Saturday 30 November 2019

வீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் நிதி ஆலோசனைகள்

சொந்தமாக ஒரு வீடு என்ற கனவு இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் பொதுவான விஷயமாக மாறி வருகிறது. அரசின் சலுகைகள் மற்றும் வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும்பாலான நடுத்தர மக்கள் வங்கிக் கடன் பெற்று கட்டிய வீட்டில் குடியேறுகிறார்கள். அதன் பின்னர், பல்வேறு செலவுகளுக்கு மத்தியில் வீட்டுக் கடனுக்கான தவணை என்பது சுமையாக மாறி விடுகிறது. நடுத்தர மக்களின் மாதாந்திர தவணை என்ற சுமையை எவ்வாறு குறைத்துக்கொள்ள இயலும் என்பது பற்றி வங்கியியல் வல்லுனர்கள் தரும் தகவல்களை இங்கே காணலாம்.

* வீட்டுக்கடனை ‘புளோட்டிங் ரேட்’ அடிப்படையில் வாங்கினால், கடனுக்கான வட்டி குறைக்கப்படும் சமயத்தில் மாதாந்திர தவணைத் தொகையும் குறையும்.

* கடன் அளிக்கும் வங்கியின் வட்டி விகிதத்தை மற்ற வங்கிகளுடன் ஒப்பிட்டுக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, கடனுக்கான பிராசஸிங், டாக்குமென்டேஷன், இன்சூரன்ஸ், லீகல் ஒப்பீனியன் ஆகிய கட்டணங்களில் உள்ள வித்தியாசங்களையும் கவனத்தில் கொள்ளலாம்.

* ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறக்கூடும். அதனால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது வட்டி விகிதம் எவ்வளவு கணக்கிடப்படுகிறது என்று அறிந்து கொள்வது நல்லது. காரணம், வட்டி விகிதத்தில் உள்ள மாறுதல்களுக்கேற்ப மாதாந்திர தவணை தொகை அளவும் மாறுபடலாம். வட்டி விகிதம் குறையும்போது மாதாந்திர தவணையும் இயல்பாகவே குறையும்.

* ஒருவரது மாத வருவாயை அடிப்படையாகக் கொண்டே மாதாந்திர தவணை தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், குடும்ப வருமானம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறுகிய காலத்தை தேர்வு செய்வதன் மூலமும், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் நீண்ட கால அவகாசம் கொண்ட தவணை முறைகளையும் தேர்வு செய்து பொருளாதர சிக்கலை தக்க முறையில் நிர்வகிக்கலாம்.

* தனிப்பட்ட விருப்பம் மற்றும் குடும்ப ரீதியான சேமிப்பு ஆகிய முதலீடுகளின் மூலம் கிடைக்கும் தொகை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் கடன் கணக்கில் பிரீபேமன்ட் ஆக வரவு வைப்பது நல்லது. அதன் மூலம் கடனுக்கான அசல் தொகையில் குறிப்பிட்ட அளவு குறைவதுடன், மாதாந்திர தவணையும் குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

* பல குடும்பங்களில் வங்கி வைப்பு நிதி, அஞ்சலகச் சேமிப்பு என பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. கடனுக்கான வட்டி குறைக்கப்படும் சூழலில், சேமிப்புகளுக்கான வட்டியும் குறையும் வாய்ப்பு உள்ளது. அதனால், அந்த முதலீட்டை வீட்டுக் கடனுக்காகச் செலுத்துவதன் மூலமும் மாதாந்திர தவணைத் தொகை குறையும் என்பது கவனிக்கத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஜிட்டல் சவால் விளையாட்டுகள்

டிஜிட்டல் சவால் விளையாட்டுகள்

சேவியர்

அ டேய்.... ரூம் போட்டு யோசிப்பீங்களா? என கேட்கத் தோன்றுகிறது. அடிக்கடி முளைத்தெழும்புகின்ற இணையச் சவால்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு சவாலுக்குப் பின்பும் பல ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. ஆனாலும் மக்கள் சவால்களில் குதிக்கிறார்கள். புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் ஒன்று வந்தது. நடுங்கிக் குளிரும் அதிகாலையில், ஒரு பக்கெட் நிறைய ஐஸ் தண்ணீரை தலையில் கவிழ்க்க வேண்டும் என்பது தான் சவால். உலகெங்கும் மக்கள் சவாலை ஏற்று பக்கெட் பக்கெட்டாக தண்ணீரைத் தலையில் கவிழ்த்து புகைப்படம் எடுத்து இணைய வெளியைத் தெறிக்க விட்டார்கள். பலர் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கையில் கிடந்தார்கள். எவ்வளவு நாள் தான் ஐஸ்வாட்டர் கொட்டறது என அடுத்து நெருப்பு விளையாட்டைக் கொண்டு வந்தார்கள். ஆல்கஹால் போன்ற சட்டென தீப்பிடித்து, சட்டென அணைந்து விடுகின்ற திரவங்களை உடலில் கொட்டி தீ வைத்து பிறரை வெல வெலக்க வைப்பது இந்தப் போட்டி. பலர் இதை வெற்றிகரமாகச் செய்தார்கள். மக்கள் கூடும் இடங்களில் உடலில் நெருப்பு வைத்து, நெருப்பையும் மக்களின் அதிர்ச்சியையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்கள். பலரை உற்சாகப்படுத்திய இந்த விளையாட்டு, பலருடைய அழகிய மேனியை கருக்கிப் பொசுக்கவும் செய்தது.

அடுத்ததாக ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கும் ஒரு சவால் வந்தது. சீறிவரும் ரெயிலுக்கிடையே, பாய்ந்து வரும் வாகனங்களுக்கிடையே, உச்சாணிக் கொம்பில், கட்டிடங்களின் அபாய விளிம்புகளில் என சாவுக்கும் வாழ்வுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று மக்கள் செல்பி எடுத்துத் தள்ளினார்கள். ஏகப்பட்ட உயிர்களைப் பலிகொண்ட விளையாட்டாய் இது மாறிப் போனது.

48 மணி நேர சவால் என்று ஒன்று, இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்தது. பதினெட்டு மணி நேரம் காணாமல் போய்விடவேண்டும். யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டும். அது தான் சவால். பல பெற்றோரை அதிர்ச்சிக்குள் அழைத்துச் சென்ற சவாலாக இது மாறிப் போனது.

இந்த சவால்களில், சர்வதேசத்தையே நடுநடுங்க வைத்த சவால்களாக புளூவேல், மோமோ போன்ற சைக்கோ விளையாட்டுகள் ஏகப்பட்ட சிறுவர் சிறுமியர் உயிர்களைப் பலிகொண்டன. பல அரசுகள் இந்த விளையாட்டுகளைத் தடை செய்தும், எச்சரிக்கை விடுத்தும் மக்களைக் காப்பாற்றின என்று சொல்லலாம்.இப்போது கடந்த சில மாதங்களாக ‘நம்பர் நெய்பர்’ (அடுத்த எண் ) எனும் புதிய சவால் ஒன்று மெல்ல மெல்லப் பரவி வியாபிக்கத் துவங்கியிருக்கிறது. இது என்ன சவால்? சிம்பிள். நமது மொபைல் பத்து இலக்க எண்ணாக இருக்கிறது அல்லவா? அந்த பத்தாவது இலக்க எண்ணை மட்டும் மாற்றி வேறு எண் போட்டால் அவர் நமது அடுத்த எண் நபர். அவருக்கு வாட்ஸப் பண்ணுவது, மெசேஜ் பண்ணுவது நண்பராக முயற்சிப்பது தான் இந்த விளையாட்டு. அதாவது உங்கள் எண் 5-ல் முடிகிறதெனில், அந்த இடத்தில் 5-க்குப் பதில் வேறு எண்ணைப் போடவேண்டும்.

அந்த நபரிடம் தொடர்பு கொண்டு, உரையாடி, அந்த உரையாடலை அப்படியே ஸ்கிரீன் ஷாட் (திரைப்பதிவு) செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது தான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம். இந்த விளையாட்டும் பல விபரீதங்களை மெல்ல மெல்ல கொண்டு வந்து கொண்டிருக்கிறது. யாரென்றே தெரியாத நபரிடம் பேசுவதும், அவரிடம் நமது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் நாம் விரும்பியே ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போல என்பதில் சந்தேகமில்லை. இப்படி நடந்த முயற்சிகளில் சில அநாகரிக உரையாடல்களாகவும், கொலை மிரட்டல்களாகவும், எச்சரிக்கைகளாகவும் மாறிப் போனது.

யாரென்றே தெரியாத நபருக்கு செய்தி அனுப்புவது அவரது தனிநபர் உரிமையில் தலையிடுவதாகவும் மாறிவிடுகிறது. சில நாடுகளில் இது சட்ட விரோதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக இந்த சவால் விளையாட்டுப் போர்வையில் புல்லுருவிகள் உங்களை அணுகலாம் என்பதால் இரட்டைக் கவனம் அவசியமாகிறது.

டிஜிட்டல் வெளியில் இன்று உலவுகின்ற இந்த சவால் விளையாட்டுகள் பதின் வயதினரையும், சிறுவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. அவர்கள் எவ்வளவு பெரிய ரிஸ்கான விஷயத்தையும் செய்து இந்த சவாலில் வெற்றி பெற நினைக்கிறார்கள். அது அவர்களுடைய உடல்நலனுக்கோ, ஏன் உயிருக்கோ கூட ஆபத்தாய் முடிவதை அவர்கள் உணர்வதில்லை.

இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து கட்டளைகள் இவை.

1. நேரடியான விளையாட்டுகளே எப்போதும் பாதுகாப்பானவை, உறவையும் உடல் நலத்தையும் வளர்ப்பவை. டிஜிட்டல் விளை யாட்டுகள் உடல்நலத்துக்கு எப்போதுமே கேடு விளைவிப்பவை தான். டிஜிட்டல் தவிர்.

2. எந்த ஒரு சவாலான விளையாட்டையும் செய்ய முயலாதீர்கள். பிறர் நம்மைத் தூண்டி விடுகின்ற வார்த்தைகளுக்கு பலியாகாமல் சுயமாய் சிந்தித்து அதைத் தவிர்ப்பது மிக முக்கியம். கூட இருப்பவர்கள் ஏத்தி விடுவதற்காக நாம் வீழ்ந்து விடக் கூடாது. ஈகோ தவிர்.

3. நமக்குப் பரிச்சயமில்லாத நபரோடு எந்த விதமான விளையாட்டையோ, சவாலையோ செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம். நீண்ட நெடுங்காலமாய் சோசியல் மீடியா தோழராய் இருந்தாலும் நேரடியாய்த் தெரியாவிடில் ஒதுங்கி இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். நெருக்கம் தவிர்.

4. பெற்றோருக்குத் தெரியாமல் சிறுவர்களும், பதின்வயதினரும் எந்த சவால்களையும் செய்யக் கூடாது. ரகசியம் தவிர்.

5. உளவியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், சவால்கள், பிரச்சினைகள் எழுந்தால் உடனே பெற்றோரிடமோ, நம்பிக்கைக்குரியவர்களிடமோ சொல்லி அவர்களுடைய உதவியை நாட வேண்டும். தனிமை தவிர்.

6. சோசியல் மீடியாவிலோ, டிஜிட்டல் வெளியிலோ உங்களுக்குக் கிடைக்கும் லைக்ஸ், ஷேரிங், கமெண்ட் போன்றவை உங்களுடைய வாழ்க்கையை எந்த விதத்திலும் அர்த்தமுள்ளதாக்கப் போவதில்லை. மாயை தவிர்.

7. சோசியல் மீடியாவில் பிரகாசிக்க விரும்பினால் உங்களுடைய திறமைகளைப் படைப்புகளாக, இசையாக, ஓவியமாக, குறும்படமாக அல்லது அது போன்ற ஏதோ ஒரு விஷயமாக இணையத்தில் பதிவேற்றி பிரபலமாகுங்கள். அது தருகின்ற மகிழ்ச்சி அலாதியானது. திறமை பயில்.

8. உங்கள் நண்பர் வட்டாரத்தில் யாரேனும் இத்தகைய சவால்களில் ஈடுபட்டால் அவர்களை திருத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உண்டு. ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களின் உதவிகளை நீங்கள் நாடலாம். நட்பு பயில்.

9. பெற்றோரும் பெரியோரும் இத்தகைய புதிய புதிய சவால்களைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றை பிள்ளைகளுக்கு விலக்கி எச்சரிக்கை செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை பயில்.

10. பெற்றோர் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகள் டிஜிட்டலைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கும் அதே நேரத்தில், பெற்றோரும் டிஜிட்டலை ஒதுக்கியே வைக்க வேண்டும். நேசம் பயில்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உயிரியல் சித்தர் ஜெகதீஷ் சந்திர போஸ்

உயிரியல் சித்தர் ஜெகதீஷ் சந்திர போஸ்

ஜெகதீஷ் சந்திர போஸ்

நா.சு.சிதம்பரம், இயற்பியல் ஆசிரியர் (ஓய்வு) (அறிவியல் விழிப்புணர்வு பணிக்குத் தேசிய விருது பெற்றவர்).

இ ன்று (நவம்பர் 30-ந் தேதி) அறிவியலறிஞர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்தநாள்.

வானொலியைக் கண்டுபிடித்த அறிஞர் ‘மார்க்கோனி’க்கு முன்னால் அந்தக் கண்டுபிடிப்புக்கான அடிப்படை முறையை உருவாக்கியவர் இந்திய அறிவியலறிஞர் ஜெகதீஷ் சந்திர போஸ். இவர் மட்டும் தன்னுடைய கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை அன்றே பெற்றிருந்தால் வானொலியைக் கண்டுபிடித்த பெருமை இந்தியருக்கே சேர்ந்திருக்கும்.

ஜெகதீஷ் சந்திரபோஸ் 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி பழைய வங்காள மாநிலத்தில், விக்ரம்புரி மாவட்டத்தில் உள்ள ராரிக்கல் என்ற கிராமத்தில் (தற்போது வங்காள தேசத்தில் உள்ளது) பகவான் சந்திரர் என்பவருக்கும், அபலா போஸ் என்ற அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பகவான் சந்திரர் துணை நீதிபதியாகப் பணியாற்றியவர். ஏழைகள் படிக்கும் வங்காளப் பள்ளியில் உயர்குடும்பத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் சேர்ந்து படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள புனித சவேரியர் கல்லூரியிலும் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்று கலையில் பட்டமும், பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டமும் பெற்றார். தாயகம் திரும்பியபின், ரிப்பன் பிரபுவின் பரிந்துரை காரணமாக கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியரானார். ஆங்கிலப் பேராசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடும்போது இந்தியப் பேராசிரியர்களின் சம்பளம் மூன்றில் இரண்டு பங்காக இருந்தது. இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ஜெகதீஷ் மூன்றாண்டுகள் ஊதியம் வாங்காமல் பணியாற்றினார். இவருடைய திறமையையும், உழைப்பையும் கண்டுணர்ந்த கல்லூரி முதல்வர் மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து முழுச்சம்பளத்தையும் இவருக்கு வழங்கினார். பணியாற்றிய காலங்களில் இவர் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார். அதற்கான ஆய்வுக் கருவிகளைப் பெறுவதில் இந்தியன் என்ற முறையில் இவர் பல சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது. எனவே, இவரே தனக்குத் தேவையான கருவிகளைச் சொந்தமாக உருவாக்கிக் கொண்டார். குறுகிய மின்னலைகளைப் பற்றி ஆராய்ந்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இவருடைய கட்டுரையை இங்கிலாந்தில் உள்ள ராயல் கழகம் வெளியிட்டது. வங்காள அரசு இவருடைய ஆய்வுகளுக்கு உதவி புரிய முன் வந்தது. 1896-ல் லண்டன் பல்கலைக் கழகம் இவருக்கு முனைவர் பட்டம் அளித்தது.

வங்காள ஆளுநரின் தலைமையில், பல அறிவியலறிஞர்கள் முன்னிலையில் போஸ் தன்னுடைய ஆய்வுகளைச் செய்து காட்டினார். வேறொரு அறையிலிருந்து மின்னலையினால் மணியை ஒலிக்கச் செய்தார். தன்னுடைய மேசையில் இருந்த கருவியின் குமிழை இவர் அழுத்திய போது அந்த மணியின் ஒலி தெளிவாகக் கேட்டது. குமிழை அழுத்தியதை நிறுத்தியதும் மணியோசை நின்றுவிட்டது. அது போலவே ஓர் அறையில் மேசை மீது இருந்த பொருளை வேறொரு அறையில் இவருடைய கருவியின் மூலம் கீழே விழும்படிச் செய்தார். இரு அறைகளுக்கும் எந்தவிதக் கம்பித் தொடர்பும் இல்லாமல் இவற்றைச் செய்து காட்டினார். கம்பியில்லாத் தந்தி, வானொலி முதலியன தோன்றுவதற்கு இவருடைய இந்த முறைகள்தான் அடிப்படையாக அமைந்தன. இவர் கண்டுபிடித்த இந்த முறையின் அடிப்படையில்தான் பிறகு மார்க்கோனி வானொலியைக் கண்டுபிடித்தார். எனவே, வானொலித் தத்துவத்தை முதலில் உலகிற்கு வழங்கியவர் நம் நாட்டறிஞர் ஜெகதீஷ் சந்திர போஸ்.

குமிழிகளை உருவாக்கப் பயன்படும் பொருள்களைப் பற்றி ஆய்வு செய்தபோது, சில பொருள்களில் மின்காந்த அலைகள் பட்டால் தொடுகை மின்தடை குறைந்தது. வேறு சில பொருள்களில் அதிகரித்தது. இதை ‘மின்தொடு உணர்வு’ என்று இவர் குறிப்பிட்டார். இப்பொருள்களில் மின்காந்த அலைகளைத் தொடர்ந்து பாய்ச்சிக் கொண்டிருந்தால் மின் தொடு உணர்வு பழைய அளவிற்கு மீண்டது, இது போன்ற விளைவுகளை உயிரித் திசுக்களிலும் காண முடிவதை போஸ் கண்டறிந்தார்.

செலினியம் என்ற தனிமத்தில் ஒளி படும்போது அதன் மின்கடத்து திறனில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதே ஆய்வை ஐரோப்பாவில் ஷெல்போர்டு பிட்வெல் என்பவரும் செய்து கொண்டிருந்தார். செலினியத்தில் ஏற்படும் ஒளி மின் விளைவுகளையும் அரைக்கடத்திகளின் மின் திருத்திப் பண்புகளையும் பற்றிய கண்டுபிடிப்புகளில் இவர்கள் இருவருக்கும் சம பங்கு உண்டு.

வெவ்வேறு தூண்டல்களின் காரணமாகப் பொருள்களில் வெவ்வேறு விளைவுகள் ஏற்படுவதை விளக்க மூலக்கூறு தகைவுதிரிபுக் கொள்கை ஒன்றை போஸ் வெளியிட்டார். இரு கண் பார்வையில் ஏற்படுகின்ற மாற்றங்களை விளக்குவதிலும் இவர் வெற்றி பெற்றார். ஒளியின் நிறப்பிரிகை நிகழ்வில் ஏழு ஒளிக்கதிர்களுக்கு மேலும், அவற்றைக் கண்ணால் காண முடியாத மின் காந்த அலைகள் உண்டு என்பதை உணர்த்துவதற்காகக் கருவி ஒன்றை அமைத்தார். அது ‘செயற்கைக் கண்’ என்று கூறப்பட்டது.

அடுத்து உயிரற்ற பொருள்கள், தாவரங்களைப் பற்றியும் ஆராய்ந்தார். தாவரங்களுக்கு உணர்வுகள் உண்டு; அவற்றில் தூண்டல்களை ஏற்படுத்துகின்ற பதில் விளைவுகளைப் பற்றிப் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி ராயல் கழகத்திற்கு அனுப்பினார். அது பற்றி நேரிலும் சென்று பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஆனால் அங்கு கூடிய அறிஞர்கள் குழு அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. தாவரங்களின் பதில் விளைவுகளை உருப்பெருக்கிக் காட்டக்கூடிய கருவிகளை ஒளி நெம்புகோல் முறையைப் பயன்படுத்தி உருவாக்கினார். ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் நிகழ்கின்ற விளைவுகளைக் கூடப் பதிவு செய்யும் ‘ஒத்ததிர்வுப் பதிவி’, 1914-ல் இலைத் துளிர்களின் அலைவுகளைப் பதிவு செய்யும் ‘அதிர்வுப் பதிவி’, 1917-ல் தாவரங்களின் நீளவளர்ச்சியை அளவிட உதவும் கூட்டு நெம்புகோல் கிரெஸ்கோகிராப் என்ற கருவிகளை உருவாக்கித் தன்னுடைய ஆய்வுகளின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினார். இவருடைய ஆய்வுக்கட்டுரைகளை ராயல் கழகமும் தாவர இயல் கழகமும் வெளியிட்டன. செடிகள் அடிபட்டால் அழுகின்றன. மயக்க மருந்தைச் செலுத்தினால் மயங்குகின்றன, உறங்குகின்றன, விழிக்கின்றன என்று தாவரங்களுக்கும் அனைத்து உணர்வுகளும் உண்டு என்பதைத் தெளிவாக விளக்கினார். ‘தொட்டால் சிணுங்கி’ என்ற செடி மனித நாக்கின் உணர்வை விடப் பத்து மடங்கு அதிக உணர்வுடையது என்பதைக் கண்டறிந்து அறிவித்தார்.

1915-ல் இவர் ஓய்வு பெற்றபோது இந்திய அரசு இவருக்குச் ‘சர்’ பட்டம் அளித்துச் சிறப்பித்ததுடன் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்த ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடையும் வழங்கியது. இவர் ஐந்து லட்சம் ரூபாயைக் கொண்டு சிறந்த ஆய்வு நிலையம் ஒன்றை உருவாக்கினார். 1917-ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இவருக்கு ‘நைட்’ என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தார்.

1920-ல் ராயல் கழக உறுப்பினரானார். அதே ஆண்டில் தாவர வளர்ச்சி வீதத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட சமநிலையாக்கிக் கருவியையும், தாவரங்களின் மின் செயல்களை அளவிட நுண் மின்வாய்களைப் பொருத்தும் உத்தியையும், 1922-ல் ஒளிச்சேர்க்கை வீதத்தை அளவிட ஒரு கருவியையும், 1927-ல் வெப்பம், குளிர், நச்சு அல்லது தூண்டிகளின் விளைவாகத் தாவரங்களின் விட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை அளவிட உதவும் ‘விட்டச் சுருக்கம்’ என்ற கருவியையும் உருவாக்கினார். இக்கருவிகள் அனைத்தும் உராய்வின்றித் தடையற்ற இயக்கத்தில் செயல்படுமாறு செய்ததுதான் இவருடைய மாபெரும் சாதனை.

வங்காள மொழிக் கட்டுரைகளில் இவருடைய மொழிநடை இலக்கிய வளம் பெற்றதாக அமைந்திருந்தன. அறிவியலறிஞர்களில் ஒரு கவிஞர். நாடகமேதை பெர்னார்ட் ஷா இவருக்குத் தனது நூல்களை “மிகச் சிறந்த உயிர்நூற் புலவருக்கு” என்று எழுதிப் பரிசாக அனுப்பி வைத்தார். இந்தியாவின் பெருமைக்கு வளம் சேர்த்த இயற்பியல், உயிரியல் துறைகளில் சிறந்து விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் 1937-ம் ஆண்டு அவர் பிறந்த அதே நவம்பர் மாதத்தில் 23-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 29 November 2019

பக்குவப்படுத்தும் பயணங்கள்

பக்குவப்படுத்தும் பயணங்கள்

பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், தனியார் கல்லூரி, திருநெல்வேலி.

ந ம் இதயத்தின் ரணங்களை ஆற்றும் இயற்கை மருந்துகள் பயணங்கள். பயணங்கள் மகிழ்வலையின் கீற்றுக்கண்கள், மெல்லுணர்வின் ஊற்றுப் பண்புகள். கொதிக்கும் மனதை மயிலிறகால் வருடி ஆறுதல் தரப் பயணங்களால் மட்டுமே முடிகிறது. விரிந்த சிறகுகளை மனிதர்களுக்குத் தரும் வல்லமை பயணங்களுக்கு உண்டு. நகர்வின் தேவையைப் புரியவைத்து வாழ்வின் வலிமையைப் பயணங்கள் உணர்த்துகின்றன. பயணப்பொழுதுகளில் நாம் பாரம் மறந்த பறவைகளாகிறோம், சோகம் மறந்த குழந்தைகளாகிறோம். பண்டம் சுட்டு தான் சாப்பிடாமல் தன் பேரனுக்கும் பேத்திக்கும் ருசிக்கத் தருகிற பாட்டிகளைப் போல் இயற்கை தன்னைப் பிழிந்து தன்னை நோக்கி வருகிறவர்களுக்குப் பயணப் பொழுதுகளில் தருகிறது. பதற்றப் பொழுதுகளிலிருந்து பயணப்பொழுதுகள் விடுதலை தருகின்றன.

வேளாவேளை உணவைக் கூட மறக்கடித்துப் பட்டாம்பூச்சிகளாக பயணப்பொழுதுகள் மாற்றுகின்றன. அருந்தி முடித்த பின் அப்பால் எறிகிற வெற்று இளநீர்க்காய்களைப் போல், நம் மனதில் அப்பிய கவலைகளைக் காலிசெய்து தூர எறியப் பயணங்களே துணைபுரிகின்றன. நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்து மாய்ந்து மாய்ந்து வேலைபார்க்கும் கடினஉழைப்பாளிகளையும் பயணங்கள் பஞ்சுபோல் மாற்றி ஆகாயப்பரப்பில் அப்படியே பறக்கவைக்கின்றன.

பயணக் காலைகள் பதற்றம் இல்லாதவைகள், பயண மதியங்கள் பசிமறந்தவைகள், பயண இரவுகள் நிம்மதி நிரம்பியவைகள். மொத்தத்தில் பயணநாட்கள் நம்மை பலப்படுத்தும் நாட்கள். கடற்கரைச் சாலையில் வாகனத்தில் பயணிக்கும்போது சில்லென்று நம் முகத்தில் வீசியறைந்து செல்லும் உப்புக்காற்று, மலைகளைச் சுற்றிச்சுழன்று கீழிருந்து மேலாய் பயணிக்கும்போது நம் அடிவயிற்றிலிருந்து கிளம்பும் இனம்புரியாத உணர்வு, கண்களைக் குளுமையாக்கும் ஓங்கி உயர்ந்த பச்சைப் பசியமரங்கள், செடிகொடிகள், மலர்க்கூட்டங்கள், அந்தந்த இடங்களுக்குச் செல்லும் போது நாம் உண்ணும் அந்தந்த நிலம் சார்ந்த உணவுவகைகள், அந்தந்த மண்சார்ந்து பயணிக்கும்போது நாம் அனுபவிக்கும் அந்தந்த மண்சார்ந்த தட்பவெப்பம், அந்தந்த இடங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் நிழற்படங்கள் யாவும் நம்மை புதியமனிதர்களாய் மறுபடியும் மறுபடியும் பிறக்கவைக்கின்றன. ஆண்டுக்கு இருமுறையாவது சுற்றுலா செல்வோருக்கு இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், இருக்கும் இடத்தைவிட்டு நகர்ந்து இயற்கையின் மடியில் அமர்ந்து வருபவர்களுக்கு மனஅழுத்தம் வருவதேயில்லை என்றும் மேலைநாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயணம் பல்வேறு மொழிகளையும், பல்வேறு பண்பாடுகளையும், பல்வேறு உணவுப் பழக்கங்களையும் மதிக்கக் கற்றுத்தருகிறது. வேறுபாடுகளையும் கூறுபாடுகளையும் இணைத்துத் தைக்கும் பண்பாட்டு ஊசியாகப் பயணம் அமைகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று, எல்லா ஊரும் என் ஊரே எல்லா மக்களும் என் சொந்தம் என்று உரக்கச் சொல்லும் உன்னத உணர்வைப் பயணங்கள் நமக்குத் தருகின்றன. பயணிக்கும் பொழுதுகளில் நம் மூளை உற்சாகமாகிப் புதிய சிந்தனைகளை நமக்குள் விதைத்து நம்மைப் புதிய மனிதர்களாக்குகின்றன. மற்றவர்களை மதிக்கக் கற்றுத் தந்து பயணங்கள் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. அதனால்தான் திரைகடல் ஓடித் திரவியம் தேடினார்கள் தமிழர்கள். பொருளைத் தேடுவதோடு அருளையும் தேடி தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை உலகம் முழுக்கப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

காசியில் வசிப்பவர்களுக்கு ராமேஸ்வரம் புனிதத் தலமாகவும், ராமேஸ்வரத்தில் வசிப்பவர்கள் காசிக்குச் செல்லுதல் புனிதம் என்றும் நம் முன்னோர் வகுத்தார்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடல்கடந்து இறை இல்லம் அமைந்துள்ள மெக்கா மாநகருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலம் பயணம் மேற்கொள்கிறார்கள். நின்றுகொண்டே இருப்பதைவிடச் சென்றுகொண்டே இருப்பது சாலச்சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். பயணிக்கும் பொழுதுகளில் நமக்கும் நம் குடும்பத்தினருக்குமான அன்பு பெருகுகிறது, பயணம் முடித்து வீடு திரும்பும்போது நம் குடும்பத்தினருக்காக நாம் வாங்கிவரும் பொருட்கள் அவர்கள் மீதான நம் அக்கறையை அவர்களுக்குக் காட்டுகிறது. பயணப்பொழுதுகளில் நம்மோடு பயணிக்கும் சகமனிதர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும், தேவையான உயர்பண்புகளைப் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.

பயணப் பொழுதுகளில் இறுக்கமான மனிதர்கள் நெருக்கமான மனிதர்களாகின்றனர். மண்ணைப் பிசைந்து உருட்டிவைத்ததைப் போல் மாமலைகள், அதில் நட்டுவைத்த நெட்டை நெடுமரங்கள், நீள்வெள்ளிச் சேலைகளாய் நீண்டுதொடரும் நீள்நதிகள், தொடர்மழை, அடர்பனிக்காடு, கொட்டும் அருவி, நீள்பரப்பில் நீண்டுவிரியும் நீலக்கடல்பரப்பு, வானுயர் மரங்கள், தேன்நிகர் மொழிகள், கருப்புப் பாம்பாய் நம் வாகனத்தின் முன் நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள், அன்பைச் சிந்தும் அற்புதமான மனிதர்கள் என்று எங்கெங்கு காணினும் பயண அழகுகள். சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பயணம், இந்தியப் பண்பாட்டினை உலகுக்கு உணர்த்தியது. மகாத்மா காந்திஜி மேற்கொண்ட தென்னாப்பிரிக்கப் பயணம் அவரை இந்திய சுதந்திரப் போரின் தளபதியாக்கியது. அன்னை தெரசாவின் கல்கத்தா பயணம் அவரை உலகின் அன்னையாக்கியது.

சீனப் பயணியான யுவான்சுவாங் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் இந்தியாவின் புகழையும் தொன்மைச் சிறப்பையும் உலகுக்கு அழுத்தமாய் உணர்த்தியது. இத்தாலி நாட்டுப் பெருங்கடல் மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம் அமெரிக்காவை உலகின் முன் கண்விரியக் காட்டியது. போர்சுக்கல் நாட்டுக் கடற்பயணி மேற்கொண்ட கடற்பயணம் இந்தியாவுக்கான கடல்வழியை உலகுக்குக் காட்டியது. கடலோடிகளிடமிருந்தும் நாடோடிகளிடமிருந்தும் தேசாந்திரிகளிடமிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பயணிக்கிறவர்கள் பல பண்பாடுகளைப் படித்தறிந்தவர்களாகத் தானிருப்பார்கள். வாழ்வை நீட்டிக்கும் வலிமை சுற்றுலாவுக்கு உண்டு. பொருளைச் சேமித்தால் அவை கொள்ளை போகலாம். நினைவுகளைச் சேமிக்க வேண்டுமானால் அது பயணித்தால் மட்டுமே முடியும்.

தாமிரபரணியில் தொடங்கி ஆந்திரத்தின் வயற்காடுகள்மீது தொடர்வண்டியில் பயணித்து, நாக்பூர் மண்குவளையில் தேநீர் அருந்தி, தாஜ்மகாலை நிறைமதியொளியில் கண்டுரசித்து, சண்டிகர் சென்று சிம்லாவின் மலைக் காடுகளைத் தரிசித்து குங்குமப்பூ உண்டு, மனாலியின் பனிமலைகளில் பனிச்சருக்காட வைத்து பாரததேசமென்று தோள் கொட்டவைத்து தேசிய ஒருமைப்பாட்டினை போற்றுவோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கலைவாணரின் கொடை உள்ளம்

கலைவாணரின் கொடை உள்ளம்

சுப்பு ஆறுமுகம், வில்லிசை கலைஞர்,

இ ன்று (நவம்பர் 29-ந்தேதி) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்.

திரைப்படத்தில் நகைச்சுவை என்பதற்கு சார்லி சாப்ளினுக்கு பிறகு ஒரு பெரிய சிகர உச்சியைத் தொட்டவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் திரைப்பட புகழுக்குப்பின் அவரது மனம் பாண்டியநாட்டு கலையான வில்லிசையை வளர்க்க வேண்டும் என்று விரும்பியது.

அந்த சமயத்தில் தான் அவர் என்னை (சுப்புஆறுமுகம்) சந்தித்தார். அப்போது எனக்கு 16 வயது. நான் நெல்லை-பாளையங்கோட்டை பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். நம்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலம். பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்க என்.எஸ்.கிருஷ்ணன் வந்து இருந்தார். அப்போது நடந்த கலைநிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு பாடினேன். அதில் ஒரு பாட்டு.

‘காந்திபேரை சொன்னவுடன்

கம்பெடுத்து வந்தவங்க

கண்முன்னாலே அதே கம்பில்

காந்தி கொடி கட்டினாங்க’

என்று வரும் அதை நான் பாடி முடித்ததும் பலத்த கைத்தட்டல். கலைவாணரும் அதை மிகவும் விரும்பி ரசித்தார். பின்னர் என்னை பாராட்டி, நான் பாடிய பாட்டுக்கு விளக்கம் கேட்டார். அப்போது அவரிடம் “ஐயா, எங்க திருநெல்வேலியில் இரண்டு விதமான மக்கள் இருந்தாங்க. ஒன்று சுதந்திரம் கிடைக்கும்னு சொன்னவங்க... இன்னொரு தரப்பினர் சுதந்திரம் கிடைக்காதுன்னு சொன்னவங்க...”

இவங்க சுதந்திரத்துக்கு முதல்நாள் காந்திஜிக்கு ஜே என்று சொன்னா... தடி எடுத்துட்டு வருவாங்க... ஆனா சுதந்திரம் கிடைச்சவுடனே அந்த தடியை கொடியாக மாத்திட்டாங்க...

முதல்நாள் வரையிலும்...தடி

மறுநாள்... கொடி

இந்த பக்கம் வந்து வாழ்த்த ஆரம்பிச்சிட்டாங்க அதனால் தான் அதே ‘கம்பில்’ன்னு போட்டேன் என்று கூறினேன். இதைக்கேட்டதும் கலைவாணர் என்னை கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தார்.

கடைசியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கலைவாணரிடம், உங்களுக்கு என்ன பரிசு தரவேண்டும் என்று கேட்க, எனக்கு சிறுவன் ஆறுமுகத்தையே வில்லுப்பாட்டு எழுத பரிசாக தாருங்கள் என்று கேட்க, பள்ளித் தலைமை ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார். அதன் பின்னர் எனது தாயாரை சந்திக்க என்.எஸ்.கிருஷ்ணன் எங்கள் வீட்டுக்கு வந்தார். அந்த ஊரே ஒன்று கூடிவிட்டது. எங்கள் வீட்டுக்கு வந்த அவரை என் அம்மா வரவேற்று, உபசரித்து விருந்து அளித்தார். அதன்பிறகு கலைவாணர் என் அம்மாவிடம், உங்கள் பிள்ளையை என்கூட மெட்ராசுக்கு பாட்டு எழுத கூட்டிட்டுப்போறேன் ஆசீர்வாதம் பன்னி அனுப்புங்க என்றார்.

அம்மா யோசனை செய்தபடியே ’கிருஷ்ணா மெட்ராஸ் எங்கிருக்கு? மதுரைக்கும் வடக்கேயா’? என்று தயக்கத்துடன் கேட்டார். அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் அம்மா நான் திருநெல்வேலிக்கும் தெற்கே இருந்துல்லே போயிருக்கேன் ஒன்றும் பயப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆறுதல் கூறினார். பின்னர் எனக்கு அம்மா திருநீறு பூசினார். என்.எஸ்.கிருஷ்ணாவுக்கும் திருநீறு பூசி விட்டார். பின்னர் என்.எஸ்.கிருஷ்ணன் என்னை அழைத்துக்கொண்டு காரில் சென்னை கிளம்பினார். நீண்ட நேரமாகியும் கலைவாணர் விபூதியை அழிக்கவில்லை. அவரிடம் நான் மெதுவாக அண்ணே நீங்கள் நடிக்கும் நாடகத்தில்கூட விபூதி வைக்க மாட்டீங்களே! அம்மா பூசிய விபூதி அப்படியே இருக்கே... என்று கேட்டேன். அதற்கு அவர் சுப்பு! கண்காணாத தெய்வத்துக்காக.. கண்கண்ட தெய்வம் தாய் மனது வேதனைப்பட வைக்கக்கூடாது என்று கூறியதோடு மட்டுமின்றி அந்த விபூதி தானாக அழியும் வரை அதை அழிக்கவில்லை. அந்த பெருந்தன்மைக்கு பகுத்தறிவு பக்தி என்று பெயர் வைக்கலாம் என்று எனக்கு தோன்றியது.

கலைவாணர் பாசறையில் பல கலைஞர்கள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் எதாவது பரிசுப் பொருளை கொடுத்துக்கொண்டே இருப்பார். நான் அவரிடம் எதுவுமே கேட்டதில்லை. ஒருநாள் நான் கலைவாணரிடம் சென்று தயக்கத்துடன் அவருக்கு கொழும்பில் பரிசாக கொடுத்த காந்திஜி சிலையை கொடுக்கும்படி கேட்டேன் அப்போது கலைவாணர் என்ன சொன்னார் தெரியுமா?

சுப்புஆறுமுகம்! நீ ஒண்ணுமே கேட்காதவன். கேக்கறே.... இந்தா வச்சுக்கோ... என்ற மகிழ்ச்சியோடு காந்தி சிலையை என்னிடம் கொடுத்தார். கொஞ்சநேரம் கழித்து, “ஏய்... சுப்புஆறுமுகம்.. மேலும் அது இங்க இருக்கிறதை விட உன் வீட்டிலே இருக்கிறது தான் நல்லது... உத்தமம். என்று கூறினார். நான் அதை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன். இன்றும் என்வீட்டில் அந்த காந்தி சிலையை கலைவாணரின் நினைவாய் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.

கலைவாணர் எப்போதாவது படப்பிடிப்புக்காகவோ, கச்சேரிக்காகவோ தனது குழுவினருடன் குற்றாலத்துக்கு செல்வது வழக்கம். அப்போது நடந்த ஒரு சம்பவம். அங்கு ஒரு பாட்டி கலைவாணர் எப்போது குற்றாலம் சென்றாலும் அவரை சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு செல்வார். கலைவாணரும் அந்தப்பாட்டிக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுப்பார். கடைசி காலத்தில் அவருக்கு உடம்பும் சரியில்லை. வசதி வாய்ப்புகளும் இல்லை. அந்ததடவை அவர் குற்றாலம் சென்றபோது அவரை அந்தபாட்டி சந்தித்து கிருஷ்ணா என்று மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டே பக்கத்தில் சென்றார். அவரைப்பார்த்த கலைவாணர் ஜிப்பாவில் கையைவிட்டுதேடி பார்த்த போது ரூ.5மட்டுமே கிடைத்தது ஒருகாலத்தில்பாட்டிக்கு ரூ.500 கொடுத்தார் பின்னர் ரூ.300 கொடுத்தார். அப்புறம்கடைசியாக சந்தித்த போது ரூ.10 கொடுத்தார். தற்போது 5ரூபாயை எடுத்து இந்தா வச்சுக்கப்பாட்டி என்று கொடுத்துவிட்டு கண்ணீர்விட்டு அழுதார். உடனே அந்த மூதாட்டி ஏன் கிருஷ்ணா அழுதே? நீதான் எனக்கு நல்லாதானே கொடுத்தே என்று கேட்ட போது கலைவாணர் சொன்ன வார்த்தை இதுவரை யாரும் சொல்லாதது.

ஒண்ணுமில்லைபாட்டி. அதெல்லாம் உனக்கெதுக்கு.... என்கவலை என்னோட இருக்கட்டும் என்றார். இல்லப்பா, சொல்லப்பா என்ற பாட்டி வற்புறுத்தி கேட்டதும் அவர் சொன்னார். உனக்கு தெரிந்து எத்தனை வருடமாக இங்கே வருகிறேன். வசதியாக இருந்தபோது, நிறைய கொடுத்தேன். போனமுறை ரூ.10 கொடுத்தேன். இப்ப தேடி தேடி பார்த்து 5 ரூபாய் கொடுத்தேன் எனக்கு ஒரே ஒரு எண்ணம் தான். அடுத்த முறை நான் குற்றாலம் வந்து, நீயும் என்னிடம் வந்து கேட்கும் போது உனக்கு கொடுக்கிறதுக்கு எதுவும் இல்லையே பாட்டி என்று நான் சொல்வதற்குள் என்னை கடவுள் மேலே கூப்பிட்டுக்கொள்ளனும் என்றார். இதைக்கேட்டு நெகிழ்ந்துபோன அந்த மூதாட்டி கலைவாணரை கட்டிப்பிடித்து அழுதார். ஒரு இரக்கம், இதேமாதிரி ஒரு கருணை, கொடுக்கும் கொடை குணம் எப்பேர்பட்ட வரம். இதுகலைவாணி கலைவாணருக்கு தந்த மிகப்பெரிய வரம்.

கலைவாணர் கருணைக்கு இன்னொரு சான்று படப்பிடிப்புக்கு சென்ற சமயத்தில் ஒரு கலைக்கூத்தாடி நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்த இடத்துக்கு கலைவாணரும், அவரது குழுவினரும் சென்றனர். கலைவாணர் போனவுடன் ஏகபோக வரவேற்பு. கலைக்கூத்தாடி உற்சாகமாக வரவேற்றார். பின்னர் ஒவ்வொரு வித்தையாக காட்டினார். அதை பார்த்து கலைவாணர் பலத்த கரகோஷம் கொடுத்து ரசித்தார். முக்கியமான வித்தையை காட்ட வேண்டும் என்று நினைத்த கலைக்கூத்தாடி ஒரு குழந்தையை படுக்க வைத்து அதன் கழுத்தில் வாழைக்காயை வைத்து வெட்ட முயற்சித்தார். இதைப்பார்த்த கலைவாணர், வயிற்றுப்பிழைப்புக்காக ஒரு குழந்தையின் கழுத்தில் வாழைக் காயை வைத்து வெட்ட வேண்டுமா? என்று மனம் தாங்காமல் நேராக சென்று அந்த கலைக்கூத்தாடியின் கையைப்பிடித்து, ‘ஏய் உன் வித்தை நன்றாக இருந்தது. ஆனால் இனிமேல் இந்த வித்தையை மட்டும் எங்கும் செய்யாதே என்று கூறி உனக்கு பெரிய பரிசு தருகிறேன் என்றுகூறி பெரியதொகையை கொடுத்து வித்தை ரொம்ப நல்லா இருக்கு எல்லா வித்தையும் காட்டு இந்த வித்தையை மட்டும் எங்கும் செய்யாதே ஏம்பா எப்பவாவது குழுந்தை கழுத்தில் வெட்டினா என்னாகும் பிள்ளை பாவம் இல்லையா? இனிமே அந்த வித்தையை மட்டும் எங்கும் செய்யாதே என்று கூறிவிட்டு சென்றதும் ஏகபோக கரகோஷம். அந்த கலைக்கூத்தாடிக்கு மகிழ்ச்சி, கலைவாணரின் கருணையை நினைத்து கண்ணீர் விட்டார். காலம் உள்ளவரை கலைவாணர் புகழ் நிலைத்து இருக்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday 27 November 2019

கீழடியில் தங்கத்தின் எடை அளவுகள்

கீழடியில் தங்கத்தின் எடை அளவுகள்

பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குனர் சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம், சென்னை.

த மிழரின் சங்ககாலத்தை தங்ககாலம் என்பார்கள். எனவே தமிழரின் பொற்கால வரலாற்றை படம் பிடித்து காட்டும் வகையில் கீழடியில் பொன் அணிகலகன்கள், பொற்காசுகள், பொன்கட்டிகள் கிடைத்துள்ளன. இவற்றின் எடை அளவுகள் சிந்துவெளியில் கிடைத்த எடை அளவுகளுக்கு முற்றிலும் பொருந்தியுள்ளன. பொறியாளர் வெங்கடாசலம் சிந்துவெளியில் கிடைத்த எடைஅளவுகளும், தமிழக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எடை அளவுகளும் நூற்றுக்கு நூறு ஒப்புமை உடையவை என்று தன் நூல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்றும் மாறாத எடை அளவாக குன்றிமணியை தேர்ந்தெடுத்தனர். 20 குன்றிமணிகளின் எடை 1 கழஞ்சு பொன் நாணயமாக கருதப்பட்டது. 320 குன்றிமணிகளின் எடை ஒரு பலம் எடைக்குச் சமம். கீழடியில் கிடைத்த பொன் அணிகலன் 0.9 கிராம் எடையுள்ளது. இது 9 குன்றிமணிக்குச் சமம். கீழடியில் கோதை என்னும் பெயர் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்ட 7 நீள்வடிவ தங்க கட்டிகள் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் 3.5 கிலோ எடைகொண்ட தங்க கட்டிகளும் இருந்தன. காக்கை பாடினி நச்செள்ளையாருக்கு நகை செய்து போட்டுக்கொள்வதற்காக சேரன் 9 “கா“ பொன் கொடுத்தான் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது. ஒரு “கா“ என்பது 3.5 கிலோவுக்கு சமம். தயிர், மோர், நெய் விற்கும் ஆயர் குலப்பெண் பலகாலம் கழித்து அதன் விலையை கட்டிப் பொன்னாக பெற்றாள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. எனவே, கீழடியில் கிடைத்த தங்க கட்டிகளே அந்த காலத்தில் பெரிய பணமதிப்பிற்குரிய பணப்புழக்கமாக இருந்தது எனத் தெரிகிறது.

கீழடியில் சிறிதும், பெரிதுமான வட்டவடிவ பொற்காசுகள் கிடைத்துள்ளன. அந்தக் காலத்தில் “காணம்” என்னும் பொற்காசும், “பொன்” என்னும் பொற்காசும் வழக்கில் இருந்ததை சங்க இலக்கியத்தின் வாயிலாகவும், கல்வெட்டின் வாயிலாகவும் அறிய முடிகிறது. காணம் என்பது கொள் என்னும் பயற்றின் எடையுள்ள நாணயம். பொன் என்னும் நாணயம் அதைவிட சற்று பெரியது. சேர அரசன் காங்கை பாடினி நச்செள்ளையாருக்கு நூறாயிரம் காணம் நாணயத்தை பரிசளித்தான்.

கொங்கர்புளியங்குளம் கல்வெட்டில் சிறுஆதன் என்பவன் சமண முனிவர்களுக்கு குகையில் கல்படுக்கைகள் செய்வதற்காக 54 பொன் கொடுத்திருக்கிறான். அந்த கல்வெட்டு தமிழி எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும் 54 என்னும் எண்ணிக்கை சிந்துவெளி எண்ணில் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரை எந்தக் கல்வெட்டு அறிஞராலும் அதன் எண் மதிப்பு படிக்கப்படவில்லை. நான் 5000 சிந்துவெளி முத்திரைகளையும் தமிழாகப் படித்துக் காட்டியதின் விளைவாக சிந்துவெளி காலத்து எண்களே கொங்கர் புளியங்குளம் கல்வெட்டில் இருப்பதைக் கண்டறிந்து அதன் மதிப்பு 54 பொன் என்னும் நாணயங்கள் என நிலைநாட்டினேன். எனவே, கீழடியில் கிடைத்த பொன் காசுகள் அனைத்தும் “காணம்” மற்றும் “பொன்” என்னும் சங்க நாணயங்கள் ஆகும். அவற்றின் எடை அளவை தொல்பொருள் ஆய்வுத்துறை வெளிப்படுத்த வேண்டும்.

சிந்துவெளியில் 558 எடை கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரிய எடைகற்களும் உள்ளன. இவை பெரிய அளவுள்ள தங்க கட்டிகளை எடை போடுவதற்கு பயன்பட்டு இருக்கலாம். அகநானூறு 265-ம் பாட்டில் மாமூலனார் மிகப்பெரிய தங்க கட்டிகளை பாடலிபுரத்தை ஆண்ட நந்தர்கள் கங்கை ஆற்றில் ஒளித்து வைத்திருந்தார்கள் என்று கூறியிருக்கிறார். கலித்தொகையில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு வந்த இளைஞனுக்கு பொன்னால் ஆன செம்பில் தண்ணீர் தந்த செய்தி கூறப்பட்டுள்ளது. தங்கத்தின் புழக்கம் இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் மிகுதியாக இருந்திருக்கிறது. கி.பி.முதல் நூற்றாண்டில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட சமண முனிவர்களின் வாழ்க்கை வரலாறு கூறும் மூலாராதனை என்னும் நூல் பழங்கன்னடத்தில் 10-ம் நுற்றாண்டில் வட்டாராதணை என்னும் பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்தியா முழுவதும் அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்களே அதிகம் இருந்தனர். அந்த நூலில் வணிகன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த அரசர் குடும்பத்தினர் பெரிய வீட்டுக்குள் இருந்த குளத்தில் நீராடினர். அரசிளங் குமரியின் வைர மோதிரம் நீரில் விழுந்துவிட்டது. அதை அறிந்த வணிகன் அந்த நீராடும் குளத்தில் இருந்த நீர் முழுவதும் வடித்தான். அந்தக் குளத்தின் அடியில் ஏராளமான அணிகலன்கள் இருந்தன. அவற்றைத் தனித்தனி குவியலாக குவித்து மோதிரக் குவியலில் மட்டும் தேடி இளவரசியின் மோதிரத்தை எடுத்து கொடுத்தான். இந்த வரலாற்றிலிருந்து பழங்காலத்தில் தம் உடலில் அணிந்த பொன் நகைகளைகூட கழற்றாமல் மக்கள் நீராடி மகிழ்ந்தனர் என்பது தெரியவருகிறது. வணிகர்கள் அரசர்களைவிட செல்வச் செழிப்பு மிக்கவர்களாக இருந்தனர். அரசர்களின் அரண்மனைகளில் தங்கக் குடங்களும் இருந்தன. போர்க்காலத்தில் பொன்னால் ஆன அனைத்துப் பொருள்களையும் மண்ணில் அல்லது சுரங்கத்தில் புதைக்கும் வழக்கம் இருந்தது. திருவாங்கூர் கோவில் சுரங்கத்தில் 500 பொன் குடங்கள் கண்டெடுக்கப்பட்டன. கீழடியிலும் கொற்கையிலும் இனிமேல் நடக்க இருக்கும் அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான பொற்காசுகள், பொன் அணிகலன்கள், தங்கக் குடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இளமையின் வரம்- உடல் வலிமை இழக்க விடலாமா...?

இளமையின் வரம்- உடல் வலிமை இழக்க விடலாமா...?

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரித்துறை அதிகாரி.

இ ந்திய இளைஞர்கள், தேவையான அளவுக்கு உடல் உழைப்பை மேற்கொள்வது இல்லை என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.

ஆமா... இதுக்கு தனியா ஒரு அறிக்கை வேணுமாக்கும்...? கண்ணு முன்னாலயே பார்த்துக்கிட்டுதானே இருக்கோம்...? நாலு எட்டு நடந்து கடைக்கு போக முடியலை... எதுக்கு எடுத்தாலும் வண்டி வேணுங்கறாங்க... எப்பப் பார்த்தாலும் போனு ஒண்ணு கையில வச்சிக்கிட்டு எதையோ பார்த்துக்கிட்டு கிடக்கறானுங்க...

இப்படி இருந்தா, ஒடம்பு எப்படி தெம்பா இருக்கும்...?

உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது பள்ளிச் சிறுவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் குறைவாக உடலுக்கு பணி தருகின்றனர். 2001-2016 கால கட்டத்தில் 146 நாடுகளில் 16 லட்சம் பேரை கண்டு ஆய்வு செய்ததில் ஆண் சிறுவர்கள் 78 சதவீதம்; பெண்கள் 85 சதவீதம் தேவையான அளவு தம் உடலுக்கு பணி தருவதில்லை.

ஆச்சரியமான தகவல் தோங்கா, சமோவா, ஆப்கானிஸ்தான், ஜாம்பியா ஆகிய 4 நாடுகளில் மட்டும் பெண் சிறுமியர் ஆண்களை விடவும் அதிகமாக உடற்பயிற்சி பெறுகின்றனர். இந்த நான்கு நாடுகளுமே சமூக, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவை!

உலக அளவில் 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் போதிய உடற்பணிகள் செய்வதில்லை. 2025-க்குள்ளாக இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாவது குறைக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சாத்தியம்தான். ஆனால் இதிலே, அரசுகளை விடவும், தனி மனிதர்களின் ஆர்வம், பங்களிப்புதான் மிக முக்கியம். ஓடிக்கிட்டே இருக்கணும்... உடம்பு வளைஞ்சு வேலை செய்யணும்...

கல்லை தின்னாக் கூட ஜீரணம் ஆயிடும்... அந்த கால பெருசுங்க சொல்கிற இந்த வழிமுறைக்கு மாற்று உலகத்திலேயே இல்லை.

உடலும், உள்ளமும் சுறுசுறுப்பாக இருந்தால் போதும்; ஆரோக்கியமான வாழ்க்கை தானாய் வாய்க்கும். ஒரு காலத்தில் நம் ஊரில் மரம் ஏறாத சிறுவர்களே இல்லை; ஏரியில் குளத்தில் குதித்து குளிக்காத மனிதனே இல்லை. பல மைல் தூரம் நடக்காமல் ஒரு நாளும் போனதே இல்லை.

வீடு மாற்றுவது அல்ல; வீடு கட்டுவதற்கு கூட இயன்றவரை வெளியாட்களை அழைப்பது இல்லை.

இப்போது...? இது எதுவுமே நடைமுறையில் இல்லை. தொலைபேசியில் சொன்னால் சாப்பாடு கூட வீடு தேடி வந்து விடுகிறது.

‘தின்பது’ மட்டும் நாம் தான் செய்ய வேண்டி இருக்கிறது. உழைக்காமல் வாழ்வதுதான் வசதியின் அடையாளம் என்று தவறாக புரிந்து கொண்டு விட்டோம். அதன் விளைவுதான் இன்றைய அவல நிலை.

‘ஓடி விளையாடு பாப்பா’ மட்டும்தானா...?

உடலினை உறுதி செய், ‘ஊண் மிக விரும்பு’,

குன்றென நிமிர்ந்து நில் ‘கெடுப்பது சோர்வு’ என்று

அடுக்கடுக்காய் அள்ளி வீசுகிறார் பாரதியார். (புதிய ஆத்தி சூடி)

இளைஞர்களின் ஆகப் பெரிய சாதகம் அவர்களின் உடல் வலிமை; அவர்தம் மன உறுதி. எவ்வளவு உழைத்தாலும் களைப்பு வராது; எத்தனை தோற்றாலும் சலிப்பு தோன்றாது. இளைய பருவத்தில் எல்லாருக்கும் இது இயல்பானது. இதனை இழக்கலாமா...?

சிறுவரை, இளைஞர்களை மீண்டும் உடற்பயிற்சி, உடற்பணிகளின் பக்கம் திருப்ப வேண்டிய சமூகக்கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது.

நடத்தல், ஓடுதல், குதித்தல், தாவுதல், நீந்துதல், பாய்தல், மூச்சுப்பிடித்தல், மல்லுக்கட்டுதல், மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், சுமை தூக்குதல், மிருகங்களை எதிர்த்தல், இயற்கைச் சீற்றங்களை எதிர் கொள்ளல்... இளைய பருவத்தினருக்கு இவை எல்லாம் இனிப்பு சாப்பிடுவது போல. உவந்து, உல்லாசமாய்ச் செய்வார்கள்.

இவற்றுக்கான வாய்ப்புகளை வழங்குகிறோமா...? இளைஞர்கள் செயல் புரிய அனுமதிக்கிறோமா...? ஆறு வயதிலேயே இரு சக்கர வாகனத்துக்கு பழக்குகிறோமே... பத்து வயதிலேயே பணியாளர்களை விரட்டுவதற்கு ஊக்குவிக்கிறோமே... பள்ளி பருவத்திலேயே பணத்தை அள்ளிக்கொடுக்கிறோமே... கல்லூரி காலத்தில் மட்டும், இளமைத்திறன் எங்கிருந்து வரும்...? தத்தம் வேலையை அவரவர் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்த வேண்டும். நடந்து செல்கிற தூரத்தை வாகனத்தில் செல்ல அனுமதிக்கவே கூடாது.

இத்துடன்.... நல்ல உணவு, நல்ல பழக்க வழக்கம் மிக முக்கியம்.

‘மாலை முழுவதும் விளையாட்டு’. இந்த நேரத்தில், நம் பிள்ளைகளை வேறு எதிலும் ஈடுபடுத்தவே கூடாது.

விளையாட்டை விஞ்சிய உடற்பயிற்சி, மனப்பயிற்சி இல்லவே இல்லை. இப்பொழுதும் கூட சிறுமியர், இளம் பெண்கள் விளையாடுவதற்கு மைதானங்கள் இல்லை. இது மிகப்பெரிய குறை; மாபெரும் தடை.

பெரிய நகரங்களில் கூட ஓடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் மகளிர் தயங்குவதை காண முடிகிறது. புரிந்து கொள்ளக்கூடியதுதான். குறைந்தபட்சம், மகளிருக்கு என்று ‘சிறப்பு நேரம்’ குறிப்பிட்டால் கூடப் போதுமானது.

நம்முடைய சமுதாயம், நம் மக்களின் பார்வை இன்னமும் மாற வேண்டி இருக்கிறது. உடல் உழைப்பை மதிக்காத, உடற்பயிற்சியை வலியுறுத்தாத சமூகமாக நாம் இருத்தல் தகாது.

உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் உடற் பயிற்சிகள் எவ்வளவு...?

5-17 வயது: நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேர தீவிர உடற் பயிற்சி.

18-64 வயது: வாரத்துக்கு 150, 300 நிமிட உடற்பயிற்சி. 65 அல்லது அதற்கு மேல்: வாரம் 75, 150 நிமிட உடற்பயிற்சி.

நடை, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், விளையாட்டு ஆகியன உடற் பயிற்சியில் அடங்கும். இவை எல்லாம் எளிதில் எவராலும் செய்ய முடியும். மனம் வேண்டும். அவ்வளவுதான். இனி ஒரு விதி செய்வோம் சிறுவர்களை, இளைஞர்களை ‘ஓட விடுவோம்’!

அவர்களின் ஆரோக்கியத்தை விடவும் சிறந்த முதலீடு என்ன இருக்க முடியும்...?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 26 November 2019

உடல் பருமனை குறைப்பது எப்படி?

உடல் பருமனை குறைப்பது எப்படி?

மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர், பேரணாம்பட்டு.

இ ன்று (நவம்பர் 26-ந் தேதி) உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்.

உடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் வாக்கு. அவ்வகையில் நோய்களுக்கு பல்வேறு காரணம் இருப்பினும் உடல் பருமன் சமீப காலமாக அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும். இதனை பிஎம்ஐ (உடல் பருமனை குறிக்கக்கூடிய குறியீடு) எனும் அளவீட்டால் கணிக்கலாம். சராசரியாக ஆண்கள் 21 முதல் 25 பிஎம்ஐ, பெண்கள் 18 முதல் 23 பிஎம்ஐ கொண்டவர்களாக இருக்கலாம். இந்த அளவை தாண்டினால் அதிக உடல் எடையாக கருதப்படும். பிஎம்ஐ 30 தாண்டினால் உடல் பருமனாக கருதப்படும்.

உலக அளவில் உடல் பருமன் நாளுக்கு நாள் அதிகமாகிறது. உலக மக்கள் தொகையில் 350 மில்லியன் மக்கள் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் உடல் பருமனாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உடல் பருமன் மிக முக்கிய தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம், மூட்டு நோய்கள், பித்தப்பை கல், சிலவகை புற்று நோய்கள் இவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன? உடல் பருமனை கணிப்பது எப்படி? உடல் பருமனை குறைப்பது எப்படி? என்பதை பார்க்கலாம்.

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை கணிப்பது எளிது. உயரத்தை சென்டிமீட்டரால் அளந்து 100 கழிக்க வருவது உடல் எடையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருப்பது அதிக உடல் எடை. போதுமான உடற்பயிற்சி இன்மை, உடல் உழைப்பு இல்லாமை, அதிக கலோரி கொண்ட உணவை உண்பது இதற்கு முதல் காரணம். தைராய்டு சுரப்பி குறைந்த நிலை, ஹார்மோன் பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மன அழுத்த நோய்கள், சிலவகை மருந்துகள், சில பரம்பரை நோய் குறைபாட்டினால் கூட உடல் பருமன் ஏற்படக்கூடும். .

உண்ணும் உணவில் பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டும். அதிக கலோரி சத்து கொண்ட அரிசி சார்ந்த உணவுகளை அறவே நீக்க வேண்டும். அதற்கு மாற்றாக அதிக நார்சத்து கொண்ட, குறைந்த கலோரி சத்து உடைய கேழ்வரகு, கோதுமை, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை சத்து அதிகம் உள்ள கிழங்கு வகைகள், பட்டாணி வகைகள் முற்றிலும் நீக்கவும். நீர்சத்து அதிகம் உள்ள வெள்ளரி, சுரை, முள்ளங்கி போன்ற குறைந்த கலோரி சத்து உள்ள காய்கறிகளையும், நார்சத்து மிக்க கீரைகளையும் உண்ணும் உணவில் அதிகம் சேர்க்கவும். பப்பாளி, கொய்யா, அன்னாசி போன்ற பழங்களை அதிகம் சேர்க்கலாம். அவற்றை நொறுக்கு தீனிக்கு பதில் எடுத்துக்கொள்ளலாம். வாழைப்பழம், திராட்சை இவற்றை தவிர்க்கலாம். புளிப்பான பழங்களை சேர்த்தால் வயிற்றில் அமிலம் சுரந்து பசியினை அதிகப்படுத்தும் என்பதால் அதனை தவிர்க்கலாம். எண்ணெயில் வறுத்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடிநீருக்கு வெந்நீர் மட்டுமே பயன்படுத்த நம் உடலில் கொழுப்பு கரைவதை துரிதப்படுத்தும். காலை உணவினை முற்றிலும் நீக்குவது தவறு. அதற்கு மாற்றாக பழங்களையாவது எடுத்து கொள்ளலாம். உணவினை பிரித்து அளவோடு உண்பது சிறந்தது. அதிக கலோரி சத்து கொண்ட குளிர்பானங்களை முற்றிலும் நீக்குவது நல்லது. அசைவ பிரியர்கள் முட்டை வெள்ளை கரு, மீனினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

பால் மற்றும் பால் பொருட்கள் உடல் பருமனை கூட்டும் என்பதால் மோரினை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு பதிலாக கிரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். பால் எடுக்க அவசியம் இருப்பின் டீ, காபிக்கு பதில் நத்தைசூரி எனும் மூலிகை விதையினை வறுத்து பொடியாக்கி, காபி தூளுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி பகல் நேரங்களில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

தினமும் 4, 5 பல் பூண்டு எடுத்து பாலில் வேகவைத்து இரவில் உண்ணலாம். இது உடலில் உள்ள கெட்டகொழுப்பு குறைவதுடன் உடல் பருமனை குறைக்க உதவும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து இரவு உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேல் உணவினை தவிர்ப்பது நல்லது. வீட்டில் பயன்படுத்தும் புளிக்கு பதிலாக கொடம்புளியை பயன்படுத்தலாம். இதில் உள்ள ஹைடிராக்சி சிட்ரிக் ஆசிட் எனும் வேதிப்பொருள் பசியினை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. சர்க்கரை சத்து அல்லாத உணவை எடுத்துக்கொள்ளுதல் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும் எளிமையான வழிமுறை. சீரகம் அல்லது கொத்துமல்லி விதைகளை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து வர உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் பருமனை குறைக்க உடல் பயிற்சி அவசியம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடை பயிற்சி அவசியம். நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். உடல் பருமனை குறைக்கும்படியான யோகாசன பயிற்சிகளான சூரிய நமஸ்காரம், வீராசனம், திரிகோணாசனம், அர்த்த மச்சேந்திரசனம், ஹலாசனம், தணுராசனம், பட்சி மோத்தாசனம், தடாசனம், பாவனா முக்தாசனம் போன்றவற்றை முறைப்படி செய்யலாம்.

இவ்வாறாக உடல் எடையின் முக்கியத்துவம் அறிந்து உடல் எடை அதிகரிப்பதற்கான நோய் காரணத்தை மருத்துவரை அணுகி அறிந்து, மேற்கூறிய உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால் உடல் பருமனில் இருந்து விலகி வாழலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறந்த கல்வியே இந்தியாவுக்கு அடித்தளம்

சிறந்த கல்வியே இந்தியாவுக்கு அடித்தளம்

ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி.

உ லகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில், மிகப்பரவலான கல்வி முறைகளில் ஒன்றைக் கொண்டுள்ள நாம் சிறந்த கல்வியின் மூலமே புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பதையும் நாம் அறிந்துள்ளோம். மனித குலத்தின் தூண்களான, எக்காலத்திற்கும் பொருந்தும் மதிப்பீடுகளை அறிமுகம் செய்வதன் மூலமே சுமார் 32 கோடி மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் பொன்னான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்ற உண்மையையும் நாம் நன்கு உணர்ந்துள்ளோம்.

ஒரு மனிதர் கவுரவமிக்க வாழ்க்கையை நடத்த விரும்பினால், அவரது செயல்கள் எதுவும் மற்றவர்களின் கவுரவம் மிக்க வாழ்க்கைக்கு இடையூறு செய்யாமல் இருப்பதை உறுதி செய்யும் கடமை அவருக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். கருத்து கூறும் சுதந்திரத்தை எவர் ஒருவரும் விரும்பினால், மற்றவர்கள் அவர்முன் வைக்கிற கருத்துகளைப் பொறுமையோடும், கட்டுப்பாட்டோடும், சகிப்புத் தன்மையோடும் கேட்டுக்கொள்வதை அவர் உறுதி செய்ய வேண்டும். உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் அடிப்படை உரிமைகள் பற்றி பேசுகின்றன. ஆனால், அடிப்படை கடமைகள் பற்றி மவுனம் சாதிப்பது பெரும் வியப்பாக உள்ளது.

சோவியத் ஒன்றியத்தால் ஈர்க்கப்பட்டு, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன. நமது மாணவர்களுக்குக் கடமைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் நிலை ஏற்படும் போது நமது பிரச்சினைகளில் பலவும் தாமாகவே தீர்ந்துவிடும். இந்தியாவின் மையமான புனிதக் கல்வி பற்றி நாம் பேசும்போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கடமைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக அதில் சேர்ந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன். 33 ஆண்டுகளுக்குப் பின், புதிய கல்விக் கொள்கை நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்பு ஆர்வத்தை மேம்படுத்துவது, மாண்புகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது, புனிதத்தன்மையை உள்ளடக்கியிருப்பது, அறிவதற்கு ஆர்வமுள்ள ஆராய்ச்சிகளை மேற்கொள்வது போன்ற நோக்கங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கை நாட்டின் சமூக, பொருளாதார வாழ்க்கையில் புதிய தொடக்கத்தைக் கொண்டுவரும். உலக அளவில் இந்தியாவை வல்லரசாக நிறுவுவதற்கு புதிய கல்விக் கொள்கை உறுதி கூறுகிறது. ஒரு நாடாக மட்டுமின்றி, துணைக்கண்டமாகவும் உள்ள இந்தியா, பன்முகத்தன்மையையும், வேறுபட்ட பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும் கொண்டுள்ளது என்பதை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது இன்றைக்கு மிகவும் அவசியமானது.

இந்தியாவைப் போல், உலகின் வேறெந்தப் பகுதியிலும் இவ்வாறு வெளிப்பட்டுத் தோன்றும் பன்முகத் தன்மையைக் காண்பது அரிது. மனித நாகரீகத்தின் ஆன்மிகக் களஞ்சியத்திற்கு இந்திய கலாசாரம் எப்போதும் ஆழமான பங்களிப்பை செய்துள்ளது. இதனை அர்ப்பணிப்போடு நாம் பாதுகாப்பது அவசியம். ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் நமது பேச்சு வழக்கு மாறுகிறது. அதன்பிறகு, சுமார் 200 கிலோமீட்டர் சென்றால், உணவுப் பழக்கமும், உடைப் பழக்கமும் மாறுகிறது.

ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்றால் நமது மொழிகளும், பலவகை வண்ணங்களைக் கொண்ட வாழ்க்கை முறையும் மாறிவிடுகின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால் பன்னெடுங்காலமாக ஒற்றுமை இழையோடு நாம் ஒருங்கிணைந்திருக்கிறோம். ஒற்றுமை, இணக்கம், ஒத்துழைப்பு, சகோதாரத்துவம், வாய்மை, அகிம்சை, தியாகம், பணிவு, சமத்துவம் போன்ற மாண்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வை நோக்கி முன்செல்வதாக நமது கலாசாரம் நம்மை ஈர்த்துள்ளது. இக்காலத்தில் மனிதர்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் எண்ணற்றப் பிரச்சினைகளோடு போராடி வருகிறார்கள். சிந்தனைகள் மூலம் உலகின் தலைமைத்துவத்தை பெற்றிருந்த நாம், மீண்டும் நமது சிந்தனைகள் மூலம் உலகத்தை வெல்வோம். அதிவேகமாக மாறிவரும் டிஜிட்டல் யுகத்தில் கல்வியின் மூலம் நமது மாண்புகளைப் பரவலாக்குவது மிகப்பெரிய சவாலாகும். புதிய கல்விக் கொள்கையால், நமது மாணவர்களை வேர்களோடு தொடர்புப்படுத்த நாம் முயற்சி செய்துள்ளோம்.

குழந்தைப் பருவத்தில் பள்ளிகள் மூலம் கடமை உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வு தாமாகவே வரப்பெற்றதாக நான் நினைக்கிறேன். இமாலயப் பகுதியில் தொலைதூரத்தில் இருந்த எனது தொடக்கப்பள்ளியில் முறையான கல்வி போதிக்கப்படுவதற்கு முன், நல்ல குடிமகன்களாக இருப்பது பற்றி போதிக்கப்பட்டது இப்போதும் என் நினைவில் உள்ளது. அதிவேகமாக மாறிவரும் உலகச்சூழலில், சாதாரண குடிமக்கள் என்பதைவிட, டிஜிட்டல் குடிமக்களாக மாறிவரும்போது எதிர்காலம் மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

அதிகபட்ச சவால் நிறைந்த உலகச்சூழலில், இந்தியாவின் மக்கள் தொகை பகுப்பு தனித்தன்மையுடன் இருப்பது நமக்குப் பெருமையாகும். நாம் மிகப்பெரிய அளவுக்கு இளைஞர்களைக் கொண்டிருக்கிறோம். உலக அளவிலான போட்டி சகாப்தத்தில், முன்னிலையில் இருக்கும் வாய்ப்பை இது வழங்கியுள்ளது. இருப்பினும், நமது இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வழியில் ஊக்கப்படுத்துவது எவ்வாறு என்பது நம்முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும். அரசியல் சட்டப்படியான கடமைகள் குறித்து நமது மாணவர்களிடம் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மிகச்சரியாகவும், காத்திரமாகவும் தங்களின் கடமைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய சூழலையும் இன்று உருவாக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் நமது மாணவர்கள் முக்கியம் எனும் அதேவேளையில், நமது ஆசிரியர்களின் பங்களிப்பும் பெரிதாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் மதிப்புக்கூட்டிய கல்வியின் மூலம் கடமைகளின் முக்கியத்துவத்திற்கான சூழலை உருவாக்க புதிய கல்விக் கொள்கை முயற்சி செய்துள்ளது. கணந்தோறும் மாறிவரும் உலகச்சூழலில், இந்தியாவைப் பயனுறும் வகையில் முக்கியத்துவம் கொண்டதாக வைத்திருப்பது சவால் மிக்கப் பணியாகும். நமது மாணவர்களின் மனித மாண்புகளை வளர்ப்பதன் மூலமே இத்தகைய சவால்களை நாம் வெல்ல முடியும்.

இந்திய சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த நம் அனைவரிடையே அமைதி மிக்க ஒத்துழைப்பு உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். கூட்டுணர்வும், பரஸ்பர ஒத்துழைப்பும் அமைதியை உண்டாக்குகிறது. இந்த அமைதி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. சமூக வாழ்க்கையில் நமது பொறுப்புகள், கடமைகள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, அவற்றை அமைதியான முறையில் நிறைவேற்றும் மன உறுதியும் கொண்டிருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பதும்அவசியமாகும். எந்த சாதியை, மதத்தை, பிராந்தியத்தை, மொழியை, பழக்கவழக்கங்களை நாம் சார்ந்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. சூழ்நிலைகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்பதுதான் முக்கியம். பரஸ்பர புரிதல் மற்றும் ஆதரவின் மூலமே நாட்டின் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்த முடியும். பல நாடுகள் குடிமைப்பண்பை தங்களின் கல்வித் திட்டங்களின் பாடங்களில் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. குழந்தைகளுக்கு உரிமைகளையும், பொறுப்புகளையும் விளக்குவதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்வது மட்டுமின்றி, தேசத்தின் கட்டமைப்புக்கான அடித்தளத்தையும் வலுப்படுத்துகிறோம் என்பதில் ஐயமில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday 21 November 2019

மீனவர்களுக்கு பழங்குடியினர் அங்கீகாரம் தேவை

மீனவர்களுக்கு பழங்குடியினர் அங்கீகாரம் தேவை

எம்.இளங்கோ, தலைவர்,

தேசிய மீனவர் பேரவை

இ ன்று (நவம்பர் 21-ந்தேதி) உலக மீனவர்கள் தினம்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் வாழும் பாரம்பரிய மீனவர்களுக்கு இரண்டு முக்கிய கோரிக்கைகள் உள்ளது., நாட்டில் வாழும் அனைத்து பாரம்பரிய மீனவர்களையும் இந்திய பழங்குடியினராக மத்திய அரசு அங்கீகாரம் அளித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்பது முதலாவது கோரிக்கையாகும்.

வனங்களிலும், மலைகளிலும் வாழும் பழங்குடியின மக்களுக்கான, 2006-ம் ஆண்டில் மத்திய அரசால் சட்டமாக்கப்பட்ட “பழங்குடியினர் மற்றும் வனங்களில் வாழும் வன உரிமை சட்டம்” போன்று, நாடு முழுவதும் வாழும் அனைத்து பாரம்பரிய மீனவர்களுக்கென கடல் சார்ந்து கடற்கரையிலும், உள்நாட்டு நீர் நிலைகளை சார்ந்து அருகாமை பகுதிகளிலும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மீனவ மக்களுக்கு அங்கீகாரமும், அப்பகுதிகளின் உரிமைகளை பாதுகாக்கவும் உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் பாரம்பரிய மீனவர்களின் இரண்டாவது பிரதான கோரிக்கையாகும்.

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத், டையுடாமன், அந்த மான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய 13 மாநிலங்கள் கடற்கரையை கொண்ட மாநிலங்களாகும். இதில் அந்த மான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய இரண்டும் தனித்தனி தீவுகளின் கூட்டங்களாகவும், மற்ற 11 மாநிலங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பிலும் அமைந்துள்ளன. 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

இவற்றுள் மொத்த 13 கடற்கரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கடற்கரையின் நீளம் 7516.6 கிலோ மீட்டராகும். அதில் 2 தீவு யூனியன் பிரதேசங்களின் கடற்கரையின் நீளம் 2094 கிலோ மீட்டர் தொலைவும், ஒருங்கிணைந்த நிலப்பரப்பின் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கடற்கரை நீளம் மொத்தம் 5422.6 கிலோ மீட்டராகவும் உள்ளது. மொத்தம் உள்ள 7516 கிலோ மீட்டர் கடற்கரையில் வாழ்ந்து கொண்டு பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக தங்கள் முன்னோர்களின் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் மீன்பிடித்து வாழ்பவர்கள் பாரம்பரிய பழங்குடியின மீன்வர்களாவார்கள்.

அதே போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கங்கா, யமுனா, பிரம்மபுத்ரா, நர்மதா, சாம்பல், காவேரி, பியாஸ், தப்தி, கோதாவரி, கிருஷ்ணா, சரஸ்வதி, செனாப் ஆகிய 12 வற்றாத மிகப்பெரிய ஜீவ நதிகளும் 400 ஆறுகளும், லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பாய்ந்தோடிக்கொண்டு இருக்கின்றன. மிகப்பெரிய ஏரிகள், சிறிய அளவிலான ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஏராளம் உள்ளன.

இத்தகைய ஜீவ நதிகள், ஆறுகள், அணைக்கட்டுகள், ஏரிகள், குளம் குட்டைகள், ஆகியவற்றுக்கு அருகாமையில் கரைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கொண்டு வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலை பாரம்பரியமாக மேற்கொண்டு உள்நாட்டு மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடல் மீனவர்கள் மற்றும் நீர் நிலைகளில் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்கள் அனைவரும் 95 சதவீதத்தினர் மீன்பிடி தொழிலை மட்டுமே அறிந்தவர்களாக அதை மட்டுமே நம்பி வாழ்பவர்களாக இருக்கின்றனர். முழு நேரம் முழுமையாக உழைத்தாலும் கடலில் சென்று ஓரிரு நாட்கள், சில நாட்கள், பல நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்தாலும் பல நேரங்களில் வெறுங்கையுடனோ, போதிய வருவாய் இல்லாமலோ திரும்ப வேண்டியுள்ளது.

உண்மையான மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய மீனவர்கள் வாழ்வியலை, வாழ்வாதாரங்களை பற்றி ஏராளமாக சொல்ல முடியும். ஆனால் ஒட்டு மொத்தமாக சொல்ல வேண்டுமானால், வனங்களில், மலைகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு ஒப்பான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, அடக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டு கூடி வாழும் சமூகமான மீனவ சமுதாயம் இந்தியாவின் பழங்குடியின பூர்வீக குடிமக்கள் என்பதையாகும் யாரும் மறுக்க இயலாது.

அதனால் தான் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு அமைத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், “இந்தியாவில் வாழும் மீனவர்களை போன்ற ஒரு சில குறிப்பிட்ட பிரிவு சமுதாய மக்களை தாழ்த்தப்பட்டோர்களாக, பழங்குடியினராக அங்கீகரிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர். அத்தகைய பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 30 ஆண்டுகளாக மீனவர்கள் நாடு முழுவதும் போராடி வருகின்றனர்.

தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில, மாவட்ட மீனவர் அமைப்புகள் மூலம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மீனவர்கள் வாழ்வியல் சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் ஆண்டாண்டு காலமாக முன் வைக்கப்பட்டு வந்தாலும் சமீப சில ஆண்டுகளாக 3 முக்கிய கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது 3 கோரிக்கைகளில் ஒன்றான மத்திய அரசில் மீனவள அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது ஏப்ரல் 14-ந் தேதி மங்களூருவில் மீனவர்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர். நரேந்திரமோடி மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் மீன் வளத்துக்கென அமைச்சகம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

மீண்டும் பிரதமர் பொறுப்பெற்ற மறு நாளே மத்திய அரசில் விவசாய அமைச்சகத்தோடு 70 ஆண்டுக்களாக ஒரு அங்கமாக, ஒரு துறையாக இருந்ததை பிரித்து “மீன்வளம் கால் நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் ” என்ற பெயரில் அமைச்சகம் உருவாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மூன்று பிரதான கோரிக்கைகளுள் ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் மீதம் இரண்டு பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை எதிர் பார்த்து மக்கள் தினம் தினம் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் வாழும் அனைத்து பாரம்பரிய மக்களையும், மொழி, இனம், மதம் பார்க்காமல் பழங்குடியினராக மத்திய அரசு அங்கீகரித்து அறிவிக்க வேண்டும். 2006-ம் ஆண்டில் சட்டமாக்கப்பட்ட “பழங்குடியினர் மற்றும் வனங்களில் வாழும் மக்களுக்கான அங்கீகாரம் மற்றும் வன உரிமை சட்டம்” போன்று மீனவர்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உடனடியாக மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டு பிரதான கோரிக்கைகள் மூலம் கல்வியில், வேலை வாய்ப்பில், பொருளாதாரத்தில், சமூக அந்தஸ்தில், அரசியல் அதிகாரங்களில் பயன்பெற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

உலகம் முழுவதும் இன்று உலக மீனவர்கள் தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மீன் வளம் பெருகினால், மீனவர்கள் வாழ்வு வளம் பெரும் என்ற நம்பிக்கையினால் உலக மீனவர்கள் தினம் கடைபிடிக்கப்படும் இந்நாளில் இந்திய பாரம்பரிய மீனவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொலைக்காட்சி: அன்றும், இன்றும்...!

தொலைக்காட்சி: அன்றும், இன்றும்...!

பாத்திமாபாபு

(தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர்)

இ ன்று (நவம்பர் 21-ந்தேதி) உலக தொலைக்காட்சி தினம்.

தெருவோரங்களில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி செல்லும் மாணவர்களையும், வார பத்திரிகைகளையும், மாத நாவல்களையும் படிப்பதை மட்டுமே ஒரே பொழுதுபோக்காக கொண்ட வீட்டின் பெண்களையும் ஒரு சேர வீட்டின் ஹாலில் கட்டிப்போட்ட சாதனம் டெலிவிஷன்.

குடும்பத்தலைவர் மாதம் ஒருமுறை கூட்டிப் போகும் சினிமா, நாடகம், பீச், தவிர வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்தவர்களுக்கு எல்லாம் விடிவுகாலம் பிறந்தது டெலிவிஷன் பெட்டியால் தான் என்றால் அது மிகையாகாது.

சபாக்களில் நாடகங்கள் சற்று சரிவைச் சந்தித்தது சினிமாவின் வரவினால். ஆனால் பெரும் சரிவு தொலைக்காட்சித் தொடர்களால் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் சொல்லிக் கொடுத்துச் சென்ற கிரிக்கெட்டின் மீது இந்திய இளைஞர்களுக்கு பெரும் மோகம் உண்டு. ஆனால் ‘டெஸ்ட் மேட்ச்’கள் நடந்தால் அதை நேரில் பார்க்கும் பாக்கியம் வெகு சிலருக்கே கிடைத்தது. மற்றவர்கள் ரேடியோவில் கேட்டு திருப்தி பட்டுக்கொண்டார்கள்.

தொலைக்காட்சி வந்த பிறகு நேரில் காண்பதை விட மிக துல்லியமாக சுவாரசியமான அனுபவத்தை தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது. ‘அவுட்’டாகும் காட்சிகளை ஸ்லோமோஷனிலும், விளையாடும் ஆட்டக்காரர்களை குளோசப்பிலும் என்று பட்டையைக் கிளப்பியது அது. மேட்ச் நடக்கும் நாட்களில் தெருக்களில் ‘டிராபிக்’ சுத்தமாக இருக்காது.

இன்றளவும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க வெளியே வருவது கூட தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு தான் என்பது தொலைக்காட்சிகள் எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்து உள்ளது என்பதை நமக்கு சுட்டிக்காட்டும். எனக்கும் தொலைக்காட்சிக்குமான முதல் நினைவுகளை கிளறி பார்க்கிறேன்.

எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 1976 -ம் ஆண்டு. தெருவிற்கு ஒரு வீட்டில்தான் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும். அக்கம்பக்கத்தினர் எல்லாம் வீட்டாரோடு இணக்கமாக இருந்தால்தான் டெலிவிஷன் பார்க்க முடியும். சினிமா பாடல்கள் ஒளிபரப்பாகும் வெள்ளிக்கிழமை ‘ஒளியும் ஒலியும்’ நாட்களில் டிக்கெட் போட்டு ஆட்களை அனுமதித்த வீடுகளை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

விவசாயம் பார்க்கவில்லை என்றாலும் ‘வயலும் வாழ்வும்’ பார்த்தவர்கள் தமிழகத்தில் உண்டு. நன்னன் சொல்லிக்கொடுத்த தமிழ் பால பாடங்களை என் வயதை ஒத்தவர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எங்கள் வீட்டில் அப்படி அக்கம் பக்க வீடுகளுக்கு சென்று தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்காததால் வகுப்பில் தோழிகள் பாடல்கள் ஒளிபரப்பாகும் போது அதன் காட்சி கோர்வையும் ஒளிபரப்பாகிறது என்று சொன்னதை விழிகள் விரிய கேட்ட ஞாபகம். அந்த நொடி இன்றளவும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

இப்படித்தான் ஒரு நாள் என் தோழி ஒருவரின் வீட்டிற்குச் சென்று நாங்கள் ஒன்றாக செல்லும் இந்தி கிளாஸ் புறப்படுவதற்காக அவளுக்காக காத்திருந்த அந்த நிமிடங்களில் அவள் வீட்டு ஹாலில் தொலைக்காட்சி செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பட்டாம்பூச்சிக் கண்கள் படபடக்க, சேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு, இதைவிட அழகான ஒரு முகத்தை பார்த்து இருக்கவே முடியாது என்னும் வண்ணம் ஒரு பெண்மணி செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். வைத்த கண் வாங்காமல் என்று சொல்வார்களே அப்படி பார்த்தேன். அந்த நிமிடங்கள் தான் என் வாழ்க்கையின் பாதையை எனக்கு காட்டிய தருணம் என்று சொல்வேன். எனக்குள் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்ற விதையைத் தூவிய நாள் அது. ஆம் ஷோபனா ரவி யைத்தான் சொல்கிறேன். நான் தொலைக்காட்சியில் சேர்ந்த போது அவருக்கு பன்னிரண்டரை ஆண்டுகால அனுபவம் செய்தி வாசிப்பு துறையில் இருந்தது. அதற்குப் பிறகு சேர்ந்த என்னை அவரோடு ஒப்பிட்டு சொல்லும் போதெல்லாம் எனக்குள் ஒரு கூச்சம் இன்றளவும் ஓடும். காரணம் பீஷ்மர் ஆகிய அவரை விஞ்சியதாக நான் என்றுமே எண்ணியதில்லை இன்றளவும்.

9 மணி ஆனால் மாநில ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து இந்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். இந்தி பாடல் நிகழ்ச்சியான சித்ரஹார், சனிக்கிழமைகளில் இந்தி திரைப்படம், ஒன்பது மணிக்கு பிறகு ஒளிபரப்பாகும் ஜுனூன், ஹம்லோக் போன்ற இந்தித் தொடர்கள் தான் பார்க்க முடியும்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான, சுஜாதா கதையான, 47 நாட்கள், முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடப்பதை போன்ற ஒரு கதைக்களம் கொண்டது. அந்த திரைப்படத்தில் கதாநாயகனான சிரஞ்சீவி தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல்கள் மாற்ற மாற்ற வேறு வேறு நிகழ்ச்சிகள் தோன்றுவதைப் போல காட்டியிருப்பார். அது அந்த காலகட்டத்தில் எங்களுக்கெல்லாம் பெரும் ஆச்சரியம். ஏனென்றால் எங்களுக்கு சேனல் திருப்புவதற்கான அவசியம் இல்லாத காலகட்டம் அது. பிறகு வந்தது சென்னையில் மெட்ரோ ஒளிபரப்பு. இப்போதோ நூற்றுக்கணக்கான சேனல்கள் காண கிடைக்கின்றன. இப்படி நடக்கும் என்பதை அந்த காலகட்டத்தில் சத்தியமாக நம்பி இருக்க மாட்டோம்.

தொலைக்காட்சி வரமா சாபமா என்ற பட்டிமன்றம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை லட்சக்கணக்கான குடும்பங்கள் வருமானத்திற்கு வழிவகை செய்தது தொலைக்காட்சி தான். இன்று எத்தனையோ சின்னத்திரை கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், கேபிள் ஆபரேட்டர்கள் என்று தொலைக்காட்சியின் விஸ்தீரணத்தால் வாழ்வு பெற்றவர்களை வார்த்தைகளில் அடக்க முடியாது.

திரை அரங்குகளில் சினிமாக்கள் 100 நாட்கள், 25 வாரங்கள் என்று வெள்ளி விழா கண்டு கொண்டிருந்த காலம் மாறி மக்கள் தொலைக்காட்சியில் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மாறும் அளவுக்கு திரைப்படங்களை வீடுகளுக்கு கொண்டு வந்து மக்களுக்கு வழங்கியது தொலைக்காட்சி தான். இப்போது அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்று வெப் உலகம் பரந்து விரிந்து கொண்டிருக்கும் காலகட்டங்களில் தொலைக்காட்சியை இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்கள் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது என்பது தான் நிதர்சனம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday 20 November 2019

குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்!

குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்!

சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்)

ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பான பணிகளை சத்தமின்றி செய்திருக்கின்றன. அதில் ஒன்று குழந்தைகள் பராமரிப்பு. அதன்மூலம் எதிர்கால இந்தியாவுக்கு நல்ல இளைஞர்களை தர வேண்டும் என்ற அக்கறை அவர்களிடம் இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் வேலைகளை பகிர்ந்து கொண்டார்கள். குடும்பத்தின் மூத்த குடிமக்களான தாத்தா, பாட்டி, பேரன், பேத்திகளுக்கு நீதிகதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். அந்தக் கதைகளில் ராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் போன்ற நூல்களில் சொல்லப்பட்ட நீதிபோதனைகளை கதைகளைப் போல சொன்னார்கள். சுவாமி விவேகானந்தருக்கு அவரது சின்னவயதில், அன்னை புவனேஸ்வரி மகனுக்கு உணவூட்டும் போதும், மடியில் தலைவைத்து படுக்கும் போதும் ராமாயணத்தில் இருந்தும், மகாபாரதத்தில் இருந்தும் தெய்வீக கதைகளைச் சொல்லி வளர்த்தார்.

சத்ரபதி வீரசிவாஜியின் குழந்தை பருவத்தில் இருந்தே அவருடைய தாயார் ஜீஜிபாய் ராமாயணத்தில் உள்ள வீரசாகசங்களையும், மகாபாரதத்தில் உள்ள போர்களக் காட்சிகளையும் கதைகளைப் போல சொல்லி, தமது மகன் சிவாஜி வீர தீரம்மிக்க இளைஞனாக உருவாக்கினார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு அவரது தாத்தா மோதிலால்நேருவும், அவரது பாட்டியும் பல கதைகள் சொல்லியிருக்கிறார்கள். அதில் தேச விடுதலைக்கான போராட்ட நிகழ்வுகள் கலந்திருந்தன. அருமை மகளுக்கு கதைச்சொல்லி, தெளிவும், துணிவும் ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாட்டுக்காக சிறையில் இருந்த காலம். சிறைசாலையிலிருந்துக் கொண்டே மகளுக்கு உலகம்தோன்றிய கதை, மனிதநாகரிகம், நாடுகள், மொழிகள், உயிரினங்களின் கதை, இலக்கியம், அரசியல் என்று கடிதங்கள் மூலம் உலக ஞானம் ஊட்டினார் ஜவஹர்லால்நேரு.

கொலம்பஸ் சிறுவனாக இருந்த போது, அவனது உறவினர் ஒருவர் மாலுமியாக இருந்தார். அவர் கடல்பயணம் சென்று வந்து, கற்பனை கலந்து அலைகடலில் வீர தீர சாகசம் புரிந்து, பலநாடுகளுக்கு, கடல் மார்க்கமாக சென்று வந்ததாக கதை, கதையாக சொல்வார். அதைக்கேட்டு நம்ப தொடங்கிய சிறுவன் கொலம்பஸ், தமது எதிர்கால லட்சியமாக கடல்பயணம் செய்யவேண்டும், பலநாடுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் சின்ன வயதிலேயே கொலம்பஸ் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

சிறுவர்களுக்கு சொல்வதற்கு விதவிதமான நிறைய கதைகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். புத்திசாலிகள் கதை, கஞ்சர்கள் கதை, பேய்கள் கதை, வேடிக்கைக் கதைகள், மூடர்கள் கதை, பழமொழி கதைகள், பறவைகள் கதை, பேராசைக்காரர் கதை, விந்தைக் கதைகள், அறிவுக் கதைகள், முட்டாள்கள் கதை, மந்திரக்கதைகள், தந்திரக்கதைகள், மிருகக்கதைகள், ஊர் கதைகள், விகடக் கதைகள், வேதக்கதைகள், புராணக் கதைகள், பிரயாணக்கதைகள், தெய்வக் கதைகள், நீதிக் கதைகள், நொடிக் கதைகள், புதிர்க் கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லா கதைகள், ஈசாப்கதைகள், ஜென் கதைகள், பீர்பால் கதைகள் என்று நாளைய தலைமுறைக்கு, குழந்தைகளுக்கு சொல்வதற்கென்று அருமையான, அழகான, தன்னம்பிக்கை, துணிச்சல், நற்பண்பு, வெற்றிக்கான வழியை, வாழும் கலையை உணர்த்தும் பல அற்புத கதைகள் இருக்கின்றன. ஆனால் கதைச் சொல்லிகளைத் தான் பார்க்க முடியவில்லை. முன்பு வீடுகளில் பெரியவர்கள், தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று இருந்தார்கள். இன்று தனிக்குடித்தன சமூகத்தில் அவை கதைகளாகி விட்டன.குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, நற்பண்புகளை வளர்க்கக்கூடிய கதைகளை பெற்றோர்கள் கூற வேண்டும்.இது அவர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எங்கே போனார்கள் இந்த எழுத்தாளர்கள்?

எங்கே போனார்கள் இந்த எழுத்தாளர்கள்?

