Monday 10 September 2018

நேர்முகத் தேர்வுக்கான அவசிய விதிகள்

நேர்முகத் தேர்வின் முக்கியத் துவத்தை நீங்கள் உணர்ந் திருப்பீர்கள். அதில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த விதிமுறைகளை கொஞ்சம் கடைபிடியுங்கள்...

* சரியான நேரத்திற்கு நேர்காணல் அரங்கை அடைய, முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள்.

* தேவையான சான்றுகள், அடையாள அட்டைகள், அழைப்புக் கடிதங்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

* நேர்காணல் அரங்கில் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்படும் வகையில் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். அவசியமற்ற உடல்மொழிகளை காட்டாதீர்கள்.

* தேர்வு அறைக்குள் அழைக்கப்படும்போது, அனுமதி பெற்று உள்ளே நுழையுங்கள். முகத்தில் புன்னகை தவழட்டும்.

* தேர்வு அதிகாரி இருக்கையில் அமரச் சொன்ன பிறகு, நன்றி சொல்லி அமருங்கள்.

* பதிலளிக்கும்போது தலையைச் சொறிவது, தேவையின்றி தலையை ஆட்டுவது, கைகளை ஆட்டுவது, கைகளை கட்டிக்கொள்வது என்றிருக்காமல் நிமிர்ந்திருந்து, நேர்த்தியான பதில்களை கூறுங்கள். இதற்கான பயிற்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் கண்ணாடி முன்பே பேசிப் பழகலாம்.

* தேர்வு அதிகாரியின் முகம்பார்த்து பதில் கூறுங்கள். கண்கள் அவசியமற்ற இடத்தில் உழன்றுகொண்டிருக்க வேண்டாம். தரையையும் நோட்டமிட வேண்டாம். குனிய வேண்டிய அவசியமும் இல்லை.

* பதில்கள் மிகச்சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கட்டும்.

* கேள்விகள் புரியாவிட்டால் மீண்டும் கேட்பதில் தவறில்லை. அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது.

* முகத்தில் மலர்ச்சியும், பேச்சில் ஆர்வமும் தொனிக்க வேண்டும். குரலில் பணிவு தேவை. எரிச்சல், கோபம் தவிர்த்துவிடுங்கள்.

* தேர்வு எதிர்பார்த்த மாதிரி அமையாவிட்டால், அதிகாரியிடம் விவாதம் செய்ய வேண்டாம். உரிய மதிப்பளிக்கத் தவறாதீர்கள்.

இந்த வெற்றி விதிகள் உங்கள் வாழ்க்கைப் பாதையை வகுத்துத் தரும் என்பதில் ஐயமில்லை!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts