Saturday, 18 February 2017

அடுக்குமாடி வீடு வாங்கும் முன்...

அடுக்குமாடி வீடு வாங்கும் முன்... | ஷியாம் சுந்தர் |சென்னை மட்டுமல்ல, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில்கூட இன்று அடுக்குமாடிக் குடிருப்புக் கலாச்சாரம் வந்துவிட்டது. நகரங்களின் இட நெருக்கடியாலும் தனி வீடுகளின் விலையேற்றத்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இம்மாதிரியான அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கும் முன் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் சில உள்ளன. அவற்றுள் சில:
1 கடந்த 30 ஆண்டுகளுக்குத் தாய் பத்திரம் மூலப் பத்திரம் சரியாக உள்ளதா மற்றும் சொத்து வந்த வழி (flow of title) சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2 தற்போது உள்ள உரிமை யாளரின் சொத்தின் அசல் பத்திரம் சரிபார்க்க வேண்டும்.
3 பட்டா/TSLR Extract சரிபார்க்கவும் மேலும் ஆன்லைனில் அவை சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
4 Layout-க்கு அங்கீகாரம் (DTCP/LPA/CMDA) மூலம் வழங்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும். மேலும் நிலத்தின் அளவு 2500 .மீட்டருக்கு மேல் இருந்தால் உள்ளாட்சிக்குத் தானப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
5 சொத்தின் FMB Sketch-யைச் சரிபார்க்கவும்.
6 ஒரு வேளை அடுக்குமாடிக் கட்டிடத்தின் உரிமையாளர் கட்டுநர்கள் இல்லையென்றால் கட்டுநருக்கும் நிலத்தின் உரிமையாளருக்கும் செய்யப்பட்ட ஒப்பந்த ஆவணத்தைச் சரிபார்க்கவும். மேலும் நிலத்தின் உரிமையாளர் கட்டுநருக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தால் அந்த பவர் பத்திரத்தில் கட்டிடம் கட்டுபவருக்குச் சொத்து விற்பனை எவ்வளவு சதவிகிதம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சரிபார்க்கவும். மேலும் பத்திரம் பதிவு செய்யும் முன் நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இருக்கிறாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
7 சொத்தின் உரிமையாளரிடம் இருக்கும் அசல் பத்திரத்தின் நகலைச் சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்றுச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால்தான் சொத்தின் உரிமையாளரின் அசல் பத்திரத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
8 30 ஆண்டுகளுக்கு சொத்தின் வில்லங்கச் சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பத்திரப் பதிவுத் துறையின் இணையதளத்தில் வில்லங்கச் சான்றிதழ் சரியாக உள்ளதா என்று ஆன்லைனில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
9 கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி மற்றும் வரைபடம் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
10 வரைபடத்தில் தெரிவித்துள்ளது போல் மொத்தக் குடியிருப்பு எண்ணிக்கை சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வரைபடத்தில் எத்தனை சமையலறைகள் உள்ளன என்ற எண்ணிக்கையைக் கண்டறிய வேண்டும். ஒரு குடியிருப்புக்கு ஒரு சமையலறை மட்டும்தான் இருக்க முடியும் என்ற விதி உள்ளது. ஆகையால் வரைபடத்தில் மொத்த சமையலறைகளை எண்ணினாலே எத்தனை அடுக்குமாடிகளுக்கு அனுமதி உள்ளது என்று கண்டறிய முடியும்.
11 சொத்தின் பிரிக்கப்படாத அளவு - UDS (Undivided Share of land) வாங்குபவருக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். மேலும் கட்டிடம் கட்டுபவர் மொட்டை மாடியில் எந்த உரிமையும் கொண்டிருக்க முடியாது. கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் (Construction Agreement) இது போன்ற விவரங்கள (clause) இடம் பெறக் கூடாது.
12 கட்டிடம் கட்டுபவர் ஒரு வேளை அந்தக் குடியிருப்புக் கட்டிடம் கட்டுவதற்காக வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கினால் மேற்படி குடியிருப்பு விற்பனை செய்யும் முன் சம்பந்தப்பட்ட வங்கியிடம் அல்லது நிதி நிறுவனத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலையில் வாங்குபவர்கள் கட்டிடம் கட்டுபவர்களுக்குத் தர வேண்டிய தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் மூலமே செலுத்த வேண்டும்.
13 தமிழ்நாட்டில் தற்போதைய FSI (Floor space Index) 1.5 ஆக உள்ளது. . Premium FSI 1.00 வரை பெற முடியும் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது). கட்டிடம் கட்டுவதற்கான சம்பந்தப்பட்ட அதிகாரி மூலம் வழங்கப்பட்ட வரைபடத்தில் சதவீதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு 1.5 சதவீதம் அனுமதி வழங்கியிருப்பின் 1000 .அடி குடியிருப்புக்கு ஏறத்தாள 666 .அடி யூடிஎஸ் வழங்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு மக்களிடம் போதுமானதாக இல்லை. ஆகையால் கட்டிடம் கட்டுபவர்கள் வாங்குபவர்களுக்கு குறைந்த FSI -யை பதிவு செய்கிறார்கள். மேலே குறிப்பிட்ட உதாரணத்திற்கு 666 .அடி யுடிஎஸ்-க்குப் பதிலாக 400 .அடி யூடிஎஸ் பதிவு செய்கிறார்கள். இது சம்பந்தமான விழிப்புணர்வு கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கும் இல்லை. குறைந்த யூடிஎஸ் பதிவு செய்யும் நேரத்தில் கட்டிடம் கட்டுபவர் அந்தக் குடியிருப்புக் கட்டிடத்தில் தனக்குச் சொந்தமாக ஒரு சில குடியிருப்புகளுக்கு அதிகப்படியாக யூடிஎஸ் வைத்துக்கொள்வார். பிற்காலத்தில் அதை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டுகிறார்கள். 14அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் கட்டியபிறகு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கட்டுமானப் பணி நிறைவுச் சான்றிதழ் (completion certificate) பெறப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். மேலும் குடிநீர் இணைப்பு, சாக்கடை இணைப்பு, மின்சார இணைப்பு சம்பந்தப்பட்ட துறையிடம் கட்டிடம் கட்டுபவர் பெற்றுள்ளாரா என்று சரிபார்க்க வேண்டும். 20,000 .மீட்டருக்கு மேல் 15,0000 .மீட்டருக்குள் இருக்கும் கட்டிடத்திற்குச் சுற்றுச்சூழல் துறையிடம் முன்னனுமதி பெறப் பட்டுள்ளதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுரையாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 12 February 2017

உறங்கும் அறைக்கு அவசியமான வாஸ்து குறிப்புகள்

உறங்கும் அறைக்கு அவசியமான வாஸ்து குறிப்புகள் | நிம்மதியான உறக்கம் என்பது அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற நிலையில் உறங்கும் அறையை அமைக்கும் விதம் பற்றி வாஸ்து விரிவாகவே குறிப்பிடுகிறது. 'மாஸ்டர் பெட்ரூம்' உள்ளிட்ட வீடுகளில் இருக்கும் படுக்கை அறைகளை திட்டமிடுவதிலும், கச்சிதமாக அமைத்துக்கொள்வதிலும் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு திசைகளில் தலை சாய்த்து வைத்து ஓய்வெடுப்பதும், படுக்கையை வேண்டியபடி அமைத்துக்கொள்வதும் ஒருவருடைய விருப்பமாக இருந்தாலும், அதில் கவனம் செலுத்தவேண்டிய அம்சங்களும் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.உறங்கும் திசையானது நமது அன்றாட வாழ்க்கையின் வெற்றி வாய்ப்புகளை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தது என்று வாஸ்து குறிப்பிடுவதை வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்க இயலாது. அதில் அறிவியலும் இருப்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமைதியான உறக்கத்துக்கு பிறகு ஒருவரது செயல்திறன்கள் சிறப்பாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்வதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.படுக்கை அறையில் கடைப்பிடிக்கப்படும் வாஸ்து ஆழ்ந்த உறக்கத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான அம்சமாகவும் இருக்கிறது. அறைகளை கட்டமைப்பதிலும், வரைபடம் தயாரிப்பதிலும் பல்வேறு காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. படுக்கை அறை அமைப்புகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
  • படுக்கை அறை சுவர்களில் இனிமை தரும் வண்ணங்கள் பூசப்பட வேண்டும்.
  • படுக்கை அறையின் அனைத்து கட்டமைப்புகளிலும் வாஸ்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • மரச்சாமான்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றை தெற்கு மற்றும் மேற்கு திசைகள் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.
  • மன அமைதியுடன் உறங்க ஏதுவாக மரத்தாலான படுக்கைகள் இருப்பதுதான் சிறந்தது.
  • உறங்கும் அறைகளில் தெய்வ சிலைகள் வைக்கப்படுவது தவிர்க்க வேண்டும்.
  • படுக்கை அறையில் பூஜை செய்வதற்கான 'ஷெல்ப்' வைப்பதும் தவறான முறையாகும்.
  • வாஸ்து சாஸ்திர ரீதியாக சதுரம் மற்றும் செவ்வக வடிவத்தில் அமைக்கப்பட்ட படுக்கை அறைகள்தான் சிறந்தவையாகும்.
  • படுக்கை அறையில் வண்ண மீன் தொட்டிகள் அல்லது அழகுச்செடிகள் போன்ற தாவர வகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பொதுவான மருத்துவ குறிப்புகளின்படி, படுக்கை அறையில் மென்மையான, இனிமையான ஒளியும், இசையும் இருப்பதை வாஸ்து ஏற்றுக்கொள்கிறது.
  • படுக்கை அறைக்கான ஜன்னல் அல்லது கதவு ஆகியவற்றை அமைக்கும்போது உச்ச திசைகளை தேர்ந்தெடுத்து பொருத்துவது முக்கியம். அதன் காரணமாக நேர்மறை ஆற்றல் சுலபமாக அறைகளில் பரவுவதற்கு ஏதுவாக இருக்கும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 7 February 2017

வெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்

வெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளுக்காக அறியப்படுபவர். இவரின் பெண் கல்வி உரிமை பிரசாரத்தினால் தாலிபான் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்திற்குப்பின் உயிர் பிழைத்தார். தனக்கு கிடைத்த உலகளாவிய ஆதரவுடன் தனது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்தார். 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற இவரே, மிகவும் சிறுவயதில் இப்பரிசினை பெற்றவராவார். நான் மலாலா என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

1.      ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆசிரியரால் உலகை மாற்ற முடியும் என்பதை நினைவில் வைப்போம்.
2.      பெண்களின் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டும்.
3.      பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், போருக்கு எதிராகப் போராடுவதற்குமான சிறந்தவழி பேச்சுவார்த்தையே.
4.      எனக்குத் தேவைப்படுவதெல்லாம் கல்வியே, எதற்கும் நான் பயப்படுவதில்லை.
5.      உங்கள் மகள்களை கௌரவப்படுத்துங்கள். அவர்கள் மதிப்பிற்குரியவர்கள்.
6.      நான் சொல்கிறேன், நான் பயத்தை விட வலிமை வாய்ந்தவள்.
7.      எதிர்கால தலைமுறையின்மீது கவனம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் உங்கள் நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
8.      ஒவ்வொரு நாட்டிலும், அரசியலானது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றே கருதப்படுகிறது.
9.      நான் விரும்பும் வழியில் எனது வாழ்வை வாழ்வதற்கு எனக்கு உரிமை உண்டு என்று நான் நினைக்கின்றேன்.
10.    நீங்கள் எங்கு சென்றாலும், சொர்க்கமே என்றாலும் கூட, உங்கள் வீட்டில் இல்லாத குறையை உணர்வீர்கள்.
11.    உலகம் முழுவதும் அமைதியாக இருக்கும்போது, ஒரு குரல் கூட ஆற்றல் மிக்கதாக ஆகிவிடுகின்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts