ய வேண்டும். அதை நிர்வாகத்தினர்முறையாக கையாண்டு, இளம் மாணவர்களின் மகிழ்ச்சியான கல்லூரி வாழ்க்கைக்கு அடிகோல வேண்டும். மூத்த மாணவர்கள், இளையவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர வேடிக்கை என்ற பெயரில் வன்முறையை வளர்க்க காரணமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
* கால்பந்து, தடகளம், கிரிக்கெட் எனஉங்களுக்கு பிரியமானவிளையாட்டில் பங்கெடுங்கள். ஆனால் அதில் தோல்வி ஏற்பட்டால் துவண்டுபோக வேண்டாம். விளையாட்டுகள் நட்புறவுக்கும், மனவலிமை வளர்ப்பதற்குமே தவிர, மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்ல. அதுபோலவே பாடங்களிலும் எதிர்பார்த்ததுபோல மதிப்பெண்கள் எடுக்க முடியாவிட்டால், அடுத்த முறை முயற்சிக்க வேண்டுமேதவிர சோர்ந்துபோகவோ, தவறான முடிவுக்குச் செல்லவோ கூடாது.
* நல்லநண்பர்களை தேர்ந்தெடுத்துப்பழகுங்கள். புறம்பேசுபவர்கள், கெட்ட பழக்கம் உள்ளவர்கள், தீய செயல்களில் ஈடுபட தூண்டுபவர்கள் ஆகியோரிடம் இருந்து விலகி இருங்கள். நல்ல நட்பு வட்டாரம் கல்லூரி காலத்தை வாழ்க்கையின் பசுமையான பகுதியாக மாற்றுவார்கள்.
* விருப்பமுள்ள பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பதும்மகிழ்ச்சியாக படிக்க துணை செய்யும். இது பற்றி ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் பேசிவிடுங்கள்.
* கல்லூரி என்றால் படிப்பு மட்டுமே கதியல்ல. வேடிக்கையும் இருந்தால்தான் சோர்வின்றி படிக்க முடியும். எனவே அவ்வப்போது வெளியே சென்று வாருங்கள். நண்பர்களுடன் உரையாடுங்கள். விளையாடுங்கள். உணவு விடுதிகள்,சினிமாவுக்கு சென்றுதிரும்பலாம்.
* யோகா, தியானம், உடற்பயிற்சி இவற்றை கடைப்பிடித்து உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைப்பது உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கும்.
* சரியான உணவும், போதிய ஓய்வும் அவசியம். மாலையில் கல்லூரி முடிந்ததும் சிறிது நேரம் விளையாட்டு, சிறிது நேரம் படிப்பு, சிறிது அரட்டையென்று இருந்துவிட்டு, நன்றாகச் சாப்பிடுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச்செல்லுங்கள்.படுக்கைக்கு சென்றபிறகு போனை நோண்டிக் கொண்டிருக்க வேண்டாம். நல்ல ஓய்வுதான் நாளைய செயல்பாட்டிற்கான பேட்டரி சார்ஜ் என்பதை நினைவில் வையுங்கள்.
* வீட்டைப் பிரிந்து கல்லூரி வளாகத்திலே தங்கி படிப்பவர்கள்பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் நடைபெறும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். தேவையானஉதவிகளை கேட்டுப் பெற வேண்டும். இது எதிர்பாராத மனக்கசப்பு நிகழ்வுகளை மறந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள துணையாக இருக்கும்.
* இறுதியாக ஒன்று மன்னிப்பு கேட்கும் நல்ல பழக்கத்தை வளர்ப்பது. போட்டி, பொறாமைகள், தவறான பேச்சுகள், தவறான யூகங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நண்பர்களுடனும், மற்றவர்களுடனும் மனக்கசப்புகள் ஏற்படலாம். அதுபோன்ற நேரங்களில் தங்கள் நடத்தைகளை சீர்தூக்கிப்பார்த்து சுய பரிசோதனைசெய்வது அவசியம். தவறு நேரும்போது மன்னிப்பு கேட்கவும், மன்னிப்பு கொடுக்கவும் பழக வேண்டும்.
Monday, 2 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment