Monday 6 November 2017

5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும்



* 1980 சமயத்தில் கார்களில் ஆண்டனா உதவியோடு பயன் படுத்தப்பட்ட ஏ.எம்.பி.எஸ். (ஆடோமேடிக் மொபைல் போன் சர்வீஸ்) சேவையே முதல் தலைமுறை செல்போனாகும்.


* 1990-களில் பயன்பாட்டுக்கு வந்த ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ. தொழில்நுட்ப அலைபேசிகள் இரண்டாம் தலைமுறை செல்போன்கள்.


* ஜி.எஸ்.எம். (குளோபல் சிஸ்டம் பார் மொபைல்) தொழில்நுட்பத்தில் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்றவை இயங்குகின்றன.


* சி.டி.எம்.ஏ. (கோடு டிவிஷன் மல்டி ஆக்சஸ்) தொழில்நுட்பத்தில், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ் போன்றவை இயங்குகின்றன.


* மூன்றாம் தலைமுறை செல்போன்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு புழக்கத்துக்கு வந்த 2.5 ஜி தலைமுறை செல்போன்கள் ஜி.பி.ஆர்.எஸ், இ.டி.ஜி.இ. தொழில்நுட்பங்களில் இயங்கின.


* மூன்றாம் தலைமுறை செல்போன்கள் ஏ.எம்.டி.எஸ்., சி.டி.எம்.ஏ.2000 எனும் இரு தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் இயங்கின.


* நான்காம் தலைமுறை செல்போன்கள் வை-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்குபவை.


* செல்போன்களில் பயன்படும் சிம் கார்டு என்பதன் விரிவாக்கம், 'சப்ஸ்கிரைபர் ஐடென்டிடிட்டி மொடுல் கார்டு' என்பதாகும்.


* செல்போன்களில் இடம் பெறும் என்ற குறியீட்டிற்கு ஆக்டோதார்ப் என்று பெயர்.


* 5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Popular Posts