முனைவர் த.சித்தார்த்தன்,
நிகழ்ச்சிப்பிரிவு முன்னாள் தலைவர், சென்னை வானொலி.
இன்று (மார்ச் 14-ந் தேதி) விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கின் நினைவு தினம்.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது. 1942 ஜனவரி 8-ந்தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில், நன்கு கல்விகற்ற குடும்பத்தில் ஹாக்கிங் பிறந்தார். கணிதவியல் பாடத்தில் உயர்கல்வி படிக்க விரும்பிய இவருக்கு இயற்பியல் பாடத்தை படிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. 1963-ம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பில் ஈடுபட்டிருந்த போது, 21 வயதில் இவருக்கு திடீரென பேச்சு குளறியது. நடை தடுமாற ஆரம்பித்தது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள், நரம்புகளின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய அரியவகை மூளை தண்டுவட நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவர் உயிரோடிருப்பார் என்றும் கூறிவிட்டனர். ஆரம்பத்தில் மனசோர்வு ஏற்பட்ட போதிலும், தான் இறப்பதற்குள் முனைவர் பட்டத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்று கருதி, ஹாக்கிங், மிக கடுமையாக உழைத்து படித்து வந்தார். இந்த சமயத்தில் ஜேன் வில்டே என்பவரை காதல் திருமணமும் செய்துகொண்டார். மூன்று குழந்தைகளும் பிறந்தன.
சோதனை கூடங்களில் இருந்துகொண்டு ஆராய்ச்சிகள் செய்வதற்கு உடல்நிலை இடம் தராது என்பதால், கணக்கீடுகள் மூலம் இயற்பியல் கோட்பாடுகள் பற்றி ஆராய ஆரம்பித்தார். கருந்துளைகள், காலவெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார். தளராத தனது உழைப்பினால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு வந்த மிகவும் திறமையான, புகழ்மிக்க விஞ்ஞானியாக ஆனார் ஹாக்கிங். கருந்துளை பற்றிய இவரது ஆராய்ச்சி முடிவுகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நட்சத்திரங்களுக்குள் இருக்கும் எரிபொருள் தீர்ந்து போனதும், அங்கிருந்து வெப்பமும், ஒளியும் உருவாவது நின்றுவிடும். பிறகு, காற்று போன பலூன் சுருங்குவதை போல, நட்சத்திரமானது தன்னுடைய ஈர்ப்பு விசையின் காரணமாக தனக்குள்ளேயே சுருங்க ஆரம்பித்துவிடும். இந்த உள்ளர்ப்பு சக்தி அளப்பரியதாக இருப்பதால், உயிரிழந்த நட்சத்திரம் தன்னை தானே முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டு, மிகச்சிறிய அளவிற்குள் நெருக்கமாகச் சுருங்கிவிடும். இத்தகைய நிலையே கருந்துளையாகும். உயிரிழந்த நட்சத்திரங்களின் கல்லறைகளே கருந்துளைகள். நம்முடைய பூமியின் அளவுகொண்ட நட்சத்திரம் கருந்துளையாகிவிட்டால் இரண்டு சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக சுருங்கிப் போய்விடும். சூரியனின் அளவுடைய நட்சத்திரம் கருந்துளையாகும் போது 3 கிலோமீட்டர் ஆரம் கொண்ட கருந்துளையாகிவிடும். ஒரு நொடிக்கு 2,99,792 கிலோமீட்டர் தூரம் பயணிக்ககூடிய சக்திமிக்க ஒளி உள்பட, இதன் அருகே செல்லும் எதுவுமே இதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க முடியாது. இத்தகைய கருந்துளைகள் வெவ்வேறு அளவுகளில் ஒரு கோடி முதல் 100 கோடி வரையிலும் நமது பால்வீதி மண்டலத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
ஈர்ப்பு விசை மிக கடுமையாக இருப்பதால் கருந்துளைகளுக்கு உள்ளேயிருந்து எதுவுமே வெளியேறி வரமுடியாது என்று தான் கருதப்பட்டு வந்தது. ஆனால் தனது ஆராய்ச்சியின் போது ஹாக்கிங் போட்டு பார்த்த ஏராளமான கணக்கீடுகள் ஆச்சரியமூட்டும் முடிவினை வெளிப்படுத்தின. கருந்துளைகள் தங்களிடம் இருக்கும் சக்தியை மிக மிக நீண்ட நெடிய காலப்போக்கில் மிகவும் சிறிது சிறிதாக இழக்கின்றன. இந்த சக்தி ஆற்றல் துகள்களாகவும், வெப்ப கதிர்களாகவும் மிக நுண்ணிய அளவுகளில் வெளிப்படுகிறது என்று ஹாக்கிங் கண்டுபிடித்தார். இதற்கு “ஹாக்கிங் கதிரியக்கம்” என்று பெயரிடப்பட்டது.
அடர்த்தி, வெப்பம், அழுத்தம், காலம்வெளி ஆகிய அனைத்து பண்புகளும், ஒன்றாக சுருங்கி சின்னஞ்சிறு உள்மையமாக ஓர் ஒற்றை புள்ளியில் ஒருமை தன்மையுடன் எஞ்சி நிற்கும் கருந்துளைகளின் வினோதமான நிலை ‘ஒற்றைத்தன்மை’ எனப்படுகிறது. கருந் துளைகளின் இத்தகைய நிலை பற்றி ஹாக்கிங் செய்த கணக்கீடுகள் உலக அளவில் இவருக்கு புகழைத் தேடித்தந்தன. கற்பனைக்கு எட்டாத தொலைவுகளில் இருக்கும், கண்ணுக்கு புலப்படாத கருந்துளைகளில் மிக மிக குறைவான வேகத்தில், நீண்ட நெடிய காலத்திற்கு நடைபெறக்கூடிய நிகழ்வுகளை தனது கணித ஆற்றலை கொண்டு சிந்தித்துக் கண்டவர் ஹாக்கிங்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று சொல்லப்பட்ட போதிலும், அதற்கு பிறகு 55 ஆண்டு காலம் இவர் வாழ்ந்திருந்தார். கடுமையான நோய் இவரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு ஆட்டி வைத்தது. 1985-ம் ஆண்டு முதல் சக்கர நாற்காலியில் முடங்கிப்போனார். இவர் பேசுவதற்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருள், இவரது கன்னத்து தசைகளின் அசைவுகளை புரிந்துகொண்டு, அவற்றை சேர்த்து ஒருங்கிணைத்து, அவர் பேச முற்படும் வார்த்தைகளை திரையில் காட்டும். அவற்றில் சரியானவற்றை ஹாக்கிங் சொடுக்கியின் துணைகொண்டு தேர்ந்தெடுப்பார். இந்த கருவியின் துணை கொண்டுதான் தனது ஆராய்ச்சிகள் அனைத்தையும் இவர் வெற்றிகரமாக முடித்தார்.
“எனக்கு ஏற்பட்டிருக்கும் உடல்குறை பற்றி வருந்திகொண்டே இருப்பது வீண் வேலை. வாழ்க்கையில் எடுத்த காரியங்களில் வெற்றி காண வேண்டும். உங்கள் நிலைமைக்காக எப்போதும் புலம்பிகொண்டும், கோபப்பட்டு கொண்டும் இருந்தீர்கள் என்றால், அதையெல்லாம் கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை” என்று அவர் ஒருமுறை எழுதியிருந்தார். இவரது வாழ்க்கை ஒட்டுமொத்த மனித குலத்திற்கான ஒரு பாடம். 2018-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தனது 76-வது வயதில் கேம்ப்ரிட்ஜில் விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் காலமானார்.
நிகழ்ச்சிப்பிரிவு முன்னாள் தலைவர், சென்னை வானொலி.
இன்று (மார்ச் 14-ந் தேதி) விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கின் நினைவு தினம்.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது. 1942 ஜனவரி 8-ந்தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில், நன்கு கல்விகற்ற குடும்பத்தில் ஹாக்கிங் பிறந்தார். கணிதவியல் பாடத்தில் உயர்கல்வி படிக்க விரும்பிய இவருக்கு இயற்பியல் பாடத்தை படிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. 1963-ம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பில் ஈடுபட்டிருந்த போது, 21 வயதில் இவருக்கு திடீரென பேச்சு குளறியது. நடை தடுமாற ஆரம்பித்தது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள், நரம்புகளின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய அரியவகை மூளை தண்டுவட நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவர் உயிரோடிருப்பார் என்றும் கூறிவிட்டனர். ஆரம்பத்தில் மனசோர்வு ஏற்பட்ட போதிலும், தான் இறப்பதற்குள் முனைவர் பட்டத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்று கருதி, ஹாக்கிங், மிக கடுமையாக உழைத்து படித்து வந்தார். இந்த சமயத்தில் ஜேன் வில்டே என்பவரை காதல் திருமணமும் செய்துகொண்டார். மூன்று குழந்தைகளும் பிறந்தன.
சோதனை கூடங்களில் இருந்துகொண்டு ஆராய்ச்சிகள் செய்வதற்கு உடல்நிலை இடம் தராது என்பதால், கணக்கீடுகள் மூலம் இயற்பியல் கோட்பாடுகள் பற்றி ஆராய ஆரம்பித்தார். கருந்துளைகள், காலவெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார். தளராத தனது உழைப்பினால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு வந்த மிகவும் திறமையான, புகழ்மிக்க விஞ்ஞானியாக ஆனார் ஹாக்கிங். கருந்துளை பற்றிய இவரது ஆராய்ச்சி முடிவுகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நட்சத்திரங்களுக்குள் இருக்கும் எரிபொருள் தீர்ந்து போனதும், அங்கிருந்து வெப்பமும், ஒளியும் உருவாவது நின்றுவிடும். பிறகு, காற்று போன பலூன் சுருங்குவதை போல, நட்சத்திரமானது தன்னுடைய ஈர்ப்பு விசையின் காரணமாக தனக்குள்ளேயே சுருங்க ஆரம்பித்துவிடும். இந்த உள்ளர்ப்பு சக்தி அளப்பரியதாக இருப்பதால், உயிரிழந்த நட்சத்திரம் தன்னை தானே முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டு, மிகச்சிறிய அளவிற்குள் நெருக்கமாகச் சுருங்கிவிடும். இத்தகைய நிலையே கருந்துளையாகும். உயிரிழந்த நட்சத்திரங்களின் கல்லறைகளே கருந்துளைகள். நம்முடைய பூமியின் அளவுகொண்ட நட்சத்திரம் கருந்துளையாகிவிட்டால் இரண்டு சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக சுருங்கிப் போய்விடும். சூரியனின் அளவுடைய நட்சத்திரம் கருந்துளையாகும் போது 3 கிலோமீட்டர் ஆரம் கொண்ட கருந்துளையாகிவிடும். ஒரு நொடிக்கு 2,99,792 கிலோமீட்டர் தூரம் பயணிக்ககூடிய சக்திமிக்க ஒளி உள்பட, இதன் அருகே செல்லும் எதுவுமே இதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க முடியாது. இத்தகைய கருந்துளைகள் வெவ்வேறு அளவுகளில் ஒரு கோடி முதல் 100 கோடி வரையிலும் நமது பால்வீதி மண்டலத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
ஈர்ப்பு விசை மிக கடுமையாக இருப்பதால் கருந்துளைகளுக்கு உள்ளேயிருந்து எதுவுமே வெளியேறி வரமுடியாது என்று தான் கருதப்பட்டு வந்தது. ஆனால் தனது ஆராய்ச்சியின் போது ஹாக்கிங் போட்டு பார்த்த ஏராளமான கணக்கீடுகள் ஆச்சரியமூட்டும் முடிவினை வெளிப்படுத்தின. கருந்துளைகள் தங்களிடம் இருக்கும் சக்தியை மிக மிக நீண்ட நெடிய காலப்போக்கில் மிகவும் சிறிது சிறிதாக இழக்கின்றன. இந்த சக்தி ஆற்றல் துகள்களாகவும், வெப்ப கதிர்களாகவும் மிக நுண்ணிய அளவுகளில் வெளிப்படுகிறது என்று ஹாக்கிங் கண்டுபிடித்தார். இதற்கு “ஹாக்கிங் கதிரியக்கம்” என்று பெயரிடப்பட்டது.
அடர்த்தி, வெப்பம், அழுத்தம், காலம்வெளி ஆகிய அனைத்து பண்புகளும், ஒன்றாக சுருங்கி சின்னஞ்சிறு உள்மையமாக ஓர் ஒற்றை புள்ளியில் ஒருமை தன்மையுடன் எஞ்சி நிற்கும் கருந்துளைகளின் வினோதமான நிலை ‘ஒற்றைத்தன்மை’ எனப்படுகிறது. கருந் துளைகளின் இத்தகைய நிலை பற்றி ஹாக்கிங் செய்த கணக்கீடுகள் உலக அளவில் இவருக்கு புகழைத் தேடித்தந்தன. கற்பனைக்கு எட்டாத தொலைவுகளில் இருக்கும், கண்ணுக்கு புலப்படாத கருந்துளைகளில் மிக மிக குறைவான வேகத்தில், நீண்ட நெடிய காலத்திற்கு நடைபெறக்கூடிய நிகழ்வுகளை தனது கணித ஆற்றலை கொண்டு சிந்தித்துக் கண்டவர் ஹாக்கிங்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று சொல்லப்பட்ட போதிலும், அதற்கு பிறகு 55 ஆண்டு காலம் இவர் வாழ்ந்திருந்தார். கடுமையான நோய் இவரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு ஆட்டி வைத்தது. 1985-ம் ஆண்டு முதல் சக்கர நாற்காலியில் முடங்கிப்போனார். இவர் பேசுவதற்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருள், இவரது கன்னத்து தசைகளின் அசைவுகளை புரிந்துகொண்டு, அவற்றை சேர்த்து ஒருங்கிணைத்து, அவர் பேச முற்படும் வார்த்தைகளை திரையில் காட்டும். அவற்றில் சரியானவற்றை ஹாக்கிங் சொடுக்கியின் துணைகொண்டு தேர்ந்தெடுப்பார். இந்த கருவியின் துணை கொண்டுதான் தனது ஆராய்ச்சிகள் அனைத்தையும் இவர் வெற்றிகரமாக முடித்தார்.
“எனக்கு ஏற்பட்டிருக்கும் உடல்குறை பற்றி வருந்திகொண்டே இருப்பது வீண் வேலை. வாழ்க்கையில் எடுத்த காரியங்களில் வெற்றி காண வேண்டும். உங்கள் நிலைமைக்காக எப்போதும் புலம்பிகொண்டும், கோபப்பட்டு கொண்டும் இருந்தீர்கள் என்றால், அதையெல்லாம் கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை” என்று அவர் ஒருமுறை எழுதியிருந்தார். இவரது வாழ்க்கை ஒட்டுமொத்த மனித குலத்திற்கான ஒரு பாடம். 2018-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தனது 76-வது வயதில் கேம்ப்ரிட்ஜில் விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் காலமானார்.
No comments:
Post a Comment