-ராஜேஷ்குமார்

இ ப்போது நான் சொல்லப் போற ஓர் உண்மை பலருக்குத் தெரியாது.ஒரு நபர் பாடகராக வரவேண்டுமென்றால் ஒரு சங்கீத வித்வானிடம் போய் முறையாய் சங்கீதம் பயின்று பின்னாளில் சிறந்த பாடகராய் உருவாகலாம். அதே போல் ஒரு நபர் ஓவியராக வரவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய துறை வாய்ந்த ஓவியக்கலைஞர்களிடம் போய் பயிற்சி எடுத்துக் கொண்டு ஒரு சிறந்த ஓவியராய் திகழலாம்.

இப்படி எந்தத்துறையில் யார் நிபுணத்துவம் பெற வேண்டுமென்று என்று விருப்பப்படுகிறார்களோ அவர்கள் அந்தத் திறமை சம்பந்தப்பட்ட நபர்களிடம் போய் குருகுலவாசம் செய்யாத குறையாய் ஓராண்டு ஈராண்டு என்று பயிற்சி எடுத்துக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அது சாத்தியமாகும்.

ஆனால் ஓர் எழுத்தாளரை அப்படி பயிற்சியின் மூலம் உருவாக்கிட முடியாது. ஓர் எழுத்தாளன் என்பவன் சுயமாக தனக்குள் உருவாக வேண்டும். அவனே குருவாகவும், சிஷ்யனாகவும் இருந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் மட்டுமே அந்த நபர் எழுத்தாளனாக பத்திரிகை உலகில் பவனி வர முடியும். அது காலம் காலமாய் நடந்து வருகிற வரலாறு சொல்கிற உண்மை.

அண்மையில் ஒரு கல்லூரி விழாவில் மாணவர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி இது. நீண்ட கேள்வி.

“சார்.. அன்றைக்கு இருந்த வார இதழ்களும், நாளிதழ்களும் இன்றைக்கும் வந்து கொண்டிருக்கின்றன. 1960 -ல் பிரபலமாய் இருந்து எழுத்தாளர்கள் மு.வ., அகிலன், ஜெயகாந்தன், சாண்டில்யன், கோவி மணிசேகரன், சாவி, நா.பா., தமிழ்வாணன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

1960-க்கு பின் அந்த எழுத்தாளுமைகளுக்குப் பின்னால் இன்னொரு எழுத்தாளர்அணி மெள்ள மெள்ள உருவாகி 1970 முதல் 1990 வரை எழுத்துஉலகில் கொடிகட்டி பறந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் சுஜாதா, லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், பாகம் கிருஷ்ணன், வேதா கோபாலன், கி.ராஜநாராயணன், புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், விமலாரமணி, ஜோதிர்லதா கிரிஜா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது அந்த எழுத்தாள படைக்குப் பின்னால் நீங்கள், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா சவுந்திரராஜன், தேவிபாலா, பா.ராகவன் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் உருவாகி எழுத்து உலகில் வெற்றிகரமாக பவனி வந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களின் இந்த சம காலத்து எழுத்தாளர்களுக்குப் பின்னால் எந்த ஒரு எழுத்தாளர் அணியும் உருவாகாமல் அந்த இடம் ஒரு வெற்று மைதானம் போல் காணப்படுகிறதே, இதற்குரிய காரணம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

இப்படியொரு நீண்ட கேள்வியை அவர் கேட்டு விட்டு உட்கார்ந்ததும் நான் அவர்களுக்கு பதில் சொன்னேன்.

‘நானும், என் சமகால எழுத்தாளர்களும் எழுத்துப் பணியில் இப்போதும் பிசியாக இருக்கிறோம். காரணம் நாங்கள் எல்லோரும் ஒரு பாணியில் கதைகள் எழுதாமல் அவரவர்களுக்குரிய தனித்தனி பாணியில் எழுத்துப் பணியைத் தொடர்வதுதான். அப்புறம் இன்னொரு விஷயம் எங்களுக்குப் பின்னால் இளம் எழுத்தாளர்கள் உருவாகவே இல்லை என்று நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. சில எழுத்தாளர்கள் வீரியத்தோடு உருவானார்கள். முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் எழுதியும் வந்தார்கள். எங்களுக்குப் பின்னால் சிறந்த எழுத்தாளர்களாக வலம் வருவார்கள் என்றும் நினைத்தேன்.

ஆனால் காலப்போக்கில் அவர்கள் எழுதுவதை சிறிது சிறிதாய் குறைத்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அந்த எழுத்துப் பணியும் அறவே நின்று விட்டது. சென்னையில் நடந்த ஒரு எழுத்தாளர் வீட்டு திருமணத்தில் எனக்கு மிகவும் பிடித்த அந்த இளம் எழுத்தாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்தபோது அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

‘என்ன தம்பி....நாலைஞ்சு வருஷத்துக்கு முந்தி வரை உங்களுடைய சிறுகதைகள், நாவல்கள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்துகிட்டு இருந்தது. எல்லாக் கதைகளுமே சிறப்பாய் இருந்தது. அதுக்கப்புறம் உங்களுடைய படைப்புகளையே என்னால் பார்க்க முடியலேயே? என்ன விஷயம்? வீட்ல, வேலை செய்யற இடத்துல ஏதாவது பிரச்சினையா? இல்லை உடம்புக்கு ஏதும் முடியலையா?

அந்த இளம் எழுத்தாளர் சிரித்தார்

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்...”

“அப்புறம் என்ன?”

“சார்... இந்த எழுத்துத் துறையில் எவ்வளவு வருஷம் எழுதினாலும் பெரிசா எதுவும் சம்பாதிக்க முடியாது. அதுவுமில்லாமலே வெளியில் நம்ம பேரைச் சொன்னா எல்லோருக்கும் தெரியற அளவுக்கு பாப்புலாரிட்டியும் கிடைக்காது.. அதனால...”

“அதனால?”

“சினிமாவுக்கு போயிட்டேன். பிரபல ஹீரோக்களுக்கு செட்டாகிற மாதிரி கைவசம் பத்து பதினைந்து கதை வெச்சிருக்கேன் சார். மாசத்துல பத்து நாள் சென்னைக்கு வந்து தங்கி தயாரிப்பாளர்கள் கிட்டேயும், இயக்குனர்கள்கிட்டேயும் அப்பாய்மெண்ட் வாங்கி கதைகளைச் சொல்லிக்கிட்டிருக்கேன் சார்...”

“அவங்க என்ன சொல்றாங்க...?’

“கதை நல்லாயிருக்கு... ஒரு ஆறுமாசம் பொறுங்க... ஹீரோ வேற ஒரு சூட்டிங்கில் இருக்கார்.. அவர் ப்ரீயானதும் அவர் கிட்ட ஒரு தடவை கதை சொல்லுங்க.. அவர் ஓ.கே. சொல்லிட்டார்னா மத்த விஷயங்ளை பேசிக்கலாம்ன்னு சொன்னாங்க சார்...?

“அப்படி எந்த ஒரு ஹீரோவைப் பார்த்தாவது கதை சொல்லியிருக்கிறீர்களா?”

“இல்ல சார்’

“ஏன் ஹீரோவைப் பார்த்து பேச முடியலை...?’

“ஏதோ ஒரு காரணத்தால தள்ளி தள்ளி போகுது சார்... எப்படியும் இந்த மாசத்துல மூணு முக்கியமான ஹீரோவைப் பார்த்து பேசிடுவேன்.. ஒரே ஒரு படம் வந்தா போதும் சார் அப்புறம் என்னை தேடி தயாரிப்பாளர்கள் வருவாங்க...”

“தம்பி! ஒரு நல்ல ரைட்டராய் வரக்கூடிய திறமை உங்ககிட்ட இருக்கு... சிறுகதை நாவல்னு எழுதிகிட்டே சினிமா வாய்ப்பையும் தேடலாமே?’

அது சரிபட்டு வராது சார்... ஒரே நபர் ரெண்டு குதிரையில் சவாரி பண்ண முடியாது”

“தம்பி... உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?”

“என்ன சார்?’

“இதுக்கு முன்னாடி பல எழுத்தாளர்கள் சினிமாவுக்கு போயிருக்காங்க.. ஜெயிச்சிருக்காங்க.. உதாரணத்திற்கு அகிலன், சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களைச் சொல்லலாம். அவங்க சினிமாவுக்கு தன்னோட பங்களிப்பைச் கொடுத்து இருந்தாலும் அந்த எழுத்தாளர்களின் வாசகர்கள் அவர்களை ஓர் எழுத்தாளராகத்தான் பார்க்கிறார்களே தவிர சினிமாவைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் கூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை”

“நீங்க சொல்றது சரிதான் சார்... ஆனா ஓவர் நைட்ல புகழோட உச்சிக்குப் போகனும்ன்னா பத்திரிகைகளில் எழுதறதை விட சினிமாவுக்கு முயற்சி பண்றதுதான் சரி...”

அதற்குப் பிறகு நான் அவரோடு விவாதம் செய்வதை நிறுத்தி விட்டேன்.

இந்த இளம் எழுத்தாளர் இப்படியென்றால் இன்னொரு திறமைமிக்க எழுத்தாளரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன காரணம் வேறு மாதிரியிருந்தது.

“சார்... முதல் அஞ்சாறு வருஷம் அருவி கொட்டற தினுசில் கற்பனை வளம் இருந்தது. எல்லா பத்திரிகைக்கும் எழுதினேன். கடந்த ரெண்டு வருஷ காலமாய் எழுத எதுவுமே தோணல. ஒரு மணி நேரம் ஒரே இடத்துல உட்கார்ந்து எழுதுறது ரொம்ப கஷ்டமா தெரியுது. ஒரே ப்ளான்காய் இருக்கு. எழுதுறதையே விட்டுட்டேன்.”

இப்படியாக ஏதேதோ பிரச்சினைகள் காரணமாக எத்தனையோ திறமைமிக்க இளம் எழுத்தாளர்கள் கடந்த சில ஆண்டுகளுக்குள் மங்கி மறைந்து காணாமல் போய் விட்டார்கள்.

எழுத்தாற்றல் என்பது ஒரு வரம். அந்த வரம் பெற்றவர்கள் கடின உழைப்புக்கு அஞ்சக்கூடாது. அது ஒரு வேலை என்று நினைக்காமல் ஒரு தவமாய் நினைத்து செயல்பட வேண்டும். நிறைய படிப்பதும், சமுதாயத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும், அவலங்களையும் உற்று பார்த்து அதற்கு தீர்வு காணும் வகையில் படைப்புகளை எழுதுவதும் ஒரு எழுத்தாளரின் கடமை.

சில பேர் எழுத்தாளர்களின் படைப்புகளை இலக்கியம், ஜனரஞ்சகம் என்று பார்த்து குறுக்கே சுவர் கட்டி சந்தோஷப்படுவார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்லும் எந்த ஒரு படைப்பும் அந்த எழுத்தாளனுக்கு பெருமை பெற்று தரும். என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு புத்தகத்தை இரண்டு மூன்று முறை படித்தாலும் புரியவில்லையென்றால் அது இலக்கியம். ஒருமுறை படித்ததுமே புரிந்து விட்டால் ஜனரஞ்சகம்.

அய்யா ஆதித்தனார் ‘தினத்தந்தி’ நாளிதழை ஆரம்பித்த பின்புதான் நம் மக்கள் தமிழையே ஒழுங்காக பேச ஆரம்பித்தார்கள். அதே போல் ஜனரஞ்சக எழுத்தாளர்கள் எழுத்துத்துறைக்கு வந்த பின்புதான் மக்களின் வாசிப்பு பழக்கம் அதிகமாயிற்று.

நம்மிடையே திறமைமிக்க வளரும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறேன். கதை எழுதும் ஆர்வம் யாருக்கு முளை விடுகிறதோ அவர்கள் எழுத்தாளர்களாக உருவாவது சர்வ நிச்சயம்.நம்முடைய சமூக நலன் சார்ந்த வாழ்க்கைக்கு விவசாயிகள், டாக்டர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு எழுத்தாளர்களும் அவசியம்.

உங்கள் வீடுகளில் யாருக்காவது கதைகள் எழுதும் ஆர்வம் இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். எதற்காக இந்த வேண்டாத வேலை என்று திட்டி முளை விடும் பயிர்க்கு வெந்நீர் ஊற்றி விடாதீர்கள்.

ஒரு கடுகு போன்ற சிறிய விதைக்குள் ஓர் ஆலமரமே ஒளிந்திருக்கிறது என்கிற உண்மையை மறந்து விடாதீர்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 18 November 2019

காந்தப்புலத்தை உணரும் திறன் மனிதர்களுக்கு உண்டா?

பூமியில் வாழும் சில உயிரினங்கள் பூமியின் காந்த சக்தியை உணரும் தன்மை கொண்டவை. உதாரணமாக சில பறவைகள், மீன்கள் மற்றும் பாலூட்டிகளுக்கு அத்திறமை உண்டு. இதன்மூலம் அவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய் கின்றன.

அதுபோல மனிதர்களுக்கும் காந்தப் புலம் உணரும் திறன் உள்ளதா? என்று அறிய ஆய்வுகள் நடந்தன. இதில் மனிதர்களுக்கும் அந்தத்திறன் உள்ளதாகவும் அவர்களால் பூமியின் காந்த சக்தியை உணர இயலும் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் அந்தத் திறமை உள்ளவர்கள் தம்மிடம் அந்தத் திறமை உள்ளது என்பதை அறிவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது:

பேரடே கூண்டு (Faraday Cage) என்னும் மின் சுருள்கள் சுற்றப்பட்ட ஒரு அலுமினியம் கூண்டினுள் 34 மனிதர்கள் இருட்டறையில் உட்கார வைக்கப்பட்டனர். எல்லா மின் சமிக்ஞைகளும் கூண்டின் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் இந்த கூண்டு அமைந்திருந்தது. இந்த ஒரு தனிப்பட்ட வடிவமைப்பின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காந்தப் புலத்தை உருவாக்கினர். அந்தக் காந்தப் புலத்தின் சக்தி பூமியின் காந்தப்புலத்திற்கு ஈடாக இருந்தது. ஆராய்ச்சியாளர்களால் அந்த சுருள்கள் இடையே மின் மாற்றங்களை வேறுபடுத்த முடியும். மேலும் அவர்கள் விருப்பப்படி காந்தப் புலத்தை திசைதிருப்பவும் முடியும். ஒவ்வொரு மனிதனின் தலையிலும் ஒரு தொப்பி போடப்பட்டு அதன்மூலம் அவர் மூளையின் செயல்பாடுகளை, காந்தப்புலம் திசை திருப்பப்படும் போது ஏற்படும் மாற்றங்களையும் பதிவு செய்தனர்.

அந்தப் பதிவுகளை, ஏற்கனவே பதிவேற்றப்பட்ட திசை மாற்றப்படாத காந்தப்புலம் தேர்வு பதிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில் அந்தக் குழு ஆல்பா அலைகளைக் கவனித்துப் பார்த்தது. ஒரு மனிதன் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து இருக்கும்போது மூளையில் நியூரான் களின் உதவியில் உருவாகும் அலைகளே ஆல்பா அலைகள். இவ்வகை அலை சமிக்ஞைகள் மனிதனின் ஐந்தறிவுகளில்- முகர்தல், வாசித்தல், கேட்டல் அல்லது தொடுதல் என்னும் உணர்வுகளை அடையும்போது மறைந்தன. எனவே ஆல்பா அலைகள் குறையும் போது மனிதனின் மூளையின் செயல்பாடு நடக்கிறது. காந்தப்புலன் உதவியால் மூளை சில தகவல்களை பெற்று அதன்படி நடக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

அந்த 34 நபர்களில், அவர்களிடையே காந்தப்புலம் மாற்றப்படும்போது நான்கு மனிதர்களிடம் ஆல்பா நிலையில் மாற்றம் காணப்பட்டது. ஆல்பா அலை குறையும் தன்மை மூளையின் செயல் திறன் உடன் இணைந்து இருந்தது. இதுவே அசையாமல் இருக்கும் மனிதர் உடலுடன் இருக்கும் மூளைக்குத் தெரிவிக்கிறது.

பரிசோதனைகள் மூலம் மனிதர்கள் இடையேயும் காந்தப்புலம் உண்டு, அதை உணரும் சக்தி இருக்கிறது என்பதைக் கூறினாலும் அது எப்படி நடக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. மிருகங்கள் மற்றும் பறவைகள் இடையே எப்படி அந்த காந்தப்புலம் உணரும் திறன் நடக்கிறது என்பதையும் விஞ்ஞானி களால் முழுவதும் அறியமுடியவில்லை.

ஆனால் தற்போது இரு கோட்பாடுகள் மூலம் இப்படி இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஒரு கோட்பாட்டின்படி கண்ணின் விழித்திரையில் உள்ள கிரிப்டோகுரோம் (Cryptochrome) என்னும் சிறப்பு புரதம் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பி காந்தப்புலம் பற்றி தகவல் தருகிறது என்று கூறுகின்றனர்.

இன்னொரு கோட்பாட்டின்படி மேக்னடைட் (Magnetite) என்னும் மிக நுண்ணிய காந்தத் துகள்கள் மூலம் இத்தகவலை தெரிவிக்கலாம் என்பதே. ஏனெனில் மனிதனின் மூளையில் இவ்வகை நுண்துகள்கள் மிகப்பரவலாக இருப்பதை ஏற்கனவே கண்டுள்ளனர். அந்தப் பரவலான அளவு, மூளையில் ஒரு உயிரியல் திசைகாட்டியாக செயல்பட முடியும் என எண்ணுகின்றனர்.

ஒருவருக்கு காந்தப்புலம் உணரும் திறன் இருந்தாலும் அது அவரது ஆழ்மனது நடத்தையில் மாற்றம் செய்யுமா?, அதனை மூளை எப்படி உபயோகிக்கும்? என்பதுபோன்ற பல கேள்விகள் உள்ளன. இதுகுறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்திவருகிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காணாமல் போன கதாகாலட்சேபம்

காணாமல் போன கதாகாலட்சேபம்

முனைவர் இரா.கீதா,

உதவிப் பேராசிரியர்,

ராமசாமி தமிழ்க்கல்லூரி,காரைக்குடி.

த மிழகம் மிகப் பழமையான நாகரிகமும் பண்பாடும் கொண்டது. தமிழ்நாட்டினை உலகக் கலைகளின் பிறப்பிடம் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டில் பிறந்த கலைகள் அனைத்தும் பிற இடங்களில் பரவி வேறுவேறு வடிவங்கள் பெற்றுத் திகழ்கிறது. அந்த வகையில் கதாகாலட்சேபம் என்னும் கதை சொல்லும் கலைக்கும் தமிழகம்தான் ஆணி வேராகும். இக்கலைக்குத் தமிழில் ‘இன்னிசைச் சொற்பொழிவு’ என்ற பெயர் உண்டு. மராட்டிய மாநிலத்திலிருந்து கதாகாலட்சேபக் கலை வந்ததாகக் கருதுதல் மரபு. எனினும் தமிழகத்தில் இக்கலையின் முழுவடிவம் இல்லையென்றாலும் அடிப்படைக்கூறுகள் இருக்கின்றன. ஆந்திராவில் இக்கலைக்கு “ஹரிகதாகாலட்சேபமு” என்று பெயர். கர்நாடகத்தில் ‘கதாபிரசங்கம்’ என்று பெயர். மராட்டிய மாநிலத்தில் ‘கீர்த்தன்’ என்று அழைப்பர். இக்கலையில் ஈடுபடுபவர்களைக் ‘கீர்த்தன்கார்’ என்று அழைத்தனர்.

கதை கூறும் மரபு

காலங்காலமாய்க் கதைகேட்டு வளரும் மரபு நமது நாட்டில் உள்ளது. பழைய நிகழ்ச்சிகளை, கதைகளை, புராணங்களைக் கதைகள் மூலம் விளக்கினர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கதை கேட்பதை விரும்புவது இயல்பே. அக்கதைகள் அனைத்தும் அறிவுரைக் கதைகளாகவும், இறைவனைத் தேடவேண்டும் என்பதற்காக அமைந்த தெய்வீகக் கதைகளாகவும், அறத்தையும் தர்மத்தையும் உணர்த்துகின்ற புராணக் கதைகளாகவும் இருந்தன. இவைகள் அனைத்தும் மனிதனை நெறிப்படுத்துவதற்காகவே அமைந்தன. அந்த வகையில் கதாகாலட்சேபக் கலையானது மக்கள் வாழ்வைச் செப்பம் செய்ய வந்த கலையாகும்.

இசையோடு

தொடர்புடைய கலை

கதாகாலட்சேபம் இசையோடு தொடர்புடையது ஆகும். கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கேள்வி வாயிலாக அறிவு புகட்டுவதற்காக இக்கலை இசையோடு அமைந்தது. தொடக்க காலத்தில் மகாபாரதக்கதையே அதிகமாகச் சொல்லப்பட்டது. நாட்டுப்புற மக்களுக்கு அறியாமையைப் போக்கும் வகையில் இக்கதாகாலட்சேபம் வந்தது. இதில் அறிவும், அனுபவமும் பெற்றவர்களே இக்கலையை மேற்கொண்டனர். இசையோடு கூடிய இக்கலையைப் பாகவதர்களும், பக்கவாத்தியக்காரர்களும் நடந்துகொண்டுதான் கதை நிகழ்ச்சியை நடத்தினர்.

கதை கூறிய பாகவதர்கள்

தஞ்சையில் வாழ்ந்த ராமச்சந்திரபாகவதர், அவரின் மகன் விஷ்ணுபாகவதர், தஞ்சை ஸ்ரீகிருஷ்ணபாகவதர், நரசிம்ம பாகவதர், லட்சனாச்சாரியார் குலமங்கலம் வைத்யநாதபாகவதர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், சீ.சரஸ்வதிபாய், திருவாரூர் வாமன பாகவதர், திருவிடைமருதூர் கிருஷ்ண பாகவதர், திருமுருக கிருபானந்தவாரியார், எம்பார் விஜயராகவாச்சாரியார் போன்றோர் குறிப்பிடத் தக்கவர் ஆவர்.

மேடை அமைப்பும் ஆடை அணிகலன்களும்

தொடக்கத்தில் மேடையின்றி நடைபெற்ற கலை பின்பு பிற்காலத்தில் நீண்ட பலகை போடப்பட்டு மேடை அமைக்கப்பட்டது. அதில் பாகவதர் பின்பாட்டுக்காரர், தாளம் போடுபவர், சுருதி மீட்டுபவர், மிருதங்கம் வாசிப்பவர் ஆகிய ஐந்து பேரும் மேடையில் இருப்பர். பாகவதர் தம் குழுவினரோடு ஒரு கிராமத்திற்குச் சென்று கிராமத் தலைவரிடம் அனுமதி பெற்றுப் பின்பு இரவில் கதை சொல்வார். பாகவதர் பஞ்சகச்சம் இடையில் அணிந்திருப்பர். தலையில் குடுமி வைத்து அதில் பூச்சுற்றி, காதுகளில் கடுக்கன் அணிந்து, மார்பில் உருத்திராட்சம் அல்லது துளசி மணி அணிந்து கொண்டு, நெற்றியில் திருநீறு பூசி, மார்பில் சந்தனம் பூசித் தோற்றமளிப்பர். பாகவதர் பத்து முழ வேட்டியும், ஆறுமுழத் துண்டும் அணிந்திருப்பர்.

சமுதாயம் பெற்ற பயன்

கதாகாலட்சேபம் என்பது பாரதநாட்டின் பண்பாட்டை வெளிக்கொணர்வதாகும். ஒரு கலையானது மக்களுக்கு பயன்படும் பொழுது தான் உயர்ந்த நிலையினை அடைகிறது. கதாகாலட்சேபக் கலையை மேற்கொண்ட பாகவதர்கள் தம் வாழ்நாளில் பலருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார்கள். சமுதாயச் சிக்கல்களையும், அதைத் தீர்த்துவைக்கும் வழிகளையும், இதிகாச புராணங்களின் வழியே நீதிமுறைகளையும் மக்களுக்கு அவர்கள் இசையோடு எடுத்துக் கூறினார்கள். வாழ்வுக்கு வழிகாட்டும் மாந்தர்களாக இதிகாசப் பாத்திரங்களை மக்கள் கருதினார்கள். இடைக்காலத்தில் சமுதாயப் பிரசாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. சுதந்திர உணர்வைப் பரப்புவதற்கும் இக்கலை பயன்படுத்தப்பட்டு காசியில் ‘கங்காராம்’ என்ற பாகவதர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கதை கூறியதால் மக்களுக்கு சுதந்திரத் தாகம் அதிகமானது. இதன் விளைவாக அவரை ஆங்கில அரசு கைது செய்தது.

மேலும் கதாகாலட்சேபக்கலையானது சமுதாயச் சிக்கல்களைத் தீர்க்கும் முறைகளை எடுத்துக்கூறியது. ‘அனுசியா’ என்ற கதையைக் கேட்டு குடும்பச் சண்டையை மறந்து வாழ்ந்தவர்கள் உண்டு என்கிறார்கள். ‘வாரியார்’ கோவில்களை உருவாக்கவும், புதுப்பிக்கவும் காரணமாக அமைந்திருக்கிறார். சமுதாயம் நலம் பெறவேண்டும் என்ற சிந்தனைவுடையவர்களாகப் பாகவதர்கள் திகழ்ந்துள்ளனர்.

மக்களைத் திருத்தச் சட்டங்கள் மட்டும் போதாது மக்கள் தானே மனம் மாற வேண்டும். மக்களின் மனங்களை மாற்றும் கருவியாக இதிகாசப் புராணக்கதைகள் அமைந்தன. அவற்றிற்கு சமுதாயச் சீர்கேடுகளை மாற்றும் ஆற்றல் உண்டு. அக்கதைகளை மக்களிடம் பரப்பியவர்கள் பாகவதர்கள். சமயப் பணியைச் செய்ய வந்த இக்கலை சமுதாயத்தில் காணாமல்போனது வருந்தத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வக்கீல்- போலீசார் மோதல் உணர்த்துவது என்ன?

வக்கீல்- போலீசார் மோதல் உணர்த்துவது என்ன?

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்.,

காவல்துறை முன்னாள் தலைவர்

நா ட்டின் பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பையும் தங்களின் முழுநேர பணியாக கொண்டு பணியாற்றிவரும் காவலர்கள் நம்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் செய்துள்ளனர். இந்தியாவின் பெரும்பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆட்சி செய்துவந்த அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் கொண்டுவந்த சில நிர்வாக மாற்றங்களுக்கு எதிராக 1857-ம் ஆண்டில் இந்திய சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்து செய்த போராட்டம்தான் இந்திய விடுதலைக்கு வித்திட்ட போராட்டம். தங்களின் கோரிக்கைகளை உரிமையுடன் அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக காவலர்கள் சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி கோரி 45 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு காவல்துறையினர் 1979-ம் ஆண்டு மேற்கொண்ட வேலைநிறுத்தம் காவலர்களின் பணி தொடர்பான பல சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. சமீபத்தில் டெல்லி காவல்துறை தலைமையகத்தை ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் அவர்களது குடும்பத்தினரும் முற்றுகையிட்டு பணியின் போது பாதுகாப்பு கோரி அவர்கள் நிகழ்த்திய வேலைநிறுத்தப் போராட்டம் டெல்லி நகரையே நிலைகுலையச் செய்தது.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான விசாரணை கைதிகளை சிறைத்துறை வாகனங்கள் மூலம் டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த தினசரி அழைத்துவருவதும், நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர்களைச் சிறைக்கு அழைத்துச் செல்வதும் வாடிக்கையான செயல். அந்த நீதிமன்ற வளாகத்தில் சிறைத்துறை வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வக்கீல் ஒருவர் அவரது காரை நிறுத்தியுள்ளார். அந்த இடத்தில் காரை நிறுத்த வேண்டாம் எனப் பணியில் இருந்த காவலர் கூற அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தின் போது அந்த காவலரை வக்கீல் அடித்துள்ளார். அடி வாங்கிய காவலருக்குத் துணையாக அங்கு பணியில் இருந்த சில காவலர்கள் சென்றுள்ளனர். இந்த சம்பவம் சில நிமிடங்களில் காட்டுத் தீ போன்று நீதிமன்ற வளாகத்தினுள் பரவ, நூற்றுக்கணக்கான வக்கீல்கள் அங்கு குவிந்தனர். அங்கிருந்த காவல்துறையினர் தாக்கப்பட்டனர். காவல்துறை மற்றும் சிறைத்துறைக்குச் சொந்தமான பல வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விசாரணை கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இரண்டு வக்கீல்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் வக்கீல்கள் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஊடக வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில், நீதிமன்ற வளாகத்தில் ‘சட்டத்தின் காவலர்கள்’ என அழைக்கப்படும் காவல்துறையினருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறை சம்பவ வீடியோ காட்சிகள் வைரலாக நாடெங்கும் பரவின. இம் மாதிரியான மோதல்கள் 2015-ம் ஆண்டில் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், 2009-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் நிகழ்ந்துள்ளன. இந்த அசம்பாவித சம்பவங்களுக்கு ஒரு தரப்பினர்தான் காரணம் என்று கூறிவிட முடியாது.

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடத்த நூற்றுக்கணக்கான வக்கீல்கள் தினசரி வருவதும் நூற்றுக்கணக்கான விசாரணை கைதிகளுடன் காவலர்கள் தினந்தோறும் நீதிமன்றம் வருவதும் தினசரி நிகழ்வுகளாக இருக்கும் போது வாகனம் நிறுத்துவது தொடர்பாக எழுந்த சிறு வாக்குவாத சம்பவம் வரலாற்றில் இடம்பெறும் வகையில் வன்முறையாக உருவெடுக்கக் காரணமாக இருந்தவை என்ன?. நவம்பர் 5-ந் தேதி நடைபெறவிருந்த டெல்லி வக்கீல்கள் சங்க தேர்தலுக்கான பிரசாரத்தில் நீதிமன்ற வளாகம் அன்றைய தினம் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. வன்முறையில்; ஈடுபட்ட பலர் அந்த நீதிமன்றத்தோடு தொடர்பில்லாத வக்கீல்கள் என்ற தகவலும் சிறைத்துறை வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு வக்கீல் அவரது காரை நிறுத்திய அந்த சிறிய பிரச்சினையைப் பணியில் இருந்த காவலர் சாதுரியமான முறையில் அணுகியிருந்தால் இத்தகைய வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது என்பதும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கருத்து.

வக்கீல்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே எப்போதும் மனக்கசப்பு இருந்துவருகிறது என்ற கருத்து பரவலாக சமுதாயத்தில் நிலவி வந்தாலும் பெரும்பாலும் இவர்களுக்கிடையே ஆரோக்கியமான புரிதலும் நல்லுணர்வும் இருந்து வருகின்ற காரணத்தால் தான் நீதிமன்றங்களின் பணிகள் பெரும்பாலும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. அதேசமயம் காவல்துறையில் ஒரு சிலரும் வக்கீல்கள் சிலரும் ரகசியமாக இணைந்து செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை நீதியின் பார்வையில் இருந்து மறைக்கின்ற சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் கலவர சூழலில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டை மனித உரிமை மீறலாகத்தான் இன்றைய சமுதாயத்தில் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் கலவர செயலில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்கள் தான் பலியாகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சமாதானப்படுத்துவதிலேயே நிர்வாகம் அதிக கவனம் செலுத்துவதால், கலவரக்காரர்கள் செய்த அனைத்து வன்முறை சம்பவங்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு துப்பாக்கிச் சூட்டின் பாதிப்பை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. கலவரத் தடுப்பு பணியில் துப்பாக்கி பயன்படுத்தும் முறை குறித்து காவல்துறை நிர்வாகம் சீராய்வு செய்ய வேண்டிய அவசியத்தை சமீப கால துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உணர்த்துகின்றன.

நுகர்வோர் விழிப்புணர்வு மிகுந்த இன்றைய சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறையினரின் பணி எளிமையானது அல்ல. கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு பணியாற்றும் செயல்திறன் கொண்டவராக காவலர்கள் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பதற்குப் பதிலாக பொதுநலனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தவராகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக காவல்துறையினர் திகழ வேண்டும்.

அரசு சொத்துக்களை தீயிட்டுக் கொளுத்துவதும் சேதப்படுத்துவதும் போராட்ட செயல்பாடுகளில் ஒரு பகுதி என்ற உணர்வு போராட்டம் நடத்தும் பெரும்பாலானவர்களிடம் நிலவுகிறது. தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த கலவரத்திலும் இம்மாதிரியான உணர்வு வெளிப்பட்டதைக் காணமுடிகிறது. காவலர்களுக்கும் வக்கீல்களுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை முறைப்படி தீர்வு காண்பதற்கு பதிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுத்துறை வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது. இச்செயலானது பொதுமக்களின் வரிப்பணத்தைத் தீயிட்டுக் கொளுத்துவதற்குச் சமமானது. போராட்டங்கள் என்ற பெயரில் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகள் பெரும்பாலும் நீர்த்துப் போவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ஒரு குற்ற சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான வாதிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் புலன் விசாரணையின் போது திரட்டிய சாட்சியங்களை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்வார்கள். ஒரு குற்றவாளி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வக்கீலோ குற்ற வழக்கில் இருந்து குற்றவாளியை காப்பாற்றும் விதத்தில் வழக்கை நடத்துவார். குற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் காவல்துறையினர் கடமையாற்றுவதாலும் நிரபராதி ஒருவர் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வக்கீல் செயல்படுவதாலும் அவர்கள் இருவரும் நீதி என்னும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 17 November 2019

நோயை விரட்டும் முருங்கை...!

நோயை விரட்டும் முருங்கை...!

கே.கோவிந்தசாமி,

இயன்முறை மருத்துவர், ஆலங்குடி.

மு ருங்கைமரத்தின் புகழை அதன் பயனை அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. தான் வலுவிழந்தாலும் பரவாயில்லை. தன்னை வளர்ப்பவர்; வலுவோடும் நல்ல உடல் திறனோடும் வாழவேண்டும் என்று நினைப்பவைதான் இந்த முருங்கை மரங்கள். “முருங்கை நட்டவர்; வெறுங்கையோடு நடப்பார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. பலன் தரக்கூடியவைதான் பழமொழிகள். மனிதன் தவறாகப் புரிந்துகொண்டு, முருங்கை வைத்தால் வெறுங்கைதான் வறுமைதான் என்று எண்ணி நிறைய வீடுகளில் முருங்கையும் வளர்ப்பதில்லை. வீட்டுக்கு முன்னால் வைத்தால் முனி வரும் பின்னால் வைத்தால் பேய் வரும் என்று இன்றும் கிராமப்புறங்களில் முருங்கை மரங்களை வெட்டிவிடுபவர்களும் இருக்கிறார்கள். முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான் என்பது பழமொழி. இதற்கு மனிதன் முதிர்ந்த வயதிலும் கோலூன்றாமல் ஆரோக்கியமாக இருகைகளையும் வீசிக்கொண்டு நடப்பான் என்று பொருள்.

முருங்கை மரத்தில் இலை, பூ, காய் என எல்லாம் மருத்துவ குணமும் அதிக உயிர்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது. முருங்கைக்காய் சாம்பார், கீரை தொவட்டல் என பல வகையில் உதவும் முருங்கையில் நல்ல இரும்புச்சத்து உள்ளது. முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்து பழமொழி. முருங்கை கீரையில் தயிரில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிக புரதசத்தும் ஆரஞ்சு பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிக பொட்டாசியமும் கேரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு வைட்டமின் ‘ஏ’யும் பாலில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிக கால்சியமும் உள்ளது.

முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து சூப்வைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுக்கு நல்லது. பெண்கள் முருங்கை கீரையை வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான பிரச்சினை தீரும். வைட்டமின் ஏ சத்து நிரம்பி இருப்பதால் ஒளிபடைத்த கண்ணுடனே வளம் வரலாம். ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு நீக்க மிகவும் உதவியாக இருப்பது முருங்கை இலை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி உடலைப் பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு உள்ள மலட்டுத் தன்மை நீங்கவும் இளமைப் பொலிவு பெறவும் முருங்கை முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பச்சையான முருங்கை இலைச்சாறு ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு அதில் பாதி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட உடல் தொப்பை மறைந்து நல்ல தேகம் பெறலாம். சிறிதளவு முருங்கை இலைச்சாறுடன் உப்புக்கரைசல் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் சரியாகும். இன்றைய உலகில் மலச்சிக்கலும், மனச்சிக்கலும் இடியாப்ப சிக்கலாய் மாறி இம்சை செய்கிறது. மனித உடம்பிற்கு தேவையான இருபது அமினோஅமிலங்களில் பதினெட்டு முருங்கை கீரையில் உள்ளது. மாமிசத்தில் இருப்பதைப் போன்ற புரதச்சத்துகளும் இதில் உள்ளது. முருங்கை கீரையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம்.

முருங்கை பொடியில் வைட்டமின் கே.ஏ.இ கால்சியம், ஆன்டி ஆக்சிடனஸ் உள்ளது. முருங்கை பவுடர்; களைப்பு மற்றும் சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். கஷாயமாகவும் சாப்பிடலாம். முருங்கை இலை சூப் மற்றும் கசாயம் மூட்டுவலி, முதுகு வலியை நீக்கி எலும்புக்கு நல்ல பலத்தை தருவதுடன் உறுதியுடனும் விளங்க உதவிபுரிகிறது. முருங்கைப்பூ பொரியல் மற்றும் கூட்டு செய்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். ஒரு முருங்கை கிளையை இலகுவாக ஒடித்த மனித கை, முருங்கை கிளையிடம் சொன்னதாம் பார்த்தாயா, நான் உன்னை எப்படி உடைத்தேன் என்று” சொன்னது. நான் எனது இரும்பு சத்துகளையெல்லாம் உனக்கு கொடுத்ததால் தான் உன்னால் என்னை சுலபமாக உடைக்க முடிகிறது என்று சொன்னது முருங்கை கிளை.

செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய்

வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும் மறமே

நெருங்கையிலை யொத்தவிழி நோழையே! நல்ல

முருங்கை யிலையை மொழி. என்ற அகத்தியர்; பாடலின் பொருளானது, ஜீரணக்கோளாறுகள், மந்தநோய், உடல்சூடு போன்றவை குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி, மயக்கம், கண்நோயும் விலகும் என்று பொருள்படுகிறது.

