ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன? தனி நபர் அறிந்துகொள்ள யுஐடிஏஐ இணையதளத்தில் வசதிஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவும் வேளையில் தனி நபர், அவரது ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியும் வசதி யுஐடிஏஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி சார்ந்த சேவைகள், நலதிட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக ஆதார் கொண்டுவரப்பட்டது. ஆதார் பதிவு மற்றும் அட்டை அச்சிட்டு வழங்கும் பணிகளை யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஆதார் பதிவு பணிகளை யுஐடிஏஐ நிறுவனமே நேரடியாக மேற்கொள்ளாமல், தனியார் முகமைகள் மூலமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் தனி நபரின் ஆதார் விவரங்கள் வெளியில் கசிந்து விடுமோ என பொதுமக்கள் மத்தி யில் அச்சம் நிலவுகிறது. இதற்கிடையில், வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறாமல், ஆதார் தரவுகளைப் பயன்படுத்தி பேமென்ட் வங்கிக் கணக்குகளைத் திறந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது யுஐடிஏஐ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், பொதுமக்களின் சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது. இந்நிலையில், ஆதார் தரவுகள் திருடப்படும் வாய்ப்பு அறவே இல்லை என்று யுஐடிஏஐ தலைவர் அஜய் பூஷண் பாண்டே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில், பொதுமக்கள் மத்தியில் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, தனி நபர்களின் ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன் படுத்தப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டும் தெரிந்துக்கொள்ளும் வசதியை, யுஐடிஏஐ நிறுவனம், அதன் இணையதளமான http://uidai.gov.in -ல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது: ஒரு நபர் சிம் கார்டு வாங்குவதற்காகவோ, குடும்ப அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தாலோ அது குறித்த விவரங்கள் மற்றும் நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விவரங்களும் யுஐடிஏஐ இணையதளத்தில் பதிவாகிவிடுகிறது. அதை யுஐடிஏஐ இணையதள முகப்பு பக்கத்தில் Aadhaar Services என்பதன் கீழ் உள்ள Aadhaar Authentication History -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். அதை கிளிக் செய்யும்போது, ஆதார் எண், பாதுகாப்பு குறியீடு ஆகியவை கேட்கப்படும். அதை கொடுத்தால், சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதன் பின்னர், திரையில் எந்த வகையான விவரங்கள் தேவை என கேட்கும். அதாவது, ஆதார் விவரங்களுக்காக ஓடிபி பெற்றது, பெயர், முகவரி (டெமோகிராபிக்) போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டது, கருவிழி படலம், கை ரேகை (பயோமெட்ரிக்) போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டது அல்லது அவை அனைத்தையும் பயன்படுத்தியது தொடர்பானதைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால், தனி நபரின் ஆதார் விவரங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான விவரங்கள் தெரியும். ஒருவேளை ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க முற்பட்டு, தோல்வி அடைந்தால், அது குறித்த விவரங்களையும் அதில் பார்க்க முடியும். இதுபோன்ற விவரங்களைக் கடைசி 6 மாதங்கள் வரையிலான, 50 பதிவுகள் மட்டுமே கிடைக்கும். இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில், ஆதார் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால் யுஐடிஏஐ நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Saturday, 31 March 2018
ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன? தனி நபர் அறிந்துகொள்ள யுஐடிஏஐ இணையதளத்தில் வசதி
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
-
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
-
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
-
முன்னேற்றங்கள் எப்போதுமே உடனே சாத்தியப்படுவதில்லை. வழக்கமான செயல்பாடுகள் வெற்றியைத் தர தாமதமாகலாம். நமது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்ற...

No comments:
Post a Comment