பல பிரமிப்பான நன்மைகளைத் தரும் பிரமாதமான இந்த பிரம்ம விருட்சம் நாடெங்கும் நடப்பட்டு நாளெல்லாம் மக்கள் நன்மைகளைப் பெறவேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காலம் மறக்காத காதல் மன்னன்

காலம் மறக்காத காதல் மன்னன்

ஆரூர்தாஸ், திரைப்பட வசனக்கர்த்தா

இ ன்று (நவம்பர் 17-ந்தேதி) நடிகர் ஜெமினி கணேசன் பிறந்த தினம்.

17.11.1920-ல் புதுக்கோட்டை சமஸ்தான அரண்மனையில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து புதுக்கோட்டையில் குடியேறிய - ராமசுவாமி அய்யர்- கங்கம்மா தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு ‘கணபதி சுப்ரமணியன் சர்மா’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டு, பின்னர் ராமசுவாமி கணேசன் என்று மாறியது. அந்தக் குழந்தைதான் பின் நாட்களில் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் என்று திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கியது.

சிறுவன் கணேசனுக்கு பத்து வயது நிறைவதற்குள் 1930 ஜூன் 30-ல் தந்தை ராமசுவாமி அய்யர் திடீரென காலமாகி விடவே, அவருடைய தம்பியின் இரண்டாந்தாரமாக வாழ்ந்த பிராமண குலத்தைச் சேராத பெண்ணிடம் கணேசன் வளர்ந்தார். அவருடன்கூடவே அந்தப் பெண்ணுக்கும் தன் சிற்றப்பாவுக்கும் பிறந்த முத்துலட்சுமி என்னும் குழந்தையும் வளர்ந்து வந்தது. இந்தப் பெண்தான் பிற்காலத்தில் இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவராகி, ஒரு தெலுங்கு மொழி பேசும் இளைஞரை காதலித்து, மணந்து, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்று பெரும் புகழ் பெற்றார். புதுக்கோட்டை அரசுக் கல்லூரியில் பயின்று, வேதியியலில் (கெமிஸ்ட்ரி) இளங்கலைப் பட்டம் பெற்ற கணேசன் சென்னை வந்து தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 19 வயதிலேயே மாயவரம் அருகில் உள்ள மங்கநல்லூரைச் சேர்ந்த அலர்மேலு என்ற ‘பாப்ஜி’ என்னும் செல்லப் பெயர் கொண்ட பிராமண பெண்ணை மணந்து கொண்டார்.

அவர்களுக்கு முறையே ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி ஆகிய நான்கு பெண்கள் பிறந்தனர். இவர்களில் ரேவதி, கமலா, ஜெயலட்சுமி ஆகிய மூவரும் மருத்துவக் கல்வி பயின்று டாக்டர் ஆனார்கள். கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டிருந்த கணேசனுக்கு சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டு அதை அவருடைய தூரத்து உறவினரான எஸ்.எஸ். வாசனிடம் தெரிவித்து வாய்ப்பளிக்கும்படி வேண்டினார். அதை ஏற்று வாசன் தனது ஜெமினி ஸ்டூடியோவில் ‘கேஸ்டிங் டிபார்ட்மென்ட்’ என்னும் நடிகர்- நடிகையரைப் பேட்டி கண்டு (வாய்ப்பு கேட்டு வருபவர்களை) அவர்களைப் பற்றிய வாழ்க்கை மற்றும் திறமைகள் பற்றிக் குறித்து வைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இதில் விந்தை என்னவென்றால், பின்நாட்களில் மிகப்பிரபலமான ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடிகையர் திலகம் சாவித்திரி, குணசித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் முதலியோர் கணேசனிடம் வந்து நடிக்க வாய்ப்பு கேட்டவர்கள். இதை சிவாஜியே ‘பாசமலர்’ படப்பிடிப்பின் போது ஜெமினியை நேரில் வைத்துக் கொண்டு என்னிடம் கூறி இருக்கிறார்.

கணேசனின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்காற்று வீச ஆரம்பித்தது. சிறிய வேஷங்களில் நடிக்க வைத்து வாசன் ஜெமினியை ஊக்குவித்து உற்சாகப்படுத்தினார். அதன் மூலம் ராமசாமி கணேசன் இப்போது ‘ஜெமினி கணேசன்’ என்று அழைக்கப்பட்டார். ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த பல படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றிருந்த ‘புஷ்பவல்லி’ கணேசனின் அழகில் மயங்கி அவரைக் காதலிக்கத் தொடங்கினார். பதிலுக்கு அவரும் புஷ்பவல்லியின் அழகிலும் நடிப்பிலும் மயங்கி, தனக்கு மனைவியும் பெண் குழந்தைகளும் இருப்பதை மறந்து புஷ்பவல்லியை ‘இளையதாரம்’ ஆக்கிக் கொண்டார். அதன் விளைவாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து ‘ரேகா’ ‘ராதா’ என்று பெயரிடப் பெற்றனர். இவர்களில் ரேகா பின்நாட்களில் இந்திப் பட உலகில் நுழைந்து கதாநாயகியாக நடித்துப் பிரபலமாகி ‘நம்பர் ஒன்’ ஹீரோயின் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசனின் ஜாதக அமைப்போ என்னவோ- அவரது காதல் கடலில் மூன்றாம் முறையாகப் புயல் மையம் கொண்டு வேகமாக வீசத் தொடங்கியது.

1953-ல் தயாரிக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்ற ‘தேவதாஸ்’ படத்தில் ஏ.நாகேஸ்வரராவுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்ற சாவித்திரி, நாராயணன் கம்பெனி தயாரித்த ‘மனம்போல் மாங்கல்யம்’ படத்தில் ஜெமினி கணேசனின் ஜோடியாக நடித்தார். அப்போது கதாநாயக நடிகருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும் பெண் குழந்தைகளும் இருக்கின்றனர் என்று நன்றாகத் தெரிந்திருந்தும், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் சாவித்திரி கணேசனை தீவிரமாக காதலித்தார். அனைத்தும் அறிந்திருந்தும் ‘எத்தனை நடிகைகள் வந்தாலும், எத்தனை முறை ஆனாலும் நான் அவர்களைக் காதலித்து மணந்து கொள்ளத் தயார்’ எனச் சொல்லாமல் சொல்வது போன்று கணேசன் சாவித்திரியின் கரம் பற்றி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று அவரது மயில் கழுத்தில் மாங்கல்யம் புனைந்து ‘மனம்போல் மாங்கல்யம்’ என்னும் படத்தின் பெயரை உறுதிப்படுத்தினார்.

சிறிது நாட்கள் தங்கள் திருமணம் வெளியில் தெரியாதபடி ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால் நாளாக ஆக வெளிச்சம் பரவ தொடங்கியது. இதை இரண்டாம் தாரமான புஷ்பவல்லி பொருட்படுத்தவில்லை. முறையாக மணந்து கொண்டு முதல் தாரமான பாப்ஜி அம்மாள் தன் கணவர் மீது கொண்டிருந்த பதிபக்தியின் காரணமாக பூமாதேவி போல பொறுத்துக் கொண்டார்.

ஜெமினி கணேசன்- சாவித்திரி தம்பதியினருக்கு 1958-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்து அதற்கு விஜய சாமுண்டீஸ்வரி என்று பெயரிட்டனர். 1965-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் நாள் ஜெமினி கணேசன் சாவித்திரிக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்து அதற்கு ‘சதீஷ்’ என்று பெயரிட்டார்கள். அவன் இப்பொழுது ‘கலிபோர்னியா’ நகரில் ‘சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து அங்கேயே நிரந்தரமாக மனைவி, மகனுடன் தங்கி இருக்கிறான்.

ஜெமினி கணேசனுக்கு மூன்று மனைவிகளின் மூலமாகப் பிறந்த எட்டு குழந்தைகளில் இந்த சதீஷ் ஒரே ஒருவன் மட்டுமே ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

1957-ல் பெங்களூர் மேயர் கே.எம்.நாகண்ணா தயாரித்த ‘செளபாக்கியவதி’ என்ற படத்திற்கு ஏ.எல். நாராயணன் வசனகர்த்தாவாகவும் நான் துணை வசனகர்த்தா மற்றும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தோம். அந்த படப்பிடிப்பின் போது ஜெமினி- சாவித்திரி இருவருடனும் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அது நல்ல நட்பாக மாறி என் மீது அவர்கள் இருவரும் அன்பு கொண்டனர்.

பின்நாளில் நான் தனியாக முதன் முதலாக கதை வசனம் எழுதி ‘சாண்டோ’ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்த ‘வாழ வைத்த தெய்வம்’ படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார். அந்த தொடர்பில் அவர் 1959-ல் ஒரு நாள் என்னை அழைத்து சென்று ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு அறிமுகம் செய்து ‘பாசமலர்’ படத்திற்கு வசனம், எழுத வைத்தார். ‘பாசமலர்’ பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கண்டு எனக்குப் புகழ் கொடுத்தது. அதன் மூலமாக ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பார்மகளே பார்’, ‘அன்னை இல்லம்’, ‘புதிய பறவை’ மற்றும் ‘தெய்வமகன்’ போன்று சிவாஜி நடித்த 28 வெற்றி படங்களுக்கு வசனம் எழுதிப் பெரும் புகழ் பெறக்கூடிய நல்வாய்ப்பு எனக்கு கிட்டியது என்றால் அதற்குக் காரணம் ஜெமினி கணேசன்தான் என்றால் அது சற்றும் மிகை அல்ல.

நான் கதை வசனம் எழுதிய முதல் படத்திலும், முதன் முதலாக நான் இயக்கிய ‘பெண் என்றால் பெண்’ படத்திலும் ஜெமினி கணேசன்தான் நடித்தார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

நான் திரைப்பட உலகில் அடி எடுத்து வைத்து இது 66-வது ஆண்டு ஆரம்ப காலத்தில் என் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டிருந்த ஜெமினி கணேசன் தன் வாழ்நாளில் ‘கல்யாணப் பரிசு’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ மற்றும் 1961-ல் நான் வசனம் எழுதிய ‘பாசமலர்’ ‘பார்த்தால் பசி தீரும்’ போன்ற நூற்றுக்கணக்கான வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பின்னர் தனது 85-வது வயதில் 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி மறைந்தார்.

இன்று 17.11.2019 அவருடைய 99 வயது நிறைவு பெற்று 100-வது ஆண்டு ஆரம்பம் ஆகிறது. காலம் மறக்காத காதல் மன்னனுடன் பழகிய நினைவுகள் பசுமையானவை!..
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 16 November 2019

காற்று மாசுபடுதலுக்கு தீர்வு என்ன?

காற்று மாசுபடுதலுக்கு தீர்வு என்ன?

டெல்லி செங்கோட்டை முன்பு புகை மூடுபனி சூழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
எஸ்.ஆர்.ரமணன், இயக்குனர் (ஓய்வு),

புயல் எச்சரிக்கை மையம், சென்னை.

சமீப காலமாக காற்று மாசுபடுதல் என்பது அனைவரும் விவாதிக்கக்கூடிய பொருளாக உள்ளது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர் டெல்லியில் விமானம் தரை இறங்கிய போது மின்சார ஒயர் எரிவதைப் போல் நாற்றம் வீசுவதை உணர்ந்தேன் என்று கூறினார். இதற்கு காரணம் டெல்லியில் காற்று மாசுபட்டு இருப்பது என்பது தான். காற்று ஏன் மாசுபடுகிறது. இதற்கு தீர்வு என்ன? என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு தொழிற்சாலையில் புகை மேலே செல்வதை பார்த்திருப்போம். அது ஏன் மேலே செல்கிறது? அந்த புகையின் வெப்பம் சுற்றியுள்ள பகுதியை காட்டிலும் அதிகமாக உள்ளதால் மேல் எழும்பும். வளிமண்டலத்தின் மேல் பகுதிகளில் தரைப்பகுதியை காட்டிலும் வெப்பமாக இருந்தால் புகை மேலே செல்லாது. தரைப்பகுதியிலேயே பரவி விடும். பொதுவாக குளிர் காலங்களில் இந்த நிலையை நாம் வட இந்திய பகுதிகளில் பார்க்கலாம்.

இப்போது மூடுபனி என்றால் என்ன? என்று சற்று பார்க்கலாம். தெளிந்த வானமுடன் கூடிய இரவில் பூமியானது தனது வெப்பத்தை வெளிவிடும். மேலே மேகங்கள் இருந்தால் இதை தடுத்து விடும். தெளிந்த வானத்துடன் கூடிய இரவில் வெப்பம் வெளி சென்றால் தரை பகுதி குளிர்வடையும். ஒவ்வொரு வெப்ப அளவிற்கும் இந்த அளவுக்கு நீராவி இருக்கலாம் என்ற கணக்கு உண்டு. வெப்பம் குறையும்போது உபரியாக உள்ள நீராவி நீர் துளிகளாக மாறும். இதை பனித்துளிகளாக நாம் செடியில் பார்க்க முடியும். சில நேரம் பனிப்படலம் எனும் மேகமாக தரைப்பகுதியில் உருவாகும். இதுவே தோற்ற தெளிவு குறைவாக இருப்பதற்கு காரணம். பார்வை தூரம் 1 கி.மீ. குறைவாக இருந்தால் மூடு பனி, அதற்கு அதிகமாக இருந்தால் மென் மூடுபனி, இந்த மூடுபனி காலத்தில் அதனுடன் புகையும் சேர்ந்தால் புகைப்பனி என்பார்கள். இந்த புகைப்பனி என்பது தொழிற்பேட்டைகளில் அதிகமாக காண முடியும். காற்று எந்த திசையில் வீசுகிறதோ, அந்த திசையில் புகை நகர்ந்து மற்ற இடங்களில் தோற்ற தெளிவை குறைக்கும்.

ஒரு நதியில் நீர் மாசுபட்டால் நாம் என்ன செய்ய வேண்டும். நீரின் போக்கை தடுத்து, அதை சுத்தம் செய்து மீண்டும் நீரோட்டத்திற்கான தடையை நீக்கலாம். நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டால் என்ன செய்ய வேண்டும். நீரோட்டத்தை போன்று காற்றின் போக்கை தவிர்க்க முடியாது. எனவே இந்த காற்று மாசுபடுவதற்கு காரணமான தொழிற்சாலையில் இருந்து வெளிப்படும் காற்றை சுத்தம் செய்ய வேண்டும். அந்த முயற்சி என்பது, அந்த நச்சு பொருள் வெளிப்படுவதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தொழிற்சாலையில் உள்ள தொழில்நுட்ப முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

ஒளி மற்றும் அச்சு ஊடகங்களில் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடும் செய்திகளை நாம் அன்றாடம் பார்க்கிறோம். விவாதம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. அதற்கு காரணம் என்ன நாம் சுவாசிக்கும் காற்று மாசு அடைந்த காரணத்தினால் உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. காற்று எந்த அளவிற்கு மாசு அடைந்துள்ளது என்பதை கண்காணிப்பது தேசிய மற்றும் மாநில அளவிலான மாசு கட்டுப்பாட்டு வாரியம். இந்த மைய மற்றும் மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள் கருவிகள் பொருத்தி காற்றின் நன்மையை பகுப்பாய்வு செய்கின்றன. அவை காற்றில் உள்ள கந்தக ஆக்ஸைடுகள், நைட்ரஜன் ஆக்ஸைடுகள், நுண் துகள்கள் என்று பகுப்பாய்வு செய்கின்றன. இந்த நுண் துகள்களில் பெரிய துகள்கள் பத்து மைக்ரான் அளவிலும் இருக்கும். இரண்டரை மைக்ரான் சிறியதாக கூட இருக்கலாம். பெரிய துகள்களை நமது மூக்கிலுள்ள முடியானது தடுத்து விடும். சிறிய துகள்கள் நாம் சுவாசிக்கும் காற்றுடன் நுரையீரலுக்கு செல்ல வாய்ப்புண்டு. இதன் காரணமாக நுரையீரல் தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இதை குறிப்பதற்கு காற்றின் தர குறியீடு என்பதை அவர்களுடைய இணைய தளத்தில் பார்க்கலாம். இதில் இருந்து தப்புவதற்கு முகமூடி அணிவது என்பது தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. அதை முற்றிலும் கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

சில வருடங்களுக்கு முன்பு இந்தோனேசியா நாட்டில் மரங்கள் தீயிடப்பட்டு எரிந்தபோது, அண்டையில் உள்ள சிங்கப்பூரில் புகைப்படலத்தை பார்த்தோம். இதே போன்று டெல்லி அருகாமையில் உள்ள அண்டை மாநிலங்களில் விளை நிலங்களில் வைக்கோல் போன்ற பொருட்கள் எரிக்கப்படுவதால் காற்றின் போக்கின் காரணமாக அந்த புகையானது டெல்லி மக்களை சென்றடைந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அதிக மக்கள் தொகை, போக்குவரத்து வாகனங்களில் அளவு அதிகமாகி, அதில் இருந்து வரக்கூடிய புகையும் ஒரு காரணம். சிங்கப்பூரில் கார் வாங்க வேண்டுமானால் அதை வைத்துக்கொள்ள அந்த கட்டிடத்தில் வசதி இருக்க வேண்டும். மேலும் காரின் விலை அளவிற்கு இரண்டு மடங்கு பணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் வாடகை கார்களில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன நெரிசல் கட்டுப்பாட்டில் உள்ளது.

பொதுவாக நகரங்களில் என்ன என்ன முறைகளில் காற்று மாசடைவதை தடுக்கலாம். நச்சு பொருட்கள் வெளிப்படுவதை தவிர்க்க புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு. விளைநிலங்களில் மீதமாக இருக்கும் காந்த பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். எரி நிலையங்களை நிறுவி எரிக்கலாம். மெட்ரோ ரெயில்கள், பஸ்களை அதிகப்படுத்தி தனி மனித வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வழி செய்யலாம். தனி மனித வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல கூடிய நிலையில் மற்ற காலி இருக்கைகளில் மற்றவர்கள் செல்லக்கூடிய வசதிகள் மேலே நாடுகளில் உண்டு. தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. இதன் மூலமாக ஒவ்வொருவரும் தனித்தனியாக செல்லாமல் வாகன நெரிசலை கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் கரியமில வாயுவின் வெளிப்பாட்டை குறைக்கலாம். இதன் மூலம் நேரம் வீணாகாமல் நாம் பயணிப்பதற்கு வாய்ப்புண்டு. சில நேரங்களில் 20 கிலோமீட்டர் தூரத்தை நகரங்களில் கடப்பதற்கு மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது. சமீபத்தில் எனக்கு ஒரு கையேடு கிடைத்தது. அதில் செல்போன் செயலி மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் பயணிப்பவர்கள் மற்றவர்களுடைய காரில் பயணிக்கும் வசதி இருப்பதை அறிந்துகொண்டேன். நாம் அனைவரும் நன்கு சிந்தித்து ஒரு பாதுகாப்பான உலகத்தை எதிர்கால மக்களுக்கு அளிப்போம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts